ரா.ஸ்ரீனிவாசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரா.ஸ்ரீனிவாசன்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  21-Aug-1967
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Oct-2014
பார்த்தவர்கள்:  344
புள்ளி:  103

என்னைப் பற்றி...

எனக்கு கவிதை நிறைய பிடிக்கும்.
கண்ணதாசன், வாலி, வைரமுத்து,பாடல்வரிகள் பிடிக்கும்.
நடிப்பில் கமல், ரஜினி
பழைய பாடல்கள்
பழைய சிவாஜி படம்

என் படைப்புகள்
ரா.ஸ்ரீனிவாசன் செய்திகள்
ரா.ஸ்ரீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2018 9:24 am

மழையில்
நனைந்து வந்தேன்
முந்தானையில்
தலைதுவட்டினால்
தாய்.
இருந்தும்
நனைத்தேன்
அவளின்
அன்பு
மழையில்.

மேலும்

ரா.ஸ்ரீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 9:37 am

என்னுள்
கவி விதைத்த
விழியே
உன் இதழ் வரியில்
நான் பதித்த
முதல் கவிதை
ஞாபகம் இருக்கிறதா
இன்னும்
திகட்டாமல்
பதிக்க காத்திருக்கிறது
கவிதைவரிகள்
இளமையோடு
என்னுள்.

மேலும்

ரா.ஸ்ரீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2018 4:40 pm

உனை போல்
ஒரு சிலை வடிக்க
உளி எடுத்தேன்.

உன்
விழியால்
நிலைகுலைந்து
போனேன்.

உன்
இதழால்
இதழ் மூட
மறந்தேன்.

உன்
தணிக்கையில்
தடம் மறந்து
போனேன்.

உன்
இடையினில்
எடை இழந்து
பறந்தேன்.

உன்
ஒற்றை புள்ளியில்
ஓய்வின்றி
விழித்தேன்.

உன்
உச்சி முதல்
உள்ளம்
கால் வரை.
எத்தனை
தேனடி
பருகிய நான்
உளியோடு
சிலையானேன்.

மேலும்

உன் சாலையில் என் இதயப்பேருந்து மட்டும் தான் உன் கண்களால் அடிபட்டுக் கிடக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2018 10:42 pm
ரா.ஸ்ரீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2018 1:32 pm

இதழியல்
படிக்க அழைத்தது
விழிகள்.
படித்து பார்த்தும்
புரியாத மக்கனேன்.
புரியும் வரை
சொல்லித்தா.
*******************************
விழியின்
வெளுப்பும்
இதழின்
சிவப்பும்
இடம் பெயர
வழி சொல்ல
வரவா

மேலும்

நீ நினைப்பதை எல்லாம் செய்யும் மறு உள்ளத்தின் பெயர் தான் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2018 10:14 pm
ரா.ஸ்ரீனிவாசன் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2017 2:56 pm

தமிழே
தலை அடி சீர் தொடை நடை
இவை அனைத்தும் இருப்பதால்
நீயும் கோலப் பெண்ணே

வணக்கம் சார்
என்று ஆங்கிலத்தோடு நீ
கலந்துவிட்ட நிலைமையை
எழுதும்போது நீல மையாய்
கண்ணீர் வெடிக்கின்றது
என் நீலப் பென்னே

தமிழ் மகளே உன்
குரல் தான் எனக்குத் திருக்குறள்

உன் விரல்கள் விரல்களல்ல
அனைத்தும் மாணிக்கப் பரல்கள்

உன் கூந்தல் தொகை தான்
எனக்கு குறுந்தொகை
உன் உரு வாசகம் தான்
எனக்குத் திருவாசகம்

உன் இடையினத்தைக் கண்டபோதுதான்
குற்றிய லுகரத்தின் அர்த்தம் விளங்கியது
உன் சீர் நடையைக் கண்டபோதுதான்
நீர் வற்றிய நகரத்தின் பூக்கள் குலுங்கியது

தமிழ் மகளே
உன் சிவப்பழகைத்தான்

மேலும்

தமிழ் பாலை பருகியதுபோல் உள்ளது கவி. உம் சொல் அழகு நடை அழகு இடை அழகு ஆகா அற்புதம் வாழ்த்துக்கள். 30-Dec-2017 10:54 am
உயிர் உள்ள வரை தமிழை நம்பியே என் வாழ்க்கை 16-Dec-2017 11:30 pm
ரா.ஸ்ரீனிவாசன் - ரா.ஸ்ரீனிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2017 11:50 am

என்ன வாசன் எல்லோரும் இன்கிரிமெண்ட் வாங்கன சந்தோசத்தில் இருக்காங்க நீ மட்டும் சோகம இருக்க என்று கேட்டான் விக்னேஷ்.

ஒன்னுமில்லப்பா...

அட சொல்ற

இல்ல என் வேலைய செய்யறது இல்லாம,அடுத்தவங்க வேலையும் செஞ்சி கொடுக்கிறேன்.இன்கிரிமெண்ட் எனக்கு பெருசா எதுவும் போடல அதுதான் வருத்தமா இருக்கு என்றான் வாசன்.
நேரா போய் மேனேஜர்கிட்டேயே பேசவேண்டியதுதானே என்றான் விக்னேஷ்.

ஆமா இல்ல இப்பவே போறேன் என்று எழுந்தான் வாசன்.

சார் உள்ள வரலாமா என்று கேட்டு மேனேஜர் அறை உள்ளே சென்றான் வாசன்.

வாங்க வாசன் உக்காருங்க செல்லுங்க என்ன விஷயம் என்றார் மேனேஜர்.

சார் நான் இந்த கம்பெனியில் என் வேலையில்லாம எல்லாத்த

மேலும்

நன்றி 19-Dec-2017 1:59 pm
சரிதான்; வாசன் ஐயா... தங்கள் சொன்னது போல ஊதிய உயர்வு என்பது.... ஒருவரின் உழைப்புக்கு கொடுக்கப்படுகின்ற மரியாதை; அதை சரியானவர்க்கு கொடுக்கவேண்டியதை... எல்லா முதலாளிகளும் பூரித்து நடக்க வேண்டும். நல்ல கருத்து , எளிமையான கதை, வாழ்த்துக்கள்: 19-Dec-2017 11:52 am
ரா.ஸ்ரீனிவாசன் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2017 9:46 pm

இவள் தலையில்
சூடுவதற்கு முன்னால்தான்
அந்தப் பூவின் பெயர் மல்லிகை
இவள் தலைக்குப் பின்னால்
சூடிவிட்டு உதிரும்போது
அதன் பெயரோ மூலிகை

இவளைக்கண்டிருந்தால்
திருவாசகம் எழுதியவர்
இவளின் உருவாசகம் அல்லவா
எழுதியிருப்பார்

கம்பர் கம்ப ராமாயணம் எழுதாது
இவளின் கம்மல் ரம்மியத்தையல்லவா
எழுதியிருப்பார்

தேவாரம் இயற்றியவர்
இந்த ஆவாரத்தைப்பற்றியல்லவா
இயற்றியிருப்பார்

இவளைப் பார்த்துப் பிக்காஸோ
வரைந்த காகிதத்தில் பீக்காக் (மயில்)
அல்லவா தெரிந்தது

அப்போதுதான் அவருக்கே அவள்
மங்கை அல்ல மயிலின்
தங்கை என்பது புரிந்தது

வனவில்லை வளைத்தால்
சீதையைக் கட்டலாம்
வானவ

மேலும்

உங்கள் சிந்தனைகள் தமிழுக்கும் இஷ்டமானவைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Dec-2017 11:45 pm
புதுவை குமார் அழகிய கவிதை, அவளை போல். அழகிய வரிகள் அவள் இதழை போல். 07-Dec-2017 4:52 pm
ரா.ஸ்ரீனிவாசன் - ரா.ஸ்ரீனிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2017 12:36 pm

ஆண்: தேர போல போகும்புள்ள
ஓர பார்வை தீரவில்லை
மாமன் வரேன் காதல் பன்ன
தேனும் பாலும் சேர்ந்த புள்ள .

செம்மண் பாதையில் பூத்த முல்லை
நான் தொட்டா பின்னே மொட்டாகுது.
கம்மாங் கரையில் நான் கால் நனைக்க
எழுந்து நிலவு நனைத்து போகுது.

பெண்: முரட்டு காளை மாமா பையா
அடங்கி போனேன் உன் பார்வை மெய்யா.
நானும் வாரேன் காதல் பன்ன
நாணம் வந்து போன பின்னே .

முல்லை காட்டு வேட்டைக்கார
உந்தன்வலையில் காதல் புறா.
கண்ணிவைக்க தேவையில்லை
காத்திருக்கேன் பூத்த முல்லை .

ஆண்: மாலை நேர மேகச்சாரல்
தூர நின்று சிரிக்கும் போது.
அருகில் வந்து,அருகில் வந்து,
அருவியாக மேனியில் வீழ்ந்திடு.

பெண் :நாணம் வ

மேலும்

நன்றி 31-Aug-2017 1:33 pm
கிராமியக் காதல் இலக்கியம் கற்பனை நயம் அந்த நாள் ஞாபகம் வந்ததே ! 31-Aug-2017 1:32 pm
நன்று.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 12:54 pm
ரா.ஸ்ரீனிவாசன் - ரா.ஸ்ரீனிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2017 12:11 pm

காதலி
கேட்டால்
என்னை பற்றி
ஹைக்கூ கவிதை
கூறுங்கள் என்று.

உன் விழிகள்
ராமபானமா
சோமபானமா.

புருவங்கள்
வளர் பிறையா,
தேய்பிறையா.

கன்னங்கள்
மது கிண்ணங்களா,
புத்தம் புது சொர்ணங்களா.

இதழ்
வரிகளை படிக்கவா,
வரிகளை பதிக்கவா.

கூந்தல்
மலர் பந்தலா ,
மழை மேகமா.

செவிகள்
காதணியின் ஊஞ்சலா,
காதலனின் கொஞ்சலா.

கழுத்து
வெண்சங்கு வெளுப்பா,
கண்ணதாசன் எழுத்தா.

.................
பனி மூடிய மலையோ,
வாடிவாசல் காளையோ.

இடை
இளைப்பாற இருக்கையோ,
இளநீர் பொய்கையோ.

கரங்கள்
அழைக்க வருமோ ,
அணைக்க வருமோ

மையம்
போதும் என்ற புள்ளியோ,
போதை ஏற்றும் பள்ளியோ.

.........
உயிரோட்டமா,
உணர்வோட்டமா.

..........
கண்ணதாசன

மேலும்

நன்றி கண்மணி ஸ்ரீனிவாசன் Mohamed Sarfan. 03-Mar-2017 1:48 pm
அருமை நடை .. வணங்குகிறேன் ! 03-Mar-2017 1:24 pm
அடடா..அழகான ரசனைமிகு வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Mar-2017 8:04 am
ரா.ஸ்ரீனிவாசன் - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2017 5:23 pm

காற்று வாங்குவது போல் மொட்டைமாடிக்கு வந்து....
அன்னாந்து வானத்தை பார்த்து விட்டு..சென்று விடுகிறாய்...
உன் முகத்தின் ..பிம்பமாய்...நிலவை இரவெல்லாம்..
பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன்
நான்

மேலும்

ரா.ஸ்ரீனிவாசன் - நா சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2017 10:04 am

கனவுகளோடு

கற்பனைகள்

கைகோர்த்து

புது புது

பொய்களும்

புரியாத

புதிர்களும் கலந்த,

கூட்டுக்கலவை

காதல் மட்டுமில்லை

கவிதையும் கூட..,
#sof_sekar

மேலும்

அர்த்தத்தோடு சில நேரங்களில் 28-Feb-2017 7:16 pm
உண்மைதான் தோழரே!ஆனால் கவிதைகள் தன்மை வாய்ந்தவை மீறும் போது அவைகளும் அழுகிறது 28-Feb-2017 10:20 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ரினோஷா

ரினோஷா

மதுரை
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரினோஷா

ரினோஷா

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
மேலே