kanagaraja - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kanagaraja
இடம்:  PUDUKOTTAI
பிறந்த தேதி :  15-Jul-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Nov-2012
பார்த்தவர்கள்:  146
புள்ளி:  9

என்னைப் பற்றி...

இளைய தாமரை ரசிகன் ...
கவிமகளின் கவி ப்ரியனும் நானே ...

என் படைப்புகள்
kanagaraja செய்திகள்
PRIYA அளித்த படைப்பில் (public) priya k மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Oct-2014 10:37 pm

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
மஞ்சள் தாலி சுமந்த நாள் முதலாய்.....

பட்டாம்பூச்சி வாழ்க்கையிங்கு
பணிதேனி வாழ்வானது

பொறுப்பின்றி கழிந்த நாட்களது
கடமைகளை சுமந்து எதிர் நாட்கள்

அலுவலகத்தை அரை நாள் சுமக்க
அடுக்களையை கால் நாள் சுமக்க
அன்பானவனை மீதி நாள் சுமக்க
சுமைதாங்கியாய் ஒரு நாள் மட்டும் அல்ல
ஒவ்வொருநாளும்......

கவிதையே உலகமென
கழிந்த நாட்கள் அன்று
கவிதை என்ற வார்த்தையே
மறந்து போகுதே இன்று...

மின்னலென வந்து போகும்
கவிதை வரிகள்....

சன்னலோர பேருந்து பயணங்களில்
உச்சி வெயிலில் ஒற்றை மரத்தடியில்
பசியில் உறங்கிகொண்டிருக்கும்
தேகம் மெலிந்த மூதாட்டியை

மேலும்

இக்கவிதைக்கு கருத்துகள் வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி... 21-Dec-2014 9:15 am
அய்ங் .. இதுக்குத்தெங் சொல்ரது நேரங்கிடைக்கும்போதே எழுதித் தள்ளிப்புடணுமின்னு... இப்பவும் ஒண்ணும் கொறஞ்சி போயிடல... எழுதும்போது எழுதுங்க... எழுத்துல ஒரு மிளிரல் இருக்குதுல்லா.... 19-Dec-2014 5:33 pm
கவிதயின் மூலம் தங்களின் கவி ஏக்கம் புரிகிறது தோழி.......தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள் வாழ்த்துக்கள் தோழி..! 09-Dec-2014 11:00 am
"பரிதாபத்தில் வெறுப்பில் கோபத்தில் மின்னல் போல வந்து செல்லும் வார்த்தைகள்.... நின்று நிதானித்து சிந்தித்து எழுத கூட நேரம் ஒதுக்க இயலாது ஓடுகிறேன்... ஓடுகிறேன்... ஓடுகிறேன்... மனைவி எனும் பொறுப்போடும் அரசாங்க ஊழியர் என்ற பதவியோடும்...... !" ---- இன்னும் உங்களுக்கு பொறுப்புகள் கூடும்.பொறுமையாய் நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் பிரியா.தளத்திற்குள் நுழைய நேரம் கிடைக்காதபோது தோன்றுவதையெல்லாம், ஒரு நோட்டில் பதிவு செய்யுங்கள்.அல்லது அலைபேசியில் பேசி பதிவு செய்யுங்கள். பின்னர் அதனை எழுத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அதுவரை வரமுடியவில்லையே,எழுத முடியவில்லையே என்று கவலைகள் வேண்டாம்..! காரணம்.. தமிழ்நாட்டில் இதுவரை எழுதப் பட்டுள்ள "கவிதைகளை" விட..."கவிஞர்கள்" அதிகமாகத்தான் இருக்கிறோம்..! ஹி..ஹி..! 08-Dec-2014 9:54 pm
kanagaraja - PRIYA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2014 10:09 am

மண வாழ்க்கை
மணம் வீசாமல், சிலருக்கு
மனதில் அலை வீசுவதும் ஏனோ...?

கல்யாண வாழ்வில்
கல் போல் மனம் கொண்டு
வாழ்வதும் இங்கு சரிதானோ...?

புரிதலின்றியும் புரிதலுக்கான
புரிதலை புதைத்து வைப்பதும்
புண்ணாகி வதைப்பதும் முறைதானோ...?

எனக்கென நீயும்
உனக்கென நானும்
வாழ்வதை விடுத்து
எனக்கென நான் இருப்பேன்
உனக்கென நீ இரு என உரைப்பதும் முறைதானோ....?

மௌனமாய் நின்று
மெல்ல மெல்ல உயிரை
உருக்குவதும் சரிதானா... ?

இவ்வாழ்க்கையே
இல்வாழ்க்கையே
இவ்வளவுதானா....?


-PRIYA

மேலும்

Hopefully will be Fine... 24-Jul-2014 2:07 pm
kanagaraja - PRIYA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2014 6:48 pm

காதலெனும் மாயக்கண்ணாடி
பல விந்தைகள் செய்திடுமே
உன் முன்னாடி ....

சிரித்தால் சிரித்திடும்
சில சமயம் அழுதிடும்...
அழுதால் அழுதிடும்
சில சமயம் சிரித்திடும்...

கருப்பு வெள்ளை விழிகளில்
பல வண்ண கனவு காட்டிடும்
வண்ண கனவுகளை
கலைத்து கரைந்திடும்

நினைவாலே அணைத்திடும்
உறங்க விடாமலே
உன் உள்ளத்தை குளிரவைத்திடும்

வார்த்தையாலே கொன்றுவிடும்
கண்களில் நீரை பெருக்கிடும்....

காதலெனும் மாயக்கண்ணாடி
மாயை செய்தால் மயங்கிடுமே
மனக்கண்ணாடி..
மயங்கினால் விளைவது என்னாடி
நாடி துடிப்பு துள்ளுமே
அவன் முன்னாடி....

கவனமடி
பெண்ணே
கவனமடி

மேலும்

மயங்கினால் விளைவது என்னாடி நாடி துடிப்பு துள்ளுமே அவன் முன்னாடி.... 17-Jun-2014 2:54 pm
மிக அருமை வாழ்த்துக்கள் 28-May-2014 3:35 pm
நன்றி 25-May-2014 7:46 pm
நன்றி தோழரே 25-May-2014 7:46 pm
PRIYA அளித்த படைப்பில் (public) ஆண்டன் பெனி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Mar-2013 11:47 pm

அதிகாலை
அழகான கோலம்
அமைதியாய் ரசித்திட
என் அருகில்
நீ இல்லை...

நீர் இறைத்து
நீ இறைத்து,நீரை
என்மீது இறைத்து
நீராடிட- என் அருகில்
நீ இல்லை...

காலத்தோடு
காலை உணவு
மடி மீது அமரவைத்து
மகிழ்ந்துண்ண- என் அருகில்
நீ இல்லை...

நடுப்பகலில் ஓர்
தொலைக்காட்சி நாடகம்
நம்மிருவரும் அதனுள்
தொலைய, என் அருகில்
நீ இல்லை...

மாலை வரை
மயங்கி நானுறங்க
உன் இதழ் வைத்து
விழி திறக்க என் அருகில்
நீ இல்லை...

மஞ்சள் மாலை
மயக்கும் தூறல்
ஒரு கோப்பை தேநீர்
பகிர்ந்து ருசிக்க,என் அருகில்
நீ இல்லை...

மொட்டை மாடி
ஒற்றை கட்டில்
பனிக்காற்று
கருப்பு வானம்
வெண்

மேலும்

கலங்க வாய்த்த வரிகள் ... 04-May-2014 11:46 am
பிரிவின் வலியை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.. 25-Jun-2013 12:06 am
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி ஹஜ்ஜா அக்கா... இது மணமாகாத பெண்ணான என் கற்பனை கவிதையே... என் வாழ்க்கை கதை( கவிதை )அல்ல.. 26-Mar-2013 7:46 am
என்னால் மறக்க முடியாத படைப்பு தங்களுடையது! இவ்வளவு அழகாய் எழுதிவுள்ளீர்கள் என்று பாராட்டுவதா இல்லை நீங்கள் என்னுள் ஏற்படித்திய சோகத்தில் முழுதும் மூழ்கி வெளிவருவதா? பெரிய தாக்கத்தை என்னுள் உண்டாகிய படைப்பு! எதையும் இழந்தபின் வருந்துவது இயற்கையே. ஆனால் இருக்கும் பொழுது கொண்டாடுங்கள் மறவாமல் மறுக்காமல். இன்று நம்மிடம் இருக்கும் உயிர்களும் உறவுகளும் நாளாய் நீடிக்கும் என்பது உறுதி அல்ல. உறவை பிரிந்த பின்னும் உயிரை இழந்த பின்னும் இருக்கும் பொழுது உதாசீனப் படுத்தியதை எண்ணி எண்ணி வருத்தம் தான் மிஞ்சும். ஏதும் நிரந்தரமல்ல நாமும். அன்பை அதிகம் கொடும்ப்போம். நிச்சயம் பெறுவோம் பல மடங்காக. 26-Mar-2013 7:11 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (31)

Ramani

Ramani

Trichy
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட
kavibalan

kavibalan

kovai

இவரை பின்தொடர்பவர்கள் (31)

மேலே