குப்பன் கோ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குப்பன் கோ
இடம்:  கும்மிடி பூண்டி
பிறந்த தேதி :  24-Dec-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2015
பார்த்தவர்கள்:  190
புள்ளி:  19

என்னைப் பற்றி...

நானும் ஒரு தமிழ் காதலன்

என் படைப்புகள்
குப்பன் கோ செய்திகள்
குப்பன் கோ - குப்பன் கோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2017 11:52 am

பொங்கலோ பொங்கலுன்னு
பொங்குதம்மா பொங்கலு!
நேத்துவரை அனுபவிச்ச
துன்பமெல்லாம் பறக்குதம்மா!

பச்சரிசியைப் பார்க்கையில
பால்மணம் பொங்குதம்மா!
பாலகர் உள்ளமெல்லாம்
பட்டொளி வீசுதம்மா!

கும்மிகொட்டி நான்
சேர்த்த சில்லரையெல்லாம்
பொங்கலாக பொங்குதம்மா
குவலயம்தான் வழியுதம்மா!

செங்கரும்பைச் சுவைக்கையிலே
சொப்பனங்கள் தோன்றுதம்மா
என்மனச் சோலையிலே!

கார்முகிலும் காலையிலே
அருள் பனியைத் தூவுதம்மா!
கதிரவனும் கண்விழித்து
செங்கதிரை வீசுதம்மா!

எந்திரக் கலைப்பையெல்லாம்
எருதுகளைத் தொழுதம்மா!
ஏங்கி ஏங்கி நிற்குதம்மா
ஏழுலகும் ஆவின் பாலுக்கு!

பாரின் பசியெல்லாம் பறக்குதம்மா
பாமரன் நட்ட நாற்ற

மேலும்

குப்பன் கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2017 11:52 am

பொங்கலோ பொங்கலுன்னு
பொங்குதம்மா பொங்கலு!
நேத்துவரை அனுபவிச்ச
துன்பமெல்லாம் பறக்குதம்மா!

பச்சரிசியைப் பார்க்கையில
பால்மணம் பொங்குதம்மா!
பாலகர் உள்ளமெல்லாம்
பட்டொளி வீசுதம்மா!

கும்மிகொட்டி நான்
சேர்த்த சில்லரையெல்லாம்
பொங்கலாக பொங்குதம்மா
குவலயம்தான் வழியுதம்மா!

செங்கரும்பைச் சுவைக்கையிலே
சொப்பனங்கள் தோன்றுதம்மா
என்மனச் சோலையிலே!

கார்முகிலும் காலையிலே
அருள் பனியைத் தூவுதம்மா!
கதிரவனும் கண்விழித்து
செங்கதிரை வீசுதம்மா!

எந்திரக் கலைப்பையெல்லாம்
எருதுகளைத் தொழுதம்மா!
ஏங்கி ஏங்கி நிற்குதம்மா
ஏழுலகும் ஆவின் பாலுக்கு!

பாரின் பசியெல்லாம் பறக்குதம்மா
பாமரன் நட்ட நாற்ற

மேலும்

குப்பன் கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2016 3:34 pm

இன்றைய இந்தியாவில்,

ஆசைக்கு இனங்காதவள்மேல்
அமிலம் வீசலாம்!

அன்பு காதலர்களின் கழுத்து
அறுத்து போடலாம்!

காமப் பசிக்கு கண்டவளையும்
புசிக்கலாம்!

கோடிகோடியாய் ஏய்த்துவிட்டு
அரசுக்கு அறிவுரை கூறலாம்!

விவசாயநிலமகளை பன்னாட்டு
முதலாளிகட்கு விலைமகளாக்கலாம்!

அரசியல் பிழைத்தால்
அறமழித்து வாழலாம்!

தலைமை அமச்சரானால்
தரணியையே வலம் வரலாம்!

சமதர்மம் பேசுவோரை சிறைச்
சாலையில் தள்ளலாம்!

நடுநிலை காப்பவரின்
இன்னுயிர் பறிக்கலாம்!

கடமையைச் செய்வோரை
மனவுளைச்சலால்மரணிக்கச் செய்யலாம்!

அனைத்தையும் சுதந்த

மேலும்

எங்கும் இதே அவலம் தான் நிறைந்து கொண்டிருக்கிறது 30-Aug-2016 7:34 am
குப்பன் கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2016 3:26 pm

எழுதுகோலைஉயர்த்தியவன்

முத்துமுத்தான
வரிகளைஈந்த
முத்துக் குமரா - உன்
வெண்முத்துக்கள் உதிர்த்த
நன்முத்துக்களை பெருந்துயரில்
ஆழ்த்தியதுஏனோ?

தந்தையின் தகவுகளை
தரணிக்கு சொன்னவனே!

தங்கத் தழிழை
தரமாகத் தந்தவனே!

'பேசுகிறேன் பேசுகிறேன் உன்
இதயம் பேசுகிறேன்" என
தன்னம்பிக்கை ஊட்டியவனே!

'கண்பேசும் வார்த்தைகளை"
'சுட்;டும் விழிச் சுடரை" என
விளித்தவனே!

'அணிலாடும் முன்றில்" லில் - என்னை
அலைபாய வைத்தவனே!!

உன்னுள் என்னையே
'வேடிக்கைப் பார்க்க” வைத்தவனே!

அப்பாக்களின் தாலாட்டாம்
'ஆனந்தயாழை" மீட்டியவனே!

காதலர்களின் சொப்பனமான
'தேவதையைக் கண்டவனே"!

குரலொலியைஉயர்த்தாது
எழு

மேலும்

அவரது எழுத்துக்களிலே என்றும் நம்மோடு பேசுவார்.... 30-Aug-2016 7:48 am
காவியங்களுக்கு என்றும் மரணம் கிடையாது.. 30-Aug-2016 7:33 am
குப்பன் கோ - joதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2016 12:15 pm

சீதையின் பொறுமையையும்
கண்ணகியின் கற்பையும்
ராதையின் அழகையும்
ஒரு சேர பெற்றவளே
நீ தான் எம் தாய் மண்ணின்

தமிழ் மகளோ........

பலவகையான வண்ணச் சாயங்கள்
பூசிக்கொண்டு
பாவாடையில் பணிக்குச் செல்லும்
பட்டணத்து பத்மினிக்களுக்கு
நடுவில்
மஞ்சள் நீராடி நெற்றி திலகமிட்டு
ஒற்றை சடையில்
ஒரு சரம் மதுரை மல்லியை
வைத்து கொண்டு
ஆத்துகாரனை பணிக்கு அனுப்பும்
அழகியே

நீ தான் எம் தமிழ் மகளின்

தலை மகளோ..........

நீ எம் தமிழ் மகள்

தலை மகள்

மட்டும்

மேலும்

அருமையாக கவிபாடும் தமிழ் மகளுக்கு வாழ்த்துக்கள்! 04-Aug-2016 10:20 pm
நன்று வாழ்த்துக்கள் 04-Aug-2016 1:05 pm
குப்பன் கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2016 12:57 pm

தழிழ்ச்சொல்!

எழுத்துக்கூட்டிப் படித்த
முதல் வார்த்தை
என்னவென்று தெரியாது!

உதடுகள் முனுமுனுத்த
முதல் பாடல் யாருடையது
தெரியாது!
அத்தனை நொடிகளும்
மறந்து போயினும்
அம்மா கொஞ்சிய
முதல் தமிழ்ச்சொல்லை மறவேன்!

கண்கள் மங்கி கால்கள் நடுங்கி
உணர்வுகள் இழந்து
நினைவிழந்த போதும்
நம்மை அடையாளம்
காட்டுவது தாய்மொழியே!
அதுவே நம் உயிர்மொழி!

பாலினும் தேனினிது!
தேனினும் அமுதினிது!
அமுதினும் சொல்லினிது!
சொல்லினும் இனிது

தழிழ்ச்சொல்லே!
தழிழ்ச்சொல்லே!
தழிழ்ச்சொல்லே!

மேலும்

குப்பன் கோ - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2016 7:15 am

ஊடலும் கூடலும்----கயல்விழி

எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண

மேலும்

வாழ்த்துகள் 31-Dec-2021 11:27 am
அருமை கணவன் மனைவி காதலா அல்லது காதலன் காதலியா 30-Nov-2021 3:27 pm
தங்களின் கவிதை சொல்வது நியுட்டனின் மூன்றாம் விதி போல.. வினைக்கும் எதிர்வினைக்குமான பிணைப்பு அதன் வலிமையை பொறுத்ததே... பிரிவு காதலை வலுப்படுத்தும்..உண்மை அன்பை உணர்த்தும்.. மிக அருமையாக பிரிவின் வலியை வரியாக்கி இருந்தீர்கள்... 30-May-2021 7:44 pm
குப்பன் கோ - MAGIKUTTI அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2015 3:00 am

மெட்ராஸ் என்பதன் பொருள் என்ன?

மேலும்

தருமமிகு சென்னையாக இருந்து தற்போது சிங்காரச் சென்னையாக மாற முயற்சித்து வரும் இந்த மாநகரின் பெயர், பல நூற்றாண்டுகளாக மெட்ராஸ்தான். இதனை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதராஸ், மதரேஸ்படான், மதராஸாபடான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ், மதிராஸ் என ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள். இந்த மெட்ராஸ் அல்லது மதராஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்ட் சோழமண்டலக் கடற்கரையில் ஒரு துண்டு பொட்டல் நிலத்தை வாங்கினார். ஓராண்டுக்கு பின்னர் பிரிட்டீஷார் அந்த இடத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். கோட்டையை சுற்றி மெல்ல வளர்ந்து விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம். இதுதான் சென்னையின் 'சுருக்' வரலாறு. பிரான்சிஸ் டே வாங்கிய நிலம், சில மீனவக் குடும்பங்களும், இரு பிரெஞ்சு பாதிரியார்களும் வசித்த சிறிய கிராமத்திற்கு தெற்கே இருந்தது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்றும், எனவே அந்த கிராமம் மாதராஸ்பட்னம் என்றும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலையாரியின் வாழைத் தோட்டத்தை, தொழிற்சாலை அமைப்பதற்காக டே வாங்கினார். நிலத்தை கொடுக்க அவர் முரண்டு பிடித்ததால், அங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு மாதராஸன்பட்னம் எனப் பெயரிடுவதாக வாக்களித்து, டே நிலத்தை வாங்கினாராம். மதராஸ் என பெயர் வந்ததற்கு வேறு ஒரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் வசித்து வந்தனர். இங்கு பிரான்சிஸ் டேவிற்கு ஒரு காதலி இருந்தார். அவருக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதாலேயே டே அந்த துண்டு நிலத்தை தேர்வு செய்தார் என்று ஒரு கதை உள்ளது. டேவின் காதலி சாந்தோமில் அந்நாட்களில் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த மாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர். கடற்கரை ஓரத்தில் இருந்த நிறைய குப்பங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனவே, டே தனது காதலியின் குடும்பப் பெயரை சூட்டியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம், சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்தனர். இதனால் அந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மதராஸபட்டினம் வடக்கிலும், சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர். பிரபலமான இந்த பெயர் காரணங்கள் தவிர வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன. சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதி, சோழப் பேரரசின் சிற்றரசர்களான முத்தரையர்கள்வசம் கொஞ்ச காலம் இருந்ததால், இது முத்தராசபட்டினம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முத்தராசா, முத்ராஸ், மத்ராஸ் என மருவியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆற்காடு நவாப்புகள் மதராஸ்பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லிலிருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். இதேபோன்று சென்னை பெயருக்கு பின்னாலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் செம்மை நிறத்தில் காணப்பட்டன. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்று பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் செம்மை என்பது சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து. செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகிலேயே காளிகாம்பாள் கோயில் இருந்ததால் பக்தர்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் தம்பு செட்டித் தெருவில் ஒரு புதிய கோயிலைக் கட்டி அம்மனை அங்கு மாற்றினார்கள். ஏற்கனவே, கோட்டைப் பகுதிக்குள் கோயில் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அதற்கு உண்டு. இந்தக் காளிகாம்பாள் அம்மனுக்கு செந்தூரம் பூசி வழிபட்டார்கள். எனவே அம்மனை ‘சென்னம்மன்’ என்று அழைத்தார்கள். ‘சென்னம்மன்’ குடியிருக்கும் அந்த இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சென்னம்மன் என்பதை செம் அன்னை என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை தான் சென்னை என மாறியதாக கூறப்படுகிறது. நன்றி இணையதளம் 14-Mar-2015 6:17 pm
Shanthi madam. Thanks for ur valuable information. 12-Mar-2015 10:57 pm
It is believed that the original Portuguese name is Madre de Sois, named after a Portuguese high authority who was one among the early settlers in 1500. There have been suggestions though that Chennai may not be a Tamil name while Madras may be of Tamil origin. Another version is that the name Madras was perceived to be of a derogatory reference to coolies of the area, which was short for Mad Rascals. நன்றி-----> விக்கிபீடியா. 12-Mar-2015 10:38 pm
வெயிலுக்கு உகந்த மிருதுவான ஆடை, ஒரு வகையான மீன் உணவு 12-Mar-2015 9:57 pm
குப்பன் கோ - குப்பன் கோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2015 7:35 pm

கரையாத நினைவுகள்!

கல்லூரி நினைவுகள் என்றும்
கரையாத கனவுகள்!

சிறு கதையான கனவுகளின்
தொடர் கதைகள்!

பரிச்சயமாகும்
பரிச்சயமில்லா முகங்கள்!
கலகலவென கைகோர்த்து
கதை கதைக்கும் நண்பர்கள்!

வகுப்பறைச் சுவர்களும்
மேளம் தட்டிய மேசைகளும்
மௌனமாய் சொல்லும் எமது
மலரும் நினைவுகளை!

முன்னேறும் முயற்சியில்
முதலிருக்கை பிடிக்கும்
முந்திரிக் கொட்டைகளும்
பின்னே பார்க்கலாம் என்ற
நினைப்பில் பின்னிருக்கையில்
பிண்ணிப் பிணைந்திருக்கும்
அதிமேதாவிகளும்
ஒட்டி உறவாடிய நிமிடங்கள்
நடமாடுகின்றன எம் கண்முன்னே!

பரிட்சை பயத்தில்
பசியை மறந்து
பச்சோந்தி ஆன நிமிடங்கள்!
பெற்றோரையும் மறந்து

மேலும்

மிக்க நன்றி தோழரே 11-Mar-2015 9:39 pm
மிக்க நன்றி தோழரே 11-Mar-2015 9:38 pm
நல்ல நினைவுகள்... பசுமையான நினைவுகள் எப்போதும் அழிவதில்லை இந்த கவிதையை போலவே... இன்னும் கொஞ்சம் பத்திப் பிரித்து எழுதினால் சிறப்பாக இருக்குமோ? வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Mar-2015 1:23 am
முன்னோக்கி நடப்பது வாழ்க்கைக்கு முன்னேற்றம் நினைவுகளில் பின்னோக்கி நடப்பது வாழ்க்கையில் சுகம் நம்மை அறியாது நம்மை நாமே மெச்சிக் கொண்ட மேடை நடிப்புகள் நினைவுகள் இனிமை கவி கோ குப்பன் 09-Mar-2015 10:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

user photo

தாஜூ

தாஜூ

தாய் தமிழ்நாடு(கன்னியாகு
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
user photo

சுவாஸ்

nagercoil
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு

இவர் பின்தொடர்பவர்கள் (9)

user photo

சுவாஸ்

nagercoil
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே