Rathinamoorthi kavithaikal - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  Rathinamoorthi kavithaikal
இடம்:  thirupur
பிறந்த தேதி :  31-Jul-1967
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Oct-2012
பார்த்தவர்கள்:  3860
புள்ளி:  1565

என்னைப் பற்றி...

திருப்பூரில் ஏற்றுமதி பின்னலாடைகளுக்கு வண்ணம் சேர்ப்பது வனப்பு சேர்ப்பது முதன்மைப் பணி. கவிதைகள் வாசிப்பதில்., எழுதுவதில் விருப்பம் அதிகம். இயற்கையை இந்த மண்ணை உயிரென நினைப்பவன்.

தொடர்பிற்கு :9944422111 ., 9344201063

என் படைப்புகள்
Rathinamoorthi kavithaikal செய்திகள்
Rathinamoorthi kavithaikal - Rathinamoorthi kavithaikal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2015 1:29 pm

பாதை மறிக்கப்பட்ட
யானைக்கூட்டம்போல்
சுற்றியலைகிறது வெள்ளம்

வாகனங்கள் பயணிக்கும் சாலையில்
தான் பயணித்துப் பார்க்கிறது

பயணத்தை முடிக்க முடியாததால்
பாதையில் செய்கிறது மறியல்

மறியலால் ஆனது… வளர்ந்தது…
மழை அரசியல் !
***

முத்துக்களைக் கோர்த்தெடுக்க உதவும்
இழையைப் போல ஓடிக் கிடந்த
சிற்றோடைகளைக் காணவில்லை

காடு மேடெங்கும்
வீட்டு மனைகள் விரிவாக்கம்
சிற்றோடைகளைச் சிதைத்தது

சிதைத்ததால்
சிதறிப்போனது மழை முத்துக்கள்
சேரிடம் சேர திசை இழந்தது

திசை இழந்ததால்
தேங்கி நின்று அழுகிறது
மழை வெள்ளம்
நதியினை அடைய முடியாத
ஆற்றாமையுடன்
தாய் மடி சேராத குழந்தையாய் !
***
ஆற்

மேலும்

மிக அருமை தோழரே... மிக ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Nov-2015 3:47 am
மிக்க நன்றி புனிதா வேளாங்கண்ணி 19-Nov-2015 7:09 pm
மிகுந்த மகிழ்ச்சி ஆசை அஜீத். நீண்ட காலம் ஆகிவிட்டது தொடர்பு கொண்டு. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. 19-Nov-2015 7:09 pm
உண்மை....சிறப்பு தோழமையே... 17-Nov-2015 7:19 pm
Rathinamoorthi kavithaikal - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 1:29 pm

பாதை மறிக்கப்பட்ட
யானைக்கூட்டம்போல்
சுற்றியலைகிறது வெள்ளம்

வாகனங்கள் பயணிக்கும் சாலையில்
தான் பயணித்துப் பார்க்கிறது

பயணத்தை முடிக்க முடியாததால்
பாதையில் செய்கிறது மறியல்

மறியலால் ஆனது… வளர்ந்தது…
மழை அரசியல் !
***

முத்துக்களைக் கோர்த்தெடுக்க உதவும்
இழையைப் போல ஓடிக் கிடந்த
சிற்றோடைகளைக் காணவில்லை

காடு மேடெங்கும்
வீட்டு மனைகள் விரிவாக்கம்
சிற்றோடைகளைச் சிதைத்தது

சிதைத்ததால்
சிதறிப்போனது மழை முத்துக்கள்
சேரிடம் சேர திசை இழந்தது

திசை இழந்ததால்
தேங்கி நின்று அழுகிறது
மழை வெள்ளம்
நதியினை அடைய முடியாத
ஆற்றாமையுடன்
தாய் மடி சேராத குழந்தையாய் !
***
ஆற்

மேலும்

மிக அருமை தோழரே... மிக ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Nov-2015 3:47 am
மிக்க நன்றி புனிதா வேளாங்கண்ணி 19-Nov-2015 7:09 pm
மிகுந்த மகிழ்ச்சி ஆசை அஜீத். நீண்ட காலம் ஆகிவிட்டது தொடர்பு கொண்டு. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. 19-Nov-2015 7:09 pm
உண்மை....சிறப்பு தோழமையே... 17-Nov-2015 7:19 pm
Rathinamoorthi kavithaikal - Rathinamoorthi kavithaikal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2015 11:35 am

ஆணிபோல் இறங்கி நின்ற மரம்
மண்ணை இறுக்கிக் கட்டிக் காத்தது
முத்தம் சிந்திச் செல்லும் மேகம்
நிலத்தைப் பசையாக்கி வைத்தது

பசை உள்ளவரை நீண்ட வேர்கள்
மண் சிதையா வண்ணம் பிணைத்தது
இயற்கையின் சிரசை கான்கிரீட் கலவை
மேவும்வரை மண் உலராமல் நிலைத்தது

மலையரசிகளின் மணிமகுடமான பசுமை
நாம் ரசிக்கப்படும் வரை மிளிர்ந்தது
நாம் அகலக்கால் வைக்கும்வரை
இயற்கை அமைதியுடன் வாழ்ந்தது

பேராசை பிடித்தவன் நுழைந்ததும்
எல்லாம் சிதைகின்றது, தொலைகின்றது !
இயற்கை தன் சோம்பல் முறிக்கையில்
கட்டிடங்களே அவனின் கல்லறை ஆகின்றது !

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. 20-Oct-2015 5:10 pm
யாரும் என்னை தீண்டாதவரை நான் நல்லவன் என்றது இயற்கை நல்ல படைப்பு 16-Oct-2015 5:02 pm
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) athinada மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Jun-2015 10:09 am

சிட்டுகுருவி திங்கநெல்லு இல்லை – சிறு
பட்டுப்பூச்சி தங்கஇடமும் இல்லை !
ஆட்டுமாட்டு கூட்டத்திற்கும் இங்கே – வெறும்
கட்டாந்தரை தவிர ஏதும் இல்லை !

மரமும்நீரும் அழிந்துபோகும் முதலில் – நல்ல
மீனும்உப்பும் ஒழிந்துபோகும் கடலில் !
மனிதன்என்ற மிருகத்தின் வெறியில் – இந்த
மாண்புமிக்க உலகம் அழியும் கதியில் !

காசுதேடி சொத்துதேடி ஓடி – இங்கு
மாசுபட்டு கிடப்போர்கள் கோடி !
கூசும்குணம் எள்ளளவும் இன்றி – பொய்
பேசும்மனம் படைத்தோரும் கோடி !

யுத்தம்செய்து கெட்டுப்போனார் பாதி – காம
மத்தம்கொண்டு செத்துப்போனார் மீதி !
மொத்தமாக ஊரையுண்டு வாழும் – பேடி
எத்தர்களின் ஆட்சியில் தான் பூமி !

மேலும்

மண்ணில் கால்பதித்து விண்ணில் புது உலகம் தேடும் மனிதனில் அற்புதமான புவியிலுள்ள புத்தனை அறியாது. வளங்கள் எல்லாம் செல்வங்களாக மாறிய மனதில் தினம் தினம் கொலை புரிகிறான் புத்தனை. புத்தனாக எனக்கொரு புவி வேண்டும். அற்புதமான பார்வை பதிவு. அருமை தோழரே 13-Aug-2015 12:09 pm
மண்ணில் கால்பதித்து விண்ணில் புது உலகம் தேடும் மனிதனில் அற்புதமான புவியிலுள்ள புத்தனை அறியாது. வளங்கள் எல்லாம் செல்வங்களாக மாறிய மனதில் தினம் தினம் கொலை புரிகிறான் புத்தனை. புத்தனாக எனக்கொரு புவி வேண்டும். அற்புதமான பார்வை பதிவு. அருமை தோழரே 13-Aug-2015 12:00 pm
மனதின் ஆதங்கம் நெருப்பாய் எரிகிறது. வரிக்கு வரி சாட்டையடி. அழுத்தம் திருத்தமான வார்த்தைகள் படைப்பை முழுமையாக்குகிறது. தீ பரவட்டும்.அழுக்கை எரிக்கட்டும். சுகம் மலருட்டும். 16-Jul-2015 6:52 pm
இரண்டு வருடமாக நீயும் புத்தனாக வேண்டும் என்றுதான் எழுதிக் கொண்டிருக்கிறாய். என்ன செய்வது உன்னால் ஆக முடியாது. இப்படி புலம்பத்தான் இயலும். //டெல் தெம்.... ஐ வில் கில் தெம்...!// இப்படி எல்லாம் கொல வெறியில் இருந்தா எப்படி புத்தனாவே..?? இந்த கொலைவெறியோட புத்தனாக வேண்டும் என்று நீ கூறினால் புத்தன் கூட துப்பாக்கியைத் தூக்கி சுட ஆரம்பிச்சிடுவான். 08-Jun-2015 8:51 pm
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) PUTHIYAKODANGI மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Jun-2015 2:35 pm

இன்று - 14.06.2015- வெளியான ஜன்னல் மாதமிருமுறை இதழில்,கவிக்கூடு பகுதியில், கண்ணில் பட்ட தோழர்.ராம் வசந்தின் கவிதை.. உங்கள் பார்வைக்கும்..!
வாழ்த்துக்கள் ராம்..!

மேலும்

படித்தேன். ரசித்தேன். மேலும் மேலும் வளர்ந்து இலக்கிய உலகில் சாதிக்க வாழ்த்துக்கள். 16-Jul-2015 2:14 pm
காதலனின் சோகத்தில் கூட நக்கல் சொக்கட்டான் ஆடுகிறது....!! :) கவிதையைக் கண்டதிலும் விண்டதிலும் மிகுந்த மகிழ்ச்சி :) தீயாத தோசையை உண்பதற்குத் தந்தமைக்கு, அன்புத் தோழர் அபி அவர்களுக்கு மிக்க நன்றிகள் :) 18-Jun-2015 3:33 pm
தோழர் ராம்வசந்துக்கு வாழ்த்துகள்! 15-Jun-2015 7:00 pm
வாழ்த்துக்கள் ராம்வசந்த் 15-Jun-2015 1:12 pm
Rathinamoorthi kavithaikal - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2015 3:53 pm

[”மான் கண்ட சொர்க்கங்கள்… காலம் போகப்போக யாவும் துக்கங்கள்”
பாடலின் இசைகொண்டு இவ்வரிகளைப் படிக்கலாம்...பாடலாம்]
***********
தேன் சிந்தும் பாடல்கள்
யாரும் பாடப்பாட கூடும் இன்பங்களே…
தேன் சிந்தும் பாடல்கள்
யாரும் பாடப்பாட கூடும் இன்பங்களே…
வான் மிதக்கும் கானங்கள்
பூமழையாய் நம் உயிரை நனைக்கின்றதே?!
வான் மிதக்கும் கானங்கள்
பூமழையாய் நம் உயிரை நனைக்கின்றதே?!
***
பாட்டினை வாங்கிடுவாய்
மெட்டினை அமைத்திடுவாய்
உள்ளமும் கொள்ளாத
போதையை தந்திடுவாய்
தள்ளாடும் நெஞ்சங்கள்
எப்போதும் உன்பெயரை
கொண்டாடுது
நேற்றைக்கு ஒரு பாடம்
இன்றைக்கு சுகப் பாடல்
நாளைய புதுத் தேடல்
யாவிற்கும் முன்னோ

மேலும்

உண்மைதான். அவர்கள் திறமைகளை சாதனைகளை பார்த்து பெருமைப்படும் வாய்ப்பு நமக்கு அமைந்திருக்கிறது. நன்றி. 16-Jul-2015 6:44 pm
வாசிக்கும்போதே இதயம் வலிக்கிறது .... விழிகள் நனைகிறது நண்பரே .. அனைத்தும் உண்மை .... நம் காலத்தில் இவரைப் போன்றவர்கள் வாழ்ந்து மறைந்தார்களே ... நாம் கொடுத்து வைத்தவர்கள் ...கவியரசர் , மெல்லிசை மனனர் , டி எம் ஸ் , மறக்கத்தா முடியுமா .. இவர்கள் இல்லாத திரைஉலகம் ....மானம் கனக்கிறது நல்ல கவிதாஞ்சலி ரத்தினமூர்த்தி ... என் வாழ்க்கைப்பயணம் என்று கட்டுரை எழுதி வருகிறேன் பார்க்கவும் . நன்றி 16-Jul-2015 2:30 pm
வருகைக்கு நன்றி. அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். 16-Jul-2015 1:41 pm
இசை சக்ரவர்த்தி க்கு எமது அஞ்ச்லியும் தங்களின் அழகான பாடலோடு பாடி வண்ங்குகிறேன் 16-Jul-2015 1:01 pm
Rathinamoorthi kavithaikal - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2015 11:35 am

ஆணிபோல் இறங்கி நின்ற மரம்
மண்ணை இறுக்கிக் கட்டிக் காத்தது
முத்தம் சிந்திச் செல்லும் மேகம்
நிலத்தைப் பசையாக்கி வைத்தது

பசை உள்ளவரை நீண்ட வேர்கள்
மண் சிதையா வண்ணம் பிணைத்தது
இயற்கையின் சிரசை கான்கிரீட் கலவை
மேவும்வரை மண் உலராமல் நிலைத்தது

மலையரசிகளின் மணிமகுடமான பசுமை
நாம் ரசிக்கப்படும் வரை மிளிர்ந்தது
நாம் அகலக்கால் வைக்கும்வரை
இயற்கை அமைதியுடன் வாழ்ந்தது

பேராசை பிடித்தவன் நுழைந்ததும்
எல்லாம் சிதைகின்றது, தொலைகின்றது !
இயற்கை தன் சோம்பல் முறிக்கையில்
கட்டிடங்களே அவனின் கல்லறை ஆகின்றது !

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. 20-Oct-2015 5:10 pm
யாரும் என்னை தீண்டாதவரை நான் நல்லவன் என்றது இயற்கை நல்ல படைப்பு 16-Oct-2015 5:02 pm
Rathinamoorthi kavithaikal - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2015 4:57 pm

[பொன்னுமணி படத்தில் வரும் “அன்பச் சுமந்து சுமந்து... அல்லும் பகலும் நினைந்து... இன்பம் தந்த மாமா...” பாடலின் மெட்டுடன் பாடிப்பாருங்களேன். இன்னும் அழுத்தம் புரியும்]
************
என்னைப் பார்த்துப் பார்த்து
தன்னை எண்ண மறந்து
கண்கள் பூத்து நின்ற உயிரே
உன்னை துடிக்க விடுவேனா
***
என்னைப் பார்த்துப் பார்த்து
தன்னை எண்ண மறந்து
கண்கள் பூத்து நின்ற உயிரே
உன்னை துடிக்க விடுவேனா
உன்னை துடிக்க விடுவேனா
*** *** ***
நேற்றுவரை நீ சளைக்காமல்
மாடெனவே உழைத்தாயே
வேர்வையினை சிந்தாமல்
இருப்பதையே வெறுப்பாயே
அதனால்தான் உன்தேகம்
இரும்பெனவே இருக்குதோ
நடைதளர்ந்து படுத்தாலும்
நாரெனவே கிடக்குதோ

மேலும்

வணக்கம். தங்கள் வருகையால் மனம் மகிழ்ந்தேன். நன்றி கவின் சாரலன். 01-Apr-2015 7:44 pm
தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. 01-Apr-2015 7:34 pm
தங்களது வருகையாலும் கருத்தாலும் மிகுந்த மகிழ்ச்சி நண்பரே. 01-Apr-2015 7:33 pm
சுகம் சுகமே நீங்காத நினைவுகளால். நானும் அதையேதான் சொல்கிறேன்.... உங்களிடம்....... "பழையகதை பேசிக்கொண்டு தாலாட்டி விடுவாயோ" என்று. எத்தனை நினைவுகள். எத்தனை மகிழ்ச்சி. "அழுக்கில்லா அன்பு" என்று முன்பொரு சமயம் பதிந்த கவிதையை படித்தது உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். இக்கவிதை அதன் பாதிப்பும் தொடர்பும் என்றுகூட வைத்துக் கொள்ளலாம். தங்ககளது வரவால் மனம் நெகிழ்ந்தேன். நன்றி. 01-Apr-2015 7:31 pm
வெள்ளூர் ராஜா அளித்த படைப்பை (public) கார்த்திக் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Feb-2015 10:49 am

காக்கைச் சிறகினிலே
கடுகின் தோலினிலே
காலை நேரத் தேநீரினிலே
கவிதை பாடும் குயிலினிலே

கனிந்த நல் மஞ்சனத்திப் பழம் தனிலே
இனிக்கும் தேன் கரும்பினிலே
மணக்கும் அகர் பத்திகளிலே
மாலைச் சூரிய மறைவினிலே
மந்திகள் ஆடும் இருள் தோப்பினிலே

நிலவு மறந்த வானிலே- கதிரவன்
களவு போன பகலினிலே
உழவர் யாக்கை நிறம் தனிலே
உறுதியான இரும்பினிலே
உதிரி நாவல் பழங்களினிலே
பரிதியின் பல் படாத பூமியிலே

கற்பரசி கண்ணகி சிலைதனிலே
காக்கைச் சிறகினிலே - உழைப்பவர்
யாக்கை நிறம் தனிலே - உந்தன்
தக்கை விழிகளின் நிறம் தோன்றுதடி நந்தலாலா...!

மேலும்

Rathinamoorthi kavithaikal அளித்த படைப்பை (public) அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Oct-2014 6:53 pm

தேடிப் பார்த்தேன் உலகில்
தெரிந்து கொண்டேன் அழகை !
இயற்கை செய்தது அறிமுகம்
எனக்குக் கிடைத்தது அனுபவம் !

ஜாடை காட்டும் மதுமலர்
ஆடை ஆக்கும் இலைகளை
காட்சி சிறகைத் தரும்
கற்பனை பறந்து வரும் !

நடை பழகும் நதிமகள்
இடை நெலியும் புதுமைகள்
பார்த்து ரசித்த நானும்
படரும் கரைகள் ஆவேன் !

குடை பிடிக்கும் ஒருமரம்
பாய் விரிக்கும் புல்வெளி
படுத்து உறங்கும் போதும்
பஞ்சனை தோற்றுப் போகும் !

வண்ண ஓவியம் வரையும்
வானில் வில்லாய் நிறையும்
பறவைக் கூட்டம் அழகே
மயங்கி வியக்கும் உலகே !

வானைத் தொடும் மலைகள்
அதனைத் தழுவும் முகில்கள்
எனக்குக் கவிதை பாடும்
இன்பம் அதிலே தூவும

மேலும்

வாழ்த்துக்கள் ரத்தின மூர்த்தி என்று படிக்கவும். ----அன்புடன், கவின் சாரலன் 17-Oct-2014 9:11 am
நன்றி பழனி குமார் சார். உங்கள் புத்தக விழாவும் சிறப்பாக நடந்து முடிந்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். 16-Oct-2014 4:23 pm
நன்றி சந்தோஷ். தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ! 16-Oct-2014 4:15 pm
இப்படி ஒரு தகவலை உங்களிடமிருந்து கேட்டு அறிவதில் மிக்க மகிச்சி அய்யா .. உங்களை போன்றவர்களின் உந்துதல்கள் எனை உயர்த்துகிறது ...நன்றி அய்யா . 16-Oct-2014 10:19 am
Rathinamoorthi kavithaikal - rameshalam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2014 4:05 pm

சிறப்புக் கவிதைகள் குறித்தான விமர்சனத்தில்...
என்னையும் பங்கு கொள்ளும்படி திரு.அகன் சார்
என்னிடம் கேட்ட பொழுது எனக்கு சந்தோஷமாகிவிட்டது. தளத்தின் மிகச் சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து எனக்குப் படிக்கக் கொடுத்து...என் கருத்தையும் ஒரு பொருட்டென மதித்துக் கேட்பது......என் தவங்கள் வரங்களாகிக் கொண்டிருக்கின்றன இந்த எழுத்துத் தளத்தில்.

இரத்தின மூர்த்தியின் கவிதைகளை நான் தளத்தில்
வாசித்து வந்துள்ளேன். மூன்று தொகுப்புகள் வெளியிட்டுள்ள ஒரு இளைஞர், திரைப்படத்துறையில் கண் பதித்துள்ளவர், நிறைய
வெகு ஜன, இலக்கியப் பத்திரிக்கைகளில் தன் கவிதைகள் வரக் கண்டவர்...என நான் அறிந்த அளவில்...இரத்தின மூர

மேலும்

எழுதிய ரத்தினமூர்த்தி ஐயாவின் பணிகள் சிறக்கட்டும்.....அருமை 05-Aug-2014 6:29 pm
சமூக பொறுப்புள்ள கவிதை.... எழுதிய ரத்தினமூர்த்தி ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள். மேலும் கவிதையை விமர்சனத்திற்கு முன்னெடுத்த அகன் ஐயா அவர்களுக்கும் விமர்சன கட்டுரை எழுதிய ரமேஷலாம் அருமையாய்..வழங்கியிருக்கிறீர்கள். சுயநலங்களோடு வளர்வதையே...வாழ்தலின் பிறப்புரிமையாகக் கொண்டாடும் சமூகத்திடம்... ஒரு எளிய புரட்சியாளனாகத் தன் வருத்தங்களை முன்வைத்திருக்கிறார் இரத்தினமூர்த்தி.என்று..... 05-Aug-2014 6:26 pm
விமர்சனக் கட்டுரை அருமை. நல்ல சிந்தனையில் எழுதும் ஒரு திறமையான கவிஞர் திரு ரத்தினமூர்த்தி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். 05-Aug-2014 5:50 pm
எனது கவிதையை தேர்வு செய்தமைக்கும் அதற்கு சிறந்த விமர்சனத்தை வழங்க ஆவன செய்தமைக்கும் நன்றி அகன் சார். 05-Aug-2014 5:35 pm
Rathinamoorthi kavithaikal - T. Joseph Julius அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2014 3:09 pm

”எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்” என நாம் படித்து இருக்கிறோம். ”எண் எழுத்து இகழேல்” என ஆத்திச் சூடியிலும், ”எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என கொன்றை வேந்தனிலும் எழுத்தின் முக்கியத்துவத்தை பக்குவமாய் கூறுகிறார் ஒளவையார். எழுத்து அறிவித்தவன் இறைவன் என கூறுவதை எப்படி நாம் நம்ப முடியும். எழுத்துக்கள் இறைவனால் படைக்கப்பட்டனவா என ஆய்வு செய்யும்போது,

பன்னீ ருயிரும் முன்அயன் படைத்தனன்
மன்னிய அரன்அரி மயிலோன் புனிதன்
ஞாயிறு திங்கள் நடுவண் வருணன்
ஏயும் நிதிக்கோன் இரண்டு இரண்டு ஆகப்
படைத்தனர் ஈரொன் பானொற் றையுமே

என இலக்கண விளக்கம் சான்று கூறுகிறது. இதனை நம்புவது நம்பாததும் அவரவர் விர

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. 19-Jul-2014 1:03 pm
நமக்கு எழுத்தை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள் என்ற பொருளில் தான் 'எழுத்தறிவித்தவன் இறைவன்' இதுவரை நினைத்திருந்தேன். 'எழுத்து என்பதனை அறிவித்தவனே இறைவன் தான்' என்ற பொருளில் சிலர்ப் படைய வைக்கிறது. அடுத்து வரும் செய்யும் அனைத்தும் வெகுவாக ரசிக்க வைக்கிறது. 18-Jul-2014 8:26 pm
சுட்டிக்காட்டிய தட்டுப் பிழையினத் திருத்தி விட்டேன். ஊண்றிப் படித்து கருத்து சொல்லி பாராட்டியது குறித்து மீளவும் நன்றி கூறுகின்றேன். 12-May-2014 10:58 am
"சிவஞானமுனிவர் சிவஞான போதத்துக்குப் பேருரை எழுதி மாபாடிய கர்த்தர் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவர். நன்னூலுக்குப் புத்தம் புத்துரை வகுத்தவர். சில கண்டன நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அவற்றையெல்லாம் படித்தவர்களுக்குச் சிவஞான முனிவரின் அறிவும் மிடுக்கு நடையும் புலப்படும். ஆனால் அவர் கவியுள்ளமும் படைத்தவர். இலக்கியப் படைப்புக்கு ஏற்ற உணர்ச்சிச் செல்வம் அவரிடத்தில் நிறைந்திருந்தது. காஞ்சிப் புராணத்தைப் படித்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும் "==இது இரண்டு முறை வந்துள்ளது கவனிக்கவும்; சொல்லினைச் சேர்த்து வைத்தால் =சோர்வுதான் வந்தி டாதோ? கல்லினைக் கடித்த ‘பாவம்’ =காட்டுமுன் முகத்தைப் போலச் சொல்லிலே ‘பாவம்’ தோன்றச் =சொல்வதே கவிதை என்றே நல்லதோர் கதையாய்ச் சொன்னீர்! =நயமிதைப் போற்று கின்றேன்! அருமை 10-May-2014 5:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (296)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
பட்டினத்தார்

பட்டினத்தார்

தென் துருவம்
புதியகோடாங்கி

புதியகோடாங்கி

யாதும் ஊரே யாவரும் கேளீா்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (296)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
karthikjeeva

karthikjeeva

chennai
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (296)

வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
ருத்ரா நாகன்

ருத்ரா நாகன்

புதுகை ,பொன்னமராவதி

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே