வே புனிதா வேளாங்கண்ணி - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  வே புனிதா வேளாங்கண்ணி
இடம்:  சோளிங்கர், தமிழ்நாடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jan-2013
பார்த்தவர்கள்:  7780
புள்ளி:  2107

என்னைப் பற்றி...

நான் இல்லத்தரசி.
எனக்கு எழுதுவது படிப்பது மிகவும் பிடிக்கும்.
இதன் மூலம் அதிகமான தோழிகள் தோழர்கள் தோழமைகள் கிடைத்திருக்கிறார்கள்.
மனமும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் பேசுவதே குறைந்து வரும் காலகட்டத்தில் தமிழே மூச்சாக இவ்வளவு பேரை எழுத்துதளத்தில் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.

என் படைப்புகள்
வே புனிதா வேளாங்கண்ணி செய்திகள்
வே புனிதா வேளாங்கண்ணி - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-May-2021 10:22 am

தலைப்பு: "நல்லதொரு குடும்பம்"

காலை எழுந்தது முதல் ..பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி கணவரை அலுவலகம்
அனுப்பிவிட்டு அப்பாடா என்று காபி கப்பை கையில் எடுத்துக்கொண்டு
தொலைக்காட்சியில் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே அன்றைய நாளிதழை
புரட்டிக்கொண்டிருந்தாள் கவிதா...

வீட்டில் இருவரும் வேலைக்கு போனால்தான் குடும்பத்தை சிறப்பாக கடன்
வாங்காமல் நடத்தமுடியும் ...இதோ தீபாவளி வந்துவிட்டது ...துணி எடுக்கவே
கணிசமான தொகை போய்விடும் அப்புறம் பட்டாசு பட்சணம் என்று சேர்த்து வைத்த
சேமிப்பில் கை வைக்க வேண்டும் என்று கணவர் சிவா புலம்புவதை காதில்
வாங்கிக்கொண்டே ...எதுவும் தெரியாதவள் போல் கவிதா இரவு நேர உண

மேலும்

நன்றி... 08-Jan-2022 5:39 pm
மாற்றத்தின் ஆரம்பம் நாமாக வேண்டும். அருமையான படைப்பு 30-May-2021 11:19 am
வே புனிதா வேளாங்கண்ணி - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2021 11:01 pm

விழுந்த நிழலில்
ஒதுங்கி கிடந்தது
வெட்டப்பட்ட கிளை...

கத்திப் பார்த்தேன்
நகைத்து விட்டு நகர்ந்தது
காக்கை.

கண்ட நாள் முதல்
பிடித்துப் போனது
வெட்கம்.. 

மேலும்

வீட்டில் அனைவரும் நலமா? தமிழகம் வந்துவிட்டீர்களா? குழந்தைகளின் படிப்பு முடிந்துவிட்டதா? 09-Jan-2022 9:09 am
நன்றிங்க அய்யா.. 08-Jan-2022 5:36 pm
ஹைக்கூ என்று தலைப்புத் தராமல் துளிப்பாக்கள் என்று தலைப்பு கொடுத்தது சிறப்பு. துளிப்பாக்களும் சிறப்பானவை. வாழ்த்துக்கள். 14-Nov-2021 5:51 pm
வே புனிதா வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2021 10:22 am

தலைப்பு: "நல்லதொரு குடும்பம்"

காலை எழுந்தது முதல் ..பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி கணவரை அலுவலகம்
அனுப்பிவிட்டு அப்பாடா என்று காபி கப்பை கையில் எடுத்துக்கொண்டு
தொலைக்காட்சியில் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே அன்றைய நாளிதழை
புரட்டிக்கொண்டிருந்தாள் கவிதா...

வீட்டில் இருவரும் வேலைக்கு போனால்தான் குடும்பத்தை சிறப்பாக கடன்
வாங்காமல் நடத்தமுடியும் ...இதோ தீபாவளி வந்துவிட்டது ...துணி எடுக்கவே
கணிசமான தொகை போய்விடும் அப்புறம் பட்டாசு பட்சணம் என்று சேர்த்து வைத்த
சேமிப்பில் கை வைக்க வேண்டும் என்று கணவர் சிவா புலம்புவதை காதில்
வாங்கிக்கொண்டே ...எதுவும் தெரியாதவள் போல் கவிதா இரவு நேர உண

மேலும்

நன்றி... 08-Jan-2022 5:39 pm
மாற்றத்தின் ஆரம்பம் நாமாக வேண்டும். அருமையான படைப்பு 30-May-2021 11:19 am
வே புனிதா வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2021 11:01 pm

விழுந்த நிழலில்
ஒதுங்கி கிடந்தது
வெட்டப்பட்ட கிளை...

கத்திப் பார்த்தேன்
நகைத்து விட்டு நகர்ந்தது
காக்கை.

கண்ட நாள் முதல்
பிடித்துப் போனது
வெட்கம்.. 

மேலும்

வீட்டில் அனைவரும் நலமா? தமிழகம் வந்துவிட்டீர்களா? குழந்தைகளின் படிப்பு முடிந்துவிட்டதா? 09-Jan-2022 9:09 am
நன்றிங்க அய்யா.. 08-Jan-2022 5:36 pm
ஹைக்கூ என்று தலைப்புத் தராமல் துளிப்பாக்கள் என்று தலைப்பு கொடுத்தது சிறப்பு. துளிப்பாக்களும் சிறப்பானவை. வாழ்த்துக்கள். 14-Nov-2021 5:51 pm
வே புனிதா வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2021 10:57 pm

"நான் தோத்துட்டேன் பாட்டி என்று வந்தமர்ந்த பேத்திக்கு சில்லென்று மோரை டம்ளரில் ஊத்திக் கொடுத்தார் கமலா பாட்டி...

எத்தன தடவ விழுந்தாலும் எழுந்து நடப்பதற்கு சில மாதங்கள் ஆகும் வளரும் குழந்தைக்கு ...அது போலத்தான் நீ எடுத்து வச்சிருக்குற இந்த படி.. நிச்சயம் ஜெய்ப்ப ..என்று பாட்டி சொன்ன வார்த்தையில் கொஞ்சம் நிம்மதியானாள் மல்லிகா....

அப்பா,அம்மா சென்ற பிறகு இருக்கும் நிலத்தை வைத்துக்கொண்டு கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு படிக்க அனுப்பிய பாட்டியை நினைத்துக்கொண்டாள்...எதிரில் எத்தனை சோதனைகள் வந்தாலும்நிமிர்ந்து எதிர் நீச்சல் போட கற்பித்தவர் பாட்டி...

பெண் என்றாலே கள்ளிப்பாலுக்கு தப்பித்த காலம

மேலும்

வே புனிதா வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2021 10:41 pm

ஐ.டி.யில் வேலை வெளிநாட்டில் ஆன்சைட் போக ஆசை மோகம் எல்லாமுண்டு. இதற்கிடையில் வேலை பார்க்கும் இடத்தில் தன்னைவிட இரண்டு வயது அதிகமுள்ள வைஷ்ணவியிடம் இன்னும் சொல்லிக்கொள்ளாத தீராத காதல் ஜானுக்கு.....

'அதென்ன மண்ணாங்கட்டி காதல்' காதல்னா அவளுக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை...

"பேசி சிரித்து ஆசை காட்டி பின்பு அம்மாவுக்கு, அக்காவுக்கு விருப்பமில்லை என சொல்லும் எத்தனை பேரை கண்முன்னே கண்டுகொண்டிருக்கிறேன் தெரியுமா?", என வைஷ்ணவி தன் தோழி கவிதாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்"....

"ஜான் உன் மேல தீராத காதல் கொண்டுள்ளான் வைஷ்ணவி", என கவிதா சொல்ல..

"என்னடி நீயும் புரியாம பேசுற? அவனுக்

மேலும்

வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) umarsheriff மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2018 2:47 pm

விதை..


காணும் இடம் முதல்
காணா இடம் வரை
வீசிச்செல்லுங்கள் வீதி எங்கும்
நாம் விதைக்கும் ஒவ்வொரு விதையும்
வளரும் தலைமுறைக்கும்
வாழும் தலைமுறைக்கும்
பாடமாகட்டும்...

போகிற போக்கில் வீசிச்செல்லும்
ஓர் விதை ..மண்ணுக்குள் உரமாகி
வீறு கொண்டு எழும்
விருட்சத்தின் உறைவிடம்...

ஒவ்வொரு விதையும்
புதிய விடியலின் ஆரம்பம்..

காலால் எட்டி உதைத்தாலும்
மண்ணுக்குள் புதைந்து
மறு மலர்ச்சி தருவேன் எனும்
விதைபோல்.. நாமும்
வாழ்க்கையில் நல்ல நல்ல‌
எணணங்களை வளர்த்து
வானுயர வளம் சேர்ப்போம்..

அன்பு பண்பு பாசமெனும்
விதைகளை விதையுங்கள்
பன் மடங்கு மகிழ்ச்சி விளையும்..

மேலும்

அருமை..! முத்தான வித்துக்கள்...! 03-Jul-2018 6:34 am
மிக்க நன்றி.. நன்றி.. 15-Feb-2018 6:15 pm
ஒவ்வொரு விதையும் புதிய விடியலின் ஆரம்பம்.. அருமை அருமை ....வாழ்த்துக்கள் அக்கா ... 11-Feb-2018 8:20 pm
மிக்க நன்றி.. நன்றி.. 02-Feb-2018 5:44 pm
வே புனிதா வேளாங்கண்ணி - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2017 10:49 pm

சத்தமிட்டதில் கத்தும் குயிலோசை அது - ஒரு பக்க கதை - கவிஜி
*****************************************************************************************

உங்களுக்கு எப்படியோ எனக்கு தெரியவில்லை. எனக்கு இப்படித்தான் எனக்கு தெரிந்து விட்டது. எவ்வளவு உயரம் என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை. ஆனால் எட்டிப் பார்க்கவே கால் கூசுகிறது. கண்கள் தடுமாறுகிறது.

நான் எட்டிக் குதித்து விட்டேன்.

சட்டென்று நீங்கள் எட்டி பார்க்கத் தேவை இல்லை. நீங்கள் பூமியில்தான் இருக்கிறீர்கள். நான் தான் பாதி ஆகாயத்தில் இருந்து கீழே வந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் கழுத்து வலிக்க.. அலைபேசியை வேக வேகமாய் சூம் செய்து கஷ

மேலும்

வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2016 4:16 pm

பிறந்த மழலைக்கு கருப்பு வளையலிது
கண் திருஷ்டி காக்கிறது...
வளரும் குமரிக்கு வண்ண வண்ண வளையலிது
வசந்தத்தை தருகிறது..

அழகிய வளையோசை இது
வாசல் தோறும் ஒலிக்கிறது
வீணை இசைக்கும் கைகளிலே
கணக்காய் ராகமலிக்கிறது...

கோலமிடும் கைகளிலே
கொஞ்சிக்கொஞ்சி செல்கிறது
உடைந்து விழும் வளையலிலே
புது நாதம் ஒலிக்கிறது...

கல்யாண பெண்ணுக்கோ
நாணத்தை தருகிறது...
நிறைமாத தாய்மைக்கோ
நிம்மதியைத் தருகிறது..

மேலும்

மிக்க நன்றி .. 05-Jan-2018 6:27 pm
மிக்க நன்றி ப்ரியா.. 05-Jan-2018 6:26 pm
வளையலின் மகிமை தங்கள் வரிகளில் ஒலிக்கிறது அழகு தோழி.... இதம்.... 27-Feb-2017 4:27 pm
உண்மைதான்..பெண்ணின் ஒவ்வொரு பருவத்திலும் தன்னிலை மாறுகிறது பல யதார்த்தங்கள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2016 8:29 am
வே புனிதா வேளாங்கண்ணி - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Oct-2017 7:13 pm

சிறைப்பறவை - ஒரு பக்க கதை- கவிஜி

"இந்த காட்டுக்குள்ள எங்க போயிட்டு இருக்க........"

"இல்ல...வீக் எண்டு ஆச்சுன்னா எனக்கு இப்படி காட்டுக்குள்ள சுத்தறதுதான் பழக்கம். பழக்கம்ங்கறத விட பிடிச்ச விஷயம். வாரம் முழுக்க மனுஷங்க கூட போராடி போராடி நான் செத்தே போன மாதிரி ஒரு பீல். அதான்... இப்படி எந்த வாகன இரைச்சலும் இல்லாம தனிமையை தேடி காட்டுக்குள்ள வந்தர்றது.......ஆமா......! நீ யாரு....? இங்க என்ன பண்ற...?"

"நல்ல கேட்ட போ... இது என் காடு.... இந்த காட்டோட தத்து புள்ளைன்னு வெச்சுக்கோ.... ஆனா எனக்கு பிடிக்காது... ஒரு சிறைக்குள்ள இருக்கற மாதிரி இருக்கு..."

"என்னப்பா இப்டி சொல்ற... எவ்ளோ பசுமையா

மேலும்

மிக அருமை தோழரே...! 12-Oct-2017 1:35 pm
ஆஹா.. அசாத்தியமான கற்பனையுடன் ஒரு அற்புதமான கதை. கல்லால் செதுக்கப்பட்ட சிலையில் ஈர இதயத்தை ஒரு பெண்ணின் வடிவில் உரையாற்றும் பொன்னிற எழுத்துக்கள் மனதில் சாசனமாய் பதிந்தது. சிறைப்பட்ட கூண்டுக்குள் விடுதலையின்றி தவிக்கும் எத்தனையோ ஊமையான பெண்களின் இதயத்தை திறக்கும் சாவியாக கதையின் உயிரோட்டம். முகவரி உள்ள உலகில் முகவரி இல்லாமல் பிறந்த பல கோடி பெண்களின் தனிமையில் உறவு கொள்ளும் பூங்காற்றின் வடிவில் கதை மனதை தொட்டது. நிறமற்ற தண்ணீரை போல இந்த இரவுகளும் இன்று வண்ணம் மாறிக்கொண்டிருக்கிறது சருகுகளின் காலில் பூக்கள் வாடுவதை நோக்கிய வண்ணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 2:19 pm
வே புனிதா வேளாங்கண்ணி - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2017 4:06 am

(இது போட்டிக்கான பதிவு)

நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்

இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர்நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே

±+++++++++++++++++++++++++++
படம் : உன்னை நினைத்து
பாடல் : என்னை தாலாட்டும்
இசை : சிற்பி
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : சுஜாதா, உன்னி மேனன்
++++++++++++++++++++++++

மேலும்

மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Apr-2017 10:22 am

============================
==========================
கனவுகள் பலபல கண்களில் வளர்த்து
=காதலின் விசும்பினில் கவினுற வந்தாள்
மனதினில் வாலிப மயக்கமும் அணிந்து
=மணங்கொளும் ஆசையின் மலர்களை விரித்தாள்

தினந்தின மவனது திருக்கர முடிச்சிடும்
=திருமண தினம்வர தவங்களு மிருந்தவள்
இனசன இசைவுட னிருவரு மிணைந்தன்
=இதந்தரும் நிகழ்வதன் இனிமையில் திளைத்தாள்

தனக்கென பிறந்தவன் தழுவிட வருகையில்
=தலைகுனிந் தொருபடம் தரைதனில் வரைந்தாள்
உனக்கென எனதுயிர் உடலென அனைத்தையும்
=உடையவன் கரங்களில் உரிமையாய்க் கொடுத்தாள்

மணிவிரல் மீட்டிடும் மரகத வீணையின்
=மெல்லிய நரம்பென இசைந்துமே கொடுத்தாள்

மேலும்

மிக்க நன்றி ஐயா. 07-Apr-2017 1:20 pm
மிக்க நன்றி 07-Apr-2017 1:19 pm
காதல் வாழ்க்கைக் கவிதையும் வண்ண ஓவியமும் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் இலக்கிய பயணம் 07-Apr-2017 5:09 am
முகமூடி அணிந்த வேஷங்களில் உள்ளங்கள் ஏமாந்து போகிறது 07-Apr-2017 2:16 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (329)

ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)
இஜாஸ்

இஜாஸ்

இலங்கை
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
இராமகிருஷ்ணன் வெ

இராமகிருஷ்ணன் வெ

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (330)

சிவா

சிவா

Malaysia
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (333)

user photo

santhosh pugalendhi

தர்மபுரி
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
RATHNA

RATHNA

தூண் & துரும்பு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே