அன்புடன் மித்திரன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : அன்புடன் மித்திரன் |
இடம் | : திருநெல்வேலி, தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 03-Mar-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 47015 |
புள்ளி | : 1145 |
நற்சிந்தை மற்றும் நல்ல நடத்தையால் நானொரு மனிதன்.
அதைப் பற்றி எழுதுவதால் நானொரு எழுத்தாளன்...
Facebook page:- https://facebook.com/AnbuMiththiran
Twitter Id:-
https://twitter.com/AnbuMiththiran
எனது தொடர்கதைகளைப் படிக்க https://ta.pratilipi.com/user/6fc46vbn3g -க்கு செல்லவும்.
To Read my english poems, click here:- https://poemhunter.com/anbudan-miththiran
பாறை என்னையும் அறியாமலே
உன் புன்னகைத் துளியாலே
நனைத்து, காதலெனும்
ஊற்றெடுக்க
உன்னை நானும் பார்த்திருக்க
இந்த நொடி இப்படியே நீளாதோ?
இந்த பேருந்து பயணமும்
முடிவின்றி தொடராதோ?
நெஞ்சிலே ஏக்கம் பிறக்க
துயரமும் வந்து எனைத்தாக்க
இப்படியே உறக்கம் தொலைக்க
மீண்டும் நாம் சந்திப்பது எப்போது?
மேகம் சூழ்ந்த வானம் போல,
சோகம் சூழ்ந்த வாழ்வதும்
எப்போதும் நிலையாதே; மாறும் ஒருநாள்,
அப்போது மகிழ்ந்திட மறவாதே;
பழைய காயங்கள் மறைந்துவிட மலர்களாய்
இளைய நெஞ்சங்களே மாறுங்களே;
வெற்று மனிதராய் வீணில் கழியாமல்,
வெற்றியே இலக்காய் பயணி...
வாசமுள்ள வரைக்கும் மலரானது மதிக்கப்படும்,
வாசமதும் போய்விட்டால் மலரானதும் மிதிக்கப்படும்,
இறைவன் தந்த வாழ்க்கையது இரவலர்களுக்கு புரியவில்லை,
இரந்துண்டு வாழ்வதிலே எள்ளளவும் மேன்மையில்லை,
அழகதும் உள்ளவரை ஆனந்தம் என்னும் பெரும் செருக்கு,
அழகிழக்கும் நாட்களிலே ஞானம் மெருகேறும் வாழ்வதற்கு,
அவசரத்தில் ஆடாதே; அழிவை தேடி நாடாதே,
அனுபவத்தின் வார்த்தைகள் இவை,
ஆராய்ந்து பார்த்து நீயும் எடுத்துக் கொள்.
அருள்வாய் நீ எனக்கு அன்புடனே,
ஆனந்தம் பெருகிடவே
இனிமை நிறைந்திடவே
ஈர்த்த சிவனே,
உண்மையாய் இருப்போனே,
ஊமையாய் சிரிப்பொனே,
எங்கும் நிறைந்தவனே,
ஏகாந்தத் திருவருளே,
ஐந்தெழுத்தில் வீற்றிருப்பவனே,
ஒருமையில் பன்மையாய்,
ஓங்காரத் திருவுள்ளமே,
ஔடதமாய் எமக்கு
எஃகு போலுறுதி தருவாயே...
சம்புவின் நாமம் சொல்வாய்
வம்பு பேசித் திரியாதே
தெம்பு ஒருநாள் போய்விடும்
அம்புவியில் அடுத்தது யாரறிவார்
நான் இந்த வலைதளத்தில் உறுப்பினராக சேர்ந்து உள்ளேன் ஆனால் என்னுடைய படைப்புகளை சமர்ப்பிக்க முடியவில்லை ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா இப்படிக்கு புதுக்கவிஞர் க ஜெயராமன்
உழைக்கும் மனிதனுக்கு மரியாதை இல்லை.
அதிகாரத்தோடு மிரட்டும் தொனியில் உழைப்பவனை அழைக்கும் சமூகம்,
இரத்தம் சிந்தி உழைக்கும் வர்க்கம்,
இடையில் நின்று லாபம் சம்பாதிக்கும் புரோக்கர் கூட்டம்.
சாதி பேசும், இனம் பேசும், மதம் பேசும், தேசியம் பேசும்,
தேகம் வருத்தி உழைக்கும் தொழிலாளிக்கு இங்கே மரியாதை இல்லை.
ஜல்ட்ரா அடிக்க லாயக்கில்லை என்றால் இந்த சமூகத்தில் முன்னேற்றம் தடுக்கப்படும்.
எப்படியாவது மேலே வரலாம் என்று நீங்கள் உழைத்து கொண்டே இருந்தால் ஈளிச்சவாயனாக கருதப்படுவீர்.
குனிந்து குனிந்து கூன் விழுந்த உழைக்கும் வர்க்கம் நாளும் ஏமாற்றப்படுகிறது.
உழைக்கும் மக்களுக்கு அறிவு எதற்கு என்றி
" அவள் ரொம்ப தைரியபான பொண்ணு. ஏன் இப்படி பண்ணிக்கிட்டா? ", என்று ஊரெங்கும் ஒரே சலசலப்பு...
" யாரு அம்மா? என்ன பண்ணிக்கிட்டாங்க? ", என்று கேட்டான் வெளியூரில் இருந்து வந்த ஜான்...
" அவங்க எல்லாரும் மூன்றாவது தெருவில் நாலாம் நம்பர் வீட்டில் குடியிருந்த மாலாவைப் பற்றி பேசுறாங்க பா. " என்று ஜானின் தாய் மேரி பதிலளிக்கக் கேட்ட ஜான் கலக்கமடைந்தான்...
மேலும் அவனுடைய அம்மாகிட்ட, " அவ என்ன பண்ணிக்கிட்டா மா? ", என்றான்...
" இரண்டு நாளைக்கு முன்னாடி அவ அறையில தூக்குப் போட்டுக் கிட்டா பா. ", என்று அம்மா சொன்னதுமே ஜானின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி...
அதோட கண்ணீரும் வழிந்தோடியது...
இளமையில் ஜா
உயிரற்றுப் போனால் பிணமாவாய்
உணர்வற்று போயின் சடமாவாய்
மதி பிறழ்ந்தால் பைத்தியமாவாய்
மதி தெளிந்தால் வைத்தியனாவாய்
உன்னை அடக்கின் ஞானியாவாய்
உள்ளம் சிதைத்தால் மூடனாவாய்
உள்ளதை பகிர்ந்தால் வள்ளலாவாய்
உரிமைகளைக் கேட்டால் தலைவனாவாய்
கள்ள மனங்கொண்டால் திருடனாவாய்
காம எண்ணங்கொண்டால் நோயாளியாவாய்
உள்ளத்தில் சிறந்தால் நல்லவனாவாய்
உயிராக ஒழுக்கம் பேணால் உத்தமனாவாய்.
--- நன்னாடன்.
அனுபவம்# Experience
தனிமை புதிதல்ல
தனியே தவிப்பதும்
தன்னை தவிர்ப்போரை
தவிர்ப்பதும்
தடைகளை தகர்ப்பதும்
தனிமையில் திளைப்பதும்
புதிதல்ல வெவ்வேறு விதமான அனுபவங்கள் காலங்களும் காட்சிகளும் விதவிதமாய் கற்ப்பிக்கும் ஆச்சர்யங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை வாழ்க்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அனுபவங்களை அனுபவித்துக் கற்றுக்கொள்கிறேன்
கற்றோராலும் பெற்றோராலும் வாய்மொழியாய் கற்ப்பித்தாலும் கற்க்க முடியாத கற்றலிது கல்லாதோறும்
கனம் கனம் கற்க்கும் கல்வியிது.
-குளித்தலை குமாரராஜா
சந்தனக் கட்டைமேல்
****************************************************
சந்தனக் கட்டைமேல் சவ்வாது கொட்டிவைத்து
வெந்தழல் ஏற்றிடினும் வேகும் பிணம்நாறும் !
எந்தஉலகம் ஆண்டுமென் ? என்னபோகம் அடைந்துமென் ?
நைந்த மனம் நாறும் நமக்கே !