eonaman - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  eonaman
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Feb-2016
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  0

என் படைப்புகள்
eonaman செய்திகள்
eonaman - அருண்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2020 3:30 am

விண்ணவர் போற்றும் மண்ணவர் கொண்டாடும்
விடிவெள்ளி காரிகையாய் காலைப் புலர்ந்ததின்று
உழுதோர் உயர்வுதனை சிறப்புடனே விளக்கவிங்கு
நற்பொழுதாய் வந்தாளே வருகவென் தைமகளே!

காரிய தடைகளும் முடிவில்லா பகைகளும்
விலகி நின்றே வழி கொடுக்கும்
தைப் பிறக்கும் நன்னாளாம் இன்னாள்
எண்ணமது ஈடேற்றும் நேரம் நல்கு

ஆதவன் கரம்பார்த்து அசைந்தாடும் பூவினமே
புதுப்பானை பொங்கலிட்டு பச்சரிசி பால்பொங்க
நற்றமிழ் நயம்போல் செங்கரும்புஞ் சேர்ந்தினிக்க
கதிரோங்க செய்தவுன்னை கைகூப்பி வணங்குகிறோம்

சேற்றில் கால்பதித்து வியர்வை உரமுற்றி
சோற்றில் கைவைக்கச் செய்தாயே தோழா
உழவன் கதிரறுக்க பசிமறந்தோர் பலருண்டிங்கு

மேலும்

Well thought and nicely written, best wishes 15-Jan-2020 1:03 pm
eonaman - அருண்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2019 11:34 am

அன்னை தந்தையே,
ஆசிரிய பெருந்தகையே
நன் மக்களின் நலம்பிரும்பியே
நீவிர் கற்பித்தது வாழ்வியலோ!

சிரிக்க சிரிக்க பேசினாலும்
சுய சிந்தனை வளர்த்தீர்
ஆளுமை செலுத்தினாலும்
உயர பறக்க வைத்தீர்

பண்புகள் விதைக்க செம்மையானோம்
பழக்கங்கள் விதைக்க சவுமியனானோம்
பாசம் விதைக்க மனிதனானோம்
பழகிய நட்பால் நண்பர்களானோம்

என்னை செதுக்கிய சிற்பியே
வாழ்வின் விடிவெள்ளி ஆனவரே
நலங்கள் பல பெற்று
பல்லாண்டு நீவீர் வாழ்கவே

மேலும்

Nice and thoughtful, well written 06-Sep-2019 7:25 am
eonaman - அருண்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2019 7:15 pm

விழித்தேடலின் விடையாய்
இமைகளுக்குள் நிறைந்தாய்
கரைந்தோடும் வண்ணமாய்
மனதினில் உறைந்தாய்

காலங்கள் கடந்தும்
சுகமான சுமையாய்
என்று முன்நினைவுகள்
நெஞ்சை நிறைக்கும்

கண்காணா தேசத்தில்
எங்கிருந்தாலும் நலமாய்
இன்முகம் கோணாமல்
இனிதே வாழ்க!

மேலும்

Nice and thoughtful 05-Aug-2019 8:29 am
eonaman - அருண்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2019 11:13 pm

மானிடர் செழிக்க
மலரும் தமிழ் ஆண்டே
நம்பிக்கை ஊற்று
நாடெங்கும் நடமாட விடு
மனிதம் போற்றும்
மனங்கள் மலரச் செய்
அன்பில் திளைக்கும்
அகிலம் உருவாக்கிக் கொடு
மதியழகில் மகுடஞ்சூடி
மதபேதம் ஒழியச் செய்
முளைக்கும் விதைக்கு
முழு வீரியம் கொடு
சுட்டெரிக்கும் சூரியன்
சுகமாக வருட விடு
இதமான தென்றலில்
இளைப்பாற நேரம் கொடு
மறவாமல் மாரி
மனதார பொழியச் செய்
நன்றிகள் சொல்ல
நாவிற்கு பழக்கிக் கொடு
பலமான நட்பு
பழுதாகாமல் பார்த்துக் கொள்
வளங்கள் யாவும்
வரமாக வாய்க்கச் செய்
நின்வரவால் நாடெங்கும்
நித்தம் நலம் கூட்டிடு
தமிழர் அனைவர்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

மேலும்

Thanks for your feedback 14-Apr-2019 9:17 pm
ஐயா உங்கள் கருத்துதிற்கும் அறுமுகத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் கவிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். 14-Apr-2019 9:14 pm
ஐயா உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. 14-Apr-2019 9:11 pm
முளைக்கும் விதைக்கு முழு வீரியம் கொடு...... வரவேற்போம் நலம் பெற. ,,,,, 14-Apr-2019 1:48 pm
eonaman - அருண்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2016 6:50 pm

கிளியும் காக்கையும் காதல் கொண்டன
ஊடகங்களில் தான் எத்தனை ஆதரவு
சிறுபட்சி முதல் பருந்து வரை
பறவைக் கூட்டமெல்லாம் ஆரவாரம் செய்தன
ஆசி கூறி ஒப்புதல் அளித்தன

சிறுத்தையும் சிங்கமும் காதல் கொண்டன
முகநூலில் தான் எத்தனை பகிர்வுகள்
சுண்டெலி முதல் யானை வரை
தள்ளி நின்று ஆசீர்வாதம் செய்தன
வனமே வந்து வாழ்த்துக்கள் சொன்னது

பஞ்சநாகமும் கீரியும் காதல் கொண்டன
கண்கொட்டாமல் ரசித்தவர் எத்தனை பேர்!
ஊர்வன வெல்லாம் உடனிருந்து ஆதரித்தது
பாம்புகள் எல்லாம் படம் எடுத்து
காதலுக்கு பச்சைக் கொடி காட்டின

வண்ணத்துபூச்சியும் வெட்டுக்கிளியும் காதல் கொண்டன
அதில்தான் எத்தனை ஆனந்தம் பார்த்தீரோ!
சில்வண்டு முத

மேலும்

அருமையான எண்ணம் !!! சரி தான் அன்பே உலகத்தின் அஸ்த்திபாரம் அந்த அஸ்த்திபாரத்தை எதிர்த்தால் உலகம் இயங்குவது எங்கனம் !!! 21-Feb-2016 7:07 pm
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 19-Feb-2016 6:30 pm
நன்றி மு. ரா. அவர்களே 19-Feb-2016 6:27 pm
உங்கள் ஊக்கதிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி பழனி குமார் அவர்களே 19-Feb-2016 6:26 pm
மேலும்...
கருத்துகள்

மேலே