கவிஞர் பெஅசோகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிஞர் பெஅசோகன்
இடம்:  தர்மபுரி -சாலூர்
பிறந்த தேதி :  20-Mar-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jul-2013
பார்த்தவர்கள்:  663
புள்ளி:  98

என்னைப் பற்றி...

என்னைப்பற்றி
விழுந்த குழந்தை அழுவதில்லை
யாரும் பார்க்காத நேரத்தில்
நான் என் மனதை
ஒளியாக்கிக்கொண்டதனால்
மாற்றான் மனதுக்கு
வெள்ளையடிக்க விரும்பாதவன்
பழி சொற்களை உண்டே
பசியாறியவன்
இழிவுபடுத்தியோரை
தெளிவு படுத்த நேரமில்லை
ஏளனம் செய்தோருக்கு
காரணம் தேடவில்லை
செவிகளிரண்டையும் செவிடாக்கி
சிகரம்நோக்கினேன்
இடறி விழுந்தபோதும்
எனது கையே ஊன்றுகோல்
ஏளனச்சொற்களை
என்னை வாழ்த்தும்
தோரண சொற்களாக்கினேன்
பழி சொற்களை
எனைப்பார்க்கும்
விளிச்சொற்களாக்கினேன்
எறும்பொப்ப முயற்சி
இரும்பொப்ப உறுதி
நாயொப்ப நன்றி
தாயொப்ப பாசம்
தீயொப்ப கோபம்
சேயொப்ப உள்ளம்
இதுவே என் தோற்றம்
இதுவே என் ஏற்றம் ...

என் படைப்புகள்
கவிஞர் பெஅசோகன் செய்திகள்
கவிஞர் பெஅசோகன் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
23-Nov-2022 7:45 pm

In this novel called "Muri", this novel highlights the living realities of the tribal hill people who live in harmony with nature and their attachment to nature, and the data that the villages themselves have been destroyed while being displaced due to living problems has also been recorded. The thoughts of the hill dwellers who did not want to leave their habitat are woven into this novel like teardrops.

மேலும்

கவிஞர் பெஅசோகன் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
28-Mar-2022 5:51 pm

Skip to main content

nlblogo
HomeBook Description
Previous record
Next record
வெளிச்ச விதைகள் : புதுக்கவிதை நூல்

வெளிச்ச விதைகள் : புதுக்கவிதை நூல்
Veḷicca vitaikaḷ : Putukkavitai nūl
அசோகன், பெ
Acōkan̲, Pe
2017
Books, Manuscripts
Summary
புதுக்கவிதைத் தொகுப்பு.
“வெளிச்ச விதைகள்” என்ற நூலில், மிக அருமையாக, புதுக்கவிதைகள் மூலம் நல்ல கருத்துக்களை கூறி உள்ளார். இன்றைய காலகட்டத்தில், அவசர உலகில் உறவுகளுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை. மக்களுக்கு உறவுகளின் உன்னதத்தை உணர்த்தும் விதமாய் அழகாக கூறி உள்ளார். மனிதனுக்கு
Record details
Title:
வெளிச்ச விதைகள் : புதுக்கவிதை நூல்

மேலும்

கவிஞர் பெஅசோகன் அளித்த நூலை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
23-Dec-2021 4:15 pm

கவிஞர் பெ.அசோகனின் "வெளிச்ச விதைகள்"அனைத்துத் தரப்பு வாசகர்களையும் ஈர்க்கும் ஒரு கவிதைத் தொகுப்பாக அமைந்திருக்கிறது.சமூகத்திலுள்ள பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பது என்பது அரிது.கொள்கை கோட்பாடு கோசங்களால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.எல்லா மாற்றமும் ஒவ்வொரு தனிமனித ஒழுக்கத்தால் மட்டும் நிகழும் என்கிறார்.அன்பு,பாசம்,ஒழுக்கம்,நேர்மை பரிபூரணமாக இருந்தால் போதும் சமூகம் சரியாக இயங்கும் என்று கவிஞர் நம்புகிறார்.தற்கால கவிஞர்கள் படைப்பாளன் யார் என்று வாசகனைத் தேட வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக கவி வடிக்கின்றனர்.கவிஞர் பெ.அசோகன் தன்னை தமிழுக்குள்ளும் மொழிக்குள்ளும் மறைத்துக்கொண்டு வாசகனோட

மேலும்

கவிஞர் பெஅசோகன் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
27-Dec-2021 8:20 pm

பேராசிரியர் முனைவர் நா. பழனிவேலு அவர்கள் வால்மீகி ராமாயணத்தையும், கம்பராமாயணத்தையும் ஒப்பாய்வு செய்து இவர் தந்துள்ள நூல் ஒப்பிலக்கிய ஆய்வு உலகிற்கு ஓர் ஒப்பற்ற பங்களிப்பாகும். இவரது நூல் கம்பனை பல்வேறு கோணங்களில் கண்டுணர்த்துகின்றன. வணிக மையமாகவும், பொறியியல் மையமாகவும் மாறி வருகின்ற இன்றைய வாழ்வியலுக்குக் 'கம்பனில் வாழ்வியல் அறம்' என்னும் கட்டுரை வழிகாட்டும். இன்றைய காலத் தேவைக்கு ஏற்ற வகையிலேயே இவர்தம் பிற கட்டுரைகளும் அமைகின்றன. அரசியல் சிந்தனைகள், நதிநீர் பாதுகாப்பு சிந்தனைகள், மதுவிலக்கு சிந்தனைகள், மகளிர் பாதுகாப்பு சிந்தனைகள், மனித உரிமைகள் என இன்றைய வாழ்வியல் சிக்கல்களுக்குக் கம்பனில்

மேலும்

கவிஞர் பெஅசோகன் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
27-Dec-2021 7:57 pm

நூலாசிரியர் திருமதி பேகம் அவர்கள் பாடலடிகளை நுண்ணிதின் நோக்கி/ நுண்ணாய்வு செய்து இதுவரை அகநானூற்றுப் பாடல்களுக்கு உரை எழுதியோர் கூறாத பல அரிய கருத்துக்களை எல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் தலைவன், தலைவி, தோழி,செவிலி ஆகியோரின் மனங்களைப் படிப்போர்க்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். ஒரு சொல் உணர்த்தும் பல்வேறு பொருட்களைக் குறிப்பிட்டு பொருள் ஒவ்வொன்றினோடும் பாடல் காட்சிகளை அல்லது நிகழ்ச்சிகளை இயைபு படுத்தி புதிய நோக்கில் பாடல் அடிகளுக்கு விளக்கம் தருகிறார். இந்த நெறி சிறப்பாக் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கபிலரின் அகநானூற்றுப் பாடல்களில் அமைந்துள்ள "எடுத்துரைப்பியல்" திறனை நன்கு ஆய்

மேலும்

கவிஞர் பெஅசோகன் அளித்த நூலை (public) உதயசகி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Aug-2019 9:39 pm

வெ.முனீஷின் சுயம்பு கவிதை நூல் விமர்சனம்.
;
-------------------

தமிழில் எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும் " சுயம்பு "என்ற இவ்வார்த்தைக்கு மட்டும்தனித்துவமான ஒரு "தன் நிலை" உண்டு. அத் தன்னிலையை தன்னகத்தே கொண்டு வெளிவந்துள்ள இந்த சுயம்பு சற்று அல்ல மிகப்பெரியதொரு மாறுபட்ட படைப்பு.

"மாறுபட்ட படைப்பு என்று சொல்வது கூட இத்தொகுப்பிற்கு பொருத்தமானதே! ஏனெனில் ஆண் பெண் படைப்புகளிலிருந்து மாறுபட்ட "அரவாணியர்கள்"படைப்பைப் பற்றிப் இத்தொகுப்பு கவிதைகள் முழுவதும் பேசுவதால் "மாறுபட்ட" என்ற வார்த்தை "இரு" வகையிலும் பொருத்தமான "ஒன்றே".இத்தொகுப்பிலுள்ள கவ

மேலும்

கவிஞர் பெஅசோகன் அளித்த படைப்பில் (public) SHAN PAZHANI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2018 3:28 pm

விருப்பத்தோடு
தரும்போது
விஷமும் அமுதாகும்
உண்மையான
நேசத்தில்.!

மேலும்

மிக யதார்த்தமான வரி 02-Jul-2018 3:25 pm
நன்றி 02-Jul-2018 12:10 pm
நெறியான அன்பு மரணத்தை தாண்டிப் பாயும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:09 pm
கவிஞர் பெஅசோகன் - கவிஞர் பெஅசோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2018 3:58 pm

விழுந்த குழந்தை அழுவதில்லை
யாரும் பார்க்காத நேரத்தில்
நான் என் மனதை
ஒளியாக்கிக்கொண்டதனால்
மாற்றான் மனதுக்கு
வெள்ளையடிக்க விரும்பாதவன்
பழி சொற்களை உண்டே
பசியாறியவன்rன்
இழிவுபடுத்தியோரை
தெளிவு படுத்த நேரமில்லை
ஏளனம் செய்தோருக்கு
காரணம் தேடவில்லை
செவிகளிரண்டையும் செவிடாக்கி
சிகரம்நோக்கினேன்
இடறி விழுந்தபோதும்
எனது கையே ஊன்றுகோல்
ஏளனச்சொற்களை
என்னை வாழ்த்தும்
தோரண சொற்களாக்கினேன்
பழி சொற்களை
எனைப்பார்க்கும்
விளிச்சொற்களாக்கினேன்
எறும்பொப்ப முயற்சி
இரும்பொப்ப உறுதி
நாயொப்ப நன்றி
தாயொப்ப பாசம்
தீயொப்ப கோபம்
சேயொப்ப உள்ளம்
இதுவே என் தோற்றம்
இதுவே என்

மேலும்

நெறியான எண்ணங்கள் உள்ள வரை வாழ்க்கை வழிதப்பாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:18 pm
கவிஞர் பெஅசோகன் - கவிஞர் பெஅசோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2018 3:41 pm

உன்
நினைவுகள்
என்னை நனைக்கும்போது
சுட்டெரிக்க
சூரியனுக்கும் சக்தியில்லை

மேலும்

கடைசியில் பிரியர்கள் பிரிவை சந்திக்கும் போது மரணம் கூட விரைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:14 pm
கவிஞர் பெஅசோகன் - கவிஞர் பெஅசோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2018 9:59 pm

சுயநலத்துக்குப் போராடவில்லை
சுவாசத்திற்குப் போராடினாய்
உன்வாழ்க்கைக்குப் போராடவில்லை
உயிர்வாழப் போராடினாய்
நயவஞ்சக நரிக்கூட்டங்கள்
சாதியாலும் இனத்தாலும் மதத்தாலும்
தரம்பிரித்துச்சூழ்ச்சி செய்து
வேட்டையாடிப் பிழைக்கிறது
பிணங்களைத் தின்றவாறே..!
உன் வியர்வை உணவாச்சு
உன் உழைப்பு உடையாச்சு
உன் குருதியை உறிஞ்சிக்குடித்தது
உடல் வளர்த்த ஓநாய்கள்
நெஞ்சினில் சுடச்செய்து
நீதியைக் கொளுத்தியதோ
ஒட்டுப் போட்டு ஆளச்செய்தாய் உனை
வேட்டுப்போட்டு சாகச்செய்தான்
நீ செய்துவிட்டக் குற்றமென்ன
கொள்ளையடித்தாயா
கொலைக்களவு புரிந்தாயா
மல்லய்யா போல் கடன்வாங்கி
மருதேசம் போனாயா..
இல்லை

மேலும்

thanks 27-May-2018 10:18 pm
தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம் 26-May-2018 1:33 pm
கவிஞர் பெஅசோகன் - கவிஞர் பெஅசோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2018 6:25 pm

சேருங்கள் சிங்கங்களே
செந்தமிழ்ச் சொந்தங்களே
பாரததேசத்திலே-தமிழன்
வாழ்ந்திட வக்கில்லையா
பாராண்ட நம்குலத்தோர்-சென்று
சேர்ந்திட திக்கில்லையா
தட்டிடத் தட்டிடத்திறக்கும்-எனும்
தத்துவம் தேவையில்லை
முட்டிடமுட்டிட முளைக்கும்-புதுப்
புரட்சி வேண்டுமிங்கே....
எலும்புத்துண்டுக்கு வாலாட்டும்இந்த
எச்சில் நாய்களை நம்பிநம்பி
தழும்புகண்டாய் நெஞ்சினிலே -இனி
தாமதம் கொள்ளாதே தம்பிதம்பி
பிணமாக நேர்ந்திடினும்
இனம்வாழப் போராடி உன்
நெஞ்சினில் ஏந்தினாய் தோட்டாக்களை

மேலும்

நன்றி 25-May-2018 10:08 pm
உங்கள் முழக்கத்தில் ஒரு ஆதித்தமிழனின் கர்ஜனை காண்கிறோம்..... மீண்டு எழுவோம் உறவே இமையமாய் 24-May-2018 6:03 pm
கவிஞர் பெஅசோகன் - கவிஞர் பெஅசோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2017 10:09 pm

அதிகாலைத் துயில் எழுந்து
அவளை தரிசிக்க காத்திருந்தேன்
என் விழிகளுக்கு விருந்தாக
வெளியே வந்தவள்
ஏங்கி கிடைக்கும் பார்வை
பசியாலே தவிக்கவிட்டு
அரிசி மாவால் கோலம் போட்டாள்
எறும்புகள் பசியாற !

மேலும்

நன்றி 07-Apr-2017 6:33 pm
எறும்பிடம் காட்டும் அன்பு கூட காதலனுக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் வானும் அழுகிறது 07-Apr-2017 11:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (46)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (46)

சித்திரவேல் அழகேஸ்வரன்

சித்திரவேல் அழகேஸ்வரன்

கொழும்பு - இலங்கை
சிவா

சிவா

Malaysia
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (46)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
TP தனேஷ்

TP தனேஷ்

Suthumalai .Jaffna .
மேலே