பாலாஜி காசிலிங்கம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாலாஜி காசிலிங்கம்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  10-Oct-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Oct-2012
பார்த்தவர்கள்:  631
புள்ளி:  91

என்னைப் பற்றி...

நல்ல தமிழ் படைப்புகளை படிக்கவும் உருவாக்கவும் விரும்பும் கடைநிலை தமிழ் விரும்பிகளில் ஒருவன்...

என் படைப்புகள்
பாலாஜி காசிலிங்கம் செய்திகள்
பாலாஜி காசிலிங்கம் - Kநிலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2022 11:31 pm

அணுவில் ஆயுதம் கண்டு
ஆகாயம் வென்ற
அக்னிச் சிறகுகாரர்

மேலும்

நன்றி 24-Oct-2022 5:34 am
அருமை அப்துல் கலாம் போற்றல் 23-Oct-2022 10:53 pm
பாலாஜி காசிலிங்கம் - உமாவெங்கட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2022 7:08 pm

தடம் மாறினால் தண்டிக்கப்படுவது
நாக்கு மட்டுமல்ல,
மனிதனும்தான்...

மேலும்

உண்மை 21-Oct-2022 3:19 pm
பாலாஜி காசிலிங்கம் - இரமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2022 2:20 pm

உன் பசுமையான!
இளம்பச்சை!
சிரிப்பில்!
பசியாறுகிறேன்!
..... இவள் இரமி..... ✍️

மேலும்

ஆம். நன்றி 19-Oct-2022 7:07 pm
அருமை சொல்லும் பொருளும் பச்சை வயல் சிரிப்பில் நம் பசியாறும் உண்மை 19-Oct-2022 9:18 am
பாலாஜி காசிலிங்கம் - உமாவெங்கட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2022 8:26 pm

எனக்குத் தெரியாது
நம் உயிர் ஆணா பெண்ணா என்று..
ஆணாக இருந்தால்
பார்ப்பதற்கு முன்பிருந்தே
அணுஅணுவாய் நான் ரசித்து விரும்பும்
இரண்டாம் ஆடவன்...
பெண்ணாக இருந்தால்
என்னைப்போல் நான் வளர்க்கப் போகும்
என் அன்னையானவள்...

மேலும்

பாலாஜி காசிலிங்கம் - உமாவெங்கட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2022 7:35 pm

தாயின் அன்பை
படித்து அல்ல
உணர்ந்தே அறியவேண்டும்
என்பதற்காகத்தான்
தனியே ஒரு அதிகாரத்தை
அமைக்காமல் விட்டாரோ
வள்ளுவர்???

மேலும்

உண்மை 13-Sep-2022 11:37 am
பாலாஜி காசிலிங்கம் - உமாவெங்கட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2022 7:35 pm

தாயின் அன்பை
படித்து அல்ல
உணர்ந்தே அறியவேண்டும்
என்பதற்காகத்தான்
தனியே ஒரு அதிகாரத்தை
அமைக்காமல் விட்டாரோ
வள்ளுவர்???

மேலும்

உண்மை 13-Sep-2022 11:37 am
பாலாஜி காசிலிங்கம் - உமாவெங்கட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2022 2:24 pm

சிறு வயது தோழியாய் என்றுமே என்னிடம் அன்பு பாராட்டும் அன்னை..
சிறு பிள்ளையாய் எப்பொழுதும் என்னிடம் சண்டையிடும் தந்தை...
இதுவரையிலும் என்னைப் போட்டுக்கொடுத்தும், எனக்காக எதையும் விட்டுக்கொடுத்தும் வாழும் தமக்கை...
நான் எப்பொழுது உறங்கினாலும், எப்பொழுது எழுந்தாலும் கேள்வி கேட்காத என் படுக்கையறை...
சாப்பிடுவதற்கு மட்டுமே எட்டிப்பார்க்கிறாள் என்று திட்டாத என் வீட்டு சமையலறை...
இதுவரையிலும் இவளைப் பார்த்ததே இல்லை என்று புலம்பாத - நான் கோலமிடாத என் வீட்டு வாசல்...
சோகத்திலும் சுகத்திலும் எனக்காக காத்திருந்த என் அன்னையின் மடி...
இனி எதுவுமே என்னுடன் இருக்கப்போவதில்லை..
நான் பிறந்தது முதலே பார்

மேலும்

அருமை 12-Sep-2022 10:43 am
பாலாஜி காசிலிங்கம் - Kநிலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2022 12:09 am

இப்படிக்கு,
சைக்கிள்

அடுத்தவேளை உணவுக்காக
நாளிதழ் போடுபவனாய்
நாள்தோறும் வந்து
உன் மிதி சுமந்தவன்

எதிர்காற்று சுழன்றடிக்க
உன் மனைவியோடு செல்ல
தடுமாறிய நேரங்களில்
தரையிரங்காமல்
பாலமேற உதவியவன்

உன் மகனைப் பள்ளிக்கு அனுப்ப
அடகுக்கடையில் நின்று
அவசரத்திற்கு உதவியவன்

உன் வாண்டுகள் மகிழ்ச்சியாக
சுழற்றி விளையாட
கல்லும் முள்ளும் குத்தி
காலுடைந்து நின்றவன்

இதற்காக இல்லையென்றாலும்
உனது தந்தையின்
நினைவாக நிறுத்தி இருக்கலாம்

எப்படி மனம் வந்தது
புல்லட் வாங்கிய பூரிப்பில்
பழைய இரும்பு வியாபாரியோடு
என்னை வழியனுப்ப
இப்படிக்கு,
சைக்கிள்.

மேலும்

நன்றி 08-Sep-2022 11:50 am
அருமை 08-Sep-2022 9:43 am
பாலாஜி காசிலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2020 9:08 pm

உலகை அறிந்திடு..
உழைப்பை உணர்ந்திடு..
பசியை போக்கிடு..

நாளை நமக்காய்
இருக்கும்
என எண்ணிடு..!!!

மேலும்

அருமை 🤝 08-Sep-2022 6:15 pm
பாலாஜி காசிலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2020 7:39 pm

வானும் மேகமும்
கொடுத்த கடன்..!!!

நிலமும் நீரும்
கொடுத்த கடன்..!!!

கடலும் கரையும்
கொடுத்த கடன்...!!!

நீயும்
உன்
நிழலும்
எனக்காக
கொடுத்த கடன்...!!!

என்ன அந்த கடன்?
எதற்கு அந்த கடன்?
யாரிடம் வாங்கிய கடன்?
யாருக்கு கொடுத்த கடன்?

காதலுக்காக கொடுத்த கடனோ..!!!
இல்லை இல்லை
உன்னுடனான
என்
நட்பிற்கான கடன்...!!!

யாரிடமும் வாங்கக்கூடிய
கடன்.
யாருக்கும் கொடுக்கக்கூடிய
கடன்..
அது
நட்பு மட்டும் தான் அன்றோ!!!!

மேலும்

அருமை 11-Sep-2022 12:51 am
நட்பு கடன் அல்ல. இறைவன் தந்த பரிசு. எல்லோருக்கும் கிடைப்பதில்லை. வாழ்த்துக்கள் 02-Jul-2020 8:02 pm
பாலாஜி காசிலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2020 11:28 pm

என் மேல் உனக்கென்ன
கோபம்..!!!
நான் உன்னை உயிரென
நினைப்பதாலா..!!!

என்
உயிரும் நீ..
உடலும் நீ...
காதலும் நீதானடி..!!!

கண்ணே கனவில்
மட்டுமல்ல
கண்ணிமையிலும்
கருவிழியிலும்
நீ மட்டும் தானடி..!!!

மேலும்

பாலாஜி காசிலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2018 11:22 pm

கஜாவில் கலங்கிய மண்ணின்
மக்கள் முகம்...

மானிடராய் பிறந்து மண்ணில்
வாழும் கடவுள்
நமக்கு சோறிட்டு நம்மை
வாழ வைத்த மனித கடவுள்
உழவர்கள்...!!!
உணவுக்கும் உடைமைக்கும்
வடிக்கும் கண்ணீரில்...
உறங்கிட மறுத்து கலங்கிடும் நம்
கண்கள்...!!!

வெற்றியின் வழியில் விண்ணின்
விஞ்ஞானிகள் முகம்

பால்வெளியுடன்
காதலில் கரைந்து விண்ணில்
இருந்து மண்ணை காக்க
சென்ற செயற்கை கோள்...!!!
நம் மண்ணின் பெருமைகளை
அகில உலகமும்
அண்ணாந்து பார்க்கும்,..!!!

விண்ணை பார்த்து
பெருமை கொள்ளும் முன்னர்
நம் மண்ணை மதித்து
போற்றி
மனித கடவுள்களை
காத்திடுவோம்..!!!
கரம் கொடுங்கள் மக்களே..!!

மேலும்

இன்னும் எடுத்துச் சொல்வோம் நமது எண்ணங்களை. பசியின் வயிற்றுக்கு பாடுபட்டு உணவூட்டும் நம் பாரத தாய் பெற்றெடுத்த தலைமகன்களாம் விவசாய உறவுகளைக் காத்திடுவோம். அருமை நட்பே. தொடரட்டும் உங்களின் அழகிய பணி. 19-Dec-2018 8:20 pm
ஆம்....உண்மையான பதிவு...கரம் கொடுத்து கஜா புயலின் சுவடை அழிப்போம்.... 01-Dec-2018 5:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (95)

user photo

இராசு

விருதுநகர்
Kநிலா

Kநிலா

முகவூர்
user photo

இரமி

வேலூர்
user photo

உமா சுரேஷ்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (107)

vaishu

vaishu

தஞ்சாவூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (99)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பிரபு ராஜா மு

பிரபு ராஜா மு

தஞ்சாவூர்
மேலே