jayakumari - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  jayakumari
இடம்:  madurai
பிறந்த தேதி :  05-Jul-1976
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Feb-2014
பார்த்தவர்கள்:  509
புள்ளி:  59

என்னைப் பற்றி...

தமிழ் மீது ஆர்வமும் பற்றும் உண்டு. இந்த இணையத்தின் முலம் பல படைப்புகளை படிக்கவும், எனது சில படைப்புகளை இந்த
இணையத்தில் வெளியிடவும் விரும்பி இணைந்துள்ளேன்.

என் படைப்புகள்
jayakumari செய்திகள்
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) Arulmathi மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
jayakumari - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2015 6:09 pm

விரலிடுக்கில் பிடித்து
ஒரு முனையில் தீ மூட்டி
மறுமுனையை பற்றி
உதடுகளில் பொருத்தி
உயிரை உறிஞ்சி
சிறிது சிறிதாய் உருக்கி
இறுதியில்
காலடியில் மிதித்து நசுக்கி
அலட்சியமாய் புகை கசிய
நடந்தாயே...
நண்பா...!
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்."
என்னும் திருக்குறளை
நீ அறிவாயா..?

மேலும்

புகை! உயிருக்கு சிறுக சிறுக கொல்லி!.. 09-Aug-2015 9:11 pm
யாழ்மொழி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2015 2:32 pm

அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....

பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....

இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட

மேலும்

அருமையான வரிகள் 24-Nov-2017 5:55 pm
மனம் தொடும் கவிதை 27-Aug-2015 4:35 pm
மனம் தத் கவிதை பாராட்டுகள் 02-Aug-2015 8:04 pm
படைப்பு என்பது துளியேனும் நெகிழ்த்த வேண்டும்.உங்கள் கவிதை துளியல்ல...மழையாய்... 11-Jun-2015 12:16 pm
அஹமது அலி அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Sep-2014 9:23 am

மூன்றுக்காறென்ற
முறையான அளவில்
வெட்டப்படும்
உன்னைக் கேட்காமல்
உனக்கொரு வீடு
கட்டப்படும்!

பளிங்கு மாளிகை
பல இருந்தாலும்-இறுதியில்
பதுங்கும் குழி
சவக்குழி!

கதவு சன்னல் கிடையாது
பூட்டும் வீடு திறக்காது
சாவி இல்லாத வீடு
காற்றும் புகாத வீடு!

எறும்பண்டாத
எண்சான் உடம்பை
மண்ணும் கறையானும்
மாறி மாறி உண்ணும்!

உண்ணும் பிராணியாய்
உயிர் வாழ்ந்தவன்
உண்ணும் உணவாய்
உள்ளே கிடக்கிறாய்!

ஆட்டமாய் ஆடி
அடங்கிய பின்
கூட்டமாய் வந்து அடக்கிட
வந்திடும் அமைதி
அது தான் சமாதி!

உள்ளே வைத்த பின்
விரைந்து மூடுவது
எழுந்திடுவாய் என்பதற்கல்ல
நாங்கள் விரைந்திட!

வெளிப் பார்வைக்கு
உன

மேலும்

வரவில் மகிழ்வு ரசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி 26-Sep-2014 8:15 am
வரவில் மகிழ்வு ரசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி தோழரே 26-Sep-2014 8:14 am
வரவில் மகிழ்வு ரசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி 26-Sep-2014 8:14 am
உண்ணும் பிராணியாய் உயிர் வாழ்ந்தவன் உண்ணும் உணவாய் உள்ளே கிடக்கிறாய்! உண்ணப்படும் உணவாய் என்று சொல்லியிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும். அருமை உங்கள் படைப்பு. 24-Sep-2014 11:08 am
snehapriya அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Mar-2014 10:54 pm

அன்பானவர்களின் அன்பை
இழந்த அனைவருமே
அனாதைகள்தான்...!!!

மேலும்

நம்மில் பல்பேர்க்கு இந்த நிலைதான் 13-Sep-2014 11:33 am
படமும் கவிதையும் அருமை. 12-Sep-2014 3:36 pm
nandri :) 13-Mar-2014 9:56 am
mikka nandri thozamaiye :) 13-Mar-2014 9:56 am
jayakumari - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2014 4:13 pm

(கணிணி தேவதைகளுக்கு ஒரு கவன ஈர்ப்புக் கவிதை)
பட்டங்கள் ஆளவும்
சட்டங்கள் செய்யவும்
பூமிக்கு வந்த
புதுமைப் பெண்களே..!
அடுக்களை விலங்கினை
காலிலிருந்து கழற்றி விட்டு
அலுவலக விலங்கினை
கழுத்தில் மாட்டியிருப்பதை
நீ அறிவாயா ?
அன்றும் சரி...
இன்றும் சரி...
ஆணுக்கு உத்தியோகம் ஒன்றுதான்
புருசலட்சணம்...!
ஆனால் உத்தியோகம் மட்டுமல்ல...
உன் லட்சணம்...!
மாற்றாந்தாயிடம் விட்டு விட்டாய்
உன் மழலையை...
கணவனுக்கும் காட்டுவதில்லை
உன் கருணையை...
பெற்றோரும் கூட
உனக்கு மற்றவர்களாகினரோ...?
இல்லறத்தை நல்லறமாக்கும்
மகிமையை மறந்தே விட்டாயா...?
நடுநிசியில் உன் உறக்கம்...!
நண்பகலில் உன

மேலும்

ஊக்கம் தரும் உங்கள் விரிவான கருத்துக்கு நன்றிகள் பல. 13-Sep-2014 11:45 am
தலைப்பும் கருத்தும் அருமை. ஆடம்பர மோகத்தில் மூழ்கி குடும்ப வாழ்க்கையைப் புறக்கணித்து மேனாட்டு நாகரிகத்தைப் போற்றிப் பின்பற்றி இல்லற இன்பத்தை துய்க்கத் தெரியாத மங்கயர்க்கு அருமையான அறிவுரை. நெறி தவறுவோரை உங்களைப் போன்ற கவிஞர்களால் தான் நேர்வழிக்குக் கொண்டுவரமுடியும். வாழ்த்துகிறேன் தோழமையே. 13-Sep-2014 11:33 am
மிக்க நன்றி. 12-Sep-2014 2:42 pm
மிக்க நன்றி. 12-Sep-2014 2:42 pm
jayakumari - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2014 1:23 pm

கார் சிக்னலில் நின்றது. மாலை மணி 4.30
ஆனந்தன் கார் ஜன்னல் வழியே விளக்குக் கம்பத்தைப் பார்த்தான். வினாடிகள் 77, 76, 75... என்று குறைந்து கொண்டே வர ஆனந்தனுக்கு சற்றே பதட்டமாக இருந்தது. 5.00 மணிக்குள் ஏர்போர்டில் இருக்க வேண்டும். வரவிருக்கும் வெளிநாட்டு தொழில் அதிபர்களை வரவேற்க வேண்டும். அவன் சிந்தனை ஏர்போர்ட்டிலேயே இருக்க...
அவனது கைபேசி அழைத்தது. மனைவி. எடுத்து காதில் வைத்தான்.
"ஹலோ டாடி" பேசியது பதினோரு வயது மகள் வான்மதி.
"சொல்லுடா" என்றான்.
"அப்பா காலைல உங்ககிட்ட சொன்னேனே இன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஆண்டு விழாப்பா.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்கப் போகுது. அம்மா வந்துட்டாங்க...நீங்களும் வா

மேலும்

அருமை நட்பே...! 14-Aug-2014 2:58 pm
jayakumari - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2014 5:21 pm

மனைவி சமையலறையில்.
கணவன் உள் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
உள்ளேயிருந்து தொம் என்று சத்தம் கேட்டது.
மனைவி : என்னப்பா சத்தம் அங்கே?
கணவன் : ஒன்றுமில்லை என் சட்டை பேன்ட் கீழே விழுந்து விட்டது.
மனைவி : அதற்கு ஏன் இவ்வளவு பெரிய சத்தம்.?
கணவன் : அந்த சட்டை பேன்டுக்குள் தான் நான் இருந்தேனே ...???

மேலும்

jayakumari - அகத்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2014 12:14 pm

தண்ணீர் தண்ணீர் தண்ணீர் !
தண்ணீரின்றி கண்ணீர்.
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் !
கண்ணீர் கூட தண்ணீர்.

தோண்ட, தோண்ட சுரந்திடுமே,
குடிக்க, குடிக்க இனித்திடுமே.
பூமிக்கடியில் பிறந்திடுமே,
உயிர்கள் வாழ உதவிடுமே.

தண்ணீரின்றி வாழ்வா-அது
சாத்தியமில்லையாட.
தண்ணீரின்றி போனால்,
உலகம் சமாதியாகுமடா.

பூமிக்கடியில் எங்கும்
புதைந்துகிடக்கும் தங்கம்,
தோண்ட, தோண்ட பொங்கும்,
தண்ணீரே! வாழ்வின் அங்கம்...

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் 03-Jun-2014 7:40 am
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் 03-Jun-2014 7:40 am
தண்ணீரை சேமிக்கா விடில் தவித்திடும் தரணியெல்லாம் //அருமை தோழரே 02-Jun-2014 10:48 pm
தாகத்தின்போதுதான் தண்ணீரின் அருமை புரியும்.. 02-Jun-2014 10:44 pm
jayakumari - செல்ல கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2014 11:58 am

> விவசாயப் பெருங்குடி மக்களே…
எங்கள் குரல்
உங்கள்
செவித்துளைக்கிறதா இல்லையா?
உம் வியர்வையில் நனைந்த
எம் கைப்பிடி வாசம்
நாசி தொடுகிறதா இல்லையா?
உம் கைகளில் இருக்கும்
ஆறிய காயங்களாவது
எம்மை ஞாபகபடுத்துகிறதா இல்லையா?

> நாங்கள்தான்
துருப்பிடித்த கதிர் அறுக்கும் அரிவாள்(ட்)கள் பேசுகிறோம்…!

> சாகுபடி நிலம் வைத்திருக்கும்
நீங்களெல்லாம்
”விவசாயிகள்” என்று
கூறிகொள்ள வேண்டாம்…
தயவு கூர்ந்து
”விவசாய முதலாளிகள்” என்று
கூறுங்கள்..

> என்று எம்
ஏர்பூட்டிய மாடுகளையெல்லாம்
விரட்டியடித்து
உள்ளே புகுந்த
டிராக்டர்கள்(TRACTORS) சிரித்தனவோ
அன்று விழுந்தது ஒரு அடி
விவசாயிகளின் முதுகில்

மேலும்

உண்மை நிலையை உரக்கச்சொல்லும் படைப்பு! சிந்தனை சிறப்பு! 16-Mar-2014 9:06 am
செம்மை டா மச்சான்.. வரிகள் எளிமையாக செதுக்கப்பட்டு நிலை உணர்த்துகிறது... சமூகத்தின் ஒரு மிகப்பெரிய பகுதியை வைத்து கவிதை புனைய முயற்சித்திருக்கிறாய்.. வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு பத்தியிலும் கருத்து அருமை... ஒவ்வொரு பத்தியிலும் இன்னும் வலி திணித்திருக்கலாம்.. மிகச்சிறந்த முயற்சி மச்சான்.... வாழ்த்துக்கள்.. 07-Mar-2014 5:24 pm
நல்ல கருத்துப் பதிவு... 06-Mar-2014 3:18 pm
மிக அருமையான படைப்பு. 06-Mar-2014 2:06 pm
jayakumari - jayakumari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2014 3:01 pm

உன் திருமுகத்தை ஒரு முகமாக்கி
என் அகக்கண்ணில் சிறை வைத்துள்ளேன்...!
உன் நினைவுகளை பசுமையாக்கி
என் இதயத்தில் பதியமிட்டிருக்கிறேன்...!
உன் நேசத்தை சுவாசமாக்கி
என் உயிர்க்கூட்டில் கட்டியிருக்கிறேன்...!
விழத்துடித்த கண்ணீரை
என் விழிகளுக்குள் பூட்டி வைத்திருக்கிறேன்..!
எத்தனையோ தயார் செய்தேன்
என்னை நானே...
அத்தனையும் மறந்து போய்...!
கலங்குகிறது கண்ணும் மனசும்...
பொருள் தேடி தூர தேசம் செல்லும் நீ...
கையசைத்து கடந்து சென்ற பின்...!

மேலும்

jayakumari - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2014 3:05 am

போதும் ஓடியது
நிறுத்துங்கள்........
ஏன் இந்த தாகம்......?

இளைப்பாறுங்கள்
இரு நொடி....
என் கரம்
பற்றி என்னோடு வாருங்கள்......!
என் அதிசய
உலகிற்கு......!

அங்கே......
வண்ணத்து பூச்சிகள்
பன்னீர் தெளிக்கும்......

மின்மினிகள்
முத்தமிடும்........!

வானவில்கள்
குடை பிடிக்கும்.......!

தேவதைகள்
தேநீர் கொடுப்பார்கள்........!

வெண்ணிற
இரவுகளில் விண்மீன்கள்
பிரகாசிக்கும்........!

எல்லா காலங்களும்
வசந்த காலங்கள்
என மலரும்........!

சோலைகளில்
தெருக்களில்
கூரைகளில்
நதிகளில்
இதயங்களில்
எங்கெங்கிலும்
அன்பு நிறைந்திருக்கும்......!

என் அதிசய
உலகின் ரகசியம்

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே.......! 09-Mar-2014 9:39 am
அன்பின் வழியது உயர்நிலை அறிந்தால் வாழ்க்கை மெய்நிலை ! இன்பம் சுரக்கும் அன்பு இல்லது போனால் வம்பு ! அன்பே உயர்வு நம்பு ! அழகாய் சொன்னாய் நட்பே ! 09-Mar-2014 9:18 am
அருகைக்கும் கருத்து பதிந்தமைக்கும் புத்துணர்வு தந்தமைக்கும் மிக்க நன்று தோழமையே..........! 09-Mar-2014 12:44 am
புதிய வைரமுத்து அவதானித்து விட்டார்...! மிக மிக அருமையான அழகான கவிதையில் காட்சிப்படுத்திய அதிசய உலகம் அற்புதம்.. சொர்க்கம்..! . அசந்துவிட்டேன். 09-Mar-2014 12:40 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

சக்தி ராகவா

சக்தி ராகவா

சென்னை
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
எம். செல்வ கணேஷ்

எம். செல்வ கணேஷ்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (38)

சிவா

சிவா

Malaysia
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (38)

user photo

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
மேலே