Rajagopalan Kumar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Rajagopalan Kumar
இடம்:  Chennai
பிறந்த தேதி :  19-Sep-1959
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-May-2014
பார்த்தவர்கள்:  279
புள்ளி:  73

என்னைப் பற்றி...

Basically I am a technical person ; Electronic Engineer ; Interested in தமிழ் and English Poems .

என் படைப்புகள்
Rajagopalan Kumar செய்திகள்
Rajagopalan Kumar - Santhakumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2018 7:07 pm

விஞ்ஞான உலகிலே
விலையில்லா பொருளில்லை !
நடமாடும் மனிதனுக்கு
நல்லெண்ணம் சிறிதும் இல்லை !
பணத்துமேலே மோகம் கொண்டு
பந்த பாசத்தினை பழிக்கின்றான் !
பிறர் சொல்லும் வார்த்தை கேட்டு
திசை மாறி செல்கிறான் !
சொகுசான வாழ்க்கை வாழ
தன் சொர்க்கத்தை இழக்கின்றான் !
உதவாத பணத்தை சேர்க்க
உலகெல்லாம் அலைகின்றான் !
இயற்கை அவனிடம் ...
அலைந்தது போதும் !
மனிதனே சற்று நில் !
கடலின் அலையோசை கேள்
அளவில்லா இன்பம் தரும் !
காலை எழும் சூரியனைப் பார்
உன்னை புதிதாய் உயிர்த்து விடும் !
சுற்றி திரியும் பறவையை பார்
உனக்கு பாசத்தை சொல்லி தரும் !
விலையில்லா காற்றின் மொழியை கேள்
உன் செவிக்கு இசை விருந்து

மேலும்

Thank you sir . 11-Nov-2018 4:39 pm
அற்புத சிந்தனை ; மேலும் எழுதுங்கள் 11-Nov-2018 4:07 pm
Rajagopalan Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2018 11:57 am

முத்தான ழ கரம் முத்தமிழுக்கு விழி அழகு
சந்தமிகு சித்தர் பாக்கள் தமிழுக்கு நடை அழகு
ஸ்லேடை கவிதைகள் செந்தமிழுக்கு வாய்மொழி அழகு
உலக மறையாம் திருக்குறள் தமிழுக்கு அறிவழகு
முத்தமிழுக்கு முதல்வனாம் முருகனே அழகு
நீ வளர்ந்த கூடல் மா நகராம் மதுரை அழகு
இளமை குன்றா மூத்த தமிழ் செம்மொழி தாயே
யான் உனக்கு மகனாய் பிறக்க என்ன
தவம் செய்தேனோ !

மேலும்

Rajagopalan Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2018 12:46 pm

கல்லிலே கடைந்த கலைவண்ணம் காண்பார்
மாதவன் மைத்துனன் மால் வண்ண கடலோரம்
கால காலனை குறித்து காலம் கடந்த மா தவக்கோலம்
மாயவன் நடாத்திய மறக்கள நாடக காட்சிகள்
மலையன்ன மாதங்கங்கள் வீர மா மல்லர் பூரி போரும்
மாமல்லபுர தேரோடும் காட்சிகள் அற்புத காட்சிகளே
மாபெரும் நாடகம் நடத்திய களை ப்பாலோ
கடலோர கோவிலில் மாதவன் கிடந்தது சயனம் கொண்டானோ !

மேலும்

Rajagopalan Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2018 10:07 am

ஆனந்த சுதந்திரத்தில் அனவரதமும் ஆடுவோனே
தெள்ளு தமிழ் பண்ணிற்கு துள்ளும் இளையோனே
பாரத தேசமதில் சபை கொண்டு பாரெல்லாம் ஆள்பவனே
பாரதத்தின் புகழ் பரவ கருணை செய்வாய் பரத நாயகனே .

மேலும்

Rajagopalan Kumar - Rajagopalan Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2017 11:32 am

தென் தமிழ் நாடெனும் போதினிலே
பொதிகை தெம்மாங்கு தமிழ் வந்து பாயுது காதினிலே
முக்கூடல் சங்கமத்தில் மலரும் செங்கமல ஆதவன் ,
பொன்மணி நீரலைகள் சுந்தர காட்சிகள் பாயுது கண்களிலே
பொதிகை மலை மூலி மணம் தவழ்ந்து வந்து பாயுது நாசியிலே
குமரிக் கடல் காற்றும் பசுமலை தென்றலும் மோதுது மேனியிலே
முத்தமிழ் கூடும் சங்கத்தில் மலர்ந்த தமிழ் பொற்கமலம்
கடந்த கால நினைவலைகள் வந்து பாயுது சிந்தையிலே
பொறி ஐந்தும் பூரித்திட , புவியில் ஓர் தனி நாடு
உளியின் ஒலியில் கல்லிலே கண்ணொளி திறந்திடும்
தென் பரத கலை திரு நாடே , என் தாய் தமிழ் திரு நாடே
உன் மடியில் யான் தவழ என்ன த

மேலும்

Rajagopalan Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2017 11:32 am

தென் தமிழ் நாடெனும் போதினிலே
பொதிகை தெம்மாங்கு தமிழ் வந்து பாயுது காதினிலே
முக்கூடல் சங்கமத்தில் மலரும் செங்கமல ஆதவன் ,
பொன்மணி நீரலைகள் சுந்தர காட்சிகள் பாயுது கண்களிலே
பொதிகை மலை மூலி மணம் தவழ்ந்து வந்து பாயுது நாசியிலே
குமரிக் கடல் காற்றும் பசுமலை தென்றலும் மோதுது மேனியிலே
முத்தமிழ் கூடும் சங்கத்தில் மலர்ந்த தமிழ் பொற்கமலம்
கடந்த கால நினைவலைகள் வந்து பாயுது சிந்தையிலே
பொறி ஐந்தும் பூரித்திட , புவியில் ஓர் தனி நாடு
உளியின் ஒலியில் கல்லிலே கண்ணொளி திறந்திடும்
தென் பரத கலை திரு நாடே , என் தாய் தமிழ் திரு நாடே
உன் மடியில் யான் தவழ என்ன த

மேலும்

Rajagopalan Kumar - Rajagopalan Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2016 3:23 pm

நீல வான் பலகையில் பரவிய மேகச் சித்திரங்கள் காண்
பச்சை புல் தரையில் பரவிய வண்ண மலர் சித்திரங்கள் காண்
பசுன்சோலை மரங்களில் சிறகடிக்கும் சிட்டு சித்திரங்கள் காண்
வானளாவிய மலைகளில் பல் அடுக்கு கற்சித்திரங்கள் காண்
சுட்டெரிக்கும் பாலைவன மணற் குன்றுகள் கோல சித்திரங்கள் காண்
ஓடும் நதிகளிலே சுழித்து சுழித்து நீர்திவலை சித்திரங்கள் காண்
கரை காணா கடலில் ஆர்த்தெழுந்து அடங்கும் அலை சித்திரங்கள் காண்
பாரெல்லாம் பரவிய இயற் சித்திர சபையிலே சித்திர சபேசன் கைவண்ணம் கண்டேனே !

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Jun-2016 6:08 am
Rajagopalan Kumar - Rajagopalan Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2016 1:04 pm

காலத்தின் கோலமாய் தமிழ் ஆண்டு வடிவான பால குகனே
ஆண்டின் ஆறிரு மாதந்தோரும் இனிது வாழ வேண்டும்
ஆறு முகமான அறுவகை காலந்தோரும் இனிது வாழ வேண்டும்
செய் தொழிலே வேலாய் காத்திட இனிது வாழ வேண்டும்
ஏறி அமர்ந்த கர்மத்தில் ஜெயகொடியுடன் வாழ வேண்டும்
அறம் செரிந்த அறிவார்ந்த ஆசைகள் துணை செய் இனிது வாழ வேண்டும்
காலத்தின் அடியவராம் அனைத்துலக மாந்தரும் இனிது வாழ வேண்டும்
புத்தாண்டாய் பிறந்திட்ட ஆறுமுக பாலகனே நின் கழல் வேண்டும் .

மேலும்

நன்றி தோழரே ; தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . 14-Apr-2016 1:29 pm
நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் 13-Apr-2016 5:33 pm
Rajagopalan Kumar - Rajagopalan Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2016 1:04 pm

காலத்தின் கோலமாய் தமிழ் ஆண்டு வடிவான பால குகனே
ஆண்டின் ஆறிரு மாதந்தோரும் இனிது வாழ வேண்டும்
ஆறு முகமான அறுவகை காலந்தோரும் இனிது வாழ வேண்டும்
செய் தொழிலே வேலாய் காத்திட இனிது வாழ வேண்டும்
ஏறி அமர்ந்த கர்மத்தில் ஜெயகொடியுடன் வாழ வேண்டும்
அறம் செரிந்த அறிவார்ந்த ஆசைகள் துணை செய் இனிது வாழ வேண்டும்
காலத்தின் அடியவராம் அனைத்துலக மாந்தரும் இனிது வாழ வேண்டும்
புத்தாண்டாய் பிறந்திட்ட ஆறுமுக பாலகனே நின் கழல் வேண்டும் .

மேலும்

நன்றி தோழரே ; தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . 14-Apr-2016 1:29 pm
நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் 13-Apr-2016 5:33 pm
Rajagopalan Kumar - Rajagopalan Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2016 7:28 pm

சந்தங்கள் சதிராடும் செந்தமிழ் அரங்கினிலே
சொல்லும் பொருளும் இசைந்தாடும் தமிழ் கவிதையிலே
ரகசியங்கள் பொதிந்த சித்தர் தமிழ்ப் பாக்களிலே
ஆனந்த தமிழரசர் ஆடும் பொன்னம்பலம் கண்டேனே !

மேலும்

Rajagopalan Kumar - Rajagopalan Kumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2015 12:02 pm

புனலோரம் சூழ்ந்து நின்று புன்சிரிக்கும் வண்ணப்பூக்கள்
கோரைப் புற்களுடன் இரவுத்தென்றலில் சாய்ந்தாடும்
பளிங்கு புனல் நடுவே பூரண நிலவு கண்ணன் முகம் காட்டும்
மரங்களில் இளந்தென்றல் ஊதும் குழல் கேட்கும்
இலைகள் சரி நிகர் சந்தம் கோலாட்ட முரசொலிக்கும்
உற்று நோக்கின் , கண்ணனை சுற்றி கோபியர் ராசலீலை காண் !
அண்ணாந்து நோக்கின் , கார்நீல மேனியில் பௌர்ணமி முகம்
சுற்றி கோலமிடும் மின்மினி கோபியருடன் ராசலீலை காண் !

மேலும்

நன்றி சார் ..தங்கள் இனிய கவிதையின் தாக்கத்தால் உந்தப்பட்டு எழுதிட விரும்பினேன்..என் மனதில் தோன்றியதை ..! 16-Oct-2015 9:05 pm
அருமையான பதில் ரசனை கவிதை ; நன்றி சார் 16-Oct-2015 7:48 pm
படைப்புகள் அத்தனையும் கோபியராய்.. பரந்தாமன் காதலிலே முங்கியராய்.. அருள் ஓசை வேங்குழல் நாதத்திலே அனுதினமும் திளைக்கின்றார் அவனியிலே! 09-Oct-2015 12:26 pm
Rajagopalan Kumar - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2015 10:32 am

இரண்டும் இரண்டும் நான்கு..
நான்கில் ஒன்று போனால் மூன்று
என்பது தொடங்கி
அறிவியலும் பூகோளமும்
சரித்திரமும்,
கண்ணைக் கட்டும் கணிதங்களும்
எல்லாம் திணித்து
வெளியேற்றிய கல்வி முறை..
நல்லது கெட்டதை..
நட்பு, பகையை
துணிச்சலை, துரோகத்தை
மனிதத்தை..
இன்னும் பலவற்றை..
வெளியே போய் கற்றுக் கொள்
என்று வீதியில் விட்டு விடுகிறது..
தானாகத்தான் உருவாகிறார்கள்
ஒவ்வொருவரும்..
சிலர் வீணாகி விடுகிறார்கள்..!

மேலும்

மிக்க நன்றி சார்! 09-Oct-2015 12:08 pm
உண்மையை பிரதிபலிக்கிறது.. மிக நன்று . 09-Oct-2015 12:07 pm
நானும்தான் நண்பரே முடிந்தவரை முதல் நாளே வரமுயற்சியுங்கள். 09-Oct-2015 12:04 pm
தங்களது இசைவான கருத்திற்கு மிக்க நன்றி..நண்பரே..விழாவில் சந்திக்க ஆவலாக உள்ளேன்! 09-Oct-2015 11:24 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல
கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (21)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
manoranjan

manoranjan

ulundurpet
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (21)

manoranjan

manoranjan

ulundurpet
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே