அரங்கமொழியாள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அரங்கமொழியாள்
இடம்:  cuddalore
பிறந்த தேதி :  05-May-1982
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Oct-2012
பார்த்தவர்கள்:  248
புள்ளி:  13

என்னைப் பற்றி...

நான்(அரங்கமொழியாள்). எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் .

என் படைப்புகள்
அரங்கமொழியாள் செய்திகள்
அரங்கமொழியாள் - சுரேஷ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2018 12:16 am

எழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

மேலும்

ஆர்வம் 31-May-2018 5:12 pm
கண்டிப்பாக உங்களை போன்றோர்கள் துணை உடன் ஈடேறும் . 28-May-2018 8:02 pm
உங்கள் சிறந்த எண்ணம் ஈடேர வாழ்த்துக்கள்.... 26-May-2018 7:45 pm
எண்ணங்களில் புரட்சியை தேட இங்கு வந்தேன் .அன்று ஒரு விடுதலை போராட்டம் வந்தது போல் இன்றும் ஒரு விடுதலை போராட்டம் வரவேண்டும் .ஆம் நம்மை இந்த கைபேசி ,தொலைக்காட்சி மற்றும் பல மனதை சோம்பேறியாக்கும் கருவிகளிடம் இருந்து விடுதலை பெற ஒரு புரட்சி மலர இங்கு வந்தேன் .பெண்களை தொலைக்காட்சியில் இருந்து ,கற்பனை வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டுவர இங்கு நுழைந்தேன் .இதோ அது ஆரம்பம் ஆகி கொண்டு இருக்கிறது .நமக்கு என வாழாமல் பிறர்க்கு என வாழும் வாழ்க்கையை கற்று கொடுக்க இங்கு நுழைந்தேன் . 26-May-2018 6:52 pm
அரங்கமொழியாள் - ம அரவிந்த் சகாயன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2016 10:53 am

தமிழர்கள் தம் கலாச்சாரத்தை மறவாதிருக்க என்ன செய்ய வேண்டும்?

மேலும்

குழந்தைகளுக்கு தமிழ் கலாச்சாரத்தின் முக்கியத்தை புகட்ட வேண்டும் முதலில் ஆங்கில மோகத்தை வெறுக்க வேண்டும் 19-Feb-2016 8:39 pm
தமிழர்களை நம் இலக்கியப் படைப்புகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும். நம் இலக்கியம் அனைத்து மொழிகளிலும் மொழிப் பெயர்ப்பு செய்யவேண்டும் . அனைத்து நூலகங்கள் , கல்வி நிலையங்களிலும் தமிழ் நூல்கள் இருக்க வேண்டும். நன்றி 19-Feb-2016 1:20 am
தமிழ் வாழ்க வளர்க விமர்சகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றி 19-Feb-2016 1:16 am
நான் தமிழன் என்று எண்ணுவதை இழுக்காய் என்னாது இருத்தல் வேண்டும். பாரதி போல் பன்மொழி கற்றல் வேண்டும் . மற்றவரோடு நெருங்கிப்பழகும் போதுதான் நம் அன்னையின் அருமை புரியும் . எத்துனை அறிவுடன் சில நிபந்தனைகள் விதித்தனர் நம் முன்னோர் அதனை மூடப்பழக்கம் என்று முடிசூட்டி மூலையில் எறிந்தனரே அறிவியல் தெரியா மேதைகள்??!!! அறிவியல் சாயம் பூசி . 16-Feb-2016 5:46 pm
அரங்கமொழியாள் - svshanmu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 6:26 pm

கண்ண தொடைக்கையில்
ஒன்ன நெனைக்கையில்
நெஞ்சு பதைக்கிது
மச்சான்

என் பிஞ்சு மனசில
அன்பு வெதயவே
ஆழப் பதியவே
வச்சான்

செந்நெல் வயலுந்தான்
செங்கல் வீடாச்சு
வித்து வந்த சொற்பகாசு
சேத்து தண்ணி போலாச்சு

பரதேசம் போகையிலே
பால் மாடு வாங்கி விட்ட
அதுகளுந்தான் மேய இங்க
சுவரொட்டி போதவில்ல

எழுத்தில் இருந்ததாலே
இக்கடிதம் தப்பியாச்சு
காற்றில் பறந்ததெல்லாம்
பசு வாய்க்கு தீனியாச்சு

விவசாயம் காணவில்ல
வேலையிங்கு ஏதுமில்ல
காச்ச கையி மாறிபோச்சு
ஒடம்பு கொஞ்சம் பூசிபோச்சு

வெலச்சலுக்கு வெலயில்ல
கடையில் கேட்டா தங்கம் போல
இடைதரகின் பகல் கொள்ள
தீராத நாச வேல

வீடு எங்கும்

மேலும்

பெண்ணின் மனமே உடன் தேச நிலையே சிறப்பாக சொல்லிவிட்டீர் . உறவுக்காய் அல்லது உயர்வுக்காய் எதற்கெனினும் பரதேசம் சென்றோரின் மனைவி மனம் புலம்பும் வரிதாம் இவை உணர்விக்கும் வரிக்கும் வாழ்த்துக்கள் 08-Dec-2015 7:50 pm
மிக்க நன்றி சகோதரா 25-Mar-2014 7:04 pm
பரதேசம் போகையிலே பால் மாடு வாங்கி விட்ட அதுகளுந்தான் மேய இங்க சுவரொட்டி போதவில்ல எழுத்தில் இருந்ததாலே இக்கடிதம் தப்பியாச்சு காற்றில் பறந்ததெல்லாம் பசு வாய்க்கு தீனியாச்சு -------------------------------------------------- மிக மிக அருமை ரொம்பவே நன்றாக எழுதுகிறீர்கள்...தொடருங்கள் வாழ்த்துக்கள் 25-Mar-2014 6:41 pm
நன்றி நண்பரே 24-Mar-2014 7:19 pm
அரங்கமொழியாள் - Ravisrm அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2015 11:21 am

என்னுடைய படைப்பான ( ஒரு நிமிடம் தருவாயா ) என்ற படைப்பு என் பக்கத்தில் சிதைந்து போய் காணப்படுவதன் காரணம் என்ன ? என் படைப்புகள் திருடப்படுகின்றனாவா ??????

இந்த படைப்பை நான் இன்று காலை வெளிட்டது குறிபிட்ட தக்கது பதிவிட்ட சில மணி நேரங்களில் இப்படி நடந்துள்ளது இதற்க்கு தக்க பதிலை எழுத்து குழுமம் விரைவில் பதிலளிக்க வேண்டும்

இதை எழுத்து நம்பர்கள் தட்டிக்கேட்கவும் எனக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இன்று எனக்கு நாளை தங்களுக்கு நன்றி

மேலும்

இல்லை நண்பரே வாய்ப்பு அதிகமுள்ளது இயந்திரக்கோளாறு காரணத்தினால் இதை தளம் சரிசையவேண்டும் 25-Aug-2015 7:48 pm
இப்படி நடக்க வாய்ப்பு மிக மிக குறைவு..! காரணம் பதிவு செய்தபோது சரியாக பதிந்து பின்னர் சிதைக்கபட்டு இருந்தால் எழுத்து குழுமம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் பதிவு செய்யும் பதிவுகளை நம்மை தவிர்த்து மற்ற உறுப்பினர்கள் அழிக்கவோ திருத்தவோ முடியாது. எழுத்து குழுமத்தாரை தவிர..! தளத்தார் விளக்கம் கொடுத்தால் மற்ற உறுப்பினர்களும் தெரிந்து கொள்வார்கள் ...! நட்போடு குமரி 25-Aug-2015 2:31 pm
தளத்தில் கோளாறு இருக்குமேயான தளம் நான் கேள்வி கேட்டவுடன் இது போன்ற பதிலளித்து என்னை மீண்டும் பதிவிடுவதற்கு கூறி இருக்கலாம் ஆனால் அவ்வாறு பதில் வரவில்லை எப்பொழுதிலிருந்து இவ்வாறு வருகின்றது என்று மட்டுமே வார்த்தைகளை முன்வைத்துள்ளது ஆகையால் தெளிவாக தெரிகிறது தவறு நடந்திருப்பது ஆகையால் இதற்க்கு உரிய பதிலையும் மீண்டும் என் படைப்பை எழுத்து தளமே வெளியிட வேண்டும் அதுவரை என் போராட்டம் என்பது தொடரும் இதற்காக எதையும் சந்திக்க நான் தயார் 23-Aug-2015 4:40 am
மீண்டும் பதிப்பது ஒன்றும் இல்லை பதித்தது என்னவாயிற்று என்று எனகேக்கேன்றால் நாளை தங்களுக்கும் இதே நிலைதான் தங்களால் முடியுமேயானால் ஆதரவளியுங்கள் 23-Aug-2015 4:28 am
அரங்கமொழியாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2015 10:34 pm

காலம் காலமாய் நல்லோர்ருக்கு மத்தியில் தீயோரும் தீயோருக்கு மத்தியில் நல்லோரும் இருந்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் , நல்லோர்மட்டுமே இப்புவியில் வழ்ந்ததகாவும்இப்போதுதான் புதிதாக ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து தீயோர் வந்தது போலவும் எதற்க்கெடுத்தாலும் அலுப்புடன் பேசுவதும் அனைத்திற்கும் அலுத்துக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது . முள்ளோடுப்பூவும் பூக்களோடு முள்ளும் சாச்சியாக இருக்கின்றன இயற்கையில் . இது உலக இயல்பு என்றெண்ணி கண்முன் நடக்கவிருக்கும் தீமையை தடுத்தும் நம்மால் யாருக்கும் தீமை எர்ப்படாவண்ணம் நடப்பதை விடுத்து ஏன் இப்படி ??? தோழமைகால்
நாமெழுதும் வரிகள் பிறரைப்பாராட்டவும் , மற்றோர

மேலும்

அரங்கமொழியாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2015 2:43 pm

எனக்கென ஓர் அடையாளம்
எனக்கான அங்கீகாரம்
எங்கே கிடைக்குமென
எங்கெங்கோ தேடினாலும்
எவரிடமும் முகம் காட்டாது
எங்கும் அலைந்தது
ஏதேதோ எழுதுகிறேன்
எனக்கான முகவரித்தேடி
( வாட்ஸ் அப் முதல் facebook வரை முகம்காட்டா அனைத்துப் பெண்களின் சார்பாக )

மேலும்

நன்றி எனதுகுறையை கண்டுதெரிவித்தமைக்கு . முகம் காட்டா என்றே கொள்ளவும் . 07-Aug-2015 2:52 pm
முகம்கட்ட - முகம்காட்டா ??? என்னை சொல்ல வரீங்க ?? 06-Aug-2015 2:48 pm
அரங்கமொழியாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 5:29 pm

" பாரதிக்கு கடிதம்"
நின்பால் வெகுண்டேன் பாரதி
நீயோ பாக்களுக்கு சாரதி
தமிழே நினக்கென்றும் கதி
தம் குடும்பம் தனக்கு செய்தீர் சதி
தமது மறைவுக்கு பின்னே அவர் வுயர்ந்தது விதி
என்றுசொல்ல மறுக்கிறது எனது மதி
கவிதை உமக்கு தொழில்
கட்டிய மனைவியை காப்பதும் நின் தொழிலே அன்றோ
நீ செய்த இத்தவறன்றி வேறொரு குறையுண்டோ உன்னிடம்
நினதுதோழியாய் நானுற்ற துயரத்திற்கும்
நின்பால் நான் வெகுண்டதிற்கும் இதுவே காரணமாகும்
நினது வருத்தம் புரிகிறது அன்றே ஏன் சொல்லவில்லை என
நீ என்னை திட்டாதே எனக்கும் வாய்ப்பு கிட்டியது இப்போதே

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Aug-2015 11:48 pm
அரங்கமொழியாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 5:14 pm

எத்தனை முட்டாள்தனமாய் இருந்திருக்கின்றனர் நம் முன்னோர் ???
"வயதுக்கு வந்தபெண் நன்றாய் ஓய்வெடுக்கவும் , மனவுலைச்சல் தவிர்க்கவும் சடங்கென்ரும் தீட்டென்றும்
சொல்லி மகிழ்வித்தும் யதொருப்பணியும் செய்யாதப்படி காத்தும் " மூட நம்பிக்கை சாயம் பூசி பெண்ணடிமை வண்ணம் தீட்டி மனவுள்ளச்சளுக்குள்ளும் மாளாத பலவீனத்திற்கும் ஆளாக்கிய நாமல்லவா புத்திசாலிகள் ?

"பிள்ளைதாச்சி இருந்தா மொட்டை போடாதே தேங்காய் உடைக்காதே என்று சொன்னாரே பிள்ளைக்கு மழலையின் அழுகுரலும் , ஒருவேளை அழிகிபோனதேங்காய் குடும்பத்துக்கு ஆகாதே என கவலை படும் அன்னையாலும் வயிற்றில் இருக்கும் மழலை கவலை கொள்வதைப்பற்றி இவர்களுக்கென்ன ? மகிழ்ச்சியே

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே