கங்கைமணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கங்கைமணி |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 1631 |
புள்ளி | : 411 |
அன்புடன் வணங்குகிறேன்.
என் தாயவளை வணங்குகிறேன்.இந்தியத்தாய் அவளை வணங்குகிறேன்.கடவுளை வணங்குகிறேன்.எனது கவித்திறனை வணங்குகிறேன்.இப்பக்கங்களை புரட்டும் உமது விரல்களை வணங்குகிறேன்.
நான் எனது தாய் நாட்டின் சுவாசத்தில் வளர்ந்தவன்,வளர்ப்பவன்,வளர்ந்துகொண்டிருப்பவன். எனது நினைவுகளை.கருத்துக்களை.உணர்வுகளை கவிதையாக்குகிறேன்.என்னைப்பொறுத்தவரை பொய்களின் வர்ணனைகளை(உவமைகளை) அணிகலன்களாகக்கொள்வதே கவிதை என்கிறேன்.ஆனால் அதன் கருத்துக்கள் ஒருபோதும் பொய்யாக்கா?!. எனது கவிதைகளில் இயற்கையை இணைப்பதை இயல்பாகக் கொண்டவன். நான் கவிதை எழுதுவது நான் ரசிக்க.எனது ரசனையை பிறர் ரசித்து பாராட்ட மேலும் எனது மன அமைதிக்காக.எனது மனக்கொந்தளிப்புக்களை கவிதை வடிவில் கிறுக்கி தீர்த்துக்கொள்பவன் இந்த கிறுக்கன்.
எனது கருத்துக்கள் அனைத்தும் உண்மை,தவறொன்றும் இல்லை என்று வாதாட நான் ஒன்றும் முற்றும் தெரிந்து துறந்த முனிவனல்ல.இக்கால சூழலில் சுழலவந்த ஒரு சிறுவனே.நான் ஏமார்ந்தது.என்னை மட்டுப்படுத்துவது எனது சோம்பல் தனமே!. அதனாலேயே எனது படைப்புக்களில் எவ்வளவோ மறந்து போயின.,மறைந்தும் போயின.எனது நினைவில் நின்றவர்களை மாத்திரம் இதில் எழுதுகிறேன்.எனது புதிய படைப்புக்களையும் படைக்கிறேன்!... இனி புரட்டட்டும் உமது விரல்கள் எனது பக்கங்களை.
அன்புடன்
-கங்கைமணி
உன் எண்ணத்தை
எடுத்தெறிய நினைக்கிறேன் .., முடியவில்லை !
உன் எண்ணம் திடப்பொருளாக இருந்தால் ...,
கரம் கொண்டு பிய்த்து எறிந்துவிடுவேன் .
உன் எண்ணம் எழுத்தாக இருந்தால் ,
எதையாவது ஊற்றி அழித்துவிடுவேன் !
எனக்காக அரும்பாத இதயத்தின் எண்ணம்
எனக்கெதற்கு ?
பார்த்து பார்த்து ரசித்த
உன் பார்வை படுத்தும் பாடு
மிகக்கொடித்து !
விழுப்புண் ஆணுக்கு அழகு !
விழிப்புண் உண்மையில் கொடிது .
நான் ...,
பறக்கநினைக்கும் போதெல்லாம்
பணிவிழுந்து பதத்துப்போகும் சருகாகிப்போகிறேன்
உன் நினைவால் !
நான் உரக்க காத்துக்கிறேன்
ஊருக்கே கேட்கிறது
உனக்குமட்டும் கேட்கவில்லை .
***********
கனவெனு மருவியில் கவினுறக் குளித்திடக்
கவலையி னழுக்குகள் கரைந்திடு மன்றோ
மனமதி லிருக்கிற மறைமுகக் கறைகளை
மறைத்திடு மொருவழி மலர்ந்திடு மன்றோ
இனசனத் தவரொரு எழுகிற பகையினை
இலகுவி லழித்திட லெளிதுறு மன்றோ
உனக்கெனு மெனக்கெனு முடையைதை யடுத்தவர்
உரித்தெனப் பறித்திட லிலையதி லன்றோ
*
இலவச அருவியி லிருதயம் நனைந்திட
எதுவித இடர்களு மெழுவது மில்லை
பலர்வசம் பலதென பகலிலும் விழிவழி
படர்கிற கனவிது பரவச எல்லை
சலசல ஒலியலை சதிசொல விடுகிற
சடுகுடு வகற்றிய சமரச முல்லை
சிலரது இமைகளில் சிணுங்கிடு கிறநிலை
செதுக்கிடு மெனிலதிற் சிறந்தது தொல்லை
*
உறங்கிடும் பொழுதினில் உருகிடு
கவிதை விழியே நவில்வேன்நான் நன்றி
துவளும் இடையே பவழ இதழே
கயல்விழிகள் என்னை அயலான்போல் பார்த்தால்
புயல்வீசும் நெஞ்சில் கயல்
கவிக்குறிப்பு :
கவிப்பிரிய வாசவன் புறநானூற்று ஆசிரியப்பா புதிய
எடுத்துக்காட்டு வழியில்
மூன்றாம் சீர் மோனைக்கு மாற்றாக எதுகை அமைய
எழுதிய கவிதை
நதியலையோ நீண்டவுன் நீலவண்ணக் கூந்தல்
நதிவளைவோ மெல்லிய நல்லிடை மென்மை
பொதிகைத் தமிழ்ப்புன் சிரிப்போ இதழில்
நதியவளே நீயே நவில்
என் காதலி !....
கலையும் கனவினில் வந்து போகிறாள்
கலையாதோர் இன்பக் கவிதை யாகிறாள்
பூமி புத்தகம் திறந்து காட்டிய
புதிய பூவென பிறந்த மகளிவள்.
என் தாயின் சேலையின் தலைப்பை போன்றவள்
பூவை இனத்திலோர் புதிய வரவினல்
கருகூட்டி வளர்ந்திடும் இன்ப காதலால்
உயிரான ஓவியம் போல வாழ்கிறாள்.
மாலைநேரம் என் மனதை ஆள்கிறாள்
மலர்ந்த மனதில் தேன்துளியாய் விழுகிறாள்.
சாலை மலர்களாய் உதிர்ந்து ஓடுமவள்
லீலை நாடகம் நினைவை அள்ளுதே !
அரும்பும் மலர்களில் இருக்கும் தேனென
உருகி உருகி என்னுள்ளே பாய்ந்தவள்,
ஊமை வாயெனை உளற வைக்கிறாள்
உளறும் நவிலவள் நாமம் இசைக்கிறாள்.
தேகம் சமைக்கிறாள் தீண்ட தடுக்கிறா
என்னவளின் வருகையால்
மணக்கும் மண் ...அவளின்
மலர்விழி பார்வை மயக்கம் தர
மிரளும் மான் கண் அச்சாரமிட
வில்வித்தை புருவம் காதல்கதை எழத
சொல் வித்தை சொக்கட்டான் இட
ஊர்குருவிக்கு உரக்க உரைக்க
தேர் வீதியில் தெருவோர கடையில்
வளையல் வாங்கி தர தையல் அவளை தனியாக தேடியது கண்
வந்தாள் புடைசூழ தோழியருடன்
தந்தாள் கண்ஜாடை கருத்துடன்
சென்றேன் அவள் பின் மறைந்தாள் சடுதியில்...
சத்தமிட்ட யென் மனைவி யால்
சடுதியில் எழுந்தேன் என்னங்க
எனும் மந்திரச் சொல்லால்
தெளிந்தது நித்திரை மட்டுமல்ல
யென் கவி யெனும் கிறுக்கலும்...
அவளை கண்டால் எழுதுவேன்
இதயத்தில் இருப்பதையே...
ஏய் !..சமுதாயமே !
என்ன பார்க்கிறாய் ?!
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறென்றோ ?.
கேள்....,
அன்னப்பறவையாய்
பகுத்து தவறென்றால் ,
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறுதான்.
உப்பின் உவர்ப்பின்
உடன்படு தவறென்றால் ,
பெண்ணின் ஆணின்
நட்பது தவறுதான்.
பால்பிரித்து பழகுவதே நட்பென்றால்,
நட்பென ஓன்று இருப்பதே தவறுதான்.
நட்புணர்வு என்னவென்று-
தெரியுமோ உமக்கு.
தெரிந்திருந்தால் அந்நியரை
தடம் பாதிக்க விடுவாயோ?!.
நட்புணர்வே தெரியாத நீ
நட்போரை நகைப்பதும்
பழமையை விதைத்து
பயிராக்க பார்ப்பதும் முறையோ jQuery171026712429258255743_1552677062773?!
-கங்கைமணி
....
தாய் பாசம் உள்ளவர்களுக்கு இந்த கவிதை வலி புரியும்....
அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் ( 👉 ) சேலைதான்
ஈரமானது...
நான் உறங்க...
உன் ( 👉 ) சேலைதான்
ஊஞ்சல் ஆனது..
.
நான் பால்
அருந்தும் போது...
உதட்டினை துடைத்தது
உன் (👉)சேலை தான்...
எனக்கு பால்
கொடுக்கும்போது...
உன் (👉)சேலை தான்
எனக்கு திரையானது...
நான் மழையில்
நனையாமல் இருக்க...
உன் (👉)சேலை
தான் குடையானது...
நீச்சல் பழக...
என் இடுப்பில் கட்டியதும்
உன் (👉)சேலை தான்...
மழையில் நனைந்த
என் தலையை...
துவட்டியதும்
உன் (👉)சேலை தான்...
மாம்பழம் தின்று
என் கை துடைத்ததும்
உன் (👉)சேலை தானம்மா...
திருநங்கை
ஆணும் பெண்ணும் கலந்த கலவை – இது
ஆண்மை குறைத்த ஆண்டவன் சலவை
முள்ளுள் மலரை மூழ்கச் செய்து - புது
மூன்றாம் பாலாய் செய்தான் கைது
நளினம் மிகுந்த நர்த்தனப் பிறவி - கவி
நயமிகுப் பேச்சால் கவரும் குலவி
கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம்
கள்ளம் கபடம் இல்லா சிந்தை – இவர்
உள்ளம் எங்கும் கவலையின் மந்தை
முக்கனி மூன்றும் இணைந்த கலப்பு - இது
முன்னாள் தொட்டே தோன்றிய பிறப்பு
பாறையும் பூவும் கலந்த தேகம் - இது
பிரம்மன் செய்த
பிறந்தநாள் வாழ்த்து.
என்ன கேட்டாய் என் நண்பா !
எனைப்பார்த்து கேட்டாய் ஏன் நண்பா !
வாழ்த்துன்னை சொல்ல வயதில்லை என்றோ ?!
வயல்வெளி நீராய் வற்றினேன் என்றோ!?
நான் உனை வாழ்த்தாது தூங்கினள் நன்றோ!
நண்பனின் பிறந்தநாள் மறப்பவர் உண்டோ ?!!
கண்ணொளி மறைப்பது இமையே!...ஆயினும்
காப்பதும் அதுவே ஞாபகம் கொள்.
பொன்னெடுத் துன்னிடம் வரவில்லை யேனும்,
பொருளெடுத் துன்னிடம் தரவில்லை யேனும்,
கண்ணெடுத் துன்னெழில் காணேன் ஆயினும்.
கண்ணினும் மேல்..,கருத்தினும் மேல்..,
என்னுயிரினும் மேல்..,இவ்வுலகினும் மேல் என.,
மூவுலகறிந்தவர் ஆன்றோர் சான்றோர் ..,
ஆயிர யுகங்களாய் போற்றியே புகழ்ந்திட்ட
நற்ப்பெரும்
(கிராமத்தில் நடக்கும் பொங்கல் பண்டிகையைப்பற்றியும் மற்றும் அந்த ஊரின் தெய்வங்களைப்பற்றியும் ,ஊரைப்பற்றியும் சொல்லிவருகிறது இப்பாடல்.எனது நண்பர் ஒருவரின் ஊரில் நடக்கும் திருவிழாவிற்காக எழுதப்பட்டது.இன்னும் சில தினங்களில் இசையோடு வெளிவரவுள்ளது.நமது நண்பர்களின் பார்வைக்காக பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.இப்பாடலில் உள்ள குறை நிறைகளை எடுத்துரைத்தாள் மகிழ்வேன் நன்றி)
ஊரு கூடி ஒறவு கூடி
ஒத்துமையா பொங்கவைச்சோம்.
இனிமே துயரேது...,
இனி நமக்கு இதுதான் வரலாறு !
தெய்வமருளும் .. முன்னோர்னருளும்
ஒண்ணுசேர்ந்து பொங்கிவருது .,
இனிமே பயமேது ...,
இனி நமக்கு எல்லாம் ஜெயம்பாரு !
(ஊரு கூடி ஒறவு
தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள்
எஸ். செல்வராஜ்,
-கோ. சோ. கவியரசு (மேட்டூர்)
முந்தைய தி.மு.க ஆட்சியில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசு மீண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்புத்தாண்டு என மாற்றி விட்ட நிலையில் உண்மையை உரக்க சொல்ல வேண்டு மென்ற நோக்கில் இக்கட்டுரையை பொது அறிவு உலகம் வெளியிடுகிறது.
சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே! சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின