Madhunila - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Madhunila |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-May-2017 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 4 |
சோர்ந்து போகாதே
என்னோடு கதை பேசு
தோல்வி தொட்டிடாதே
வெற்றியின் கரம் பற்று
உற்சாகம் தேடிடாதே
இதயத்தின் உள்ளே உண்டு
நேர்மையாக வாழ்ந்துவிட்டால்
எப்போதும் சிரிப்பு உண்டு
கற்ற
அறிவியல்
பொறியியல் எல்லாம்
மறக்கடித்துவிட்டது
உன் விழியியல்....
எத்தனை எத்தனை
பகிர்தல் உன்னோடு.....
துயிலெழுப்பும்
அன்னை முத்தம்....
தந்தையின்
செல்ல கண்டிப்பு....
புத்தகசுமையைக் கூட்டும்
நேர விரயங்கள்.....
செலவுக்காக தரப்படும்
இரண்டு ரூபாய் காசுகள்....
பள்ளிமுடிவை இனிமையாக்கும்
அன்னை அரவணைப்பு....
போட்டிகள் கொண்ட
நிலாச்சோறு....
என
என் அந்தமில்லா பகிர்தலில்
ஆதியாய்.....
எனக்கு தோள் கொடுக்கும்
கருவறைத் தோழனே....
உன் மடியில் தவழும்
வரம் கேட்பேன்
கடவுளைக் காணும்
அரிய நொடிகளில்.....
எத்தனை எத்தனை
பகிர்தல் உன்னோடு.....
துயிலெழுப்பும்
அன்னை முத்தம்....
தந்தையின்
செல்ல கண்டிப்பு....
புத்தகசுமையைக் கூட்டும்
நேர விரயங்கள்.....
செலவுக்காக தரப்படும்
இரண்டு ரூபாய் காசுகள்....
பள்ளிமுடிவை இனிமையாக்கும்
அன்னை அரவணைப்பு....
போட்டிகள் கொண்ட
நிலாச்சோறு....
என
என் அந்தமில்லா பகிர்தலில்
ஆதியாய்.....
எனக்கு தோள் கொடுக்கும்
கருவறைத் தோழனே....
உன் மடியில் தவழும்
வரம் கேட்பேன்
கடவுளைக் காணும்
அரிய நொடிகளில்.....
அன்பே....
எங்கிருந்து வருகிறாய்?
எங்கே மறைகிறாய்?
வாடி விடுவேன் என்பதறிந்தும்
என்னை அணைகிறாய்...
உதிர்வை உணர்ந்தும்
உன் தழுவலில் மலர்கிறேன்....
நொடி வேகத்தில்
என் ஜனனத்தை
அர்த்தமாக்குகிறாய்...
வருகையில் நிறைந்து
பிரிவில் மடிகிறேன்....
என்ன உறவு இது?
காதலா? காமமா?
சொர்க்கமும் நரகமும் நம் வசமே-நான்
சொல்வதை உன் மனம் கேட்கடுமே
சதியம் தருமங்கள் நிலைகட்டுமே- இது
தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...
எண்ணற்ற நினைவுகள்
வீற்றிருக்கும் என் மனதில்..
அழையா விருந்தாளியாய்
அரியணை ஏறியது
உன் நினைவுகள்......
உன் விழி தொடுத்த
அம்புகளில் சாய்ந்து விட்டேன்.....
உன் இதய மெத்தையில்
உறங்கிட இடம் கொடு....
அடுத்த நொடி உயிர் பெருவேன்....
உன் காதலின் கருவறையில்
உன் நாயகியாய்.....