கவிஞர் இரா இரவி - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவிஞர் இரா இரவி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  12-Nov-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Dec-2010
பார்த்தவர்கள்:  6219
புள்ளி:  3351

என்னைப் பற்றி...

கவிஞர் இரா .இரவி,
48 வடக்கு மாசி வீதி மதுரை .
625001.தமிழ்நாடு .இந்தியா .அலைபேசி 9842193103 மின் அஞ்சல் eraeravik@gmail.comrnஇணையம் www.kavimalar.com
வலைப்பூ www.eraeravi.blogspot.com
முகநூல் https://www.facebook.com/rraviravi
POET R.RAVI 48 NORTH MASI STREET ,rnMADURAI 625001,TAMILNADU.INDIA CELL 9842193103 email eraeravik@gmail.com
தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராக பணியாற்றி விருப்ப ஒய்வு பெற்றுவிட்டார்.இவரது நூல்கள் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் அரங்கேற்றமாகி உள்ளன
."இரா இரவி அவர்களின் ஹைக்கூ கவிதைகளில் பொருண்மைகள் " என்ற தலைப்பில் உதவி ப்பேராசிரியர் வசுமதி அவர்கள்முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
நெறியாளர் பேராசிரியர் முனைவர் சுமதி.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.
26.01.1992 குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் இவருக்குச் சிறந்த அரசுப்பணியாளருக்கான விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
கோடை பண்பலை வானொலியில் கவிதைகள் ஒளிபரப்பாகின .
‘தமிழ்த்தேனீ” பேராசிரியர் இரா. மோகன் அவர்களை நடுவராகக் கொண்ட விழிப்புணர்வுப் பட்டிமன்றங்களில் இரவி பேசினார். பொதிகை உள்ளிட்ட பலவேறு தொலைக்காட்சிகளில் இவரது உரைகள் ஒளிபரப்பாகி உள்ளன.மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவிதை பாடினார் .மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலராக இருந்து செயல்பட்டு வருகிறார் .
இவரது நேர்காணல்கள், ‘பொதிகை’, ‘ஜெயா’, ‘கலைஞர்’ முதலான தொலைக்காட்சிகளி ஒளிபரப்பாகி உள்ளன.
இரவி இதுவரை 27 நூல்கள் எழுதியுள்ளார்.
‘ஹைக்கூ திலகம்’, ‘கவியருவி’, ‘கவிமுரசு’ உள்ளிட்ட விருதுகளைப் பல்வேறு இலக்கியக் கழகங்கள் இவருக்கு வழங்கி உள்ளன.
இவரது ஹைக்கூ கவிதைகள் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி, திருச்சி புனித சிலுவை பெண்கள் கல்லூரி, விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.
பல இலட்சம் வாசகர்கள் பார்த்த kavimalar.com, eraeravi.blogspot.in உள்ளிட்ட இணையங்களின் ஆசிரியராக இருந்து, இரவி கவிதை, கட்டுரை, நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார், ‘RRAVIRAVI’ என்ற முகநூலிலும் எழுதி வருகிறார்.
உலகின் புகழ்பெற்றத் தமிழ் இணையங்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் தேனீ இரா.மோகன் தொகுத்து, சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ நூலில் இவரது 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை எழுத்தாளர் சங்கம் இவரது ‘ஹைக்கூ கவிதைகள்’ நூலைச் சிறந்த நூலாகத் தேர்வு செய்தது. பரிசும் பாராட்டுச் சான்றிதழ்களும் புதுவை ஆளுநர் முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் புதுவை பல்கலைக் கழகத் துணைவேந்தரால் வழங்கப் பெற்றன.
இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலகளாவிய முறையில் நடத்திய கவிதைப் போட்டியில் இரவி இருமுறை பரிசு பெற்றுள்ளார்.
மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆண்டு விழாவில் முனைவர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் இருந்து இரவி ‘வளரும் கலைஞர்’ விருதினைப் பெற்றுள்ளார்.
கணினித்தமிழ்ச் சங்கம் மதுரையில் நடத்திய ‘கணிப்பொறித் திருவிழாவில் ‘தமிழும் அறிவியலும்’ என்ற தலைப்பில்லான கவிதைப் போட்டியிலும் இரவி பரிசு பெற்றுள்ளார்.
‘இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகளில் பன்முகப் பார்வை’ என்ற தலைப்பில் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் க.செல்வக்குமார் (பார்வையற்றவர்) ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி உள்ளார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முனைவர் மு. பாண்டி அவர்களை நெறியாளராகக் கொண்டு செல்வன் லெ.சிவசங்கர் தமது ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டத்திற்காக ‘கவிஞர் இரா.இரவியின் ஹைகூக் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வேட்டினை ஒப்படைத்துள்ளார்.
15-10-2015 அப்துல் கலாம் பிறந்த நாளன்று அருள்மிகு மீனாட்சி அரசினர் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மூன்றிலும் பேசியதைப் பெருமையாகக் கருதுகின்றார் இரவி.
‘கவிதை உறவு’ ஆண்டு விழாவில் தெய்வத்திரு ‘கலைமாமணி விக்கிரமன்’ விருதை இரவிக்கு நீதியரசர் வள்ளிநாயகம் வழங்கியுள்ளார்.
கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் நடந்த ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80-ஆவது பிறந்த நாள் விழாவில் ‘எழுத்தோலை’ விருதைத் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் இரவிக்கு வழங்கியுள்ளார்.
‘கவிதை உறவு’ மாநில அளவில் நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் கவிஞர் இரா.இரவி எழுதிய ‘கவியமுதம்’ நூலிற்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
27-05-2017 அன்று செந்தமிழ்க் கல்லூரியில் நடந்த தனித்தமிழ்க் கவியரங்கில் கவி பாடியதற்கு செந்தமிழ் அறக் கட்டளையினர் இரவிக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.
08-10-2017 அன்று சிவகாசியில் கந்தகப் பூக்கள் & நீல நிலா இணைந்து நடத்திய ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் இரவிக்கு ‘ஹைக்கூ செம்மல்’ விருதினை வழங்கினர்.
15-10-2017 அன்று புதுவையில் ‘மூவடி’, ‘மின்மினி’, ‘துளிப்பா’ இதழ்கள் இணைந்து நடத்திய துளிப்பா நூற்றாண்டு விழாவில் இரவிக்குத் ‘துளிப்பாச் சுடர்’ விருது வழங்கினர்.
கன்னிமாரா நூலக வாசகர் வட்டமும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் நடத்திய ஹைக்கூ நூல் போட்டியில் இரவியின் ‘ஹைக்கூ உலா’ நூல் மதிப்புறு பரிசைப் பெற்றுள்ளது.
29-07-2018 அன்று சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த ஐம்பெரும் விழாவில் அமைச்சர் க. பாண்டியராசன், கவிஞர் இரா.இரவிக்கு ‘பாரதி விருது’ வழங்கினார்.
கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலா ‘நூலில் உள்ள தன்னம்பிக்கை ஹைக்கூ’ கவிதைகள், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் பாட நூலில் இடம்பெற்றுள்ளன.
மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கவிஞர் இரா. இரவியின் ‘மனதில் ஹைக்கூ’ நூல் பாட நூலாக உள்ளது.
‘பொதிகை மின்னல்’ மாத இதழ் நடத்திய நூல்கள் போட்டியில் ‘ஹைக்கூ 500’ நூல் வென்றமைக்கு 20-10-2019 அன்று நடந்த ஆண்டுவிழாவில் மூவாயிரம் பொற்கிழியும் விருதும் வழங்கினார்கள்.
இரா. இரவியின் படைப்புகள்
1கவிதைச் சாரல் - 1997
2ஹைக்கூ கவிதைகள் - 1998
3விழிகளில் ஹைக்கூ - 2003
4உள்ளத்தில் ஹைக்கூ - 2004
5நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
6என்னவள் - 2007
7இதயத்தில் ஹைக்கூ - 2007
8கவிதை அல்ல விதை - 2010
9மனதில் ஹைக்கூ - 2010
10ஹைக்கூ ஆற்றுப்படை - 2010
11சுட்டும் விழி - 2011
12ஆயிரம் ஹைக்கூ – 2013
13புத்தகம் போற்றுதும் - 2014
14கவியமுதம் - 2014
15ஹைக்கூ முதற்றே உலகு - 2015
16வெளிச்ச விதைகள் - 2016
17ஹைக்கூ உலா - 2017
18கவிச்சுவை - 2018
19ஹைக்கூ 500 - 2018
20இறையன்பு கருவூலம் - 2019
21இலக்கிய இணையர் படைப்புலகம் - 2019
22ஏர்வாடியார் கருவூலம் -2019.
23உதிராப்பூக்கள்-2020.
தொகுப்பாளர் எழுத்தாளர் ஆத்மார்த்தி .
24தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ 2021
மொழிபெயர்ப்பு பேராசிரியர் மரியா தெரசா .
25தீண்டாதே தீயவை 2022
26இளங்குமரனார் களஞ்சியம் 2022
27அம்மா அப்பா .2022
தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ ! மொழிபெயர்ப்பு பேராசிரியர் மரியா தெரசா.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் பாடத்திட்ட தேர்வுக்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளனர் .

தூத்துக்குடி ABCகல்லூரி முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி ஜானு கவிஞர் இரா .இரவியின் "ஹைக்கூ முதற்றே உலகு "நூலை ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி உள்ளார்

என் படைப்புகள்
கவிஞர் இரா இரவி செய்திகள்
கவிஞர் இரா இரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2024 4:50 pm

கட்டுரைக் களஞ்சியம்!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!

நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு
(ஆ.முத்துக்கிருட்டினன்)
எழுத்தாளன்.
திருப்பாலை,மதுரை.
இருப்பு சென்னை.

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017. பக்கங்கள் : 206 விலை : ரூ.200 தொலைபேசி 044-24342810, 24310769.


. கட்டுரைக் களஞ்சியம் குறும்பா கவிஞர் இரா.இரவியின் 31 வது நூல். இந்நூல் தமிழ் செம்மல் விருதாளர் இரா.இரவி அவர்களின் முதல் கட்டுரை நூல். வானதி பதிப்பகம் கவிஞரின் படைப்புகளின் பதிப்புபணியை 12இல் தொடங்கி 31வது இந்நூல் வரை நீள்வது சிறப்பு. இந் நீட்பின் நன்றியாக கட்டுரை களஞ்சியத்தில் “வ

மேலும்

கவிஞர் இரா இரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2024 6:40 pm

மூவாத் தமிழ்

- கவிஞர் இரா. இரவி

*****

உலகின் முதல்மொழி தமிழ்மொழி
உலகின் முதல் மனிதன் தமிழன்!

உலகிற்கு உரைக்க உரைப்போம்
உலகமும் இன்று வழிமொழிந்துள்ளது!

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
மூத்தமொழி என்றபோது நம்பாதவர்கள்!

அமெரிக்காவின் மொழியியல் ஆய்வாளர்கள்
அடித்துச்சொல்கின்றனர் தமிழே முதன்மொழி!

பழைமைக்கு பழைமையாய் புதுமைக்கு புதுமையாய்
பைந்தமிழே நிலைத்து நிற்கிறது பாரினில்!

தமிழ் எங்கள் தாய்மொழி மட்டுமல்ல
தரணியில் உள்ள மொழிகளின் தாயும் தமிழே!

ஆங்கிலம் உள்பட பல மொழிகளில்
அற்புதத் தமிழ்ச்சொற்கள் உள்ளதாக உரைக்கின்றனர்!

தமிழக்கு பின்வந்த பல மொழிகள்
தமிழ்போல நிலைக்கவ

மேலும்

கவிஞர் இரா இரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2024 1:34 pm

இளமை இனிமை புதுமை !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !

நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.

வெளியீடு : வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை – 600 017. பக்கங்கள் : 92 (மே 2023) விலை : ரூ.100 பேச 044 24342810 . 24310769.

*****

கவிஞர் இரா.இரவி அவர்கள் சிறந்த ஹைக்கூ கவிஞர். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அவருடைய கவிதைகள் மிகவும் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. இணையத்தின் மூலமாக தமிழின் பெருமையை எடுத்துரைத்தவர்.

வாழ்க்கையை இனிமையாக மாற்றுவது காதல். காதல் என்ற அழகான உணர்வு இல்லையெனில் இவ்வையகம் போர்க்களமாக மாறியிருக்கும். இப்படிப்பட்ட இனிமையான உ

மேலும்

கவிஞர் இரா இரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2024 12:41 pm

தமிழர் திருநாள்
தரணி போற்றும் பொன்னாள்

- கவிஞர் இரா. இரவி

*****

அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் தமிழினம்
அகிலம் போற்றும் அற்புத நாள் பொங்கல் !

பழையன கழிதல் புதியன புகுதல் என்று
புதுப்பித்துக் கொள்ளும் நாளே போகிப் பொங்கல் !

புத்தாடை அணிந்து புத்தரிசிப் பொங்கலிட்டு
புத்தாண்டை தைத்திருநாளை தொடங்கும் பொங்கல் !

கதிரவனை இயற்கையை வணங்கிடும் நன்னாள்
கட்டி வெல்லம் நெய்இட்டு படைத்திடும் பொங்கல் !

விளைந்த கரும்பையும் வைத்து வணங்கும் நாள்
வீணான மூடநம்பிக்கைகள் இல்லாத திருநாள் !

மாட்டுக்கு விழா எடுக்கும் ஒரே இனம் தமிழினம்
மாட்டுப்பொங்கல் வைத்து மாட்டை வணங்கும் பொங்கல் !

மேலும்

கவிஞர் இரா இரவி - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2020 6:58 pm

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கட்டுவதற்கு 
கயிறுதான்
தங்க முகக்கவசத்திற்கும் !

வேறு எங்குமில்லை
சொர்க்கம்
பிறந்த ஊர் தவிர !  

அக்கரைப் பச்சையென
சென்றவர்கள் திரும்புகின்றனர்
இக்கரை !

புரட்டிப்போட்டது
புதிய பொருளாதாரத்தை
கொடிய கொரோனா !

சொல்லவில்லை
எந்த சோதிடரும்
கொரோனா வருகை !

விட்டுவைக்கவில்லை
அமைச்சர்களையும்
கொரோனா !

மழைக்கு
ஒதுங்கமுடியாத குடை
காளான் ! 

வல்லரசு தொடங்கி
சிறிய நாடுகள் வரை
ஆடியது கொரோனா !

வரியைக் கூட்டி
வாங்கிக் கட்டினர்
கிருமி நாசினிக்கு !

காத்திருக்கிறார்கள்
கடை திறக்குமுன்
குடிமகன்கள் !

மூடும் நேரத்திலும்
முண

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 18-Jul-2020 7:36 am
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 18-Jul-2020 7:35 am
நல்ல கவிதை ஹைக்கூ ! அந்த ' குடி ... குடி மகன்... '' வரிகளில் சுரத்தில்லை .. மூன்றும் கவிதை உயர பறப்பதை தடுக்கின்றன . வாழ்த்துக்கள் . 17-Jul-2020 8:13 pm
அருமை. 17-Jul-2020 8:12 pm
கவிஞர் இரா இரவி - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2020 8:33 pm

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குடியை விட்டவனும் தொட்டான்
திரும்பவும் கெட்டான் சீரழிகிறான்
மதுக்கடைகள் திறப்பு !

வேதனையிலும் வேதனை
குடிகார தேசமானது
காந்தி தேசம் !

தடைகள் உழைப்பதற்கு
தடையில்லை குடிப்பதற்கு
வாழ்க மக்களாட்சி !

ஒரு தரம் இரண்டு தரம்
மூன்று தரம்
இந்தியா !

தனித் தனியாக தனியாருக்கு
விற்பதை விட மொத்தமாக
விற்றுவிடுங்கள் !

நின்று விட்டது வருமானம்
நிற்கவில்லை செலவு
இன்னலில் ஏழைகள் !

.நெடுஞ்சாலை ஓரம்
நடப்பதும் குற்றம்
புதிய இந்தியா !


கேட்கவில்லையா ?
புலம்பெயர்ந்தோர்
புலம்பல் !

கட்டுக்குள் உள்ளது
என்பது இதுதானோ ?
கொரோனா !

அடிப்படை தே

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 24-May-2020 8:24 am
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 24-May-2020 8:23 am
அருமை இரா. இரவி அவர்களே, புலம் பெயர்ந்தவர்கள் தொழிலாளியாய் கருதுவதே இழுக்கு, புலம்பெயர்ந்த மனிதர்களாய் என்றுதான் பார்க்க போகிறோம்? 😭😭🤲🤲 24-May-2020 3:49 am
Super. "நின்று விட்டது வருமானம் நிற்கவில்லை செலவு இன்னலில் ஏழைகள் !" "தனி ஓவ்வொரு மனிதனுக்கும் இன்று உணவில்லையே என்ன செய்யலாம் பாரதி !" இது இன்னும் தொடர்ந்தால் இன்னல்களுக்கு ஏது இறுதி! இன்னல்களே இவர்கள் இறுதி! 22-May-2020 6:43 pm
கவிஞர் இரா இரவி - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2020 6:29 pm

144. கவிஞர் இரா .இரவி !

பெரி வணிக வளாகங்கள் மூடப்பட்டன
சிறிய வணிக கடைகள் திறக்கப்பட்டன !

வழக்கம்போல கீரை விற்பவர் மிதி
வண்டியில் வந்து விற்று சென்றார் !

மருத்துவமனைகள் பல மூடப்பட்டன
மருந்தின்றி கை வைத்தியம் கை கொடுத்தன !

நகைக்கடைக்காரர்களின் கொள்ளை நின்றது
நகை அட்சய திருதியிலும் விற்காமல் நின்றது !

திரையரங்குகளின் கொள்ளை நின்று போனது
திரைப்படம் தொலைக்காட்சியில் வந்தது !

துணிக்கடைக்காரர்களின் கொள்ளை நின்றது
துணி புதுத்துணி அவசியமின்றி போனது !

சவரம் செய்யும் செலவு கூட சேமிப்பானது
சவரக்கடைக்காரர்கள் பட்டினியில் வாடினர் !

பணக்காரர்களும் நடுத்தர வர்க்கமும்

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 26-Apr-2020 8:08 am
உங்களின் இந்தப் பாட்டு மிகவும் சிறப்பாய் இருக்கிறது இயல்பு நிலையை அழகாக படம் போட்டு காட்டி உள்ளீர் ஆனாலும் கடைசிவரியில் ஒட்டுமொத்த குடிகாரர்களின் வெறுப்பை பரிசாக ஏற்கும் சூழலை உருவாக்கி விட்டீர் சிரிக்கத் தோன்றினாலும் தாங்கள் சொன்னது சரியே ஆனாலும் அரசு தனது அள்ள அள்ள குறையாமல் பணம் கொழிக்கும் பணம் கொடுக்கும் பாத்திரத்தை கவிழ்த்து விடுமோ?!! 25-Apr-2020 9:22 pm
கவிஞர் இரா இரவி - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2020 7:49 pm

குடும்பத்துடன் களித்திருப்போம் ! கவிஞர் இரா .இரவி !

கொடிய கொரோனா தந்துள்ள அறிய வாய்ப்பு
குடும்பத்துடன் கழித்திருப்போம் களித்திருப்போம் !

இயந்திரமயமான உலகில் இயந்திரமாக இருந்தோம்
இனியாவது அன்பு செலுத்தி மனிதம் பேணுவோம் !

நேரமில்லை என்று ஓடிக் கொண்டே இருந்தோம்
நின்று நிதானித்து மழலைகள் மகிழ்விப்போம் !

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடினோம்
கனிவாக இல்லத்தில் அமர்ந்து பேசுவோம் !

பரபரப்பாக என்றும் இயங்கி வந்தோம்
பண்பாக அமர்ந்து பாசம் பொழிவோம் !

பம்பரமாக நாளும் சுழன்று வந்தோம்
பாதிப்பு வராமலிருக்க இல்லத்தில் இருப்போம் !

அடுத்து வீட்டுக்காரரை அறியாமல் இருந்தோம்
அடுத்த வீட்

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 03-Apr-2020 7:45 am
விழிப்புணர்வோடு இருப்போம் வீட்டிலும் இந்நாட்டிலும்... 02-Apr-2020 9:58 pm
கவிஞர் இரா இரவி - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2018 8:37 pm

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


குழந்தைகளில் சில
ஆள் வளருகின்றன
அறிவு வளரவில்லை !

உணரவில்லை மக்கள்
புற்றுநோய் வந்தபோதும்
நெகிழியின் தீங்கு !

சோதனையின் முடிவு
கசந்தது
இனிப்பு நோய் !

வெள்ளைக்காரன் தந்த
வெள்ளை நஞ்சு
சர்க்கரை ( சீனி )

பெரிய மனிதர்களையும்
மிகச்சிறியோராக்கும்
சினம் !

இருப்பிடம்
இதயமன்று மூளை
மனம் !

இதயமாற்று
சிகிச்சைக்குப் பின்னும்
நினைவில் அவள் !

கனிய வைக்கின்றனர்
ரசாயனத்தால்
கனிகளை!

மனிதனுக்கு
அழகு
மனிதநேயம் !

இல்லை வடிவம்
இல்லாவிடில் தொல்லை
அன்பு !

தகுதியற்றது என்றார்கள்
தகுதியாக்குவோம் நாம்
பெண்கள் வாழ !

மேலும்

கவிஞர் இரா இரவி - ஆனந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2016 4:18 pm

செயலற்று இயங்குகிறேன்
பாதாளத்தின் ஆழத்தில்
சில கணம்
வானத்து விண்மீன்களில்
சிலகணம்
இதம் தரும் தென்றலோடு
சில கணம்
இம்சிக்கும் சித்திரையின்
வெம்மையோடு சில கணம்...
என் எண்ணங்கள் எதிர்
தாக்குதல் இன்றியே
சமாதானக் கொடியை
நீட்டி நிற்கிறது
சமாதானமின்மைக்கு....
எனக்குள் நானே எதிரியாய்
பிடிப்பு குறையாமலிருக்க,
பிடித்ததைப்
புரட்டிப் போட எண்ணப்படுகிறேன்
புலப்படவில்லை
முடிவற்றுப்போனதா? - என்
ஆரம்பமே முடிவாய் திருத்தமற்று.
என் திருத்தமோ, குழப்பமுற்று.
மரணித்தது
வீழ்ந்தோம் நானும்
என் எழுதுகோலும் இனி
மீண்டெழ எண்ணமில்லை
இருவருக்கும்.
நாங்கள் இன்னும் மீதமிருக்கிறோம்....

மேலும்

அமுத மொழியில் அழகு வரிகள் வாழ்த்துகள் 04-Jun-2018 2:11 am
நல்ல சிந்தனை அருமை 30-May-2016 11:37 pm
மிதமிருங்கள் இன்னும் இன்னுன் உங்கள் கவிதை நங்கள் ரசித்திட vaazhthukkal 23-May-2016 1:47 pm
வரிகள் அழகு ! எல்லா நாளிதள்கல்களிலும் உங்கள் கவிதை வந்துக் கொண்டே இருக்கட்டும் ... மென்மேலும் உயருங்கள் ...................................... வாழ்த்துக்கள் ......... உங்களால் கவியும் தமிழும் வாழட்டும் 10-May-2016 12:53 am
கவிஞர் இரா இரவி - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2015 8:17 am

கருத்துச் சுரங்கம் கொன்றை வேந்தன்!
கவிஞர் இரா. இரவி.


ஔவையார் பாடிய ‘கொன்றை வேந்தன்’ குழந்தைகளுக்கு என்று பெரியவர்கள் படிப்பதில்லை. கொன்றை வேந்தன் பொருள் புரிந்து, கூர்ந்து படித்தால் வாழ்க்கைக்கு வழி காட்டும். ஒளி கூட்டும்.

கொன்றை வேந்தனில் 91 கருத்துக்கள் இருந்தாலும், அனைத்தும் அருமை என்றாலும், ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் கருத்துக்கள் எவை என்று ஆராய்ந்த போது கிடைத்தவை உங்கள் பார்வைக்கு. இரத்தினச் சுருக்கமாக ஒரே ஒரு வரியில் உன்னதமாக உயர்ந்த கருத்துக்களைப் பாடி உள்ளார் ஔவையார்.

கீழோ ராயினுந் தாழ உரை!

உனக்குக் கீழ்ப்பட்டவரிடத்தும் பணிவாகப் ப

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 30-Jan-2015 10:50 pm
வரிகளும் விளக்கமும் மிக அருமை தோழரே ,, வாழ்த்துக்கள் 30-Jan-2015 8:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (51)

ப்ரியன்

ப்ரியன்

சென்னை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (52)

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட
எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,
pudhuyugan

pudhuyugan

இலண்டன்

இவரை பின்தொடர்பவர்கள் (63)

A. Prem Kumar

A. Prem Kumar

Chennai
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட
தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே