eonaman - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : eonaman |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 0 |
விண்ணவர் போற்றும் மண்ணவர் கொண்டாடும்
விடிவெள்ளி காரிகையாய் காலைப் புலர்ந்ததின்று
உழுதோர் உயர்வுதனை சிறப்புடனே விளக்கவிங்கு
நற்பொழுதாய் வந்தாளே வருகவென் தைமகளே!
காரிய தடைகளும் முடிவில்லா பகைகளும்
விலகி நின்றே வழி கொடுக்கும்
தைப் பிறக்கும் நன்னாளாம் இன்னாள்
எண்ணமது ஈடேற்றும் நேரம் நல்கு
ஆதவன் கரம்பார்த்து அசைந்தாடும் பூவினமே
புதுப்பானை பொங்கலிட்டு பச்சரிசி பால்பொங்க
நற்றமிழ் நயம்போல் செங்கரும்புஞ் சேர்ந்தினிக்க
கதிரோங்க செய்தவுன்னை கைகூப்பி வணங்குகிறோம்
சேற்றில் கால்பதித்து வியர்வை உரமுற்றி
சோற்றில் கைவைக்கச் செய்தாயே தோழா
உழவன் கதிரறுக்க பசிமறந்தோர் பலருண்டிங்கு
உ
அன்னை தந்தையே,
ஆசிரிய பெருந்தகையே
நன் மக்களின் நலம்பிரும்பியே
நீவிர் கற்பித்தது வாழ்வியலோ!
சிரிக்க சிரிக்க பேசினாலும்
சுய சிந்தனை வளர்த்தீர்
ஆளுமை செலுத்தினாலும்
உயர பறக்க வைத்தீர்
பண்புகள் விதைக்க செம்மையானோம்
பழக்கங்கள் விதைக்க சவுமியனானோம்
பாசம் விதைக்க மனிதனானோம்
பழகிய நட்பால் நண்பர்களானோம்
என்னை செதுக்கிய சிற்பியே
வாழ்வின் விடிவெள்ளி ஆனவரே
நலங்கள் பல பெற்று
பல்லாண்டு நீவீர் வாழ்கவே
மானிடர் செழிக்க
மலரும் தமிழ் ஆண்டே
நம்பிக்கை ஊற்று
நாடெங்கும் நடமாட விடு
மனிதம் போற்றும்
மனங்கள் மலரச் செய்
அன்பில் திளைக்கும்
அகிலம் உருவாக்கிக் கொடு
மதியழகில் மகுடஞ்சூடி
மதபேதம் ஒழியச் செய்
முளைக்கும் விதைக்கு
முழு வீரியம் கொடு
சுட்டெரிக்கும் சூரியன்
சுகமாக வருட விடு
இதமான தென்றலில்
இளைப்பாற நேரம் கொடு
மறவாமல் மாரி
மனதார பொழியச் செய்
நன்றிகள் சொல்ல
நாவிற்கு பழக்கிக் கொடு
பலமான நட்பு
பழுதாகாமல் பார்த்துக் கொள்
வளங்கள் யாவும்
வரமாக வாய்க்கச் செய்
நின்வரவால் நாடெங்கும்
நித்தம் நலம் கூட்டிடு
தமிழர் அனைவர்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
கிளியும் காக்கையும் காதல் கொண்டன
ஊடகங்களில் தான் எத்தனை ஆதரவு
சிறுபட்சி முதல் பருந்து வரை
பறவைக் கூட்டமெல்லாம் ஆரவாரம் செய்தன
ஆசி கூறி ஒப்புதல் அளித்தன
சிறுத்தையும் சிங்கமும் காதல் கொண்டன
முகநூலில் தான் எத்தனை பகிர்வுகள்
சுண்டெலி முதல் யானை வரை
தள்ளி நின்று ஆசீர்வாதம் செய்தன
வனமே வந்து வாழ்த்துக்கள் சொன்னது
பஞ்சநாகமும் கீரியும் காதல் கொண்டன
கண்கொட்டாமல் ரசித்தவர் எத்தனை பேர்!
ஊர்வன வெல்லாம் உடனிருந்து ஆதரித்தது
பாம்புகள் எல்லாம் படம் எடுத்து
காதலுக்கு பச்சைக் கொடி காட்டின
வண்ணத்துபூச்சியும் வெட்டுக்கிளியும் காதல் கொண்டன
அதில்தான் எத்தனை ஆனந்தம் பார்த்தீரோ!
சில்வண்டு முத