a.lawrence - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  a.lawrence
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  09-Sep-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jun-2011
பார்த்தவர்கள்:  568
புள்ளி:  215

என்னைப் பற்றி...

ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் , கவனம் எல்லாம் தாய் தமிழின் பக்கம் . எனக்கு ஒரு மனைவி , என் புகைப்படக் கருவி . இரண்டு குழந்தைகள் . மகளுக்கு 33 வயது , மகனுக்கு 8 வயது . காதலித்து மணம் முடித்தோம் , இன்னும் எங்கள் காதல் மணம் வீசிக்கொண்டே இருக்கிறது, என் மனைவி - கண்ணகி , சீதை இந்த உதாரணங்களை விட சிறந்தவள். ஒரு மனைவி இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு இவள் நல்ல ஒரு உதாரணம்.எனக்கும் என் மகனுக்கும் நல்ல தோழி.

என் படைப்புகள்
a.lawrence செய்திகள்
a.lawrence - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2017 8:26 am

முகநூல் கணக்கு...!

கூட்டல் பெருக்கலில் சிலகுப்பைகள் கூடிடும்
கழித்தல் வகுத்தலில் நல்நட்புகள் விலகிடும்

பிரபலங்கள் என பிரம்மிப்பில் கூட்டினும்
பெருந்தகையோர் என பெருமித்த்தில் பெருக்கினும்
பெரும் நிகர லாபம் வெற்று பூஜ்ஜியமே...

பண்புசால் அன்பு உள்ளங்களை
பகுத்துணர்ந்து வகுத்து நட்பில் இணைத்தால்
பாச நேசங்கள் ஈவாய் சேரும்
பசபசப்பு மீதிகள் கழிந்து ஒழிந்து
பாதையை விட்டு தானாய் விலகும்...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

மேலும்

கணக்கு எனக்கு பிடிக்காத / வராத பாடம் ,எனினும் நீங்கள் சொன்ன கணக்கு புரியும் படியே இருந்தது . முகநூல் குறித்த உங்களின் எண்ணம் அத்தனையும் சரியே , வாழ்த்துக்கள் .... 09-Sep-2017 8:33 am
C. SHANTHI அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Aug-2016 8:11 am

#பொறாமை...!

தன்னை அழிப்பதற்கு கொடிய விடமொன்று
தாமே சமைப்பார் அது பொறாமை
அள்ளிப் பிறர் நெஞ்சில் கொல்லி நெருப்பெனவே
வீசி மகிழ்வார் அது பொறாமை..!

தன்னைத்தான் கொல்லும் கொடிய சினம் போலும்
தன்னையே கொல்லும் அது பொறாமை
அரக்கப்பசி போல ஆட்டிப் படைத்திடும்
உறக்கம் நீக்கிடும் அது பொறாமை..!

தோல்வி காண்கையில் வெற்றி கொண்டவனை
வீழ்த்த நினைப்பார் அது பொறாமை
வெற்றி இரகசியம் கண்டு உணர்ந்திட
கண்ணை மறைக்கும் அது பொறாமை..!

அன்பு மனதோடு பிறரை எண்ணுகின்ற
நெஞ்சில் இல்லை என்றும் பொறாமை
பிறரின் உயர்வினில் உள்ளமும் மகிழ்ந்து
பாராட்டும் மனதிலில்லையே பொறாமை..!

பொறாமையொழித்தவர் மனது பூக

மேலும்

மிக்க நன்றி சகோதரரே..! 27-Sep-2016 5:43 pm
அடுத்தவனுக்கு கிடைத்து விட்டதே என்று மனிதன் பொறாமை படாத விடயம் " மரணம் " - படித்ததில் பிடித்தது - இங்கு பகிர்வது பொருத்தமானது என்று எண்ணுகிறேன் . படைப்பு அருமை சகோதரி !!! 23-Sep-2016 10:42 am
கருத்திற்கு மிக்க நன்றி சர்பான். 21-Aug-2016 10:11 am
தன்னைத்தானே அழிக்கும் மந்திரங்கள் பொறாமை 20-Aug-2016 10:55 am
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jul-2015 9:46 am

வேப்பம் பழம்தின்ற பறவை
வேறிடத்தில் எச்சமிட்டுச் சென்றது
விதை மெல்ல...
விருட்சமாயிற்று...!

விருச்சத்தின் நிழலிலமர்ந்து
விதைகள் சேகரித்தேன்
நட்டுவைக்கும் எண்ணம் மட்டும்
எழவில்லை எப்போதும்...?
-------------------------------------------------------------------குமரேசன் கிருஷ்ணன்

மேலும்

நன்று ! 16-Jul-2015 11:33 pm
வேப்பமுத்து பொறுக்கி விலைக்குப் போட்ட ஞாபகம் வருகிறது.... நட்டு வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு... மரங்களை நட்பாகவும் பாவிக்கிறேன்... எங்கள் வீட்டு முற்றத்தில் ஒரு நட்பு உயிரைக் காக்கிறது... 16-Jul-2015 12:20 pm
இயற்க்கை = இயற்கை 16-Jul-2015 10:56 am
சிறப்பான வரிகள் 16-Jul-2015 10:43 am
a.lawrence - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2015 7:56 am

விதையோடு
விஷம் போட்டு
வளர்ப்பதாலோ
என்னவோ
விவசாய பொருட்களின்
விலைவாசியும்
விஷம் போலே
ஏறுதய்யா .

பூச்சிக் கொல்லி
போடாத காய்கறியெல்லாம்
கண்காட்சிப்
பொருளாய் மாறுதய்யா.

வயல் வெளிகள்
நீரன்றி வறண்டு போச்சு
அத்தனையும் வீடு கட்ட
தனி பிளாட்டா மாறிப்போச்சு !!

மேலும்

அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jun-2015 1:53 pm

நாட்டிய மேதை உம்மை
நடனத் தாரகை தம்மை
வரைந்திடத் தான்
விழைந்ததே என் தூரிகை

விழி தனைக் கண்டு
வழி மறந்து நின்றேன்
செவி தனை வரைகையில்
கவியால் நிறைந்தேன்

கலை மங்கையே - உம்மைத்
தலை வணங்கியே கவி முடித்தேன் .

மேலும்

படமும் கவியும் அழகு !! 21-Jul-2015 7:53 pm
மிக்க நன்றி 12-Jul-2015 9:14 pm
மிக்க நன்றி 12-Jul-2015 9:14 pm
விரல்களுக்கும் விரல்களுக்கும் போட்டி...ஓவியமா ?? கவிதையா ?? பதில் இல்லை தோழியே..அருமை 08-Jul-2015 6:58 pm
a.lawrence - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2014 6:16 am

ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்பப் புதுமையாக இருக்குது !

மீனவர்கள் - இலங்கை என்று
செவிகளில் விழும் போதெல்லாம்
இந்த பாடல் வரிகளும் சேர்ந்தே விழுகிறது !!

என்ன தான் நடக்குது
இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ?

இவ்ளோ பெரிய நாடு இலங்கைகிட்ட
ஏன் தான் அடிபணிஞ்சு போகுதோ ?

கேள்விகளோடு நாமும் அவ்வப்போது
கடல் அலை போல எழுந்து மறந்து விடுவோம் .

யார் வகுத்த அரசியல் தந்திரமோ
இன்றுவரை தழுவல்கள் தவறாது - கடைபிடிக்க
மீனவனுக்கு மட்டும் தடைக்காலம்
நீண்டு கொண்டே போகிறது அந்த நீலக்கடல் போல .....

மீனவன் பிடிப்பதும் மீன் அவனை
பிடிப்பதுமான காலம் பழையது !!
மீனவன் பிடிப்பதும் இலங்கை

மேலும்

மிக அற்புதம் தோழரே... உண்மையின் வரிகளில் கவிதை மிளிர்கிறது நமது இயலாமையின் நினைவில் மனது வலிக்கிறது... 27-Nov-2014 9:10 am
எத்தனை முறை சிந்தித்தாலும் சிந்தைக்கு எட்டாத அறிவாய் சில கேள்விகள் உண்டு........அத்தனையும் உண்மை நண்பரே சரியாக கூறினீர்கள்! 27-Nov-2014 7:46 am
உங்கள் வரிகள் அத்தனையும் உண்மை. நானும் இதை ஒப்புக்கொள்கிறேன் லாரன்ஸ் . நலமா தாங்கள் ? 27-Nov-2014 6:59 am
a.lawrence - சிவநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2014 3:17 am

முட்டாள் சிங்களவனே
முழத்துக்கு முழம்
அடுக்கி முடுக்கி விடு
இன்று உன்
காட்டேரி படையை.
எங்காவது ஒரு
தமிழன் வீட்டில்
விளக்கு எரிகிறதா...
எட்டிப்பார்
பல்கலைக் கழக வாயிலில்
படையைக் குவி.
பாடசாலை வளவில்
காடையர்
கடையை விரி.
அப்பாவி மாணவரின்
சட்டைப்பையை தட்டிப்பார்.
ஈகைச் சுடர் ஏற்ற
எங்காவது ஒரு மெழுகுதிரி
ஒளிந்து கிடக்கிறதா என்று.
இருந்தால்.......
பயங்கரவாத தடைச் சட்டத்தின்
கீழ் கைது செய்.
பனாகொடையில் அடை
முட்டிக்கு முட்டி தட்டு.
முழியை தோண்டு.
மொத்தத்தில்
நம்மை முடிந்தவரை கொல்
முழு உலகுக்கும் சொல்
முடித்து விட்டோம்
பயங்கரவாதியை என....

மேலும்

நன்றிகள் நண்பரே 28-Nov-2014 1:46 am
அனலைக் கக்கும் வரிகள் அழிக்க முடியா உண்மைகள்... 27-Nov-2014 9:05 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஐயா 27-Nov-2014 7:50 am
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே. 27-Nov-2014 7:48 am
ஜவ்ஹர் அளித்த கேள்வியை (public) சஹானா தாஸ் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
21-Apr-2014 5:52 am

காதலித்து பெரும் போராட்டத்தில் மத்தியில் இணைந்து கொண்ட காதலர்களும்கூட பிரிந்துவிடுகின்றனர்.

இரண்டு உள்ளங்கள் இணைவதற்கு ஆசை அறுபதும் மோகம் முப்பதும்தான் என்கிறேன் நான்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

மேலும்

புரிதல் சரியாக இருக்கும் போது எந்த ஆசையும், மோகமும் தீர்ந்துவிடாது.காதலில் புரிதலின் ஒரு நிலைதான் மோகம். தாம்பத்யம் என்றொரு புனிதமான பெயரும் கூட அதற்கு இருக்கிறது. மோகம் மட்டும்தான் தீர்ந்து போகும். திருமணம் மட்டுமே காதலின் எல்லை இல்லை. அதை புரிந்து கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 22-Apr-2014 1:35 am
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலிக்க தொடங்கும் முன்னரே , மூன்றாவது நபரால் வரும் பிரச்சனையில் மாட்டி கொள்கிறார்கள் . பின்னர் அந்த பிரச்சனையில் இருந்து தங்கள் காதலை எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணத்தில் இருவரும் இணைந்தே செயல்படுகிறார்கள் . அதனால் அந்த கட்டத்தை அவர்கள் கடந்து போகிறார்கள் . எப்பொழுது 3ஆவது நபரால் வரும் பிரச்சனை முடிவுக்கு வருகிறதோ அப்பொழுது காதலர்கள் ஒருவருக்கு ஒருவரே பிரச்சனை ஆகி விடுகிறார்கள் . காதல் முடிவுக்கு வந்து விடுகிறது . காதலன் காதலியை பிரிக்க வேண்டுமானால் அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும் . காதல் என்றல் என்ன என்பதை புரிந்துகொள்ளாமலே காதலித்து பிரிந்தும் போகிறோம் . 22-Apr-2014 12:47 am
ஆசை அறுபது நொடிகள்.. மோகம் முப்பது நொடிகள் ...! மோகித்து அவளை ஆசையுடன் நோக்கும் மக்களே அதிகம் ...! 22-Apr-2014 12:40 am
ஆசை கண்ட காதல் மோகம் கண்டு முடியும் அன்பு கண்ட காதல் மட்டும் கடல் ஆழம் காணத் துடிக்கும் ... எதுவாய் நினைக்கின்றாயோ அதுவாய் நீ ஆவாய்! சுவாமி விவேகானந்தா ! 22-Apr-2014 12:24 am
a.lawrence - a.lawrence அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2014 12:10 am

எல்லாமே இங்கு ஞாயம் தான்
தவறு என்று எதுவுமில்லை

சூரியன் குளிர்வதும் தனிமையில்
நிலவு சுடுவதும் இங்கு இயல்பானது

காதலில் நல்லது - நல்லது
அல்லாது யார் பிரிக்கக் கூடும் ?

வண்டுக்கு தந்தம் முளைப்பதும்
யானையை மயிலிறகால் கட்டி
இழுப்பதுவும் இங்கு சாத்தியம் தானே ?

இங்கு இருக்கும் உன்னை எங்கோ
இருந்து ஆட்டுவிக்கும் சக்தி
காதலுக்கு உண்டு என்றால் பொய் இல்லையே ?

கல்லையும் சிலையாய்
சிலையையும் சின்னாபின்னமாய்
மாற்றும் வல்லமை காதலுக்கன்று யாருக்குண்டு ?

மேலும்

அருமை தோழரே.. 22-Apr-2014 11:21 am
பொருத்தமான தலைப்பு.. இனிய கவிதை 18-Apr-2014 10:15 pm
வரவுக்கு நன்றி சகோதரா . 18-Apr-2014 1:51 pm
உண்மை தான் நாகூராரே . இன்னும் சொல்ல வேண்டியது மீதம் உள்ளது . எது காதல் என்பதை சொல்ல வாஞ்சிக்கிறேன் . 18-Apr-2014 1:49 pm
a.lawrence - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2014 12:10 am

எல்லாமே இங்கு ஞாயம் தான்
தவறு என்று எதுவுமில்லை

சூரியன் குளிர்வதும் தனிமையில்
நிலவு சுடுவதும் இங்கு இயல்பானது

காதலில் நல்லது - நல்லது
அல்லாது யார் பிரிக்கக் கூடும் ?

வண்டுக்கு தந்தம் முளைப்பதும்
யானையை மயிலிறகால் கட்டி
இழுப்பதுவும் இங்கு சாத்தியம் தானே ?

இங்கு இருக்கும் உன்னை எங்கோ
இருந்து ஆட்டுவிக்கும் சக்தி
காதலுக்கு உண்டு என்றால் பொய் இல்லையே ?

கல்லையும் சிலையாய்
சிலையையும் சின்னாபின்னமாய்
மாற்றும் வல்லமை காதலுக்கன்று யாருக்குண்டு ?

மேலும்

அருமை தோழரே.. 22-Apr-2014 11:21 am
பொருத்தமான தலைப்பு.. இனிய கவிதை 18-Apr-2014 10:15 pm
வரவுக்கு நன்றி சகோதரா . 18-Apr-2014 1:51 pm
உண்மை தான் நாகூராரே . இன்னும் சொல்ல வேண்டியது மீதம் உள்ளது . எது காதல் என்பதை சொல்ல வாஞ்சிக்கிறேன் . 18-Apr-2014 1:49 pm
a.lawrence - எண்ணம் (public)
05-Apr-2014 8:59 am

' ற் ' என்பது இறந்தகால இடைநிலை என்பதும் , 'ற்' என்ற எழுத்துக்கு பின்னால் எந்த புள்ளிவைத்த எழுத்தும் வரக்கூடாது என்றும் நான் அறிந்திருக்கிறேன் . தமிழ் மட்டுமே ஆதாரமாய் கொண்டு இருக்கும் இந்த இணையத்தில் அது போன்ற பிழைகளை காணும் போது மனம் வலிக்கிறது. எழுத்து. காம் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பது கூடுதல் வேதனை .

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (81)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
Dr ரத்னமாலா புரூஸ்

Dr ரத்னமாலா புரூஸ்

நாகர்கோயில்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (81)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
samu

samu

krishnagiri

இவரை பின்தொடர்பவர்கள் (81)

மேலே