அசோக் விஜி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அசோக் விஜி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-May-2015 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 4 |
சிறகுகளில்
சிலுவை அறைந்த
பறவை இது
ரசாயன வாடையில் தன்
ரசமிழந்த
காற்று இது
உதிக்கும் சூரியனோடு
சிரிக்கும் மலர்களோடு
இனிக்கும் நிலவோடு
இருக்க நேரமில்லை
அலாரங்களோடு
அலுத்துப் போன
வாழ்வு இது
அன்று
விடியலை எண்ணி
கண் அயர்ந்தேன்
இன்று
விடியாதே என
தவம் கிடக்கிறேன்
ரசனை அழிந்து போனது
ரசிக்க மறந்து
போனது
கவிதை கூட
தொலைவாய் ஓடி
போனது
மனதினுள் குமுறும்
எரிமலையில்
மெல்ல சாகிறது
எனது சுயம்
இனி இதுதான்
நிரந்தரமா
ஏனோ பெரும் பயம்
கடந்து போன
பேருந்தில்
இதுவும் கடந்து போகும்
என வசனம்
"மெல்லிய கனவுச் சரிகைகளால் பூவேலைப்பாடு செய்யப்பட்டது என் உறக்கம் "
“My sleep had been
Embroidered with
Dim dreams” (John Keets)
உலக மகாகவிகளில் ஒருவரான அழகுக் கவிஞன் ஜான் கீட்ஸின் உறக்கத்தைப் படிக்கும்போதே கண்கள் கிறங்கி இமைக்கதவுகள் மூடத் தவிக்கும் கனவுச் சரிகைகள் பின்ன.
“போனதெலாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதினால்
நானும் ஓர் கனவோ -இந்த
ஞாலமும் பொய்தானோ? (பாரதி)
தேசீயக் கனவுகள் கண்ட பாரதியின் ஆன்மீகக் கனவுகளோ மந்திர இழைகளால் பின்னப்பட்டவை ..
கனவுகள்..யாவை? கனவு என்பதே ஒரு கனவோ?
“சொப்னங்ஙளே நிங்ஙள்
சொர்க்க குமாரிகளல்லோ ..
நிங்ஙளிப் பூமியில் இல்லா
இணைந்துவிட்டோம் என்பதற்காகவே தொடர்கிறது
பெரும்பாலானோரின் வாழ்க்கை
காடு......
மண்ணின் ஆடை
மலையின் கூந்தல்
நதியின் பிறப்பிடம்
மக்களிடமிருந்து தப்பித்த
மாக்களின் மறைவிடம்
நிலமகளின் பச்சைப் பட்டாடை
அருவிக் குழந்தைகள் தவழ்ந்து
நடை பயிலும் மைதானம்
மர மாமுனிகள் ஒற்றை காலில் தவம் இருக்கும்
தவச்சாலை !!!
மார்பில் சாய்ந்து அவள் சொன்னாள்
நமக்கு குழந்தை வேண்டாம் என்று .
அது சரி....
எந்த குழந்தை தான் இன்னொரு குழந்தையின் வரவை விரும்பும் !!!!!
பூவின்றி வீடு வந்த என்னிடம்
என்னவள் கடிந்தாள்
பூக்களை பார்க்கும் போது கூடவா
என் ஞாபகம் வரவில்லையென்று
உன்னைப் பார்க்கையில் தானடி
எனக்கு பூக்களின் ஞாபகம் வருகிறது !!!!!
என்ன வேண்டும் என்று
என்னவளிடம் கேட்டேன்
எப்பொழுதும் நன் அவளுடனே
இருக்க வேண்டும் என்றாள்
அது இயலாது என்பதை
புரிந்து மறுகணமே
என் நினைவுகளே போதுமென்றால்
இது தான் புரிதல் என்பதோ
மரம் தரும் நிழல்
உனக்கு
உன் நிழல்?
தனிமை கொண்ட வெண்நிலவும்..
மாத மொருநாள் விடுப்பெடுத்து..
அமாவாசை கொண்டாட
தனிமை கொண்ட நான்மட்டும்..
விடுப்பின்றித் தவிக்கின்றேன் -உன்
நினைவுகளைச் சுமந்து கொண்டு...
(காதல் . நட்பு . பணம் மூன்றுக்கும் பொருத்தி பொருள் பெறலாம் நட்புகளே )