L.S.Dhandapani - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  L.S.Dhandapani
இடம்:  chennai
பிறந்த தேதி :  01-Jan-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Dec-2010
பார்த்தவர்கள்:  666
புள்ளி:  151

என்னைப் பற்றி...

i like tamil

என் படைப்புகள்
L.S.Dhandapani செய்திகள்
L.S.Dhandapani - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2023 11:19 pm

இது எல்லாம் ஒரு விலையா?
இவ்வளவு பெரிய விலையா?
இரண்டிற்கும் இடையில்
இதுக்கு இவ்வளவு விலையா?
என்று தன்னையே ஏமாற்றிக்கொண்டு
பயணித்து கொண்டு இருப்பதே
மிடில் க்லாஸ் மனநிலை!!!

மேலும்

L.S.Dhandapani - L.S.Dhandapani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Aug-2015 12:16 am

பள்ளிக்கூடம் பக்கத்தில் மதுக்கடையா?

நாளைய சமுதாயம் பயிலும் இடமது
அருகினில் மதுவை விற்பது முறையா ?
வெகுண்டெழுந்தனர் அரசியல்வாதிகள்

கமர்கட்டும் ஐசும் விற்க வேண்டிய இடத்தில்
போதை ஏற்றிடும் மதுவை விற்றிடும் கடையா
கொடி பிடித்தனர் சமூக ஆர்வலர்கள்

என் தம்பிகளும் தங்கைகளும் தடம் மாறிட கூடாது
அவர்தம் எதிர்காலத்தை சிதைத்திடும் கடைகள் கூடாது
மாணவர் அமைப்புகள் ஒன்று கூடினர்

பிஞ்சு கைகளில் மது குவலையா
பயிலும் வயதினில் போதை பழக்கமா
தமிழ் முழக்கங்கள் விண்ணை பிளந்திட

சாகும் வரை உண்ணாவிரதம்
கடையடைப்பு போராட்டம்
முயற்சிகள் அத்தனையும் செய்த பின்னர்
வெற்றி கண்டது அவர்கள

மேலும்

அருமை. 06-Aug-2015 1:28 am
L.S.Dhandapani - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2023 2:54 am

என் அன்புள்ள அப்பா!

உன் கைப்பிடித்து நடந்த வரையில்
கணக்கில் வைத்து கொள்ளவில்லை
நான் கடந்து வந்த தூரத்தை

எதிர்பாரா தருணத்தில் என் கைகளை உதறிவிட்டாய்
அந்த இடத்தில் நின்று திரும்பி பார்க்கிறேன்

என்ன இது?
இத்தனை தூரத்தையா
எளிதில் கடந்திருக்கிறேன் நான்
வழிநெடுகிலும் எத்தனை எத்தனை முட்கள்
என்னை விழ வைத்திருக்க கூடிய பள்ளங்கள்
நாம் முன்னேற கூடாதென்று
எறியப்பட்ட கற்கள்
அத்தனையும் நான் உணராமல் இருந்தது எப்படியோ!

இன்று சற்று முன்னேறி நிற்கையில்
அதை காணாமல் விடுத்து
நீ உறங்க சென்றது ஏனோ?

மீளா உறக்கத்தில் நீ விழுந்து
நிதமும் என் உறக்கத்தை களைத்து விட்டாய்
மரணம் இறப்பவருக்கு

மேலும்

L.S.Dhandapani - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2020 2:34 am

(கதையில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களும் இடங்களும் கற்பனையே)

வீராடிகபுரத்தை பார்கவன் என்கின்ற மன்னன் திறம்பட ஆட்சி செய்து வந்தான். உலகம் முழுதும் ஆராதிக்க படுகின்ற, கடவுள் என்ற சக்தியின் மேல் சற்றும் ஈடுபாடு அற்று இருந்தான் அவன். தனது ஆளுமையை பிற தேசங்களுக்கும் பரப்பிட நினைத்த அவன், தன் படை பலத்தை கொண்டு பல நாட்டு அரசர்களை வெற்றி கண்டு அவர்தம் நாடுகளை முற்றுகை இட தொடங்கினான்.

அவன் தொடுத்திருந்த போர்கள் சற்றே ஓய்வு பெற்றிருந்த சமயம், தன்னால் முற்றுகையிடப்பட்ட ஒரு நாட்டின் வீதி வழியே வீரர்கள் சூழ தேரில் பவனி சென்று கொண்டிருந்தான். அவன் வருவதை அறியாத, பார்வையும் கேட்கும் திறனும்

மேலும்

L.S.Dhandapani - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2018 8:38 pm

ஒரு நாளா இரு நாளா
மாசமெல்லாம் வங்கி படிகள் ஏறி
தவமிருந்து வாங்கிய கடனில்
முட்டாள்தனம் செய்தேனே

மாடு பண்ணை போட்டிருந்தால்
இந்நேரம் பால் பண்ணை உருவாக்கி
சுளையாய் வருமானம்
மாதா மாதம் பார்த்திருப்பேன்

காடு நிலம் வாங்கி இருந்தால்
விளைச்சல் வரும் போதெல்லாம்
வீட்டில் பணம் சேர்த்திருப்பேன்

வீடு கட்டி முடித்திருந்தால்
வாடகைக்கு வீட்டை விட்டே
வேறு வீடு வாங்கி இருப்பேன்

எவரோ சொன்னது கேட்டு
பொறியியலை படித்து விட்டேன்
படித்த படிப்பிற்கு வேலை இல்லை
கிடைத்த வேலை போதவில்லை

வாங்கிய கடனுக்கோ
வட்டி கட்டி மாளவில்லை

அழுகையை மறைத்தபடி
சிரித்துக்கொண்டு திரிகின்றேன்
வட்டிக்கு வட

மேலும்

L.S.Dhandapani - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2016 7:15 am

ஊடலும் கூடலும்----கயல்விழி

எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண

மேலும்

வாழ்த்துகள் 31-Dec-2021 11:27 am
அருமை கணவன் மனைவி காதலா அல்லது காதலன் காதலியா 30-Nov-2021 3:27 pm
தங்களின் கவிதை சொல்வது நியுட்டனின் மூன்றாம் விதி போல.. வினைக்கும் எதிர்வினைக்குமான பிணைப்பு அதன் வலிமையை பொறுத்ததே... பிரிவு காதலை வலுப்படுத்தும்..உண்மை அன்பை உணர்த்தும்.. மிக அருமையாக பிரிவின் வலியை வரியாக்கி இருந்தீர்கள்... 30-May-2021 7:44 pm
L.S.Dhandapani - L.S.Dhandapani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2016 8:44 pm

நகரத்து நாகரீகத்தில்
ஆணுக்கு நிகராய் மாற எண்ணி
பெண்மையின் அடையாளம் தொலைத்து
ஆண்மகனின் போர்வைக்குள் ஒளிந்துகொண்ட
நாகரீக பெண்களின் நடுவே

நளினத்தின் உறைவிடமாய்
பெண்மையின் கூடாரமாய்
அழகின் உருவமாய்
என் கண் முன் நடந்து வந்த
கிராமத்து பெண் அவள்...

தன் அழகை மறைத்தபடி
மேலொரு வண்ணம் பூசி
அது அழகு என்ற மடமை கொள்ளாது
நடு வாகெடுத்து முடி சீவி
முகம் கழுவி பொட்டு வைத்து
தனது அழகை அதீதமாய்
காட்டி நின்ற பெண்ணவள்

வாசனை திரவியங்கள்
மேல் நாட்டு ஆடை வகைகள்
விலை மிக்க ஆபரணம்
இவை ஏதும் இல்லாமலே
தாவணியில் தன் அழகை
கூடுதலாய் காட்டியவள்

இன்று எங்கு என்று தெரியவில்லை
தேடி அலைந்து பார்க

மேலும்

Unmai thaan thozhare 05-Jun-2016 10:55 am
என்றும் பெண்களின் மரபு கிராமிய வாழ்க்கையில் தான் நிலைக்கிறது 04-Jun-2016 9:58 pm
தாவணி போட்ட தமிழச்சி! வருவாளா அவள் வருவாளா?... 04-Jun-2016 9:15 pm
அருமை... தமிழ் மண்ணில் தமிழச்சிகள் என்றும் உலவுவார்கள்.... வாழ்த்துக்கள்..... 04-Jun-2016 8:51 pm
L.S.Dhandapani - L.S.Dhandapani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2016 12:03 pm

தாய்க்கு சேலை வாங்கி தந்தேன் நான்
அதை ஊருக்கு சொல்லி பெருமை கொள்வதா
என் மக்களும் என் தாய் போல
விளம்பரங்கள் தேவையா
நான் செய்ததை சொல்லி காட்ட
அவர்தம் வரி பணத்தை
விளம்பரத்திற்கு செலவளிப்பதா

-மக்களின் முதல்வர் காமராஜர் சொன்னது

செய்வோம் நாம் ஒன்றிரெண்டு
விளம்பரமோ நூற்றிரெண்டு
ஆள்பவரும் ஆள துடிப்பவரும்
ஒத்துப்போகும் ஒன்றிரெண்டில்
இதுவும் ஒன்று....!!!

-குடிமகன் எவனோ போதையில் சொன்னது

மேலும்

அவர் போல் எவருமில்லை... 07-May-2016 2:47 pm
L.S.Dhandapani - L.S.Dhandapani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2015 12:47 pm

உறவுகள் மறந்து
உணர்வுகள் நிறைந்து
அலைகிறேன் நானடி
அது உன்னால் தானடி

தாய் மொழி தமிழினில்
வார்த்தைகள் கோர்த்திட முயன்று
இயலாமல் உளறுகிறேன் நானடி
அது உன்னால் தானடி

எனகென ஒரு உடல்
அதனுள் ஒரு உயிர்
இருப்பது மறந்து தவிக்கிறேன் நானடி
அது உன்னால் தானடி

இரு விழிகள் இருப்பது
உலகை ரசித்திட தானே
உன் திசை மட்டும் அது பார்கிறதே
அது உன்னால் தானடி

உறங்கிட இறைவன் தந்த இரவுகள்
கனவுகள் நிறைந்ததாய் மாறி போனதே
உறக்கம் துளைத்து மறு பகல் போல் ஆனதே
அது உன்னால் தானடி

ஒவ்வொரு உயிருக்கும் காரணம் உண்டாம்
அடியே என் பிறப்பின் காரணம் என்ன
அதன் அர்த்தம் முழுமை பெற்றிடும் இங்கு

மேலும்

படைப்பாளிகளுக்கு உணவாய் அமைவது பாராட்டுக்கள் தான்.. அதனை தொடர்ந்து வழங்கும் தோழமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 06-Sep-2015 1:04 pm
இந்த மாணவனின் முயற்சியை தொடர்ந்து ஊக்குவிக்கும் உங்களது வார்த்தைகளில் அகமகிழ்ந்தேன்.. மிக்க நன்றி தோழரே 06-Sep-2015 1:02 pm
நன்றி தோழரே 06-Sep-2015 1:01 pm
கவிதை உலகில் சிறியவனான எனது படைப்பை வாழ்த்தியமைக்கு நன்றி 06-Sep-2015 1:01 pm
L.S.Dhandapani - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2015 8:32 am

சின்ன சின்ன சண்டைகளும்
செல்லகோபங்களும்
விரும்பப்படும் குறும்புகளும்
வெற்றிக்கான முதல்படியும் .

துன்பத்தில் சாய
தோளும்
தோல்வியை எதிர்க்க
துணையும்
குறைவின்றி கொடுக்கும்
உறவென்றால்
நட்பே என்று நானுரைப்பேன் .

சுயநலம் என்பது இங்கில்லை
பிறர்நலன் காப்பதே இதன் கொள்கை
அழகும் அசிங்கமும் பார்ப்பதில்லை
அதனால் தான் "நட்பு "அழகென்பேன்

அறியாவயதில் தொடங்கி விடும்
அறுபது வயதிலும் தொடர்திருக்கும் .
உயிரோடு உயிராக கலந்திருக்கும்
உயிரை கொடுக்கவும் துணிந்திருக்கும்.

தாயிற்கு பின் எதுவென்றால்
தயக்கமின்றி நான் சொல்வேன் நட்பென்று..!!!


என் உயிரான நண்பர்கள் அனைவருக்கும் ஹா

மேலும்

இந்த மாத இறுதி பட்டியலில் வந்துள்ள இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்... 15-Sep-2015 10:12 am
நன்றி தோழமையே .வாழ்த்துக்கள் 03-Aug-2015 7:46 am
நல்ல நட்பு கவிதை... தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்... வாழ்துக்கள் தொடருங்கள்.. 03-Aug-2015 12:46 am
நன்றி மணி .வாழ்த்துக்கள் 02-Aug-2015 11:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

இவர் பின்தொடர்பவர்கள் (9)

suganya raj

suganya raj

chidambaram
lakshmi777

lakshmi777

tirunelveli
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

suganya raj

suganya raj

chidambaram
lakshmi777

lakshmi777

tirunelveli
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே