Aruvi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Aruvi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Mar-2017
பார்த்தவர்கள்:  6324
புள்ளி:  507

என் படைப்புகள்
Aruvi செய்திகள்
Aruvi - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2021 5:22 pm

அகலிகையின் தவம்
*************************
அழகில் ஒளிர்ந்த தங்க தாரகை
அகலிகையை மணந்தது கௌதமரின் ஆணவப்பிழை
மனம் அறியாது செய்த மணம்
இருமனம் இணைந்தால்தானே இனிக்கும் இல்லறம்

கடமைக்காய் வாழ்ந்தவர் காதலை அறிவாரா
கன்னியின் தவிப்பை கணநேரம் உணர்ந்தாரா
பத்தினியாய் வாழ்ந்தவள் சுயத்தை இழந்தாள்
பகலிரவு பணிவிடையில் உணர்ச்சிகளை மறைத்தாள்

தாபத்தால் தவித்த பின்னிரவு பொழுதின்றில்
மாயக்கோழி கூவியதால் மாறியது வரலாறு
காமப்பசி தீர்த்துக் கொண்டான் இந்திரன்
கடும் சினத்தோடு உள்நுழைந்தார் கௌதமன்

அகலிகையின் தவறுக்குத் தந்தார் சாபம்
கல்லென வாழ்ந்தவள் கொண்டாள் கோபம்
முக்காலம் உணர்ந்தவன் இக்காலம் உணரல

மேலும்

Aruvi - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2021 8:26 pm

பெண்களுக்கு கொண்டாட ஏது தினம்.
************************************************
கருவிலே தொடங்கும் உரிமைக் குரல்/
காலமுழுதும் போராடும் பீனிக்ஸ் பறவை/
சுவரில் அறையப்பட்ட துருப்பிடித்த ஆணியாய்/
குடும்ப சிலுவையைச் சுமக்கும் சுமைதாங்கியாய்/
உருண்டு விழும் தாயமாய்ப் புரள்கிறாள்/
உரசிப் பார்க்கும் தங்கமாய் உருகுகிறாள்/
மகளாய் மனைவியாய் அன்னையாய் சகோதரியாய்/
மாறி மாறி போடப்படும் முகமூடி/
சுயத்தைத் தொலைத்து முகம்தேடும் தேவதை/
சுயநலம் சிறிதும் இல்லாத இல்லாள்/
முப்பத்துமூன்று சதவிகித ஒதுக்கீட்டைப் புறந்தள்ளி/
சமையலறை கோட்டைக்கு முடிசூடா ராணியாகி/
அடுத்தவர் பசிதீர்க்க அடுக்களையில்
பணியாற்ற

மேலும்

Aruvi - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2019 9:49 pm

சித்திரை மகளே/
முத்தமிழ் நிலவே/
சில்லெனத் தென்றல்/
மெல்லெனத் தழுவ/
மல்லியின் வாசம்/
முல்லையோடு இணைய/
வெண்ணிறப் பட்டு/
பொன்னிடைத் தொட்டு/
கொஞ்சும் சலங்கொலி/
மிஞ்சிடும் சிரிப்பொலி/
முக்கனிகளைஏந்தி/
சக்கரைப் பொங்கலென/
மகிழ்ச்சிப் பொங்கிடவே/
மங்கலம் பெருகிடவே/
விகாரியே விரைந்தோடி வருக/
நாட்டினில் நல்லறமே பொலிக.

மேலும்

Aruvi - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2019 9:58 am

நல்லா பாரு நல்லா பாரு /
நாட்டில் நடக்கும் தேர்தல் பாரு/
குல்லா போடும் கூட்டம் பாரு/
கல்லா கட்டும் ஆட்டம் பாரு/
வோட்டு கேட்டு வர்றான் பாரு/
நோட்டைக் கொட்டும் காட்சிப் பாரு/
அனல் பறக்கும் பேச்சைக் கேளு/
தினம் கொட்டும் பொய்யைக் கேளு/
இலவசம் இலவசம் போடறாங்க வேசம்/
இனியும் வாங்கினா வாழ்க்கையே நாசம்/
கொதிக்குது கொதிக்குது பெண்மையிங்கே கதறுது/
பதைக்குது பதைக்குது பாவிகளை விரட்டிடு/
நல்லவரைத் தேர்ந்தெடு நரிகளை விரட்டிடு/
நாட்டைக் காப்பாற்ற வாக்குச் சாவடிக்கு விரைந்திடு.

மேலும்

Aruvi - Aruvi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2018 8:50 pm

சித்திரையே வருக
நித்திரையை களைக
வளமையே செழிக்க
வறுமையை ஒழிக்க
காவிரியே பாய்க
உழவர் மகிழ்க
ஆட்சியரே திருந்துக
அவலங்கள் மறைக
பசுமைக்கொடி பறக்க
பசித்துயரம் ஒழிக
இளைஞர் விழிக்க
பகைவர் அழிக
இன்முகம் விரிக
புத்தாண்டே பிறக்க
புதுவளங்கள் பெருக
அன்போடு அழைக்க
விளம்பியே நுழைக

மேலும்

போற்றுதற்குரிய சித்திரை தமிழ் அன்னை படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் புத்தாண்டு தமிழ் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 16-Apr-2018 4:38 am
மெய்திட வாழ்த்துக்கள்... இந்த இந்தியா வில்..? 13-Apr-2018 11:36 pm
உங்களுக்கும் வாழ்த்துக்கள்... எந்த ஆட்சியர் திருந்த வேண்டும்? டீ கடை பெஞ்சில் ஒன்றும் இன்று வரலையே. 13-Apr-2018 9:29 pm
Aruvi - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2017 5:21 pm

நாம் ஏன் எழுதுகிறோம் ?

மேலும்

அருமை . நற்கருத்து . அறிஞர்தம் இதய ஓடை ஆழ்நீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் வெள்ளம் செழித்திட ஊற்றி ஊற்றி ----என்று பாடுவார் பாவேந்தர் . வாழ்த்துக்கள் சிந்தனைப்பிரிய கீர்த்தி 16-Jan-2018 9:11 am
மனிதனின் கற்பனை ஊற்றை மற்றவர்க்கு தெரிவிக்க வல்லதொரு கருவி எழுத்து.எனவே எழுதுகிறோம். 15-Jan-2018 12:02 pm
எழுதவதினால் மட்டும் சந்தோசம் கிடைத்துவிடுமா ? அல்லது மற்றவர்கள் அதை பாராட்டும் போது சந்தோசம் கிடைக்குமா ? சொல்லவும் சிந்தனைப்பிரிய முருகன் . 13-Jan-2018 2:37 pm
எழுத்தின் மூலம் கிடைக்கும் சந்தோசம் . 13-Jan-2018 4:32 am
Aruvi - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2017 8:59 am

தமிழுக்கு அமுதென்று பேர் ----ஏன்

பொய்க்கு கவிதை என்று பேர் ----ஏன்

புரை தீர்ந்த பொய்யும் வாய்மை இடத்து ----ஏன்

காதல் வாழ்வா சாவா அல்லது வெறும் கவிதையா ?

மேலும்

கவிதைனாலே பொய்தானே.! கற்பனை உவமையின் கலப்பு.! கொள்ளையன் போலீச துரத்துறான். நம்ம வீட்ல தஞ்சம் புகுந்த போலீச கொள்ளையன் விசாரிக்கும் போது காட்டி கொடுக்காம தெரியல்ல.. இந்தபக்கமா ஓடுனாருனு பொய் சொல்லி காப்பாத்துனா அது நன்மைதானே.? அதுக்காக திருப்பி போலீசு கொள்ளையனை துரத்தும்போது சொன்னா.. ஹி..ஹி..ஹி..! காதலா.. நவீன கால ஒரு பொழுது போக்கு.! ஆனால் காதல் சாவுதான்.. காதலிச்சா சொந்தகாரன் கொல்றான்.. கேட்டா சாதிகாதலாம்.! கட்டிக்கிட்டா பொண்டாட்டியே கொல்றா..! கேட்டா கள்ளகாதலாம்.! 16-Dec-2017 9:50 pm
முதற் கேள்விக்கு ஒரு பட்டியல் தந்துவிட்டீர்கள் . இவைகளைப் படித்தால் தமிழ் ஏன் அமுது என்று புரியும். ஏற்கிறேன் . பொய்க்கு கவிதை என்று பேர் ----ஏன் புரை தீர்ந்த பொய்யும் வாய்மை இடத்து ----ஏன் காதல் வாழ்வா சாவா அல்லது வெறும் கவிதையா ? இதற்கு யார் பதில் சொல்வது குமரி அறிஞரே ! காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல் ----குயில் பாட்டு பாரதியும் இப்படி சொல்லலாமா ? 15-Dec-2017 6:03 pm
உங்க கேள்வியில் ஒன்று மே நான் சொல்லியிருக்கிறேன்..! ஆளை விடுங்க சாமி.! ஹாஹ்ஹா .. 13-Dec-2017 6:21 pm
அறிஞருக்கு வணக்கம். சீறாபுராணம் நான் குறிப்பிட்டிருக்கிறேன். ***** கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்: கம்பசித்திரம் கம்பநாடகம் தோமறுமாக்கதை இயற்கை பரிணாமம் நூல் அமைப்பு: காண்டம் = 6 படலம் = 118 மொத்த பாடல்கள் = 10589 முதல் படலம் = ஆற்றுப்படலம் இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம் காண்டங்கள்: பால காண்டம் அயோத்தியாகாண்டம் ஆரண்யகாண்டம் கிட்கிந்தா காண்டம் சுந்தர காண்டம் யுத்தகாண்டம் ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம் **** மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டும் உலகம் போற்றும் உயர்ந்த இதிகாசங்களாகும். மகாபாரதம் இராமாயணத்தைவிடப் பெரியது. அதில் சுமார் முப்பதாயிரம் (30,000) பாடல்கள் உள்ளன. வியாச மகரிசி அவர்களால் மகாபாரதம் எழுதப்பட்டது. இந்நூல் எழுந்த கால எல்லையைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. ஆனாலும் மகாபாரதம் கி.மு. 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலென்று சிலர் கருத்துரைப்பர். வியாசர் பாரதத்தைத் தழுவித் தமிழில் முதன் முதலில் எழுந்த காப்பியம் வில்லி புத்தாழ்வாரால் இயற்றப்பட்ட வில்லி பாரதம் ஆகும். இதையடுத்து இயற்றியது 'நல்லாபிள்ளை பாரதம்'. **** இராவண காவியம் ஒரு தமிழ் கவிதை நூல். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. இதை இயற்றியவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எழுதப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது. *** ஆம்.. இயேசு காவியம் என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தற்காலத் தமிழ்க் காப்பியமாகும். ***** அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை நான் கணினியில் நகல் எடுத்து வைப்பதுண்டு. அதுதான் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கை கொடுக்கும்.! நட்புடன் குமரி. 13-Dec-2017 6:15 pm
Aruvi - கன்னி தங்கமுருகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2017 11:00 am

நாம் செய்யக் கூடாத செயல் எது?

மேலும்

நாம் பேசும் கடுமையான சொற்க்கள் 16-Nov-2017 3:00 pm
நம்பிக்கைத் துரோகம்.உயிர் போகும் நிலையிலும் செய்ய கூடாதது ஆனால் இன்று பல உயிர்களை குடிக்கிறது நம்பிக்கை துரோகிகளால் 16-Nov-2017 12:33 pm
உறவினர்கள் ,நண்பர்கள், முகம் தெரியாத நபர் இப்படி எவரிடமாவது இருந்து எதாவது ஒரு செயலை மறைக்க நினைக்கிறோமோ அதனை செய்யக் கூடாது. 15-Nov-2017 1:31 pm
நம்பிக்கை துரோகம்..! அது சொல் செயல் பொருள் உறவு எதுவென்றாலும்...! 14-Nov-2017 1:17 pm
Aruvi - md batcha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2017 1:54 pm

இந்த உலகில் நீங்கள் யாரை அழகு என நினைக்கிறீர்கள்?

மேலும்

அது ஆளுக்கு ஆள் ரசனைக்கு மாறுபடும்..! எனக்கு "மழலையின் சிரிப்பு "..! 14-Nov-2017 1:26 pm
என்னைத்தான்! எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்! 14-Nov-2017 3:06 am
இயற்கை 13-Nov-2017 8:24 am
யாருக்கும் துரோகம் செய்யாமல் எல்லோரையும் மனதார நேசிக்கும் உள்ளத்தை கொண்டவரே என்னை பொறுத்தவரை அழகானவர்கள் 12-Nov-2017 4:33 pm
Aruvi - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2017 1:17 pm

காதல் வந்த பிறகு
பார்க்காமல் இரு !
பேசாமல் இரு !
எனும் கட்டளையை கூட
இதயம் ஏற்றுக்கொண்டு விடுகிறது
"நினைக்காமல் இரு " எனும்
கட்டளையை நிச்சயமாய்
ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகிறது !

மேலும்

ஆம் உண்மை நினைவுகள் இல்லையெனில் இந்த உலகில் எந்த ஆணும் நிம்மதியாக வாழ முடியாது 08-May-2017 4:28 pm
அழியா நினைவுகளை அழகாய் கூறியதற்கு நன்றி .நண்பரே,,, 01-May-2017 7:02 pm
தங்கள் கருத்தில் மகிழ்கிறேன் தோழர் 01-May-2017 6:55 pm
அலட்டிக்கொள்ளாமல் அழகாக கற்பனையை வரிகளில் இளைய விடுவது முத்துப்பாண்டிப் பாணி .. அருமை வாழ்த்துக்கள் நட்பே 01-May-2017 6:32 pm
Shagira Banu அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
19-Mar-2017 4:04 pm

தமிழ் சொற்களும் என் மீது காதல் வயப்பட்டது போலும்,

இரவில் என்னை தூங்க விடுவதில்லை,

பகலில் எந்த வேலை செய்யவும் விடுவதில்லை,

எந்நேரமும் கண்முன் ரீங்காரமிட்டு கொடுக்கிறது தொல்லை,

இது எங்கே போய் முடியுமோ தெறியவில்லை

இருப்பினும் அதனை தவிர்க்கும் துணிவு ஒருபோதும் இருந்ததில்லை,

நானும் அவற்றின் மீது காதல் கொண்டேன் போலும்

-என்றும் அன்புடன் ஷாகி

மேலும்

தமிழின் நெருக்கத்தில் கவிதைகளின் கருவறை தாய்மையடைகிறது 19-Mar-2017 11:47 pm
அருமை ஷாகி. தமிழ் மீது கொண்ட காதல் நல்ல கவிஞரை உருவாக்கும். வாழ்க. தொடர்க. வளர்க. 19-Mar-2017 10:56 pm
Aruvi - Aruvi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2017 4:50 pm

உன் அருகில் இருக்கத்தான் ஆசை!
யாரும் இல்லாத பொழுது...
உன் கையால் பூச்சூட ஆசை!
தெரிந்தவர் வராத பொழுது...
நீ கொடுத்த சேலையை உடுத்த ஆசை!
அம்மா அறியாத பொழுது ...
உன் கையோடு கைசேர்த்து நடக்க ஆசை!
பக்கத்தில் யாரும் இல்லாத பொழுது...
ஊரறிய இவையெல்லாம் நடக்க ஆசை!
உன்னவளாய் நான் மணம் சூடும் பொழுது...

மேலும்

அருமையான வரிகள், வாழ்த்துக்கள் பெருவை ஐயா தங்கள் கவிதை மிக அருமை.. நன்றி, தமிழ் ப்ரியா... 16-Mar-2017 7:19 pm
ஆயுள்முழுதும் இணைந்திருக்க.. ஆசை! எழுத்துச் சேலையுடுக்க.. ஆசை! வார்த்தைப் பூவைச்சூட.. ஆசை! தமிழுனைக் கைகோர்த்து எழுந்துநடக்க.. ஆசை! மணக்கோலமெனும் எண்ணக்கோலம்கொண்டு.. இணைந்துநாம் ஆசிபெற.. ஆசை! ஊரறிய பாடிக்கொண்டு.. எழுத்துதளத்தில்..வலம்வர.. பேராசை! 16-Mar-2017 5:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (11)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (14)

பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
மேலே