தினேஷ்n - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தினேஷ்n
இடம்:  குலையநேரி (திருநெல்வேலி Dt)m
பிறந்த தேதி :  30-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jan-2014
பார்த்தவர்கள்:  354
புள்ளி:  94

என்னைப் பற்றி...

தவறு செய்வதால் நான் மிருகம் ; தவறுகளை திரும்ப திரும்ப செய்வதால் நான் மனிதன் ........

என் படைப்புகள்
தினேஷ்n செய்திகள்
தினேஷ்n அளித்த படைப்பை (public) அனுரஞ்சனி மோகன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Apr-2014 8:04 pm

பட்டம் முடித்த
பெண் வேண்டும்
கல்லூரி சென்றால்
"களவானி சிறுக்கி"
காதல் பாடம் பயில்கிறாள்

வேலை பார்க்கும் பெண்
வேளை வந்து
வீடு சேர்ந்தால்
"விபச்சாரி"

அன்று முதல்
அழகான பெண் வேண்டும்
அலங்கரித்தால்
"ஆட்டக்காரி"

மழலை வடிவில் மாது
மன்னன் மடியில் சாது
மணம் முடிந்து
மாதங்கள் கழிந்தால்
"மலடி"

சீதை குணம் கொண்டவள்
சிநேகம் கண்டாள்
சிரித்து மகிழ்ந்தால்
சிறிது நேரத்தில்
"பாஞ்சாலி"

சில்லறை போல்
சிரிக்கும் பெண்
சிலநாட்கள் கழித்து
ஸ்ரீதேவியும்
"மூதேவி"

காதலிக்கும் வரை
கற்புக்கரசி
காதல் கலைந்தால்
கனவிலும்
"காமஅர

மேலும்

வித்தியாசமான படைப்பு ஆனால் அத்தனையும் உண்மை... இந்த காலத்தில் சில இடங்களில் நடந்து கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை மிக அழகாக சொல்லி உள்ளது அருமை... வாழ்த்துக்கள்... 22-Oct-2014 4:19 pm
மலர்களின் கழுத்தில் மண்டையோட்டு மாலைகளா.....? பூக்களின் மார்பில் புலி நக கீறல்களா.....? சிறப்புப் படைப்பு ! 19-Apr-2014 3:35 pm
ஆம் ஆம் .... நன்றி கவியே 11-Apr-2014 7:09 pm
தோழா ! வியாசர் பாரதத்தில் நான் வரவில்லை ! நீங்கள் சொல்ல வருவது பாஞ்சாலி தாசி என்றா ?? ஆம் , இல்லை எண்டு முடித்துவிடுங்கள் ! நன்றி . 10-Apr-2014 9:39 pm
தினேஷ்n - விமர்சனம் அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 4:58 pm

சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., நைலான் கயிறு.

சுஜாதா அவர்கள் படைத்த முதல் நாவல். இந்நூல் அக்காலத்திலேயே சிறந்த புதுமையான எழுத்து நடையையும் அனைவருக்கும் புரியும் படியான வித்தியாசமான கதைக்களத்தையும் கொண்டிருந்தது

முதலில் குமுத வார இதழில் தொடர்கதையாக வந்த கதை. பின் நாவலானது. தன்னுடைய முதல் நாவலான, இந்நூலின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தார், சுஜாதா.

மேலும்

இப்போது தான் இந்த நூலை படிக்க வாய்ப்பு கிடைத்தது , முற்றிலும் புதுமையான ,எளிமையான உரைநடை , ஜெயராமனோடு முடிந்து அவரவர் மனதில் தொடங்குகிறது .... 19-Aug-2015 7:21 pm
Arulmathi அளித்த படைப்பில் (public) கவிஜி மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Apr-2014 12:27 pm

வாசமில்லா வலைப்பூ !

காதல் கொற்றத்தில் நுழைந்து
உன்னைப் பதிவிறக்கம் செய்ய
பலமுறை சொடுக்கினேன் பயனில்லை .

இணைப்பறு நிலையில்
என்னை எரிதமாக்கிய காதல் அஞ்சலே!

காதல் குருடனாய் புனைகிறேன்
புதுக்கவிதை புடையெழுத்தில் !

உன் பின்னொட்டாய் நான்
என் முன்னொட்டாய் நீ !

என் இதய இரும்பில் பிடித்த ‘காதல்துரு’ நீ !

சுழியமாய் இருந்த என்னை
பூரியமாக்கிய காதல் செயலி நீ !

உவமும் துடிமமும் ஒன்றிணைந்த
காதல் குறியீடு நீ !

என் காதல் வலைப்பதிவில் புகுந்துவிட்ட
மென்வழு நீ !

உன் வருடுபொறிக் கண்ணால்
என் மனச்சாளரத்தைப் பதிந்து கொண்டவள் நீ !

கம்பியில்லா காதல் இணைப்பில்
என் நே

மேலும்

கணினி தமிழ் அருமை .........சிறந்த கற்பனை 07-Aug-2015 7:32 pm
தமிழ்.....ஆகாயம்..... 25-Apr-2014 9:01 pm
கணினி கவித்தமிழ் அழகு! புதுமை!.. கணினித்தமிழ் இன்னும் தவழட்டும்! 25-Apr-2014 9:37 am
தமிழில் விளக்கம் தந்தமைக்கு நன்றி ..... நல்ல சிந்தனை , நல்ல கற்பனை ..... 24-Apr-2014 4:05 pm
கவிபுத்திரன் எம்பிஏ அளித்த கேள்வியில் (public) Eluthu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Jul-2015 8:41 am

வில்வா வாசக போட்டிக்கு சமர்பிப்பதற்கு ஜூலை 31 என்று கொடுக்கப் பட்டிருந்ததே ஆனால் இன்று சமர்பிக்க முடியவில்லையே?

மேலும்

என்னமா இப்படி பண்றீங்கலேமா ? என்னாலும் சமர்பிக்க முடியவில்லை தோழர்களே .......... 31-Jul-2015 8:17 pm
மிக வெகு நாள் கழித்தே இத்தளத்திற்கு மீண்டும் வந்தேன்.... ஆனால் முன்பு போல் உள்ள ஆர்வமும் அனைத்து படைப்பிற்கு வழங்ககப்படும் கருத்துக்களும் தற்போது இல்லை என்றே உணர்கிறேன்... இறுதியாக இன்னும் சற்று நொடிகளில் என்ற போட்டியில் பங்கு பெற்றேன் போட்டி மிக விறுவிறுப்பாகவும் பல்வேறு சிந்தனைகளை தூண்டுவதாகவும் இருந்தது.... முடிவுகளும் அனைவரும் அறியும் படியே குறித்த நேரத்தில் அறிவிக்கப்பட்டது. பெயருக்கு போட்டிகளை ஏற்படுத்தாமல் புதிய சிந்தனைகளை தூண்டும் வகையிலும் சமுதாயத்திற்கு பலனளிக்க கூடிய வகையிலும் இருந்தால் நலம் என்று நினைக்கிறேன்..... 31-Jul-2015 7:27 pm
இதனை சரி பார்க்கிறோம்... 31-Jul-2015 7:04 pm
போட்டி முடிவை சிலர் மின்னஞ்சலில் தெரிவிப்பதாக தெரிவித்து இருந்தனர்.... முடிவு அறிவிப்பு இல்லாத போட்டி நபர்களுக்கு தெரிவிக்கிறோம்.. அறிவித்தமைக்கு நன்றி... 31-Jul-2015 7:04 pm
தினேஷ்n - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 8:09 pm

இந்த நிலை மாறும் ..
@
படி, தெளி , பயன்படு
@
தாவணிகள் இல்லையெனில்
தாடிகள் இல்லையடி பாப்பா
@
அணில் பற்றி எழுத
மரம் ஏற தேவையில்லை
@
ஆடையில் தொடங்கியது
ஆதாமின் அழிவு
@
பெண்ணோடு பழக
பொய் பழகு .
@
பணமிருந்தால் பதவியுண்டு .
@
விவாகமும் , விவாகரத்தும்
இருவரின் ஒப்புதலின்றி அமையா.
@
ஆசை அழிவில்லாதது ,ஆனால்
அழிக்க வல்லது .
@
கீரை விற்ற பணமெடுத்து
கீதை வாங்காதே
@
அட்சய பாத்திரங்கள்
அழகை இருக்க தேவையில்லை
@
இளைஞர்களே அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள்
அது ,
பிரபலங்கள் நடித்த அரசியல் படம்
வந்தாலும் வரலாம் ,
வராமலும் போகலாம் ..
@
புரட

மேலும்

தாவணிகள் இல்லையெனில் தாடிகள் இல்லையடி பாப்பா @ அட்சய பாத்திரங்கள் அழகாய் இருக்கத் தேவையில்லை புரட்சிக்கு வறட்சி வந்தது நம்நாட்டில் தான் வரதட்சணை வில்லொடித்தாலும் சீதைகள் கிடைப்பதில்லை கன்னியுடனும் கணினியுடனும் அளவோடு பேசு . ----இவைகள் அருமை. திருப்பூருக்கு அனுப்பலாம் எனது வாசகங்கள் : நாத்திகம் படி ஆத்திகனாய் வாழ் மது மாது இரண்டையும் விலக்கு மகாத்தமா ஆகலாம் --வாழ்த்துக்கள் தினேஷ் அன்புடன், கவின் சாரலன் 31-Jul-2015 9:43 pm
நல்ல சிந்தனை ....வாழ்த்துக்கள் தினேஷ் 31-Jul-2015 9:39 pm
தினேஷ்n - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 8:24 pm

கணினி ஒரு கன்னியாகி
கனவில் வரும் நிலவோ ...

இணைய தளங்கள் அத்தனையும்
இனியவளின் இடையோ ...

பென்டிரைவில் செய்து வைத்த
பென்சில் அது விரலோ ...

வலைதளத்தில் வந்தாலும்
வலையில் விழா மானோ ...

மென்பொருளில் செய்த
மெல்லியதொரு மேனியோ ...

கல்லில் செய்தாற்ப் போல்
ஹார்டிஸ்க்கானது மனமோ ....

ப்ரோக்ராம் கொண்டு செய்த
போர் விழிகள் உனதோ ...

மானிட்டரில் செய்து வைத்த
மாம்பழங்கள் கண்ணமோ...

இன்டர்நெட்டில் ஈமெயில் அனுப்பும்
இமை மூடா விழியோ .....

மேலும்

அதி அற்புதம்..! 03-Aug-2015 6:09 pm
அடடே !! அழகிய வரி வடிவம் !! நல்ல ரசனை பொதிந்த வரிகள் !! சற்றும் கூட சிரத்தையுடன் முயன்றிருந்தால் "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ " என்ற வாலி அவர்களின் வரிகளை ஒரு வழி செய்திருக்கலாம் !! யோசிக்கவும் வாய்ப்பிருந்தால் முயற்சிக்கவும் .... இல்லையென்றால் தெரியப்படுத்தவும் !! வாழ்த்துக்க்கள் !! 03-Aug-2015 5:46 pm
அருமையாக உள்ளது ! வாழ்த்துக்கள் ! கணினிக் கவிஞர்கள் வரிசையில் நீங்களும் இணைந்து விட்டீர்கள் ! என்னுடைய கவிதை வாசமில்லா வலைப்பூவை கொஞ்சம் படிக்கவும் . கவிதை எண் 190880 03-Aug-2015 4:44 pm
நவீனம் காதல் / காதலி வித்தியாசமான படைப்பு 18-Jul-2015 2:29 pm
தினேஷ்n - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 8:02 pm

மேலிருந்து சொன்னால்
மேனகையின் மேனியிது...

இருட்டைக் கத்தரித்து
இடை தாண்டி
பரவிய கூந்தல் ...

கூந்தலில் ,
நட்சத்திரங்களின் நகலாய்
நந்தவன பூக்கள் ....
$

கண்களுக்குள் கறுப்புச் சூரியன்
கரையேறத் துடித்திருக்கும் ...
கரையோரத்தில்
கருநாகங்கள் படுத்திருக்கும் ...

ஒற்றைக் குருவி துரத்தும்
கற்றைக் காகங்கள்
அவள் பார்வை ...
$

மஞ்சள் வெயிலெடுத்து
மாதுளை பழமெடுத்து
தளிரோடு -தாமரை அரைத்த
தங்க கண்ணங்கள் .....
$

கள்

மேலும்

நன்றி தோழமையே ............. 30-Jul-2015 7:18 pm
அழகிய இரசனை.... பொருத்தமான உவமைகளுடன் எழுதபட்டிருக்கும் வரிகள் அருமை... ரசித்தேன் தோழமையே.,,,, வாழ்த்துக்கள்.... தங்கள் பயணம் தொடரட்டும். 20-Jul-2015 8:08 pm
அழகு பாராட்டுதல் மென்மை பாராட்டுதல் கவிதையில் இனிமை. இனிய உவமைகளுடன் கவிதை சிறப்பாகவே இருக்கிறது ஒரு கண்ணியைத் தவிர.ஒரு முழுப் பாலையும் ஒதுக்கிய வள்ளுவர் எங்கேயாவது எல்லை மீறி இருக்கிறாரா ?அவர்தான் நம் எல்லோருக்கும் வழிகாட்டி. வாழ்த்துக்கள் தினேஷ் அன்புடன், கவின் சாரலன் 17-Jul-2015 10:21 pm
தினேஷ்n - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2015 6:00 pm

விவசாயம் .......

மண்ணோடு மனிதன் எழுதிய
முதல் கவிதை ...

பூமி அணியும்
புதுப்புதுப் புடவை .....

மழையில் ஊறினால்
சாயம் ஏறும் ஓவியம் .....

இறுதியாக இந்தியாவின்
ஒடிந்த முதுகெலும்பு ....

ஆம், ஒடிந்த முதுகெலும்புதான்...

முதுகெலும்பை விற்றுத்தானே
மூலிகை மருந்து வாங்கினாய் ...
அமைச்சர்களின் ஆண்மைக்கு .
@
பத்திரிக்கையில் படித்தேன்
"தொடரும் விவசாயிகள் தற்கொலை "
புள்ளி விவரம்
புத்திக்குள் கேள்விக்குறியானது ...
இது எதிர்ப்பா

மேலும்

சாகா வரம் வேண்டும் விவசாயிக்கு ................................ மண்புழுவாய் ............... மரமாய் ........................... மண்ணாய்......................... நீராய்............................... உரமாய் ........................... அருமையான படைப்பு தோழரே ............ 01-Sep-2015 7:14 pm
அற்புதம் !!! 12-Jul-2015 11:29 am
நன்றி நண்பர்களே .... 18-Jun-2015 6:41 pm
நெஞ்சைத் தொடும் உண்மை வரிகள் ....அனைத்தும் அருமை தினேஷ் . விவசாயிக்கும் விடியல் வரவேண்டும் ....நானும் இதைப்பற்றி பல கவிதைகள் எழுதி உள்ளேன் ....நம் மன திருப்திக்கு ....ம்ம்ம் 18-Jun-2015 6:49 am
தினேஷ்n - அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2014 10:33 am

வோட்டுப் பதிவு ஏன் நூறு சதவிகிதம் இருப்பதில்லை

முடிந்தவரை பகிருங்கள்

மேலும்

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.தெரிவு செய்யப்படும் கட்சி அல்லது வேட்பாளர் மக்களின் பெரும்பான்மை வாக்கில் தெரிவு செய்யப்படுவதில்லை. இதனால்தான் வெற்றி பெற்றவர்கள் மக்களை கண்டுகொள்வதில்லை.100 விதம் வாக்களிக்கப்படுமாக இருந்தால் நல்லதொரு மக்கள் தலைவன் தெரிவு செய்யப்படுவான். ஆகவே வாக்களிப்பதற்கான உரிமையை மக்கள் இழக்காமல் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 16-Apr-2014 9:05 pm
ஏன் வாக்களிக்க வேண்டும் நான் மாறி மாறி வாக்ககளித்த எல்லோரும் என்னை ஏமாற்றியவர்கள் எனும் போது நான் ஏன் என் வாக்கை வீணாக்க வேண்டும். இலேசா கெட்டவன், மோசமா கெட்டவன் எனும் இரு வர்கமே ஆட்சி செய்யும் போது படித்த மேதவிகளான நாமும் ஏன் அவர்கள் கறுப்பு பணம் சம்பாதிக்க நம் விரலில் ஏன் கறுப்பு மை பூச வேண்டும்.இது தான் பலர் நினைக்கும்உண்மை காரணம். 16-Apr-2014 9:04 pm
மூக்கணாங் கயறு மாற்றுவது எந்த மாட்டுக்கும் மகிழ்ச்சியை தராது ................ 16-Apr-2014 6:56 pm
தங்களின் கருத்துக்கு நன்றி தோழமையே 16-Apr-2014 5:25 pm
தினேஷ்n - தினேஷ்n அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2014 6:38 am

பழைய காலம்
பகிர்ந்த தாகம்
பருகிய மோகம்...

அவன்,

பார்வை பட்ட இடம்
பவளம் மின்னுதடி
பாலில் நெய்த கடலோ ...

தூக்கம் கலைந்ததை எண்ணி
துறவு நிலையடைந்து
முற்றும் துறந்தது ஏனோ ...

திரை விலகியதால்
திக்கும் பார்த்த கண்
திணறல் கொண்டது ஏனோ ...

மலைகள் கடந்த நிலா
மார்பில் மையல்
கொண்ட தேனோ ...

வான்மலை இரண்டு
தேன்மழை பொழிந்து
தேகம் நனைப்பதும் ஏனோ ...

மார்கழி பனியில்
மல்லிகை மணத்தில்
மயங்குவது நான் தானோ ...

இடை அசைவுகளில்
இடர் கூடுதடி
இறுக்கம் இன்னும் ஏனோ ...

விழியில் வி

மேலும்

அழகன படைப்பு தோழமையே! மிக அருமை.... 10-Apr-2014 6:05 pm
அருமை:) 09-Apr-2014 6:50 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழா ... 11-Mar-2014 7:33 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி..... 11-Mar-2014 7:33 pm
தினேஷ்n - தினேஷ்n அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2014 8:02 pm

தூங்கா நதிகளும்
தூங்குதடி - என்
தூங்கும் விழிகளோ
ஏங்குதடி

தனியே நிலவாய்,
சூரியனாய் காய்ந்தேனே...
ஓவியமாய் வரைந்தேனே
தூரிகையாய் எறிந்தாயே

உன்னை காவியமாக்கி கரைந்தேனே
என்னை கவிஞனாக்கி கரைந்தாயே...

பன்னீர் மேகங்கள்
வெண்ணீர் ஊற்றுதடி - என்
கற்பனை கனவுகளிலும்
கல்லறையே பூக்குதடி

சொட்டாத சொற்களும் - என்
கவிதைகளில் கண்ணீர் சொட்டுதடி

என் மனதில் கார்த்திகையானாய்
ஏன் மயிலிறகே மறைந்து போனாய்.

தங்கை கொண்டதால் தாயானேன்
தவறிழைத்ததால் தந்தையானேன் - தாரமே
தாயாய் உன்னை பெற்றதால் சேயானேன்...

பாவி நான் பாட்டுரைத்தேன்
பாவத

மேலும்

தூரிகையாய் என்பதற்கு பதில் தூரிகையை என்று வடித்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் நண்பரே ! 17-Jun-2015 9:24 pm
ஓவியம், தூரிகை கொண்டே வரையப்படும் ..... அழகாய் இருந்த என் ஓவியமே , நீ வளர்வதற்கு காரணமாக இருந்த என்னையே உன் வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிந்து விட்டாயே ............ 21-Mar-2014 2:58 pm
இரவு நிலவு தனிமையில், குளிர்ச்சியாக இருக்கும் .பகலில் சூரியன் தனிமையில், மிக வெப்பமாக , இருக்கும் . .... இரவில் நீ இல்லாத காரணத்தால் சூரியன் போல் வாட்டம் கண்டேன் ......... 21-Mar-2014 2:50 pm
பன்னீர் மேகங்கள் வெண்ணீர் ஊற்றுதடி - என் கற்பனை கனவுகளிலும் கல்லறையே பூக்குதடி அருமையான வரிகள் ... வலிகளின் வாட்டம் வரிகளில் தெரிகிறது தனியே நிலவாய், சூரியனாய் காய்ந்தேனே... ஓவியமாய் வரைந்தேனே தூரிகையாய் எறிந்தாயே மேற்கண்ட நால்வரிகளுக்கு சற்று அர்த்தம் கூறினால் நன்றாய் இருக்கும் நண்பரே ... 20-Mar-2014 1:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (221)

சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மாரியப்பன் S

மாரியப்பன் S

குலையநேரி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (221)

Abdul Gaffar

Abdul Gaffar

Pottuvil, Sri Lanka
krishnan hari

krishnan hari

chennai
இதயவன்

இதயவன்

நன்மங்கலம், சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (221)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மேலே