இளவெண்மணியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இளவெண்மணியன்
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jul-2017
பார்த்தவர்கள்:  1410
புள்ளி:  320

என்னைப் பற்றி...

எல்லாவற்றிலும்
நீயிருக்கிறாய்
என்ன சொன்னாலும்
அது
உனதாயிருக்கிறது
உன்னைத் தவிர்த்து
ஏதுமிருக்கிறதா
என் காதலே !

@இளவெண்மணியன்

நட்சத்திரங்களில் கால்வைத்து
நடந்துபோக வேண்டும் .
ஒரு நொடிக்கு ஓர் உலகை
செலவு செய்ய வேண்டும் .



--இளவெண்மணியன்

என் படைப்புகள்
இளவெண்மணியன் செய்திகள்
இளவெண்மணியன் - A JATHUSHINY அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2017 8:28 pm

கோபம் வாரமாதிரி ஏதாவது சொல்லிட்டா போதுமே...
உடனே கண்ணால சட்டென்று திரும்பி பார்ப்பா பாருங்க பல இலட்சம் கூர்வாள்களை ஒரே சமயத்தில் வீசுவதை போல.....

சமாதானம் பண்ணுரன்னா கஸ்டம்தான்... இருப்பினும்
உன்முகத்தில் சுருக்கம் வருதுமா என்று சொன்னா போதுமே... உடனே கோபத்த விட்டிருவா........
என் பேரழகி...

மேலும்

அது சரிதான்... நன்றி அண்ணா 24-Oct-2017 8:40 am
அழகிற்கு கவி பாடினால் எப்படிப்பட்ட பெண்ணும் அன்பை ஆயும் முடியும் வரை சன்மானமாய் பெற்றுக்கொண்ட இருக்கலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Oct-2017 7:24 am
இளவெண்மணியன் - அன்புடன் மித்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2017 11:14 pm

பகுத்தறிவைப் பற்றி அனைவரும் விவாதிப்பர்.
ஆனால், செயலிலோ முட்டாள்தனமே வெளிப்படும்.

அன்பைப் பற்றி அனைவரும் வாய்கிழிய பேசுவர்.
ஆனால், அன்போடு பழகுவோரை அவமதிப்பர்.

கருணையைப் பற்றி அனைவரும் கரைந்துக் கொண்டிருப்பர்.
ஆனால், உயிர்பலி இல்லாமல் உணவு உள்ளே செல்லாது.

ஒழுக்கம் பற்றி அனைவரும் ஓதிக்கொண்டிருப்பர்.
ஆனால், உள்ளத்தில் ஆயிரம் அடையாத ஓட்டைகளே நிறைந்திருக்கும்.

அறம் பற்றி அனைவரும் அறிவுறுத்திக் கொண்டிருப்பர்.
ஆனால், தன்னில் அறம் ஆற்றாமையே விளங்கும்.

சிறப்பு குறித்து அனைவரும் சீறிக் கொண்டிப்பர்.
ஆனால், சிறப்புக்குரியோராய் இரார்.

சிந்தனை பற்றி அனைவரும் சிந்திப்பர்.
ஆனால், அடு

மேலும்

சொல்வது எளிது அதை செயல்படுத்துவதே கடினம் வாழ்க்கையின் எதார்த்தமான உண்மை...அழகாக சொன்னீர்கள். 24-Oct-2017 8:50 pm
அறிவுரை எளிதாக யாராலும் சொல்லி விட முடியும். ஆனால், அதனை சுவாசமாக பேணிக்காப்பதே பலருக்கு முடியாத அம்சம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Oct-2017 7:31 am
இளவெண்மணியன் - யாழினி வளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2017 1:41 am

உன்னை கட்டி அணைத்துக்கொண்டு
தூங்கும் கனவுகளையும்
உன்னை கெட்டியாக பிடித்துக்கொண்டு
நடக்கும் பொழுதுகளையும்
உன்னை ஒட்டி நின்றுகொண்டு வாழ்ந்து
முடிக்கும் வாழ்க்கையையும்
உன்னிடம் வெட்டியாக கொஞ்சம் பேசிக்கொண்டு
இருக்கும் மணித்துளிகளையும்
என்னிடம் சுட்டியாக பேசுவதை ரசித்துக்கொண்டே
இருக்கும் நிம்டங்களையும்
என்னிடம் எதுவுமே பேசாமல் நீ என்னை
பார்க்கும் அந்த நொடிகளையும்
என்னிடம் பதில் சொல்லாமல் நீ
வெட்கி நிற்கும் அந்த தருணத்தையும்
உன்னிடம் பேச ஆயிரம் இருந்தும் நான்
மவுனித்து நிற்கும் அந்த தருணத்தையும்
தான் யாசிக்கிறேன் நான்
வேறொன்றும் பெரிதாக இல்லை
தந்துவிடு கண்ணே

மேலும்

நன்றி 26-Oct-2017 8:39 am
நன்றி 26-Oct-2017 8:39 am
அருமை 24-Oct-2017 10:43 pm
வேறொன்றும் இல்லை... எல்லாம் காதலின் மகிமை.. 24-Oct-2017 9:02 pm
இளவெண்மணியன் - யாழினி வளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2017 1:12 am

நீ தான் நீ தான்
என் உயிருக்குள் ஒருஅணுவாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் நீ என் உயிராகவே மாறிவிட்டாய்

நீ தான் நீ தான்
என் இதயத்துக்குள் ஒருதுகளாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் நீ என் இதயமாகவே மாறிவிட்டாய்

நீ தான் நீ தான்
என் நினைவுகளுக்குள் ஒருதுளியாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் நீ என் நினைவுகளின் முழுஉருவாய் மாறிவிட்டாய்

நீ தான் நீ தான்
என் கனவுக்குள் ஒருகணமாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் என் கனவுகளில் கனமாய் மாறிவிட்டாய்

நீ தான் நீ தான்
என் உடலுக்குள் ஒருதிசுவாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் என் உடலென்றும் உன் உடலென்றும் இல்லை என்றாக்கினாய்

நீ தான் நீ தான்
என் உணர்வுக்கு

மேலும்

நன்றி 26-Oct-2017 8:40 am
புல்லாங்குழல் போல மென்மையான சுவாசங்களில் காதலின் உணர்வுகள் கடத்தப்படுகிறது. காதல் என்ற பறவை சிறகுகள் உடைந்த பின்னும் உள்ளம் எனும் இடம் மாறும் கூண்டில் சுதந்திரமான வாழ்க்கை தான் வாழ ஆசைப்படுகிறது ஆனால் கண்ணீரும் புன்னகையும் கனவுகளுக்கும் நினைவுகளும் என்றும் எப்போதும் அடிமைகளாகவே சேவை செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Oct-2017 7:41 am
யாழினி வளன் அளித்த படைப்பில் (public) selvamuthu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Oct-2017 12:14 pm

உன்னிடம் பேச மட்டும்
எப்போதும் ஆயிரம் கதைகள் இருக்கிறது
உன்னிடம் வீச மட்டும்
என்னுடைய வாசம் தவம் கிடக்கிறது

உன்னுடைய நேசம் மட்டும்
என்னிதய வாசலுக்குள் உறங்கி கொண்டிருக்கிறது
உன்னுடைய பாசம் மட்டும்
எனக்குள் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் பிரசவிக்கிறது

உன்னுடைய உருவம் மட்டும்
எங்கேயும் போகாமல் ஒட்டிக் கொள்கிறது
உன்னுடைய நினைப்பு மட்டும்
என்னிதயத்த நீங்காமல் நிரப்பி இருக்கிறது

உன்னுடைய நிகழ்காலத்தோடு தான்
என்னுடைய நிகழ்காலம் கெட்டியாக ஒட்டிக் கொள்கிறது
உன்னுடைய எதிர்காலத்தோடு தான்
என்னுடைய காலடி தடங்கள் இணைந்திட நினைக்கிறது

என்னையும் உன்னையும்
அந்த கால ச

மேலும்

நன்றி ஒருவேளை உணர்வுகள் ஒளிந்து கொள்வதால் இப்படி இருக்கலாம் .. கருத்துக்கு நன்றி 23-Oct-2017 3:59 am
சில காதல் ஏக்கத்தில் துவங்கி துக்கத்தில் முடிகிறது சில காதல் ஏக்கத்தில் துவங்கி இன்பத்தில் முடிகிறது எல்லாம் காலம் செய்யும் கோலம்... 21-Oct-2017 10:26 am
உன்னுடைய நேசம் மட்டும் என்னிதய வாசலுக்குள் உறங்கி கொண்டிருக்கிறது உன்னுடைய பாசம் மட்டும் எனக்குள் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் பிரசவிக்கிறது இந்த வரிகள் மிகவும் ஏன் மனதிற்கு நெருங்கி விட்டன. வாழ்வை அர்த்தமுடன் வைத்திருப்பது காதலும் அன்பும்தான். அந்த அன்பில் பிரிவும் சேரவும் கலந்ததுதான் வாழ்க்கை. அதை சரியாக புரிந்துகொள்வதில்தான் நமது மனமும் தடுமாறுகிறது. அருமையான படிமம். இருந்தாலும் ஒரு விமர்சனம் என்னவெனில் காதலும் உணர்வும் ஒன்றுதான் அதைகைய அன்பை செல்லுகையில் இன்னும் யதார்த்தமாக உணர்வுகளை நேரிடையாக சொல்லியிருந்திருக்கலாம். 21-Oct-2017 4:44 am
இதுவரை போக முடிகிறதோ அதுவரை தான் வாழ்க்கை என்பார்கள். அந்த வாழ்க்கையிலும் ஓர் அங்கம் காதல். அந்த அங்கத்தின் சுவாசம் இன்றி எந்தவொரு ஜீவனின் வாழ்க்கையும் ஒரு அடி கூட நகராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2017 12:17 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) prasanth 7 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Oct-2017 7:43 am

தீபாவளி சிறுகதை


'யாத்ரா.., யாத்ரா நீ எங்கே இருக்காய்? என்னே விட்டுட்டு எங்கேயும் போய்ட்டியா’? பாசத்தின் பணிவான குரல்கள் அவளது செவிப்பறையினுள் பூங்காற்றாய் நுழைந்தது.

'யாத்வி நான் உன்னே விட்டு எப்பயாவது விலகிப் போயிருக்கனா’? மரணம் வரை உன் நிழலாக நானும் பயணம் செய்து கொண்டிருப்பேன். அவளது மென்மையான வார்த்தைகள் யாத்வியின் இதயத்தில் சாசனமாய் பதிந்தது.

'யாத்ரா நிழல் என்றால் என்ன?' புதிரான வாழ்க்கையில் புரியாத வினாக்களை புதிதாக போடுகிறாள் யாத்வி.

சிறு நிமிடங்கள் மெளனத்தில் சிறைப்பட்ட அவளது இதழ்களை எங்கிருந்தோ வந்த ஞானம் விடுதலை செய்தது. "உள்ளங்கை அளவான இதயத்தில் கடலளவு நினைவுகள்; ஆற

மேலும்

பணத்தில் என்ன இருக்கின்றது உண்மையில் வாழ்க்கை என்பது அன்புக்குள் தானே புதைந்து கிடக்கின்றது. வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 01-Feb-2018 8:13 pm
உங்கள் தங்கைக்கும் நீங்கள் தான் தாயோ.உணர்வுக்களஞ்சியமே.மிக அழகு சகோதரா. 01-Feb-2018 3:40 pm
இனி வருகின்ற காலங்களில் முயல்கிறேன் வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 02-Jan-2018 7:58 am
மிக அருமை நண்பா. தான் இறந்தும் தன் தோழிக்கு கண் கொடுக்க எண்ணிய மனம் வாழ்க. இவர்களுக்கு இருக்கும் மனம் யாருக்கும் வராது. இறக்க மனம் இவர்களுக்கு உண்டு. தோழி தோழியாகவே இருக்கலாம். அவளே அம்மா, அப்பா எல்லாமாக இருப்பாள். அம்மாவை தோழியாக நினைக்கலாம் ஆனால் தோழியை அம்மாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோழி எல்லாமாக இருப்பவள். கதையின் கடைசி பகுதியை சற்று மாற்றி முடித்திருக்கலாம் என்று நான் நினைக்கிறன். ஆனால் இதை படித்து முடித்ததும் கண்களில் நீர் கசிகிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி 21-Dec-2017 12:11 am
இளவெண்மணியன் - இளவெண்மணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2017 1:46 pm

காதலாகி
பொழிகிறது நிலா
களித்து
சிலிர்க்கிறது கடல்

கரையின்
கண்களில்
வழிகிறது கவிதை !

@இளவெண்மணியன்

மேலும்

கண்களில் வழியும் கவிதை அழகு... 25-Oct-2017 11:04 am
நன்றி 19-Oct-2017 11:40 am
ஆஹா அழகு ! 19-Oct-2017 12:27 am
நன்றி ! 18-Oct-2017 6:40 pm
இளவெண்மணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2017 1:46 pm

காதலாகி
பொழிகிறது நிலா
களித்து
சிலிர்க்கிறது கடல்

கரையின்
கண்களில்
வழிகிறது கவிதை !

@இளவெண்மணியன்

மேலும்

கண்களில் வழியும் கவிதை அழகு... 25-Oct-2017 11:04 am
நன்றி 19-Oct-2017 11:40 am
ஆஹா அழகு ! 19-Oct-2017 12:27 am
நன்றி ! 18-Oct-2017 6:40 pm
இளவெண்மணியன் - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2017 7:42 pm

ஒரு குட்டி தொட்டியில ஒரு குட்டி செடி இருந்துச்சாம் . அது ரொம்ப சந்தோசமா இருந்துச்சாம். அவங்க வீட்ல அந்த செடிக்கு ரொம்ப நல்லா தண்ணி ஊத்தி நல்லா பாசமா பாத்துக்கிட்டாங்களாம். அதுவும் அழகா வளந்துச்சாம். அந்த செடி காத்தடிக்கும் போது அழகா தன்னோட இலையை அசைச்சு தலையாட்டி நன்றி சொல்லுமாம். எதுக்கு தெரியுமா தினம் தோறும் காலைல எழும்பின உடனே வீட்டுக்கார அம்மா வந்து பாசமா தண்ணி ஊத்துறாங்களா அதுக்கு தான். அப்படியே அந்த குட்டி செடியும் அந்த வீட்டுக்கார அம்மாவும் நல்லா நண்பர்கள் மாதிரி ஆய்ட்டாங்களாம்.

அப்புறம் நாளாக நாளாக அந்த வீட்டுக்கார அம்மாக்கு அந்த செடி மேல இன்னும் பாசம் ஜாஸ்தி ஆகிடுச்சாம், அதுக்கு

மேலும்

அழகான கதை .நடையும் சிறப்பு . அந்த அம்மா நானாகவும் செடி என்னோடு பேசுவது போலவும் இருந்தது .உனர்வுப் பூர்வமான கதை . அருமை ! 15-Oct-2017 9:42 pm
இளவெண்மணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2017 9:55 pm

அன்பால் வென்றுவிட
வேண்டுமென்றுதான்
எப்போதும் துடிக்கிறாய்
நீ
வெல்லவேண்டும்
என்பதற்காகத்தானே
போருக்கே அழைக்கிறேன் !

@இளவெண்மணியன்

மேலும்

மிக்க நன்றி ! 11-Oct-2017 7:54 am
உண்மைதான்.., பிடித்தமான உள்ளத்திடம் பித்துப்பிடித்த உள்ளம் ஆயுள் கைதியாய் சரணடைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Oct-2017 7:48 am
இளவெண்மணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2017 6:58 pm

எனக்குப் பிடித்தவர்களெல்லாம்
என்னை
நெருங்குவதில்லை

அவர்களுக்கு என்னை
பிடிக்காதென்றும்
அர்த்தமில்லை

ஆமாம்
அன்புக்கு எதிரி
வெறுப்பில்லை

தன்முனைப்பு !

@இளவெண்மணியன்

மேலும்

கருத்துக்கும் பகிர்வுக்கும் கனிவான நன்றிகள் ! 10-Oct-2017 7:17 pm
நன்று.. உள்ளம் உணர்வுகளைத்தான் மதிக்கிறது அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 7:00 pm
இளவெண்மணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2017 3:54 pm

விலகுதலும் இல்லை
நெருங்குதலும் இல்லை
உன்னை
சுற்றிக்கொண்டிருக்கிறேன்

பெறுதலும் இல்லை
தருதலும் இல்லை
உன்னை
பற்றிக்கொண்டிருக்கிறேன்

உனக்குள்
நான் நுழைந்ததையும்
எனக்குள்
நீ இருப்பதையும்
ஒப்புக்கொள்ளவும் இல்லை
மறுக்கவும் இல்லை

நீ கனவில் வந்து
பூ தருகிறாய்
வாங்கி என்
நெஞ்சில் சூடிக்கொள்கிறேன்

அர்த்தங்களை
நீ சொல்லவில்லை
என்றாலும் அது
புரியாமல் இல்லை !

@இளவெண்மணியன்

மேலும்

நன்றி நண்பரே 10-Oct-2017 6:45 pm
புரிந்தும் புரியாமலும் அறிந்து அறியாமலும் நெஞ்சுக்குள் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 6:34 pm
நன்றி நண்பரே 10-Oct-2017 6:15 pm
அகநானூற்று காதல் நினைவலைகள் போற்றுதற்குரிய காதல் இலக்கியம் கற்பனை சிறகடித்து பறக்கிறது பாராட்டுக்கள் தொடரட்டும் காதல் வாழ்வியல் மலர் மாலைகள் ரதி மன்மதன் ஆசிகள் 10-Oct-2017 5:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
எட்வின்

எட்வின்

நாகர்கோவில்
A JATHUSHINY

A JATHUSHINY

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (34)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (33)

யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
மேலே