வினோத் குமார் ஏ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினோத் குமார் ஏ
இடம்:  ப.புதூர்
பிறந்த தேதி :  19-Jul-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Sep-2016
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  6

என்னைப் பற்றி...

பலவீனத்தை அறி... பலம் பெறுவாய்!

என் படைப்புகள்
வினோத் குமார் ஏ செய்திகள்
வினோத் குமார் ஏ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2017 4:21 pm

இருளுக்குப் பகையானான்
பூமிக்கு விடியலானான்
ஒரே நேரத்தில் இரு முகமாய்
அதிகாலைச் சூரியன்!

மேலும்

வினோத் குமார் ஏ - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2017 11:17 pm

ரம்மியமான மலைப் பிரதேசத்தின் குளிர்ந்த காற்றும்
நெஞ்சை கொள்ளை கொள்ளும் ராஜாவின் இசையும்
தெரு முனையும் திரும்பிப் பார்க்கும்
ஆத்தாவின் கைமணமும்
விழிகளுக்கு விருந்தளிக்கும்
சோலைவனப் பூக்களும்
கிரக்கத்தைத் தூண்டும்
அந்திமல்லியின் வாசமும்
செவியுணர்வை அற்றுப் போகவைக்கும்
ஜேசுதாசின் கானங்களும்
ஐம்புலன்களையும் ஆட்டி வைக்கும்
காதலியின் நினைவும்
எனக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த நண்பர்களும்
குதித்து கும்மாளமிட்ட
மாற்றான் வீட்டுக் கிணறும்
என்னை நகராது அமரவைத்த
புத்தகங்களும்
என்னை அடிமை கொள்ளவில்லை.!
என்னவளின் கண்களால் கூட என்னை கட்டுப் படுத்ததான் இயன்றதே தவிர
அடிம

மேலும்

வினோத் குமார் ஏ - கோபிநாதன் பச்சையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2017 3:14 pm

திறந்து தேடினான்
தொலைந்து போனான்
"புத்தகம்"...!

கதவைத் திறந்தால்
வாழ்க்கையைக் காட்டுகிறது
புத்தக சாளரம்....!

வாங்கியவனுக்கு தெரியவில்லை
கறையானுக்கு தெரிகிறது
புத்தக ருசி....!

கன்னித்திரை திறவாமல்
செல்லரித்துப் போகும் தேகம்
வாசிக்கப்படாத புத்தகம்....!

ஆயிரம் சூரியன்கள்
அழகாய் அடுக்கப்பட்டுள்ளன
நூலக அலமாரி....!

ஒவ்வொரு தோண்டலிலும்
புதையல் தருகிறது
புத்தகம்....!

பெரியாரும் பிள்ளையாரும்
முத்தமிட்டுக் கொள்கிறார்கள்
புத்தக அலமாரியில்...!

பிரசவிக்குமுன்னே
இறந்து விடுகிறது
சில கற்பனைகள்....!

பெரு வெளிச்சத்தில்
சிறு இருள் தேடுகிறான்
புது எழுத்தாளன்...!

அமைதி

மேலும்

மிகவும் நன்றி தோழரே...! 03-Jul-2017 8:02 pm
மிகச் சிறப்பு.......! புத்தகங்களைப் பற்றிய மிகச் சிறந்த கருத்துகளுக்கு வாழ்த்துகள்.! 02-Jul-2017 10:33 pm
மிகவும் நன்றி நண்பரே...! 11-May-2017 5:50 pm
ஆஹா அனைத்தும் அருமை தோழரே ... வாங்கியவனுக்கு தெரியவில்லை கறையானுக்கு தெரிகிறது புத்தக ருசி....! கன்னித்திரை திறவாமல் செல்லரித்துப் போகும் தேகம் வாசிக்கப்படாத புத்தகம்....! மாஸ்!!! 08-May-2017 7:43 am
வினோத் குமார் ஏ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2017 2:41 pm

இதயம் இத்தனை வேகமாய்த்
துடிக்கு மென் றறியேன்
அழகே...
உன்னிடம் பேச
எத்தனிக்கும் முன்பு வரை!

மேலும்

வினோத் குமார் ஏ - வினோத் குமார் ஏ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 8:50 pm

உன்னை விரும்பிய மனம்
விரும்புதடி
உன்னை மறப்பதற்கு.....
உன்னை மறக்கின்ற நினைவும் துடிக்குதடி உன்னை நினைப்பதற்கு!

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி! 22-Nov-2016 4:10 pm
நினைவுகள் மனதை விட்டு அகல்வதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:34 am
வினோத் குமார் ஏ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2016 8:50 pm

உன்னை விரும்பிய மனம்
விரும்புதடி
உன்னை மறப்பதற்கு.....
உன்னை மறக்கின்ற நினைவும் துடிக்குதடி உன்னை நினைப்பதற்கு!

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி! 22-Nov-2016 4:10 pm
நினைவுகள் மனதை விட்டு அகல்வதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:34 am
வினோத் குமார் ஏ - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 2:57 pm

காலம் விசித்திரமான கற்பனையில் ...
பிறப்பிலே எவன் கண்டான் சாதியினை
ஆராய்ந்துக் கூறியதுண்டா ஆதாம் ஏவாளை
இச்சாதி இம்மதமென இயம்பிடவும் இயலுமா
கற்பனையில் மிதக்கிறது கருத்துக்கள் இங்கே !

விழிகளில் தெரிகிறதே
சாதிவெறி எரிகிறதே !
அறிவுள்ள அறிவிலியும்
அறைகூவல் விடுவதேனோ !
இருவேடத்தால் இருநிலையும்
இதயத்தில் கொள்வதேனோ !

மதிகெட்டு வணங்குகிறார் முழுமதியை
மதியுள்ளவன் கால்பதித்து ஆய்கிறான் !
சாதிமதமென வேற்றுமை காண்போர்
சந்திரமண்டலம் சென்றும் பிரிந்திடுவார்
சாதிக்கொரு கட்சியும் தொடங்கிடுவார் !

மதம்பிடித்து அலைகிறார் மதமென்று
பித்தர்களாய் பிதற்றுகிறார் பிரிவென்று !
சுகம்கா

மேலும்

மிக்க நன்றி கணபதி 21-Nov-2016 6:39 am
மிக்க நன்றி வினோத் 21-Nov-2016 6:38 am
சாதிகள் ஒழியவேண்டும். வரிகள் அருமை, வாழ்த்துக்கள். 20-Nov-2016 3:14 pm
மனதில் மனிதம் விதைக்கும் கவிதை 20-Nov-2016 9:41 am
வினோத் குமார் ஏ - கோபிநாதன் பச்சையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2016 11:20 pm

பாதவேர்கள் பூத்துவிட்டது..
விழியில் புன்னைகைமொட்டுகள் காத்திருக்கின்றது
அவள் வரவிற்காக….!

அவள் பெயரைக்
கோர்க்கும் எழுத்துக்களிலும் ஒட்டிக்கொள்கிறது
அழகான கர்வம்..!

சாமானியர்களின் வெள்ளை உதிரங்கள்
கோமானியர்களின் செருப்பில் வைரங்களாய்...
கறுப்புப் பணம்..!

எரிப்பவனைப் பார்த்து
தின்பவன் சொல்கின்றான்
நீச்சனென்று..!

மேலும்

மிகவும் நன்றி நண்பரே... 19-Nov-2016 8:24 pm
நான்கு முத்துக்களும் நன்று 18-Nov-2016 4:23 pm
தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி ஐயா. ஹைக்கூ எழுதும் முயற்சியில் இப்போதுதான் புதிதாக அடியெடுத்து வைத்துள்ளேன். இருப்பினும் தலைப்புப் பற்றி தாங்கள் கூறிய கருத்தை நான் உணர்ந்துகொண்டேன் அய்யா. 16-Nov-2016 2:09 pm
அருமையான படைப்பு நண்பரே. நமது வெண்பா போல் ஹைக்கூ என்பது ஜப்பானிய மூன்று வரி கவிதையின் பெயர். உங்கள் கவிதைக்கு நல்ல தலைப்பாக கொடுத்திருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். 14-Nov-2016 10:30 pm
வினோத் குமார் ஏ - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2016 7:19 pm

முத்தமிட்ட நொடியில்

என் விழியும் அவள் விழியும் பார்வையாலே
முத்தமிட்டுக்கொண்ட நொடியிலே
நான்கு விழிகள் அங்கே சத்தமின்றியே
புது காதல் அத்தியாயம் வரைய தொடங்கியதே....

என் சுவாசத்தோடு அவள் மூச்சுக்காற்று
முத்தமிட்டுக்கொண்ட நொடியிலே
இரு உயிர்கள் ஒரு உயிராகி
இருவர் சுவாசங்களும் காதல் வானிலையில்
நேசமாய் வாசம் வீசியதே....

அவள் கன்னத்தில் என் உதடுகள் காதல்
முத்திரை பதித்த நொடியிலே
என் உதடுகள் உதட்டுச்சாயமின்றியே
அவள் கன்னச்சிவப்பால் உதிரத்தின்
நிறமாக உருமாறிப்போனதே.....

என் இதழ்கள் அவள் இதழோடு
முத்தமிட்டுக் கொண்ட நொடியிலே
இவ் அகிலம் முழுதாய் நான் மறந்தே
எனையே முழுதாய் நா

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் தோழி.... 01-Oct-2016 5:58 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் தோழரே... 01-Oct-2016 5:58 pm
நிச்சயமாக உங்களுக்காக சந்தோச வானில் சிறகடிக்கும் காதல் கவியுடன் விரைவில் வருகிறேன்....கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.... 01-Oct-2016 5:57 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் நண்பா.... 01-Oct-2016 5:56 pm
மேலும்...
கருத்துகள்

மேலே