கங்கைமணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கங்கைமணி
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2013
பார்த்தவர்கள்:  1631
புள்ளி:  411

என்னைப் பற்றி...

அன்புடன் வணங்குகிறேன்.
என் தாயவளை வணங்குகிறேன்.இந்தியத்தாய் அவளை வணங்குகிறேன்.கடவுளை வணங்குகிறேன்.எனது கவித்திறனை வணங்குகிறேன்.இப்பக்கங்களை புரட்டும் உமது விரல்களை வணங்குகிறேன்.
நான் எனது தாய் நாட்டின் சுவாசத்தில் வளர்ந்தவன்,வளர்ப்பவன்,வளர்ந்துகொண்டிருப்பவன். எனது நினைவுகளை.கருத்துக்களை.உணர்வுகளை கவிதையாக்குகிறேன்.என்னைப்பொறுத்தவரை பொய்களின் வர்ணனைகளை(உவமைகளை) அணிகலன்களாகக்கொள்வதே கவிதை என்கிறேன்.ஆனால் அதன் கருத்துக்கள் ஒருபோதும் பொய்யாக்கா?!. எனது கவிதைகளில் இயற்கையை இணைப்பதை இயல்பாகக் கொண்டவன். நான் கவிதை எழுதுவது நான் ரசிக்க.எனது ரசனையை பிறர் ரசித்து பாராட்ட மேலும் எனது மன அமைதிக்காக.எனது மனக்கொந்தளிப்புக்களை கவிதை வடிவில் கிறுக்கி தீர்த்துக்கொள்பவன் இந்த கிறுக்கன்.
எனது கருத்துக்கள் அனைத்தும் உண்மை,தவறொன்றும் இல்லை என்று வாதாட நான் ஒன்றும் முற்றும் தெரிந்து துறந்த முனிவனல்ல.இக்கால சூழலில் சுழலவந்த ஒரு சிறுவனே.நான் ஏமார்ந்தது.என்னை மட்டுப்படுத்துவது எனது சோம்பல் தனமே!. அதனாலேயே எனது படைப்புக்களில் எவ்வளவோ மறந்து போயின.,மறைந்தும் போயின.எனது நினைவில் நின்றவர்களை மாத்திரம் இதில் எழுதுகிறேன்.எனது புதிய படைப்புக்களையும் படைக்கிறேன்!... இனி புரட்டட்டும் உமது விரல்கள் எனது பக்கங்களை.
அன்புடன்
-கங்கைமணி

என் படைப்புகள்
கங்கைமணி செய்திகள்
கங்கைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2024 11:07 pm

உன் எண்ணத்தை
எடுத்தெறிய நினைக்கிறேன் .., முடியவில்லை !

உன் எண்ணம் திடப்பொருளாக இருந்தால் ...,
கரம் கொண்டு பிய்த்து எறிந்துவிடுவேன் .

உன் எண்ணம் எழுத்தாக இருந்தால் ,
எதையாவது ஊற்றி அழித்துவிடுவேன் !

எனக்காக அரும்பாத இதயத்தின் எண்ணம்
எனக்கெதற்கு ?

பார்த்து பார்த்து ரசித்த
உன் பார்வை படுத்தும் பாடு
மிகக்கொடித்து !

விழுப்புண் ஆணுக்கு அழகு !
விழிப்புண் உண்மையில் கொடிது .

நான் ...,
பறக்கநினைக்கும் போதெல்லாம்
பணிவிழுந்து பதத்துப்போகும் சருகாகிப்போகிறேன்
உன் நினைவால் !

நான் உரக்க காத்துக்கிறேன்
ஊருக்கே கேட்கிறது
உனக்குமட்டும் கேட்கவில்லை .

மேலும்

கங்கைமணி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2024 1:02 am

***********
கனவெனு மருவியில் கவினுறக் குளித்திடக்
கவலையி னழுக்குகள் கரைந்திடு மன்றோ
மனமதி லிருக்கிற மறைமுகக் கறைகளை
மறைத்திடு மொருவழி மலர்ந்திடு மன்றோ
இனசனத் தவரொரு எழுகிற பகையினை
இலகுவி லழித்திட லெளிதுறு மன்றோ
உனக்கெனு மெனக்கெனு முடையைதை யடுத்தவர்
உரித்தெனப் பறித்திட லிலையதி லன்றோ
*
இலவச அருவியி லிருதயம் நனைந்திட
எதுவித இடர்களு மெழுவது மில்லை
பலர்வசம் பலதென பகலிலும் விழிவழி
படர்கிற கனவிது பரவச எல்லை
சலசல ஒலியலை சதிசொல விடுகிற
சடுகுடு வகற்றிய சமரச முல்லை
சிலரது இமைகளில் சிணுங்கிடு கிறநிலை
செதுக்கிடு மெனிலதிற் சிறந்தது தொல்லை
*
உறங்கிடும் பொழுதினில் உருகிடு

மேலும்

மிக்க நன்றி 21-Jan-2024 3:44 pm
அருமை . வாழ்த்துக்கள் 21-Jan-2024 12:59 pm
கங்கைமணி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2023 7:43 am

கவிதை விழியே நவில்வேன்நான் நன்றி
துவளும் இடையே பவழ இதழே
கயல்விழிகள் என்னை அயலான்போல் பார்த்தால்
புயல்வீசும் நெஞ்சில் கயல்


கவிக்குறிப்பு :
கவிப்பிரிய வாசவன் புறநானூற்று ஆசிரியப்பா புதிய
எடுத்துக்காட்டு வழியில்
மூன்றாம் சீர் மோனைக்கு மாற்றாக எதுகை அமைய
எழுதிய கவிதை

மேலும்

மகிழ்ச்சி தரும் அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய கங்கை மணி 31-Oct-2023 7:30 am
அருமை ஐயா ! மரபுக்கவிதையின் மகிமையல்லாவா தங்கள் . வாழ்துக்கள் ஐயா ! 30-Oct-2023 9:30 pm
கங்கைமணி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2023 8:25 am

நதியலையோ நீண்டவுன் நீலவண்ணக் கூந்தல்
நதிவளைவோ மெல்லிய நல்லிடை மென்மை
பொதிகைத் தமிழ்ப்புன் சிரிப்போ இதழில்
நதியவளே நீயே நவில்

மேலும்

நிச்சயமாக ஐயா மிக்க நன்றி 27-Oct-2023 5:20 pm
மனமுவந்த பாராட்டில் மிக்க மகிழ்ச்சி நதியவளை புதுக் கவிதையில் புதுமை உவமையில் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் நாளை நீயே நவில் ----நன்றி நவில் என்பதுபோல் வெண்பாவில் மூன்றாம் சீர் மோனை அமைத்து எழுதிடின் இன்னும் இனிமைதரும் என்பதால் அழகிய கருத்து கவிதை மிக்க நன்றி கவிப்பிரிய கங்கை மணி 25-Oct-2023 7:09 am
ஐயா வணக்கம் ! தங்கள் படைப்பு என்றுமே அருமை ! அதிலும் இந்த நதியவளின் அழகு கவி மிக அருமை ! தங்களை வாழ்த்த தகுதியில்லை வணங்குகிறேன் . கங்கைமணி - நதியவளே ! நீயே நாவில் ....ம் ..ம் ....., அன்று ...., கொதிப்படைந்த என் உள்ளத்தில் குதித்தாய் குளிர்விக்க , குளிர்ந்தேன் உன்னாலே குதிக்கும் முயல்போல குதித்தேன் தன்னாலே ! இன்று....., அக்கறையோடு உன் கரையோரம் வறண்ட உனைக்கண்டேன் திரண்டு வருவாய்யென்று, கலங்கித்தான் நிற்கிறேன் குளம் தேடிப்போனவளே கொஞ்சும் எழிலோடு நீ வரும் நாளை நீயே நாவில் ! 24-Oct-2023 9:47 pm
கங்கைமணி - கங்கைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2018 12:38 am

என் காதலி !....
கலையும் கனவினில் வந்து போகிறாள்
கலையாதோர் இன்பக் கவிதை யாகிறாள்
பூமி புத்தகம் திறந்து காட்டிய
புதிய பூவென பிறந்த மகளிவள்.

என் தாயின் சேலையின் தலைப்பை போன்றவள்
பூவை இனத்திலோர் புதிய வரவினல்
கருகூட்டி வளர்ந்திடும் இன்ப காதலால்
உயிரான ஓவியம் போல வாழ்கிறாள்.

மாலைநேரம் என் மனதை ஆள்கிறாள்
மலர்ந்த மனதில் தேன்துளியாய் விழுகிறாள்.
சாலை மலர்களாய் உதிர்ந்து ஓடுமவள்
லீலை நாடகம் நினைவை அள்ளுதே !

அரும்பும் மலர்களில் இருக்கும் தேனென
உருகி உருகி என்னுள்ளே பாய்ந்தவள்,
ஊமை வாயெனை உளற வைக்கிறாள்
உளறும் நவிலவள் நாமம் இசைக்கிறாள்.

தேகம் சமைக்கிறாள் தீண்ட தடுக்கிறா

மேலும்

மணமேடை ஏற்றி உனை மாலை மாற்றி மார்போடு சாய்த்து உன் அழகை அள்ளுவேன். ----அழகிய கவிதை அழகிய சித்திரம் 10-Mar-2023 9:00 am
மிக்க மகிழ்ச்சி.மனம் நிறைந்த நன்றிகள் 04-Feb-2018 10:56 pm
என் கவிதையை படித்து அதை இரசித்து கருத்திட்டமைக்கு, நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே ! 04-Feb-2018 10:55 pm
நன்றி நண்பா ! தங்களின் தொடர் ஊக்கம் என்னை உயர்த்துகிறது.மிக்க மகிழ்ச்சி 04-Feb-2018 10:53 pm
கங்கைமணி - பாளை பாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2023 9:43 pm

என்னவளின் வருகையால்
மணக்கும் மண் ...அவளின்

மலர்விழி பார்வை மயக்கம் தர
மிரளும் மான் கண் அச்சாரமிட

வில்வித்தை புருவம் காதல்கதை எழத
சொல் வித்தை சொக்கட்டான் இட

ஊர்குருவிக்கு உரக்க உரைக்க
தேர் வீதியில் தெருவோர கடையில்

வளையல் வாங்கி தர தையல் அவளை தனியாக தேடியது கண்

வந்தாள் புடைசூழ தோழியருடன்
தந்தாள் கண்ஜாடை கருத்துடன்

சென்றேன் அவள் பின் மறைந்தாள் சடுதியில்...

சத்தமிட்ட யென் மனைவி யால்
சடுதியில் எழுந்தேன் என்னங்க

எனும் மந்திரச் சொல்லால்
தெளிந்தது நித்திரை மட்டுமல்ல

யென் கவி யெனும் கிறுக்கலும்...


அவளை கண்டால் எழுதுவேன்
இதயத்தில் இருப்பதையே...

மேலும்

பார்வையிட்டு கருத்திட்ட கவி. ஜவ்ஹர் அய்யா அவர்களுக்கு நன்றிகள்... மனதில் மனைவி வாழ்கிறார்கள்( ஒரு மனைவிதான்...மரியாதை நிமித்தமாக....கள்)... கற்பனையில் எழுத்து எனும் காதலி எழுத்து.காம் வடிவில் துயில் கொள்கிறாள்... நான் யென்ன செய்ய ஐயா... இது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த கவி... ஆயினும் இல்வாழ்வையை தவவாழ்வு என உள்ளது உள்ளபடி உரைத்தமைக்கு நன்றியும் வணக்கமும் 18-Feb-2023 7:06 am
பார்வையிட்டு கருத்திட்ட கவி. கங்கை மணி அவர்களுக்கு நன்றிகள் ... 18-Feb-2023 6:53 am
கனவில் கண்ட பெண் மனைவி அல்ல.இல்லறம் இல்லாதவன் கனவு நியாயமானது நல்லறமும் கூட.ஆனால்...இல்வாழ்வாள் இருக்க வேறொரு பெண் கணவில் வருவது முரண் அல்லவா 04-Feb-2023 9:56 pm
அருமை !.. நற்கவி வாழ்த்துக்கள் . 01-Feb-2023 5:19 pm
கங்கைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2019 12:40 am

ஏய் !..சமுதாயமே !
என்ன பார்க்கிறாய் ?!
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறென்றோ ?.

கேள்....,

அன்னப்பறவையாய்
பகுத்து தவறென்றால் ,
ஆணும் பெண்ணும்
பழகுவது தவறுதான்.

உப்பின் உவர்ப்பின்
உடன்படு தவறென்றால் ,
பெண்ணின் ஆணின்
நட்பது தவறுதான்.

பால்பிரித்து பழகுவதே நட்பென்றால்,
நட்பென ஓன்று இருப்பதே தவறுதான்.

நட்புணர்வு என்னவென்று-
தெரியுமோ உமக்கு.
தெரிந்திருந்தால் அந்நியரை
தடம் பாதிக்க விடுவாயோ?!.

நட்புணர்வே தெரியாத நீ
நட்போரை நகைப்பதும்
பழமையை விதைத்து
பயிராக்க பார்ப்பதும் முறையோ jQuery171026712429258255743_1552677062773?!

-கங்கைமணி

மேலும்

தங்கள் கருத்து மிக அருமை.. ஆண் , பெண் இரண்டுமே பால் பாகுபாடு மட்டுமே நட்பிற்கு இல்லை... 28-Feb-2020 2:53 pm
நவீன விஞ்ஞான உலகச் சிந்தனைக் கருத்துக்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் 26-Jun-2019 6:19 am
கங்கைமணி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2019 2:01 pm

....

தாய் பாசம் உள்ளவர்களுக்கு இந்த கவிதை வலி புரியும்....

அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் ( 👉 ) சேலைதான்
ஈரமானது...

நான் உறங்க...
உன் ( 👉 ) சேலைதான்
ஊஞ்சல் ஆனது..
.
நான் பால்
அருந்தும் போது...
உதட்டினை துடைத்தது
உன் (👉)சேலை தான்...

எனக்கு பால்
கொடுக்கும்போது...
உன் (👉)சேலை தான்
எனக்கு திரையானது...

நான் மழையில்
நனையாமல் இருக்க...
உன் (👉)சேலை
தான் குடையானது...

நீச்சல் பழக...
என் இடுப்பில் கட்டியதும்
உன் (👉)சேலை தான்...

மழையில் நனைந்த
என் தலையை...
துவட்டியதும்
உன் (👉)சேலை தான்...

மாம்பழம் தின்று
என் கை துடைத்ததும்
உன் (👉)சேலை தானம்மா...

மேலும்

migavum sirappu ayya. 09-Mar-2019 8:04 pm
அம்மாவின் நீங்காத நினைவலைகளில் வெளிவந்திருக்கிறது இந்த வரிகள்.என் மனதை சற்று வருடிக்கொடுக்கிறது இக்கவிதை.அம்மாவின் சேலை ஒரு அழகான ஆனந்த சோலை.அதற்குள் கண்ணீரும் இருக்கும்,காயமும் இருக்கும்,வியர்வையும் இருக்கும்,விரக்தியும் இருக்கும்.ஆனாலும் அது என்றும் ஆனந்த பூங்காற்றை மட்டுமே நமக்கு வருடக்கொடுக்கும். ஐயா இக்கவிதையில் தாங்கள் அம்மாவோடு வாழ்ந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் அந்த வரம் பெற்றமைக்கு. 09-Mar-2019 5:54 pm
கங்கைமணி - சொ பாஸ்கரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2018 4:05 pm

திருநங்கை

ஆணும் பெண்ணும் கலந்த கலவை – இது
ஆண்மை குறைத்த ஆண்டவன் சலவை

முள்ளுள் மலரை மூழ்கச் செய்து - புது
மூன்றாம் பாலாய் செய்தான் கைது

நளினம் மிகுந்த நர்த்தனப் பிறவி - கவி
நயமிகுப் பேச்சால் கவரும் குலவி

கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம்

கள்ளம் கபடம் இல்லா சிந்தை – இவர்
உள்ளம் எங்கும் கவலையின் மந்தை

முக்கனி மூன்றும் இணைந்த கலப்பு - இது
முன்னாள் தொட்டே தோன்றிய பிறப்பு

பாறையும் பூவும் கலந்த தேகம் - இது
பிரம்மன் செய்த

மேலும்

நன்றி 14-Sep-2018 11:53 am
வார்த்தைகள் , வரிகள் , கவிதை சுமந்த கரு ... அனைத்தும் அருமை . 31-Aug-2018 5:49 pm
அருமை ...அருமை ! மிக அருமை.கவிதை மிக அழகாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள். நான் மிகவும் இரசித்த வரிகள் ..., அல்லும் பகலும் இணைந்தால் அந்தி - இது அள்ளிப் புசித்திட இயலாப் பந்தி கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது கடவுள் தெரிந்தே செய்த கலப்படம் ...சூப்பர் !!! 31-Aug-2018 3:23 am
நன்றி 30-Aug-2018 6:46 pm
கங்கைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2018 8:41 am

பிறந்தநாள் வாழ்த்து.


என்ன கேட்டாய் என் நண்பா !
எனைப்பார்த்து கேட்டாய் ஏன் நண்பா !
வாழ்த்துன்னை சொல்ல வயதில்லை என்றோ ?!
வயல்வெளி நீராய் வற்றினேன் என்றோ!?
நான் உனை வாழ்த்தாது தூங்கினள் நன்றோ!
நண்பனின் பிறந்தநாள் மறப்பவர் உண்டோ ?!!

கண்ணொளி மறைப்பது இமையே!...ஆயினும்
காப்பதும் அதுவே ஞாபகம் கொள்.

பொன்னெடுத் துன்னிடம் வரவில்லை யேனும்,
பொருளெடுத் துன்னிடம் தரவில்லை யேனும்,
கண்ணெடுத் துன்னெழில் காணேன் ஆயினும்.

கண்ணினும் மேல்..,கருத்தினும் மேல்..,
என்னுயிரினும் மேல்..,இவ்வுலகினும் மேல் என.,
மூவுலகறிந்தவர் ஆன்றோர் சான்றோர் ..,
ஆயிர யுகங்களாய் போற்றியே புகழ்ந்திட்ட
நற்ப்பெரும்

மேலும்

இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்.., ******************************************** நம் எழுத்து தள குடும்ப நண்பர்களின் சார்பாகவும் என் குடும்பத்தினர் சார்பாகவும் நல்லாசிகள் தெரிவித்துக் கொள்கிறேன் 31-Aug-2018 4:34 pm
இது வாழ்த்து மடல் அல்ல ,உணர்வுகளின் வார்த்தைக் கோர்வை ,உண்மை உள்ளத்தின் வெளிப்பாடு ,அன்பு அலைகளின் பாய்ச்சல் ,நட்பின் வரிவடிவம் ,வாழ்த்திய கங்கைமணி அவர்களுக்கும் ,வாழ்த்தை பெறுவதற்கு முழுதகுதி பெற்ற அருமை நண்பர் முகமது சர்பான் அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் 29-Aug-2018 7:21 am
மனம் நிறைந்த நன்றிகள் 28-Aug-2018 11:17 pm
மிக அருமை ஒரு நண்பனுக்கு இதை விட சிறப்பாக பிறந்த நாள் வாழ்த்துகள் கூற முடியாது ....வாழ்த்துகள் 28-Aug-2018 9:06 pm
கங்கைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2018 7:25 pm

(கிராமத்தில் நடக்கும் பொங்கல் பண்டிகையைப்பற்றியும் மற்றும் அந்த ஊரின் தெய்வங்களைப்பற்றியும் ,ஊரைப்பற்றியும் சொல்லிவருகிறது இப்பாடல்.எனது நண்பர் ஒருவரின் ஊரில் நடக்கும் திருவிழாவிற்காக எழுதப்பட்டது.இன்னும் சில தினங்களில் இசையோடு வெளிவரவுள்ளது.நமது நண்பர்களின் பார்வைக்காக பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.இப்பாடலில் உள்ள குறை நிறைகளை எடுத்துரைத்தாள் மகிழ்வேன் நன்றி)



ஊரு கூடி ஒறவு கூடி
ஒத்துமையா பொங்கவைச்சோம்.
இனிமே துயரேது...,
இனி நமக்கு இதுதான் வரலாறு !

தெய்வமருளும் .. முன்னோர்னருளும்
ஒண்ணுசேர்ந்து பொங்கிவருது .,
இனிமே பயமேது ...,
இனி நமக்கு எல்லாம் ஜெயம்பாரு !

(ஊரு கூடி ஒறவு

மேலும்

தமிழக கிராம தெய்வ வழிபாடு தமிழ் கவிதை இலக்கிய படைப்பு பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் தினமும் தங்கள் இலக்கிய பயணம் நன்றி 15-Jul-2018 4:53 am
ஒரு தெய்வீகம் உங்கள் பேனாவுக்குள் குடி கொண்டு இருக்கிறது. வார்த்தைகளை வாசிக்கும் போது என்னை அறியாமல் எங்கோ என்னுள்ளம் போய்க் கொண்டிருக்கிறது. ஆன்மிகம் என்ற சுவரில் தொங்கவிடப்பட்ட உள்ளத்து ஓவியம் போல இப்பாடலை பார்க்கும் போது செல்கள் எங்கும் வானிலை. காலத்தின் பாதையில் நொடிகள் கூட அழகானது தான். அது போல இதற்காக நீங்கள் ஒதுக்கிய நிமிடம் முதல் நாட்கள் வரை யாவும் நிச்சயம் பயனுள்ளது. அன்று 'வடம் புடிடா' பாடலில் தொலைந்தவன் இன்னும் மீளவில்லை. யார் கேட்டாலும் கொடுத்து விடாதீர்கள் 'வடம் புடிடா' பாடல் எனக்கு வேணும். நிச்சயம் இப்பாடலை மிகுந்த ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கிறேன். தவம் போல அமையட்டும் வரம் யாவும் கை கூடத்தும். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-May-2018 1:42 pm
மிக்க நன்றி ஐயா !நிச்சயமாக youtube லிங்க் ஐ இதில் பதிவிடுகிறேன்.தாங்களும் ஒரு இசையமைப்பாளர் என்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.நன்றி 02-May-2018 11:45 am
அசத்திட்டாங்க போங்க அருமை நண்பரே உங்க நண்பரின் ஊருக்கே போய்விட்டு, போன்களில் கலந்துகொண்ட மாதிரி இருந்தது .............மெட்டுப்போட்ட பின்னே யூடுபே அனுப்புங்க நானும் இசை அமைப்பவனே கேட்டு மகிழ்வேன். 01-May-2018 9:06 am
மலர்91 அளித்த படைப்பை (public) குமரிப்பையன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Jan-2017 12:45 pm

தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள்


எஸ். செல்வராஜ்,
-கோ. சோ. கவியரசு (மேட்டூர்)







முந்தைய தி.மு.க ஆட்சியில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசு மீண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்புத்தாண்டு என மாற்றி விட்ட நிலையில் உண்மையை உரக்க சொல்ல வேண்டு மென்ற நோக்கில் இக்கட்டுரையை பொது அறிவு உலகம் வெளியிடுகிறது.


சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே! சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின

மேலும்

ஐயா ! இது மிகச்சிறந்த விளக்கம் !.எனக்கு இக்கட்டுரை மிக பயனுள்ளதாக உள்ளது.நான்கூட தமிழ் புத்தாண்டை தி மு க அரசியச்செய்கிறது என்று நினைத்தேன் அது இந்த விளக்கத்தில் தெளிவானது.ஆனாலும் எனக்கு ஒரு சிறு ஐயம்...! கலைஞர் க்குமுன் எத்தனையோ அறிஞர் பெருமக்கள் இருந்துவிட்டு சென்றிருக்கிறார்கள் இத்தமிழினத்தில் ஆனால் யாரும் பெரிதாக தாய் ஒன்றை ஆண்டின் முதல் நாளாக அறிவிக்கவேண்டும் என்று முயற்சித்ததாக தெரியவில்லை.நன்றிகள் ஐயா தாங்கள் ஒரு மிகச்சிறந்த செயல் செய்துள்ளீர் வாழ்த்துக்கள் 17-Apr-2018 2:10 pm
மிக்க நன்றி கவிஞரே. 16-Apr-2018 11:22 am
ஒவ்வொரு தமிழனும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..! நான் படித்தேன்..பகர்ந்தேன்.! 17-Apr-2017 5:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (217)

இளவல்

இளவல்

மணப்பாடு
ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
வினோ

வினோ

துபாய்

இவர் பின்தொடர்பவர்கள் (217)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (218)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே