ஆபிரகாம் வேளாங்கண்ணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆபிரகாம் வேளாங்கண்ணி
இடம்:  அரியலூர் திருக்கை
பிறந்த தேதி :  28-May-1956
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Mar-2016
பார்த்தவர்கள்:  1877
புள்ளி:  560

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவது தினமணியில் தினமலரில் தமிழ்கவிதையில் மற்றும் எழுத்து.காமில் தற்போது எழுத ஆரம்பித்து இருக்கிறேன்

என் படைப்புகள்
ஆபிரகாம் வேளாங்கண்ணி செய்திகள்
ஆபிரகாம் வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2021 9:05 pm

அநியாயம்

கண்டதை படிப்பவன்
பண்டிதன் ஆகிறான்
வாஸ்தவம் ||

கண்டதை தின்பவன்
ஆரோக்கியமாக வாழ்கிறானா?
இல்லவே இல்லை ||

கண்டவளை காதலிக்கிறவனை
மன்மதன் என்று அல்லவா
அழைக்கிறோம் || அஃதே

கண்டவனை காதலிக்கிறவளை
விலைமாது என்றல்லவா
அழைக்கிறது  சமூகம் ||

மன்மதி என்றழைப்பதில்லையே  
அநியாயமாக இல்லையா?||
ஆணுக்கொரு நீதி அதுவேன்
பெண்ணுக்கொரு நீதி தகுமோ ||

உள்ளதை உள்ளபடி சொல்ல வந்த
உள்ளத்தை பழி சொல்லாதே வாழ
வழி சொல் நலமாகும் ||

கரும்பை விளைவிப்பது நாமாக
இருப்பினும் அத்துள் மதுரம்
வைப்பது நாமல்லவே||

மலர் கொடியை வளர்ப்பது நாமாக
இருப்பினும் மலருள் வாசம்
வைப்

மேலும்

ஆபிரகாம் வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2021 8:43 pm

சக்தி பக்தி

மோட்சம் கிடையாது
நரகம் கிடையாது
என்றால்
பிறப்பும் கிடையாது 
இறப்பும் கிடையாது 

உண்மை கிடையாது
பொய்யும் கிடையாது
என்றால்
நீதி மன்றம் கிடையாது
அநீயாயமும் கிடையாது

நோயும் கிடையாது
நொடியும் கிடையாது
என்றால்
மருத்துவர் கிடையாது
மருந்தும் கிடையாது

பசிப்பும் கிடையாது
புசிப்பும் கிடையாது
என்றால்
உழைப்பும் கிடையாது
அலுப்பும்  கிடையாது

துக்கம்  கிடையாது
ஆனந்தம் கிடையாது
என்றால்
உலகமும் கிடையாது
உயிரினமும் கிடையாது

மூலனும் கிடையாது
ஞாலமும் கிடையாது
என்றால்
சக்தியும் கிடையாது
பக்தியும் கிடையாது

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம

மேலும்

ஆபிரகாம் வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2021 4:55 pm

அருந்தாதே

அருந்தத் தெரிந்த மனமே
உனக்கு திருந்தத் தெரியாதா
திருந்த மறந்த மனமே
உனக்கு வருந்தத் தெரியாதா
மனமே வருந்தத் தெரியாதா

உறவை தெரிக்கத்துறந்த  மனமே
உனக்கு அணைக்கத் தெரியாதா
நிறக்க வைக்க இயலா மனமே
உனக்கு சிறக்கத்  தெரியாதா
மனமே வழிவகுக்க தெரியாதா

வரம்பு மீறவுன்  நரம்பு தளராதா
நரம்பு தளரும் போது மனமே
தேகம் இயங்க மறுக்காதா
சேதி தெரியாதா நாதியற்று
மனமே தெருவில் கிடக்காதா

குடும்ப தரங்கள்  குறையாதா
அரசுக்கு வருமானம் குறையும்
இழப்புகள்  இரு தரப்பாகிறதே
மனமே உனக்கு தெரியாதா
உணர்ந்து மாறிட இயலாதா

யாருக்கு? லாபம் தெரியாதா
வந்தோம் வாழ்ந்தோம் சரிதான

மேலும்

ஆபிரகாம் வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2021 2:59 pm

ஆணிவேர்

தாத்தா பாட்டிக்கு, 
பாட்டி தாத்தாவுக்கு

அப்பா அம்மாவுக்கு
அம்மா அப்பாவுக்கு

அம்மா குழந்தைக்கு
குழந்தை அம்மாவுக்கு

அப்பா குழந்தைக்கு
குழந்தை அப்பாவுக்கு

சகோதரியர் சகோதரருக்கு
சகோதரர் சகோதரியருக்கு

காதலியர் காதலர்க்கு
காதலர் காதலியர்க்கு

ஒரு வேண்டுகோள் கேளீர்
யாரும் யாருக்கும் முத்தம்

கொடுத்துக் கொள்ளாதீர்கள்
உலகின் உயிர்கள் குறைகிறது

நாமும் குறைந்து விடக் கூடாது
பெருக்கெடுத்து வாழ்ந்திடவே

சற்று கடைபிடித்திட்டு தொற்றின்
ஆணிவேரை அறுத்திடுவோம்

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

மேலும்

ஆபிரகாம் வேளாங்கண்ணி - ஆபிரகாம் வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2020 2:29 pm

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு
" இனிமேல் மழைகாலம்"
கவிதைமணி : நன்றி
○○○

முக்காலத்து ள்ளொரு காலம்
அக்கால மினி யெக்காள மிடும்
விழாவா மழைத்துளி வந்து விழவா
உழவா விரைந்து எழுந்து உழவா

நேற்று அழுதோம் இன்று சிரிப்போம்
"இனிமேல் மழைகாலம்" நீயோ களம் செதுக்கினாய் தானியம் குவிக்க ஒரு
குளம் வெட்டினாயா நீரை சேமிக்க

இன்று சிரிப்போம் நாளை அழவோ
குறைக்கூறாமல் உதவக்கோறாமல்
நீருக்கு குறைவில்லையென காமிக்க
இம்முறை நீரை சேமித்து காட்டுவோம்

தாயில்லாது அநாதையாய் வாழலாம்
வாயில்லாது ஊமையாய் வாழலாமொரு
நோயில்லாது நாம் வாழும் போதிலும்
மழை நீரில்லாது வாழ்திட லாகுமோ

°°இனிமேல் மழைகாலம

மேலும்

மகிழ்ச்சி கவிஞரே 06-Aug-2020 10:54 am
கவிதை மழையாய் கொட்டுகிறது . .. மழைக்கலாமே !! 05-Aug-2020 2:59 pm
ஆபிரகாம் வேளாங்கண்ணி - ஆபிரகாம் வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2020 2:33 pm

கவிதைமணி தந்த தலைப்பு
“ அன்பே சிவம் “
கவிதைமணி நன்றி
○○○
அன்பிலா வித்தை குழிதோண்டி
ஊன்றி இழிவுநீரூற்றி வளர்த்து

கோடரியால் வெட்டிச் சாய்த்து
தீமூட்டி குளிர் காயும் ஜகமிதிலே அன்பில்லையாம் அஃதே அத்துள்
சிவமு மில்லையெனக் கண்டார்

ஒருவர் நற்செயலினைக் கண்டு
அகமகிழ்ச்சி கொண்டோ மென்று முகமலர்ச்சியில் காணும் போதவ் வன்பேசிவ மென்றுத் தோன்றுமே

நன்மையாவும் அன்பிலிருந்தே
துளிர்விடு மவ்வன்பே சிவமாகும்
தீமையாவும் அன்பின்மையாலே
நிகழ்பவை சிவமின்றி சவமாகும்

அன்பை இழந்து வாழும் வாழ்க்கை
சிவமில்லா தொரு நரகமென்பார்
அன்பில் தோய்ந்த வாழ்க்கையன்
பில் சிவம் கலந்த மோட்சமேயாம்

ஆப

மேலும்

நன்றி நன்றி நன்றி கவிஞரே 06-Aug-2020 10:53 am
நன்மையாவும் அன்பிலிருந்தே னாரே துளிர்விடு மவ்வன்பே சிவமாகும் ... மெய்யான வார்த்தைகள் . வாழ்த்துக்கள் கவிஞரே . 05-Aug-2020 2:55 pm
ஆபிரகாம் வேளாங்கண்ணி - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2020 11:46 pm

நானும் டாக்டர்தான்டா. நானும் டாக்டர்தான.
@@@@@
யாருடா அங்க துள்ளிக்குதிச்சுட்டு "நானும் டாக்டர்தான்டா"ன்னு சொல்லிட்டு வர்றது.
@@@@@
அட அவன் நம்ம ரமேசுடா. நம்மகூட பள்ளிலே படிச்சானே அந்த ரமேசு.
@@@@
அவன் எந்த மருத்துவக்கல்லூரில படிச்சான்?
@@@@@
உனக்கே தெரியும்.கொஞ்ச வசதியானவன். மேல்நிலை வகுப்பில அவன் வாங்கிய மதிப்பெண் அறுபது சதவீதம். நாம தாத்தா காலத்து முப்பது சதவீதத்துக்குக்கூட சமம் இல்லை. எப்பிடியோ பணத்தைக் கட்டி ஒரு தனியார் மருத்துவக்கல்லூரில சேந்தான்.
@@@@@@
ஏன்டா அதிக தொண்ணூறு சதவீதம் வாங்கி தேர்ச்சி பெற்ற சிலர்கூட சில பாடங்களில பல்டி அடிச்சு படிப்பு முடியறதுக்குள்ள எல்லாப் பா

மேலும்

மிக்க நன்றி கவிஞரே 22-Apr-2020 1:08 am
அருமை சகோ 21-Apr-2020 6:07 pm
ஆபிரகாம் வேளாங்கண்ணி - ஆபிரகாம் வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2019 9:39 pm

சுந்தருக்காக பெண் பார்க்க அப்பா அம்மா சகோதரர் சகோதரிகள் இன்னும் வேண்டப்பட்ட உறவினர் ஒன்றாக சென்றார்கள்

பெண் எப்பவும் பார்க்காத சந்தோஷத்தை விட அன்று எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக அவள் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியதை காண முடிந்தது

" இன்னும் மாப்பிள்ளையை பார்க்கவே இல்லை, காட்டவும் இல்லை, அதற்குள் இவ்வளவு பெரிய ஆனந்தமா ஒருவேளை மாப்பிள்ளை ஏற்கனவே வலைவிரித்து அதில் சிக்கி கொண்டு விட்டவளோ, இல்லை ஒருவேளை மறைமுக காதலா" பக்கத்து வீட்டு சிநேகிதி

"ச்சா...ச்சா...அந்த மாதிரி எச்ச பொருக்கி புத்தி யெல்லாம் ஏங்கிட்ட கெடையவே கெடையாது, நான் நேத்தைக்கும் சைவம் தான் இன்னைக்கும் சைவமே தவிற அசைவம் கிடையாது " ஜானகி

மேலும்

எனதன்பு நண்பருக்கு முதற்கண் எனது குடியரசு தின வாழ்த்துக்கள் மற்றும் கதை பாராட்டிற்கு எனது மிகுந்த நன்றி சமர்ப்பணம் நண்பரே 26-Jan-2019 11:52 pm
கதை இலக்கியம் கற்பனை நிகழ்வுகள் போற்றுதற்குரிய படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் கதை இலக்கிய பயணமும் நம் இலக்கிய நட்புப் பயணமும் ! 26-Jan-2019 10:11 pm
ஆபிரகாம் வேளாங்கண்ணி - இதயம் விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2016 12:51 pm

"நண்பர் முகம்மது சர்பானின் எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் என்ற எண்ணத்தின் வண்ணத்தில் விளைந்து பதிவிட்டது இந்தப் பதிவு "






தங்க நிலவென மேனி கொண்டவள்
அங்கம் ஆதவன் தோற்றம் கொண்டவன்
எங்கோ?... இமை திறந்த விழிகள்
இங்கே சந்தித்து கொண்டது......


மங்கை ஏவும் மான்விழி அம்புகளும்
சிங்கம் வீசும் கயல்விழி கத்திகளும்
காதலெனும் ஒற்றைக் கோட்டில் - மோதல்
கொண்டு மோகம் கொண்டதே......


முத்தம் பகிராது பாவை இதழ்கள்
முகம் வாங்காது இதழ்தரும் காயங்கள்
பாடிப் பறந்தப் பறவைகளோ?... - கூடித்
திரிந்தது விரல்களின் நேசத்திலே......


கூவம் ஆற்றினை சுத்தம் செய்திடலாம்
பாவம் செய்திடும் சாதிகளை முடி

மேலும்

தங்கள் கருத்தில் மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் அன்பரே .... 25-Jul-2016 1:28 pm
பொருள் நயம் தன்னில் பயம் கொண்டு தாம் பொருத்திய இடங்களில் பொருந்தி நிற்பதால் ரசனைக்கு குறைவில்லை நண்பரே 25-Jul-2016 11:47 am
தங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே ..... 01-Jul-2016 10:34 am
தங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் அய்யா..... 01-Jul-2016 10:33 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
அருண்

அருண்

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (13)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே