பூர்ணி கவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பூர்ணி கவி
இடம்
பிறந்த தேதி :  28-Apr-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Jul-2017
பார்த்தவர்கள்:  356
புள்ளி:  35

என் படைப்புகள்
பூர்ணி கவி செய்திகள்
பூர்ணி கவி - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2019 4:43 pm

பெண்ணை அவமதித்ததால் 12 ஆண்டுகளுக்குப் பின்
கௌரவர்கள் இழந்ததையும்
வேள்வியில் உதித்த மங்கை அவளுக்கு
தன் கணவர்களால் நீதி கிடைத்ததையும்
போதிக்காமல்......

தன்னை பற்றி அவச்சொல் கூறிய நாவையும்
தன்னை தீண்ட ஓங்கிய கைகளையும்
அக்கணமே வெட்டி தனக்கான நீதியை
தானே பெற்றுக் கொண்டாள்
துருபத கன்னிகை
என்று போதித்திருந்தால்...

ஒரு பெண்ணை அவமதிக்க
எந்த நாவும் நீளாது
எந்த கையும் ஓங்காது!

மேலும்

சுட்டிக் காட்டியதுக்கு நன்றி🙏 02-Apr-2019 5:34 pm
கண்ணிகையா? கன்னிகையா? 02-Apr-2019 5:30 pm
பூர்ணி கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2019 4:43 pm

பெண்ணை அவமதித்ததால் 12 ஆண்டுகளுக்குப் பின்
கௌரவர்கள் இழந்ததையும்
வேள்வியில் உதித்த மங்கை அவளுக்கு
தன் கணவர்களால் நீதி கிடைத்ததையும்
போதிக்காமல்......

தன்னை பற்றி அவச்சொல் கூறிய நாவையும்
தன்னை தீண்ட ஓங்கிய கைகளையும்
அக்கணமே வெட்டி தனக்கான நீதியை
தானே பெற்றுக் கொண்டாள்
துருபத கன்னிகை
என்று போதித்திருந்தால்...

ஒரு பெண்ணை அவமதிக்க
எந்த நாவும் நீளாது
எந்த கையும் ஓங்காது!

மேலும்

சுட்டிக் காட்டியதுக்கு நன்றி🙏 02-Apr-2019 5:34 pm
கண்ணிகையா? கன்னிகையா? 02-Apr-2019 5:30 pm
பூர்ணி கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2019 12:26 pm

காவியக் கனவென்பேன்!
அடி கண்ணம்மா காலத்தை கூட வென்றதென்பேன்!
பிரம்மனும் கவிஞன் என்பேன்
உன் கருவிழி காணும் போதெல்லாம்!
பிரம்மாஸ்திரமும் திக்குமுக்காடும் என்றேன்
உன் புருவ மத்தியில் வந்து நின்றால்!
தங்கமும் என்ன தவம் புரிந்ததோ
உன் கூர் மூக்கில் மூக்குத்தியாய் வந்தமர!
ஒரு திருஷ்டி பொட்டும் போதுமோ உன் நாடிக் குவியலின் அழகுக்கு!

எவ்வளவு யுகங்கள் தவம் புரிய வேண்டுமோ
இவ்வழகு கனவை நேரில் காண!
கனவில் கண்ட காரணத்தால் என் காதல் மேல் சந்தேகம் கொள்ள வேண்டாம் கண்மணியே!
ஆழியும் தோற்குமம்மா
என் பிரியத்துடன் நிகர் செய்து பாராத்தால்!

மேலும்

பிரம்மாஸ்திரமும் திக்குமுக்காடும் என்றேன் உன் புருவ மத்தியில் வந்து நின்றால்! மிகவும் அருமை... 02-Apr-2019 12:54 am
தமது கற்பணைக்கு நான் தலை வணங்குகிறேன்......முதல் பாகம் ,என்னை இறக்கச் செய்தது வார்த்தை என்னும் ஆயுதத்தால்.... 01-Apr-2019 8:41 pm
அருமை அருமை 01-Apr-2019 7:37 pm
பூர்ணி கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2018 9:01 pm

அவ்வ௧ண்ட அம்பரமும் சில நொடிநேரம் ஸ்தம்பித்தது ௭ன்றான் அவன்!!

பார்கடலும் அலைகள் ஓய்ந்து நிசப்தம் ஆனது என்றாள் அவள்!!

விஞ்ஞானிகள் பலரும் காணத் தவறிய பிரபஞ்சத்தை அவன் கண்களில் ௧ண்டதாய் கூறினாள் அவள்!!

நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அழகு மலரை அனுதினமும் அவள் புன்னகையில் கண்டதாய் கூறினான் அவன்!!

இருவரும் சேர்ந்துவிட வேண்டி அவ்விகங்கமும் ௧ரைந்து தவம் செய்வதாய் கூறினர்!!

காதலெனும் மாயமோ இப்படி கவி வரைய ௧ற்றுத் தருமென்று அறியப்பெற்றேன் நான்!!

மேலும்

பூர்ணி கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2018 8:00 pm

என்னவளே,
நீ சற்றும் நாணம் குறையா புன்னகையோடு
எனை நோக்கி சம்மதம் கூற என் வாழ்வின் அர்த்தம்
உணர்ந்தேனடி!!
நீ காண இயலாக் காவியமாய் தமிழ் பேச
எனை அறியாமல் என் சர்வமும் உன்னுள்
அடங்கியதடி!!
நீ என் வாய்மொழி கேட்டு “உம்ம்” கொட்ட
நான் மெய் மறந்து உன்னுள்
தொலைந்தேனடி!!
நீ கொலுசணிந்து நடந்து வர
நான் கற்ற ராக வகைகள் பொய்யென்று
அறிந்தேனடி!!
நள்ளிரவில் நீ முற்றம் வர
அந்நிரூபத்தின் ஒளிவிளக்கான சீதகனுக்கும் கர்வம்
தொலைந்ததடி!!

மேலும்

பூர்ணி கவி - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2017 10:38 am

வாழ்வைக் கண்டேன் என்றாய்…
என்னைக் காணும் வேளையில் எல்லாம்
வெட்கம் கொண்டேன் என்றாய்…
என்னுடன் பேசும் வேளையில் எல்லாம்
காதல் கொண்டேன் என்றாய்…
என் நினைவு வரும் வேளையில் எல்லாம்
ஆனால் இன்று ஏனோ…….
அவள் வந்துவிட்டாள் என்கிறாய்
நான் இருந்த இடங்களில் எல்லாம்..!!!

மேலும்

நன்றி:) 09-Oct-2017 10:51 am
எளிமையான வார்த்தைகள் அருமை ..!!! வாழ்த்துக்கள் ..... 08-Oct-2017 8:33 pm
பூர்ணி கவி - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Oct-2017 5:39 am

என் காலை வேளைகளை
அவன் புன்னகை அலங்கரிக்கும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!

நான் பேசும் பேச்சை அப்புன்னகை மாறாமல் கைதாங்கிய கன்னத்துடன்
அவன் கேட்கும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!

என் மாலை நேர சோர்வுக்கு
அவன் தோள் தந்து கைகோர்த்து கதைகள் பல பகிரும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!

நான் எழுதும் கவிதைகளில்
அவன் பிழை ரசித்து படிக்கும்
நாள் தான் வெகு தொலைவிலோ?!!

மேலும்

நன்றி தோழரே!! 07-Oct-2017 7:18 pm
காலங்கள் போடும் பூட்டுக்களில் காதலும் ஒரு மூலையில் முடங்கிப்போய் கிடக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 8:38 am
பூர்ணி கவி - பூர்ணி கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2017 7:47 pm

மழை விட்ட என் வானில்
கதிரிவனின் ஒளிச்சித்திரமாய்
உன் பார்வை, வாசம், வார்த்தை,
மௌனம், கோபம், காதல், நட்பு…..
வானவில்லின் ஏழு வர்ணங்களாய் தோன்றி
என் வாழ்வை சித்திரமாக்கின!!!!

மேலும்

நன்றி தோழரே!! 02-Oct-2017 10:49 am
இதயத்தின் ஓடையில் நினைவுகளின் படகுகள் நீந்துகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Sep-2017 9:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (13)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இளவெண்மணியன்

இளவெண்மணியன்

காஞ்சிபுரம்
மேலே