திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  11-Oct-1962
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jun-2011
பார்த்தவர்கள்:  3436
புள்ளி:  214

என்னைப் பற்றி...

நான் பகுதி நேர கல்லூரிப் பேராசிரியர். எனக்கு தெய்வீகப் பாடல்கள் புனைவது. மற்றும் இசைப்பது, தேச பக்திப் பாடல்கள், இயற்கை வாழ்த்துப் பாடல்கள் , நன்னெறிக் கதைகள் போன்றவை இயற்ற மிகவும் பிடிக்கும். மேலும் தமிழ் மொழிக்காக என்னால் இயன்ற பணிகளை அவ்வப்பொழுது ஆற்றியும் வருகின்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் படைப்புகள்
திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி செய்திகள்

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
பேச்சுப் போட்டி
அவைக்கண் குழுமியுள்ள ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் என் முதற்கண் பணிவான வணக்கங்கள் பல.
நான் இங்கு பேச எடுத்துக்கொண்ட தலைப்பு “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என்பதாகும். மேலோட்டமாகப் பார்த்தால் கொளுத்தும் வெயிலில் நிற்கும் ஒருவருக்குத்தான் வெயிலின் அருமைப் புலப்படும் என்பதாம்.
ஆனால் அத்தலைப்பினுள்தான் எத்தனை எத்தனை ஆணித்தரமான கருத்துக்கள் பயின்றுள்ளன தெரியுமா?
நம்மில் பெரும்பாலோர் செய்யும் சில பல தவறுகளை உங்கள் முன் வைத்தே அதற்கான கருத்துக்களைப் புலப்படுத்துகின்றேன்.
 எத்தனை பேர் உணவுப்பொருள்களை வீணடிக்கின்றனர். நாம் கீழே சிந்

மேலும்

1. நற்பெயரென்னும் நல்லறம் கூட்டி,
சிந்தையைக் கெடுக்கும் தீமையைக் கழித்து,
அறம் பொருளென்ற பேற்றினைப் பெருக்கி,
இல்லறம் வகுத்தே இனிமையாய் வாழ்வோம்!

2. இருளை விரட்டுவோம் ஒளிவெள்ளத்தில் மூழ்குவோம்
சத்தியப் பாதையைப் பின்பற்றி நித்தியம் வீறுநடை பயில்வோம்!

3. வாழ்க்கை என்றதோர் நெடும்பயணத்தில்
வருவோர் போவோர் ப்லருண்டு
வாழ்ந்து மடிந்தோர் எண்ணற்றோர்
வாழ்வோர் சிலராங்கே என்றென்றும்!

4. இருளும் ஒளியும் நிறைந்த இப்புவியில்
இன்பமும் துன்பமும் கலந்திட்ட வாழ்வில்
நல்வினைத் தீவினைப் பயனறிந்தே நாம்
நற்பணியியற்றியே நற்பேரடைவோம்

5. உழைப்

மேலும்

தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் (அகரவரிசையில்)

அமுதம் தமிழ்மொழி என்றறிவாய்
ஆசையுடன் நீ தினம் பயில்வாய்
இசையுடன் பாடல் பலவுண்டதனில்
ஈடற்ற மொழியாம் தமிழ்மொழியே

உலக மொழிகளில் இதன் உயர்வை
ஊரார் பலரும் மொழிபெயர்த்தே
என்றும் அதன் புகழ் நிலைத்திடவே
ஏற்றம் பெற்றே போற்றிடுவார்

ஐயம் தெளிவுற கற்றிடலாம்
ஒன்பொருள் பலவும் அதிலுண்டு
ஓங்கி உலகெங்கும் உரைத்திடுவாய்
ஔவை போற்றிய இன் தமிழே!!

அன்புடன் ஸ்ரீ.விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோய்ம்புத்தூர்-22

மேலும்

தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் (அகரவரிசையில்)

அமுதம் தமிழ்மொழி என்றறிவாய்
ஆசையுடன் நீ தினம் பயில்வாய்
இசையுடன் பாடல் பலவுண்டதனில்
ஈடற்ற மொழியாம் தமிழ்மொழியே
உலக மொழிகளில் இதன் உயர்வை
ஊரார் பலரும் மொழிபெயர்த்தே
என்றும் அதன் புகழ் நிலைத்திடவே
ஏற்றம் பெற்றே போற்றிடுவார்
ஐயம் தெளிவுற கற்றிடலாம்
ஒன்பொருள் பலவும் அதிலுண்டு
ஓங்கி உலகெங்கும் உரைத்திடுவாய்
ஔவை போற்றிய இன் தமிழே!!

அன்புடன் ஸ்ரீ.விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோய்ம்புத்தூர்-22

மேலும்

திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - anitha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2020 10:23 am

நன்றன்று பிரித்து எழதுக

மேலும்

நன்றன்று= நன்று+ அன்று எவ்வாறெனின், நன்று என்ற நிலைமொழி ஈற்றேழுத்து று என்பது, இதனைப் பிரித்தால் ற்+ உ என்று பிரியும் இங்கு 'உ' என்பது உயிர் எழுத்து. வருமொழி முதல் எழுத்து 'அ 'என்பது இதுவும் உயிர் எழுத்தாகும். இரண்டு உயிர் எழுத்துகள் புணரா(சேராது) எனவே "உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்" (அதாவது, வருமொழியில் உயிர் எழுத்து வந்தால் நிலைமொழி ஈற்றில் உள்ள 'உ' என்ற குறில் எழுத்து தன்னுடன் இணைன்துள்ள மெய்யெழுத்தை விட்டு மறையும். அந்த அடிப்படையில் 'உ' என்ற எழுத்து மறைந்த நிலையில், நன்ற்+அன்று என்று இருக்கும். அடுத்து "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்ற புணர்ச்சி விதிப்படி நிலைமொழி ஈற்று 'ற்' என்ற எழுதுடன் வருமொழி 'அ' சேர்ந்து ற்+அ=ற என்று ஆகியமையால் நன்றன்று என்று புணர்ந்துள்ளது. 23-Jan-2021 9:11 pm
நன்று +அன்று 09-Mar-2020 10:48 am
வணக்கம் எழுது என்பது எங்கே இருக்கு... கருத்துக்களை சமர்ப்பிக்கவும்... எண்ணங்களை சமர்ப்பிக்கவும் என்று தான் இருக்கு.... எழுது என்ற தலைப்பை நானும் 4daysa தேடுறேன்.... பதிவேற்றம் செய்த எண்ணங்களை நீக்க முடியவில்லை.... 100புள்ளி என்றால் என்ன அதை எப்படி பெறுவது.... கவிதை சமர்ப்பிப்பது எங்கே.... எழுது மேலே எங்க இருக்கிறது காணும் 09-Mar-2020 10:47 am
நன்று அன்று 07-Mar-2020 2:56 pm
திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - Selvakumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2020 12:32 am

Karaiyoram pirithu Aluthuga

மேலும்

கரையோரம் = கரை + ஓரம் எவ்வாறெனின், கரை என்பதில் உள்ள இறுதி எழுத்து ரை அதனைப் பிரித்தால் ர்+ஐ என்றுவரும். இதில் ஐ என்பது உயிர் எழுத்து. அதுபோல் வரு மொழி முதல் எழுத்து ஓ இதுவும் உயிர் எழுத்து. இரண்டு உயிர் எழுத்துகள் புணரா(சேராது) எனவே அதனை இணைக்க ஒரு மெய் எழுத்து தேவைப்படும். இதற்கான நூற்பா: : இ,ஈ,ஐ வழி யவ்வும்" என்ற அடிப்படையில் கரை+ய்+ஓரம் என்று முதலில் வரும். அடுத்து " உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்ற புணர்ச்சி விதிப்படி ய்+ஓ=யோ என்று மாற்றம் அடைந்து கரையோரம் என்று புணர்ந்தது. (உடல்- மெய்யெழுத்து, உயிர்- உயிரெழுத்து, ஒன்றுதல்= சேருதல். 23-Jan-2021 9:00 pm
கரையோரம் = கரை + ஓரம் என்பது சரியே என்பதுபோலிருந்தாலும் கரையின் + ஓரம் என்பதே சரி. உதாரணம் ஊரோரம் = ஊரின் ஓரம் தேரருகே = தேரின் அருகே காரேறி = காரில் ஏறி 07-Sep-2020 7:10 pm
கரை+ ஓரம் 04-Sep-2020 12:52 am
கரை+ஓரம் 02-Sep-2020 4:07 pm

பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற
புணர்ச்சி இலக்கணம் எளிய வடிவில்
பாகம் 3
வழங்குபவர்

திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோயம்புத்தூர் 22

அன்பு மாணவர்களே! கடந்த பதிப்பில் வெளியிட்டிருந்த புணர்ச்சி விதிகள் உங்களுக்குப் புரிந்தும், பிடித்தும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதோ இந்த மூன்றாம் பாகத்தினை உங்களுக்காக வெளியிடுகின்றேன்.
பயில்வோமா! வாருங்கள்: ஐயம் இருப்பின் தெளிவு பெற இதோ என் கைப்பேசி எண்கள் உங்களுக்காக. 9843297197 / 9043069396
தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பினையும் நல்லாதரவையும் தர அன்புடன் பணிகின்றேன். இந்த நூல்கள் அனைவற்றையும் என் அன்பு பெற்றோர்களின் பொற்பாத கம

மேலும்

மிக்க நன்றி. தமிழன்னைக்குத் பணி செய்தலை நான் தலையாய கடமையாகக் கருதுகின்றேன். அடுத்தடுத்து பல இலக்கண நூல்களை அதுவும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு வழங்குவதில் நான் கழிப்பேருவகை எய்துகின்றேன். இது அன்னை கலைவாணி அளித்த வர்ப்பிரசாதம். தொடர்ந்து வெளியிட தங்களைப் போன்றோரின் ஊக்குவிப்பு எனக்கு பெரிதும் மகிழ்வை ஏற்படுத்துகின்றது. மிக்க நன்றி அன்புடன் ஸ்ரீ. விஜயலஷ்மி 28-Dec-2019 8:17 am
மிக்க நன்றி, திருமதி.ஸ்ரீ விஜய லக்ஷ்மி! பள்ளி மாணவியர் மாணவர் ஆகியோருக்குத் தக்க விதத்தில் சரியாகத் தமிழ் இலக்கணப் புணர்ச்சி இலக்கணத்தைத் தெளிவாக விளக்கி உள்ளீர்கள்! எனக்குத் தெரிந்த வரை இந்த அளவிற்கு இப்போதைய இளைய தலைமுறை ஆசிரியை ஆசிரியர்களுக்கு இந்தப் புணர்ச்சி இலக்கணம் தெரிந்திருக்க, நான் என் அநுபவத்தில் கண்டதில்லை! மிக்க நன்றி! பாராட்டுக்கள்! 28-Dec-2019 12:53 am
திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி - முஹம்மது உதுமான் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2019 5:03 pm

கவிதை, கதைகளை எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்

மேலும்

எழுது என்பது எங்கே இருக்கு... கருத்துக்களை சமர்ப்பிக்கவும்... எண்ணங்களை சமர்ப்பிக்கவும் என்று தான் இருக்கு.... எழுது என்ற தலைப்பை நானும் 4daysa தேடுறேன்.... 09-Mar-2020 10:30 am
எழுது என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்து, அதற்குக் கீழே வரும் பிரிவுகளில் தாங்கள் எழுதப் போவது கதையா, கவிதையா போன்றவற்றை தேர்வு செய்து அதற்கான தலைப்பினை இடுகை செய்தபின் இறுதியில் அது எந்த பிரிவின் கீழ் வருகிறது (எ.டு. தமிழ் ) பின்னர் தங்கள் பெயர் வரவேண்டிய இடத்தில் பெயரைப் பதிவு செய்துவிட்டு, இறுதியாக நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டபின்னர் சமர்ப்பி என்பதனை பதிவுசெய்தால் தங்கள் கதையோ கவிதையோ பிரசுரிக்கப்படும். வெளியிட வாழ்த்துக்கள். 28-Nov-2019 8:13 pm

திருக்குறள் கவிதை



இதய ஒலிகள் அனைத்தினையும்
ஈரடி தனக்குள் அடக்கிவிட்டு
ஈடு இணையற்ற புகழனைத்தும்
இனிதாய் தனக்கே ஈட்டிக்கொண்ட


சீரினைப் பெற்றது திருக்குறளே
சிந்தை குளிர பல வரிகள்
செம்மைப் பெருக பல வரிகள்
சிறப்பாய் வாழப் பல வரிகள்


எண்ணில் அடங்கா கருத்துக்கள்
ஏற்றம் மிகுந்த சொல்லடைகள்
என்றென்றும் மிளிரும் ஒளிச்சுடராய்
எங்ஙணும் பரவிடும் அதன் கதிர்கள்


சாதிபேதம் எதுவுமின்றி
சமத்துவமாக விளங்கிநின்று
சர்வமயமாய் விளங்கி என்றும்
சாதனை புரியும் திருக்குறளே!


வார்த்தைகள் இல்லை வருணிக்க
வாழ்த்தொலி போதா எடுத்தியம்ப
வையகம் எங்ஙணும் செருக்குடனே
வட்டமிடுது திருக்குறளே!

மேலும்

ஒன்றும் புரியவில்லை
எதோ நினைக்கிறேன்
எல்லாம் சூனியம்
ஏதேதோ குரல்கள்


சிலபொழுது நிசப்தம்
சிலபொழுது பேரிரைச்சல்
பயம் பயம்
புரியாத பயம்


எங்கிருக்கிறேன்
என்ன செய்கிறேன்
எங்கிருந்தேன்
என்ன செய்தேன்

புரியவும் இல்லை
பிரியமான அரவணைப்புகள்
யார் இருக்கிறார்கள்?
என்னைச்சுற்றி

பார்க்க ஆவல்
பரிதவிக்கும் இதயம்


சிலபொழுது சிரிப்பு
சிலபொழுது அழுகை
ஏன் இந்தத் துடிப்பு?


மலரத்தான் ஆசை
நாளாக வேண்டுமே?

காண்பேனோ புது உலகை?
காணாமலே மறைவேனோ?

எத்தனை சிந்தனைகள்?
இந்த பிஞ்சு அரும்பிற்குள்?

மேலும்

அருமை..அருமை...வாழ்த்துக்கள் ..! 18-Nov-2015 6:42 pm
அபாரமான கவிதை! ஒரு குழந்தை என்னவெல்லாம் நினைக்கும் என்று இதை விட அழகாக தெளிவாக எழுத முடியுமா? இப்படி ஒரு கவிதை எழுதுவது கடினம்! குழந்தையின் பாத்திரத்திலேயே ஒன்றாகக் கலந்து எழுதப் பட்ட கவிதை! வாழ்த்துக்கள்! கவிதையை படிக்கும்போது குழந்தையின் துடிப்பை நாமும் உணர முடிகிறது! நாமும் குழந்தையின் பாத்திரமாக மாறி விடுகிறோம்! 14-Nov-2015 10:51 pm
அருமை.. 14-Nov-2015 5:03 pm
நல்ல கவிதை.. கொஞ்சம் எழுத்து பிழையை சரி செய்தால் இன்னும் சிறக்கும்... வெற்றி பெற வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Nov-2015 11:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

இவர் பின்தொடர்பவர்கள் (18)

கேகண்ணன்

கேகண்ணன்

கும்பகோணம்
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (20)

கேகண்ணன்

கேகண்ணன்

கும்பகோணம்
PraveenC

PraveenC

Coimbatore
மேலே