இராஜ்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இராஜ்குமார்
இடம்:  திரு ஆப்பனூர்
பிறந்த தேதி :  19-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2015
பார்த்தவர்கள்:  5073
புள்ளி:  210

என்னைப் பற்றி...

ந.இராஜ்குமார்
AB+ இரத்தப்பிரிவு

கருமேகம் கருணை காட்டாத
கருவேலம் பூமியில்...
வறுமை குறைவான
சிறு குடும்பம் என் குடும்பம்

வாழும் தெய்வமாக அம்மா
வாழ்ந்த தெய்வமாக அப்பா
உயிர் தோழனாக
ஒரு உடன்பிறப்பு
உடன்பிறப்பாக பல நட்பு

உறவுகள் நிறைந்த உள்ளூரில்
உடமையாக ஒரு உணவகம்..!
உறுதி எந்நெஞ்சில் குடியிருக்க
உழைப்பை கற்பித்த ஆலயம்..!

பள்ளிப்படிப்பு அரசு தந்தது
பட்டப்படிப்பு விருப்பமில்லை
பெற்றவளின் விருப்பத்திற்க்காக
இயந்திரவியல் மூன்றாண்டை
இயந்திரம் போலவே படித்தேன்..!

படித்த கல்விக்கு அனுபவம் பெற
பழக சென்றேன் கோவைக்கு..!
பழகிய நட்பை பிரியமுடியாமல்
மூன்று வருடம் அங்கு கழிந்தது..!

வாழ்க்கையின் லட்சியமாக
மாடிவீடு ஒன்று கட்டி
கடனாளி என்ற பட்டம் பெற்றேன்..!

உயிர்மெய் படிப்பதற்கு முன்பே
உயிராக வந்த ஒருத்தி
அவளே என் அத்தைமகள்
அன்பில் விளைந்த முத்துமலர்
என்னை கவிஞனாக்கிய பெருமை
அவளே மட்டுமே சேரும்..!

காதலித்த அத்தை மகளே
கல்யாணம் செய்வதற்குள்
கடனே அடைக்க வேண்டுமென்று
கடல் தாண்ட முயற்சித்தேன்..!
அதே நேரம் காதலித்தவளுக்கு நம்பிக்கை தர
பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டேன்..!

இரண்டு ஆண்டுக்குள் கடனை அடைக்க,
எந்த வேலையானாலும் பரவாயில்லை
எனக்கு தேவை நல்ல சம்பளம்..!
அன்பு உறவினர் உதவியால்
அரபு தேசத்தில் வேலை கிடைத்தது..!

அந்நொடியில் இருந்து
என் வாழ்க்கை பயணத்தில்
பயணமே வாழ்க்கையாக மாறியது
பொழுதுபோக்காக கற்ற ஒன்று
பொழப்பாக எனக்கு மாறியது

ஆம்....
கிருஷ்ணன் பார்த்த அதே வேலை
ஓட்டுநராக ஓய்வின்றி இன்று வரை பயணிக்கின்றேன்..!

என் படைப்புகள்
இராஜ்குமார் செய்திகள்
இராஜ்குமார் - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2018 5:47 pm

தலைப்பு:-#ஆண்டு_3000ல்_உலகின்_மாற்றங்கள்_எவ்வாறு_இருக்கும்

ஆண்டு 3000 வருடத்தில் அகிலம் எப்படி இருக்குமோ, என சிந்திக்கும்போதே ஆழ்மனது பயம்கொள்கிறது.

வயல்கள் கண்காட்சியில் பார்வைக்காக இருக்கும். காடுகளை கனவில் மட்டும் பார்க்கலாம்.வீடுகளை விட தொழிற்சாலைகள் எண்ணிக்கை அதிகமாகும்.விவசாயம் பழங்கால மனிதன் செய்த தொழில் என்று கணினியில் படிப்பார்கள்.அன்புக்கு விலை இருக்கும்.மதங்களின் எண்ணிக்கை பெருகி மனிதநேயம் கேள்விக்குறியாகும்.

மாத்திரைகள் மட்டுமே உணவாக இருக்கும்.முப்பது வயது வரை வாழ்ந்தால் சாதனையாகும்.பேரன் பேத்தி என்ற உறவை பார்ப்பதற்குள் இறப்பு வரும்.மனித இனம் அரிய வகை உயிரினமாக மாறிக

மேலும்

அன்பு கொஞ்சும் நெஞ்சம் தஞ்சம் கேட்டு கெஞ்சும் பாச பஞ்சம் வந்த வேலையிலே... கொஞ்சம் தான் பாசம் கொஞ்சம் தான் நேசம் நம் நட்பு வேசம் கலைந்திடுமா..? நம் நட்பு தேசம் அழிந்திடுமா..? என்னுடன் பேச என்ன தயக்கம்..? எதையும் தருவேன் என் நட்பு பயக்கும்..! உன்னுடன் பேச உள்ளம் விருப்பம்..! உணர்ந்து கொள்ளடா உயிரும் கிடைக்கும்..! இரும்பு பெண்ணென்று இருமாப்பு கொண்டவள்..! இலகி தவிக்கிறேன் இதயம் உனக்கு கிடையாதா..! கரும்பு சுவையாக கவியெழுதும் திறனானவள்..! கவலையில் மூழ்கிறேன் கருனை உனக்கு கிடையாதா..? உடும்பு பிடி போல உறுதியான உறவுதான்..! உதறிப் போகும் போது உமியாகிப் போனதடா..! குடும்ப உறுப்பினராய் குணம் கொண்ட நட்புதான்..! குப்பைக்கு சமமாக குறைபட்டு போனதடா..! வழி காட்டும் வெளிச்சம் வாசல் வர மறுத்தால்... வலியின் வாழ்விடமாய் வாழுகின்ற நிலை ஆகும்..! துளியும் இரக்கமின்றி தூரத்தில் நீ போனால்... என் விழியின் கண்ணீர் எங்கென்று உனை தேடும்..! பசியும் தூக்கமும் பழி வாங்குது என்னை..! பழகிய நினைவெல்லாம் படை சேருது இன்னும்..! பிரிவும் தனிமையும் பிழையாக்குது என்னை..! பிணமாய் மாறிவிட பிறக்கிறது எண்ணம்..! பிணமாய் மாறிவிட பிறக்கிறது எண்ணம்..!!!! 09-Jul-2018 8:17 pm
இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2018 5:37 pm

சிறகை இழந்த
சிந்தனை பறவை
சிறையில் சிக்கி தவித்திருந்தேன்..!

கரைகள் நிறைந்த
கயவர் மத்தியில்
கைதி போலவே வாழ்ந்திருந்தேன்..!

ஆயிரம் கவலை அனுதினமும்
அனலை போல எனை சுற்றி..!
வாயே திறந்து புலம்ப கூட
வாய்ப்பில்லாத வாழ்வு எனக்கு..!

சொந்தமென்று பலர் இருந்தும்
சோகம் மட்டுமே என் சொந்தம்..!
வசதி வளங்கள் கூட இருந்தும்
வறுமையாகவே என் நாட்கள்..!

கருணை இல்லாத ஒருவனே
கடவுள் எனக்கு துணையாக்கினான்..!
நீரில் மூழ்கிய தாமரையை
தீயில் போட்ட கொடுமைதான்..!

அன்பை அறியா மிருகத்தின்
அதிகாரங்கள் என் மீது..!
அடைமழையில் காகித கப்பல்
அழகு பயணம் சாத்தியமா..!

கண்ணீர் அருவி தினம் வரவே
என்னில் ஒர

மேலும்

மெய் சிலிர்த்து போனேன்... 13-Nov-2023 4:53 pm
இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2018 5:31 pm

முத்துச் சிரிப்பழகி
ஒருமுத்தம் தருவாயா...
பக்கம் நான்வரவே
புதுவெட்கம் கொள்வாயா...

நித்தம் தவிக்கிறதே
என் நித்திரை அறிவாயா...
சித்தம் சேராமல்
நின் யுத்தம் செய்வாயா...

கூடல் நாயகன்
உன் கூட இருக்கிறேன்..!
கூச்சம் நீ தொலைத்தால்
ஒரு குழந்தை கிடைத்திடுமே..!

தேடல் குறையாமல்
உன் தேவை தீர்க்கிறேன்..!
தேனிலவு பாதையில்
நம் தேகம் இணையாதா..!

மலருக்கு தேன் தரவே
மருகுதடி இவ் வண்டு..!
மகரந்தம் சேரட்டுமே
மனம் கொஞ்சம் இறங்கிவிடு..!

சுனையின் நீர் ஊற்று
சுகம் காண பெருகுதடி..!
சுதந்திரம் எனக்களித்து
சுவை காண முயன்றுவிடு..!

அணை போட நினைக்காதே
அன்புக்கு திறன் அதிகம்..!
அணைத்துக்

மேலும்

அருமையான வரிகள்... 23-Mar-2018 3:18 pm
அருமை அருமை...... 23-Mar-2018 12:54 pm
இரவில் சேர்தல் நல்லது அதனாலே அது முதலிரவு அதிகாலை உறவு தவிர்த்தல் நலமே , அவள் அணைப்போட தடை ஏன் நண்பரே ..................... கவிதையில் அழகுண்டு கருத்தில் நமக்குள் பேதம் அவ்வளவே 23-Mar-2018 9:51 am
அதிகாலை முதலிரவு...அழகு.. 23-Mar-2018 5:14 am
இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 8:59 pm

இரக்கமில்லா உடம்பினில்
இதயம் என்பது எதற்கோ..!
அரக்கனாக வாழ்கிறார்கள்
ஆறறிவு ஜீவன்கள்..!

காவியம் தந்த காதலெல்லாம்
கரையான்கள் தின்றிடுச்சோ..!
காதல் என்ற புனிதத்தை
காணாத கூட்டம் இது..!

அலையில் மிதக்கும் கப்பல்
ஆகாயத்தில் பறக்காதோ..!
காட்டில் வாழ்ந்த எனக்கு
காதலை சொல்ல தெரியலயே..!

உண்மையான காதல்
உலகத்தில் வாழாதோ..!
கண் இல்லாத காதலுக்கு
கருணையும் இல்லையே..!

மனதில் பூத்த காதலை
மரணத்திற்கு இரையாக்குகிறேன்..!
மறந்துவிடாதே என் உயிரே
மறுஜென்மத்தில் மனிதனாகிறேன்..!

சொல்லாத காதலை
சொல்லினால் புரிய வைக்கிறேன்..!
இல்லாத இரக்கத்தை
இந்த உலகிற்கு கற்றுத்தருகிறேன்..!

இல்லாத இர

மேலும்

அருமை நட்பே ............உங்கள் கற்பனைநயம் கண்டுவியக்குகிறேன் ....தங்களின் இலக்கிய பயணம் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் நட்பே ......... 22-Mar-2018 9:02 pm
இராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 8:58 pm

#தலைப்பு :- #புயல்
--------------------------------------
இயற்கை அன்னையின்
இரக்கமில்லா குணம்..!
இளந்தென்றலின்
இன்னொரு முகம்..!

பசியில் உள்ள மலைப்பாம்பாய்
பார்த்ததை எல்லாம் விழுங்கும்..!
பயணம் செல்லும் இடமெல்லாம்
பாவங்களை சம்பாதிக்கும்..!

கடலை நம்பியவனையும்
கழனியை நம்பியவனையும்
கண்ணீரில் குளிப்பாட்டும்
காட்டுமிராண்டி காற்று இது..!

அளவில்லா விடுமுறைகளை
அள்ளி அள்ளி தருவதால்
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
தேவதையாக தெரியும் இது..!

வீட்டில் மரம் வளர்க்க
விரும்பாத உலகத்தில்
காட்டிலும் வளர விடாமல்
காவு வாங்கும் காட்டேறி இது..!

மடிந்து போன மனிதநேயம்
மறுமலர்ச்சி பெற்றிட

மேலும்

எண்ணத்தின் எழுச்சி ....அருமை.... 23-Mar-2018 1:20 pm
இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) Tamil59831c93c756a மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Jan-2018 2:20 am

தூங்கி கிடந்த தமிழன் வீரம்
துள்ளி குதித்த நேரமது..!
தூசி படிந்த தமிழன் மானம்
தூய்மையான காலமது..!

ஓங்கி ஒலித்த தமிழன் சத்தம்
ஓசோன் தாண்டியும் கேட்டது..!
ஒன்று பட்ட தமிழினம் கண்டு
ஒவ்வொரு நாடும் வியந்தது..!

மழழை மொழி மாறாத
மண்ணின் வருங்கால செல்வங்கள்
மழை பனி பாராமல்
மலையாய் நின்று போராடினர்..!

கழனி வயல் கானாத
கணினி உலக தமிழரும்
இமை துளியும் அசராமல்
இரவு பகலாய் போராடினர்..!

அண்ணன் தங்கை உறவாக
அன்பு பொழியும் அன்னையாக
அனைத்து பெண்களுக்கும் மதிப்பளித்து
அறம் சிறக்க போராடினர்..!

கருவே சுமந்த கர்ப்பிணியும்
களத்தில் நின்று போராட
கயவராய் தெரிந்த காவலரும்
கனிவு நிறைந்த உள

மேலும்

அருமை 13-Nov-2023 4:55 pm
நன்றி நட்பே 05-Jan-2018 8:17 pm
தங்கள் வளமான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அண்ணா 05-Jan-2018 8:17 pm
உரிமைகளை கூட போராடி வெல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்த உலகம் தள்ளப்பட்டு விட்டது. வரலாறுகள் உள்ள மரபுகளை மண்ணுக்குள் புதைக்க பார்த்த கயவர்களின் முயற்சி அவர் கன்னத்தை அவர்கள் கைகளே அடித்ததை போல தோல்வியில் முடிந்து போனது. இணைந்த கைகள் புது சாசனம் உலகிற்கு எழுதிக் காட்டியது. ஆனாலும் ஒன்று உண்மையாக போராடியவர்களை விட வெயிலுக்கு அஞ்சி வீட்டு அறைக்குள் ஒளிந்திருந்த சிலரும் இங்கே பயன் அடைந்து கொண்டது தான் மனம் நோகும் உண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jan-2018 6:25 pm
இராஜ்குமார் - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2017 4:49 pm

மதமும் இனமும்
மனதினே ஆளாமல்
மனிதமும் புனிதமும்
மலையாய் உயரட்டும்..!

பயமும் கோபமும்
பழக்கத்தில் இல்லாமல்
பணிவும் துணிவும்
பன்மடங்கு பெருகட்டும்..!

அன்னை தந்தையின்
அன்பினை மறக்காமல்
அவர்களே தெய்வமென்று
அகிலமும் வணங்கட்டும்..!

நட்பும் உறவும்
நன்மதிப்பு இழக்காமல்
நகமும் சதையுமாய்
நம்மோடு இருக்கட்டும்..!

தொடரும் தொல்லைகள்
தொடர்கதை ஆகாமல்
படரும் கொடியாய்
பரவட்டும் சந்தோசம்..!

இடரும் இன்னலும்
இனிமேலும் துளிராமல்
வளரும் வெண்ணிலவாய்
வருங்காலம் பிறக்கட்டும்..!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..!!!

மேலும்

நோ கமெண்ட்ஸ் 04-Jan-2018 5:31 pm
நன்றி நட்பே 31-Dec-2017 7:21 pm
அருமை அருமை தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா 31-Dec-2017 4:53 pm
இராஜ்குமார் - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2017 7:50 pm

உதயம் தரும் சூரியனாய்
உலகே ஆண்டது தமிழ்மொழி..!
உன்மை வரலாறு தெரியாமல்
உறவும் இதனை மறுக்கலாமா..!

இமயம் முதல் குமரி வரை
இனிதே வாழ்ந்த தமிழர் நாம்
இதயமற்ற இரும்பு மனதால்
இதனை இன்று மறக்கலாமா..!

ஆண்ட தமிழில் ஆரியம் கலந்து
தீன்டதகாத சாதியே விதைத்து
வேண்டிய வளங்களே பெற்றுக்கொண்டு
வேதனை நமக்கு தந்து மகிழ்ந்தான்..!

பெய்யும் மழையே முன்பே கனித்து
பெருமை பெற்றது தமிழன் ஜோதிடம்..!
பரிகாரம் என்ற பொய்யே வைத்து
பணத்தை பெற்றான் ஆரியன் நம்மிடம்..!

உழைப்பு இல்லாமல் ஊதியம் பெற்றான்
உழைப்பவன் ஏமாற உண்டியல் வைத்தான்
பிழைக்க ஆயிரம் வழி இருந்தும்
பிரார்த்தனை பெயரில் பிச்சை கேட்டான்..!

மேலும்

Tamizhin arumaiyai tamizhaney purinthukolla mattran en seivathu? Inum ezhutha vazhthukkal 31-Dec-2017 12:25 pm
நன்றி நண்பா 29-Dec-2017 8:01 pm
அருமை நண்பரே வாழ்க தமிழ் 29-Dec-2017 7:59 pm
இராஜ்குமார் - இராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2015 8:31 pm

கதிரவன் கைபட்ட காலை நேரத்தில்
கன்னட காவேரி கரையோரத்தில்
கடக்கும் கலியுக தூரத்தை
கண் திறந்து கனவு கண்டேன்
கனவில் ஆறும் வந்தது
கண்ணில் நீரும் வந்தது...
ஆம்
ஆறு அடி வளர்ந்து என்னபயன்
ஆறு அறிவு பெற்று என்னபயன்
ஆறின் குணம் அனு அளவும்
வரவில்லையே எனக்கு,.!
ஓய்வது சமுத்திரம் என்றாலும்
ஓடும் வரை சரித்திரம் படைக்கிறது ஆறு
சாய்வது சமாதி என்றாலும்
சாகும் வரை சாதனை படைப்பது யாரு..?

மேலும்

மிக அருமை நட்பே வாழ்த்துக்கள் 26-Jul-2017 3:25 pm
மிக்க நன்றி சகோதரி 25-Jul-2017 1:37 pm
ஓய்வது சமுத்திரம் என்றாலும் ஓடும் வரை சரித்திரம் படைக்கிறது ஆறு அழகிய வரிகள்... 24-Jul-2017 2:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (153)

த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
சஜூ

சஜூ

கன்னியாகுமரி

இவர் பின்தொடர்பவர்கள் (154)

இவரை பின்தொடர்பவர்கள் (156)

மேலே