கேசவன் புருசோத்தமன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கேசவன் புருசோத்தமன்
இடம்:  இராமநாதபுரம்
பிறந்த தேதி :  18-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jun-2015
பார்த்தவர்கள்:  773
புள்ளி:  153

என்னைப் பற்றி...

கேசவன் புருசோத்தமன்.
தமிழ் ஆர்வம் கொண்ட தனிமை விரும்பி .
சிறு வயது முதல் தனக்குள் கேட்டக் குரலை இனியேனும் வெளிக்கொணர எண்ணி எழுத்தை நாடி இங்கு .

https://www.facebook.com/kesavan.purusoth

என் படைப்புகள்
கேசவன் புருசோத்தமன் செய்திகள்
கேசவன் புருசோத்தமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2020 1:49 am

மை விழி பார்வைகள்
போதும் என்றான்,
மணமாலைகள்
கொண்டு வந்தான்.

மணமேடையில்
மறுகணம் வீற்றிருந்தான்,
மங்கையின் வருகைக்கு
காத்திருந்தான்.

மங்கள ஒலிதனை
கேட்டு எழுந்தான்
காலை கனவாக
மனம் வெந்தான்.

மேலும்

கேசவன் புருசோத்தமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2019 1:16 am

ஒரு கதிராய்
இருந்த என்னை
பல பயிராக
மாற்றியது ,

பட்ட சூடும்
தாங்கிய அடியும்
வீசி எறிந்த விசையும்
மூடிப் புதைத்த மண்ணும்
மூச்சடைத்த நீரும்
முத்தம் கொடுத்த
புது ஒளியும் தான்.

தினம் உதிக்கும் கதிர் ஒளியில்‌
பட்டு வளர்த்தாலும்
ஒருநாள் உதிர்ந்து உதைபட்டு
விதையாய் புதைந்து
உரிய காலம் கட்டு
மீட்டு வந்தால் தான்
உயிர்கள் இங்கு
பிறவிப் பலன் காணும்.

ஒவ்வொரு நாளும்
கதிராய் வளர்ந்து
அனுபவ அடிகள் பட்டு
விதையாய் உதிர்ந்து உறங்கி
பயிராய் தளிர
கதிரவன் ஒளிக்கு
காத்திருப்போம்.

மேலும்

கேசவன் புருசோத்தமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2019 1:47 am

ஒருவன் மட்டும்
வாழ்ந்த உலகில்
உன்னை இன்று பார்க்கிறேன்!

இன்று என்னை இழந்த
அந்த உலகமும்
உன்னை சுற்ற வேர்க்கிறேன்!

எங்கோ தொலைந்த
எந்தன் முகத்தில்
உன்னால் தானே
என் விரல்!

என் கண்கள் மூடி
மூச்சும் முட்ட
களைந்த முடியை
நெற்றிக் கோதி
நேராய் நின்று
என் விண்ணை
இன்று பார்க்கிறேன்.

எந்தன் உலகின் முதல் நிலவே!
முதல்முறை என் வானில்
நீ ஒளி தந்தாய்.

உன்னால் இன்று
என்னை மறந்து
நான் ஒருவன் மட்டும்
வாழ்ந்த என் உலகில்
உன்னை இன்று பார்க்கிறேன்.

இனி சுற்றும் உலகம் நிற்கும் போதும்
உன்னை சுற்றி திரிவேனோ!
நீ உன்னை தந்து என்னை வென்றால்
ஒன்றாய் நானும் கரைவேனோ!

முத்தம் வேண்ட

மேலும்

கேசவன் புருசோத்தமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2019 1:12 am

ஆற்றங்கரை மரத்தடி நிழலில் ஆட்டு தின்ற அருகம்புல் தரையில் அவள் மடியில் நான் அமர்ந்து கேட்ட அன்புணவு கதைகள் இன்று அவள் குரலில் கேட்கிறதே.காலணிகள் காண காலில் கற்துகள்கள் ஒட்டி வலிந்தால் நான் துள்ள துடித்து அழும் அவளது விழியின் திரைநீர்ப்பார்வை முகதருகில் வருகிறதே.உலகம் மொத்தம் உடனே மறந்து உன் அணைப்பில் நானும் தூங்க நெற்றிமுடி வேர்வை துடைக்கும் உன் மூச்சு காற்றின் பரிசம் தன்னை இன்று என்னை மோதும் தென்றல் தந்து என் துகில் கலைத்து செல்கிறதே.கருவறையில் உன் கனவுகள் மொழியில் நான் கண்ட உலகம் யாவும் என் வாழ்நாளில் எனக்கு கிடைக்க உன் வாழ்வையே எனக்கு தந்து நீ வென்றாயே என் தாயே.உன் மடியில் மீண்டும் உறங்கும்

மேலும்

கேசவன் புருசோத்தமன் அளித்த படைப்பை (public) நவின் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
23-Jun-2015 8:14 pm

அழகாய் இருக்கிறாய் !
பயமாய் இருக்கிறது !!

காதல் கவிதை.

அறிவாய் இருக்கிறாய் !
பயமாய் இருக்கிறது !!

கல்விக் கவிதை.

மேலும்

மிக்க நன்று...எந்த பிள்ளையும் தாய்க்கு தகுதியானவர்கள் இல்லை தான் 01-Jul-2015 5:11 am
உண்மைதான் தோழரே... அவர்கள் அத்தனை சிரமங்களிலும் கல்வியிலும் , பணிகளிலும் சிறந்து விளங்குகிறார்கள் . அவர்களின் கனவுகள் சில சமுக காரணங்களுக்காக சிதைக்கப்படுவது . மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது . நன்றி நண்பரே உங்களது தொடரும் அன்பிற்கு .. 30-Jun-2015 7:49 pm
மிக்க நன்றி நண்பரே .. 30-Jun-2015 7:43 pm
நன்றி தோழரே.. மகிழ்ச்சி . 30-Jun-2015 7:42 pm
கேசவன் புருசோத்தமன் அளித்த படைப்பில் (public) kirthi sree மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Jul-2017 10:47 pm

கண்டவரெல்லாம் கவிபாட
நான் மட்டும் நடனமாடுகிறேன்
மனதிற்குள்.

மேலும்

விரைவில் கவி காண முடியும் என்று நம்புகிறேன். பாராட்டுதலுக்கு நன்றி. 23-Jul-2017 12:15 am
நன்றி. 23-Jul-2017 12:13 am
அருமை 22-Jul-2017 8:47 am
கேசவன் புருசோத்தமன் - கேசவன் புருசோத்தமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2017 10:40 pm

வேகம் குறையாமல்
ஒலிக்கிறது
கடிவாங்காமல் கள்ளன்.

மேலும்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) moorthi மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Dec-2015 5:27 pm

முண்டாசு கவிஞனே!
முத்தமிழ் அறிஞனே!
வண்டுக்கும் மலர் என்றாய்
தண்டுக்கும் மலர் என்றாய்

கடலில் ஆடும் அலையே!!
பாரதி பாடல் கேட்டாயோ?
மனையில் மணக்கும் துளசியே!!
காற்று உனக்கு மேவும் விரலா?

புதுமையில் தமிழ் பிறந்தது
அதில் உனக்கு ஓர் நீராட்டு
பொதிகையில் வீசும் காற்றே!!
பாற்கடலில் பாரதிக்கு நாவாட்டு.

கவிதையில் தவழும் குழந்தை
உன் வரிகள் பிடித்துதான் எழுகிறான்.
வானுக்கு மேகம் என்றால் அழகு
தமிழுக்கு பாரதி என்றால் பேரழகு

எனக்கும் வேண்டும் அமுதம்
பாடவா அந்தியில் பாஞ்சாலி சபதம்
பச்சைக்கிளிகள் மடி தூங்க
கிளைக்குள் கேட்குது குயில் பாட்டு

காலை பனியில் குளிக்கும்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Feb-2016 2:15 pm
சிந்தனை மிகவும் சிறப்பு 09-Feb-2016 2:00 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 24-Jan-2016 10:13 am
பாராட்டுக்கள் 24-Jan-2016 12:14 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) GD DHARMA மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Oct-2015 11:30 am

(அபியும் நானும் திரைப்படத்திலுள்ள வா..வா..என் தேவதையே!! பொன் வாய் பேசும் தாரகையே! என்ற பாடல் ராகத்தில்)

(சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...)2

பால் மணக்கும்..தேகத்திற்கு..
வெண் நிலவால் உடை இடவா
செல் கரைக்கு...புன்னகைக்கு...
என் உயிரால் மொய் இடவா

சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...

அன்பு மகள் மழலை போல்
அந்த பூக்களுக்கும் மொழிகள் தெரியவில்லை
சின்ன மகள்..பார்வை போல்
அந்த தாரகைக்கும் மின்னிட புரியவில்லை
என் கைகள் போட்டு வைத்த நொடியைப்போல
எந்தன்,வாழ்க்கையில் பரிசு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Nov-2015 11:25 am
அதியற்புதம் .......... 16-Nov-2015 12:52 am
அடுத்த பாடலையும் நீங்கள் உரிமையோடு விமர்சிக்க வர வேண்டும். வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Oct-2015 2:11 pm
உங்களிடம் இந்த வார்த்தையை கேட்கும் போது நெஞ்சில் குளிர்க் காற்று வீசுவது போல் உணர்கிறேன்.ரொம்ம சந்தோசம் நண்பரே!! உங்களைப் போன்றவர்களின் கவிகளை படிக்கும் போது கிடைக்கும் அனுபவத்தை என் கவிக்குள் வித்திடுகிறேன்.அடுத்த பாடலையும் நீங்கள் உரிமையோடு விமர்சிக்க வர வேண்டும். வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Oct-2015 2:10 pm
கேசவன் புருசோத்தமன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Jun-2015 3:13 am

கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்ததும்
முகநூளில் வள்ளுவன் குறித்து சில வரிகளை பதித்திருந்தேன் .

ஐயா !!
உன்னால் உயர்ந்தது பெருமை
உமது குடிக்கும் அந்த குடிகொண்ட
நாட்டிற்கும் .

உமது கவியை காலங்கள் கடந்தும் முழுதும் உணர முயன்று வருகிறது இவ்வுலகம் .

அத்தகைய உமது வழிவந்த குழந்தைகள் நாங்கள்
உன் போல் உலகம் போற்ற கவி படைக்க முடியாது போனது வருத்தம் என்றால் .

அதை விட கொடிய வருத்தம் உன் போல் அழகாய் சம்மணக்காலிட்டு ஒழுங்காய்
உட்கார கூட முடியவில்லையே ..

முயன்றவர் யாரோ முடியாது என்று உணர்ந்து உன்னையும் இப்படி நிற்க வைத்து விட்டார்களே ...
நடுக்கடலில் .

என்று

மேலும்

மிக்க நன்றி .. ஐயா . 28-Jun-2015 8:33 pm
நிற்றார் - நின்றார்? சில வாரிகளை - வரிகளை? 28-Jun-2015 8:18 pm
மன்னிக்கவும் ஐயா ... பிழைகளை சுட்டிக்காட்டுங்கள் .. எனக்கு புலப்படவில்லை .. மிக்க நன்றி .. 28-Jun-2015 7:54 pm
கதை அருமை. அச்சுப் பிழை திருத்தவும் 28-Jun-2015 7:47 pm
கேசவன் புருசோத்தமன் - கேசவன் புருசோத்தமன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2015 12:19 am

நானும் அப்படிதான் ..

சிறுவயது முதல் நான் பேசி பழகிவரும் என் நண்பனை என் நம்பிக்கையை எனக்கு எதிரே ஒருவன் தவறாக சித்தரிப்பதும் , தவறாக பயன்படுத்துவதும் இவறிற்கெல்லாம் மேலாய் ஒருவன் தான் தான் அவன் என்பதும் என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாதவை. அதை எதிர்த்தால் நானும் நாத்திகவாதி என்று பொருளில்லா பெயர் சூட்டுகிறார்கள். மூடர்கள். இல்லை அரக்கர்கள்.

கடவுள் குறித்த எனது பார்வை.

நாத்திகம் என்றொரு மதம் தொடங்கி அரசியல் செய்பவர்களே.. நான் உங்களோடும் சேரவில்லை.

நான் ஒரு செல்லா ஓட்டு தான். (...)

மேலும்

கேசவன் புருசோத்தமன் அளித்த படைப்பை (public) தப்தி செல்வராஜ் மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
27-Jun-2015 6:11 pm

காலையில் கண்கள் விழித்தும்
கதிரவன் ஒளியில்லை
சுடுகிறான் சூரியன் மட்டும் !! .

எங்கே என் தோழன் !
அருகில் தொட்டேன்
அவனும் எழுந்தான் !! .

புதிதாக பறித்த பூக்களின் வாசம்
பனி போனபின் பாதைகழிவுகளின்
படுநாற்றம் !!.

இரண்டும் மறைந்தன !
இரண்டு நிமிடங்களில் .

இனி என்
இந்நாள் தொடக்கம் .

படுக்கையை துடைத்து
பையில் போட்டேன் !
காலணியும் காலடியில் .

நடந்தான் நண்பன் !
தொடர்ந்தேன் நானும் .

சீண்டும் சிறுநீர்மல வாடை !
ஈரமில்லா இடத்தில் இட்டேன் !
நானும் கொடை .

குடங்களின் குத்துச்சண்டை !
குழாய் அடியில்
குடிக்க தண்ணீர் .

பல்லும் மேலும்
பட்டன சுத்தம் .

கேட்டது வ

மேலும்

வேலைப்பளுவால் கவிதை எழுதுவதில் இருந்து விலகி வாசிப்பை மட்டும் தொடர்ந்துகொண்டு இருந்தேன் . உங்களது கருத்து என்னை மீண்டும் பிடித்து இழுத்து எழுது என்கிறது . மிக்க நன்றி நண்பரே .. 14-Jul-2015 12:20 pm
கேசவனின் கரங்கள் சாகசம் புரியவிருக்கின்றன என கட்டியம் கூறும் கவிதை....!! உங்கள் வரிகளில் உணர்வூற்றின் விசையை உணர்கிறேன்!! முன்கூட்டிய வாழ்த்துகள் கேசவன் :) :) 13-Jul-2015 12:22 pm
சிறந்த படைப்பு நண்பரே 03-Jul-2015 10:27 pm
நெகிழ்ச்சியான படைப்பு தோழமையே......ஒளியிழந்த விழியின் படமும் .....ஒலியும் உணர்வும் மட்டுமே ஒளியாகவும் அவர்களின் விழியாகவும் இருப்பதை வலியோடு சொல்லும் படைப்பு....தொடருங்கள்.... கவிஞர் சமூக ஆர்வலர் அலெக்சாண்டர் 03-Jul-2015 11:33 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (185)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (185)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (185)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே