சு.அய்யப்பன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சு.அய்யப்பன்
இடம்:  கோவில்பட்டி
பிறந்த தேதி :  29-Oct-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jan-2014
பார்த்தவர்கள்:  1857
புள்ளி:  736

என்னைப் பற்றி...

பாரதியால் எழுத வந்தேன்rnகண்ணதாசனின் பாடலில் லயிப்பேன்rnகாவியக்கவிஞரின் வாழ்த்தைப் பெற்றேன்

என் படைப்புகள்
சு.அய்யப்பன் செய்திகள்
சு.அய்யப்பன் - சு.அய்யப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2016 12:41 pm

காளி தலைகவிழ கால்நடம் செய்தவர்யார்?
காளையார் என்று கதைப்போரே -கேளுங்கள்
காளி தலைகவிழ கண்ணனே செய்திட்டான்
காளிங்கன் மேலாடுங் கால்

காளையார் -சிவனார்

காளி தலைகவிழ செய்தவர் சிவன் ஆம் தில்லையில் ஊர்த்துவத்தில் காளியை வென்றார்

கண்ணனும் காளிங்கன் என்ற காளி தலைகவிழ காளிங்க மர்த்தனம் செய்தானே அவனும் காளி தலைகவிழச் செய்தவன் தானே

மேலும்

நன்றி ஐயா 20-Feb-2023 11:49 am
மரபு வழியில் நம் பயணம் 11-Sep-2016 11:23 pm
சு.அய்யப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2023 5:42 pm

பால சுந்தரி
பால சுந்தரி பாடகங் கொண்டவள்
பாட முந்தரப் பாடகம் தந்தவள்
பாலன் நெஞ்சிலே ஆடகப் பொற்கொடி
பாட வந்தருள் ஆடகப் பொற்கொடி
கால காலனும் கைதொழும் பிள்ளையே
கைவ ணங்குவார்க் கன்னையாம் பிள்ளையே
மூல மாயவள் முத்திரை காட்டியே
முத்தி நல்குவாள் முத்திரை நீக்கியே
பாடகம் - கொலுசு
பாடு + அகம் - பாடகம்
ஆடகப் பொன்
ஆடு அகம் ஆடகம்
மகேஸ்வரி விடையினில் விரைகவே
மலர்களில் மணப்பவள் வருகவே
மனங்களி லமைதியை யருள்கவே
மலைமகள் தோள்களி லுதித்தவள்
மகேஸ்வரி விடையினில் விரைகவே
மலர்கள்மல் லிகைவில்வம் ஏற்பவள்
மனங்களில் வலிமையை யருள்கவே
கலை, வளம் நலங்களை யருள்பவள்
கவிமடல் மலர்ந்திட வருள்கவே

மேலும்

சு.அய்யப்பன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Jan-2016 5:14 pm

வரமே யருளும் வடைமா லையனே
சிரஞ்சீ வியெனத் திகழ்வா னரனே
அரணே யருளும் கதையா யுதனே
சரணஞ் சரணங் கவிநா யகனே

மேலும்

நன்றி ஐயா 05-Sep-2022 1:15 pm
நன்றி ஐயா 05-Sep-2022 1:14 pm
அருமை மிகவும் அருமை என்றும் இது போல் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2016 10:16 pm
ஆஞ்சநேயனுக்கு ஒரு கலிவிருத்தப் பா மாலை. வாழ்த்துகள் கந்ததாசன். 10-Jan-2016 5:21 pm
சு.அய்யப்பன் - சு.அய்யப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2016 4:02 pm

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இதயம் உனக்குத் துணையாகும்..
எதற்கெடுத் தாலும் பயந்துகொண் டிருந்தால்
அதுவே உனக்கு வினையாகும்…
உதவி வாழும் வாழ்க்கை தானே
உனக்கும் எனக்கும் வரமாகும்
பதறிப் பதறி வாழும் வாழ்க்கை
பார மாகும் சுமையாகும் (1)

வந்த வாழ்க்கை வரமாகும் நெறியில்
வாழும் வாழ்க்கை தவமாகும்
இந்த வாழ்க்கை பாரம் என்றால்
உன்நிழல் உனக்கேச் சுமையாகும்
தந்த வரம்தான் தாவரம் என்று
தருக்களும் தன்னைத் தருகிறது
வந்த வரம்தான் வாழ்க்கை என்றால்
வலிமை மனதில் வருகிறது (2)

நீரும் நெருப்பும் காற்றும் கூட
நிலத்தில் தானே கிடைக்கிறது
யாருக் கென்று எழுதி வைத்து
இயற்கை தானா பிரிக்கிறது..?
ஊருக்

மேலும்

நன்றி ஐயா 05-Sep-2022 1:13 pm
வாழ்க்கை எனும் குறுகிய ஓட்டப்பாதையில் அறிந்தும் முழுமையடையாத இலக்குகள் தான் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-May-2016 9:05 am
சு.அய்யப்பன் - சு.அய்யப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2015 8:42 am

தாமரையின் கண்ணொத்த தாமரையாள் கண்ணென்பேன்
தாமரையாள் கையுஞ்செந் தாமரைமேற் றாமரையோ
தாமரையும் நீருயரத் தாமுயரும் கொங்கைகளாம்
தாமரையை நீருயர்த்து தா!

மேலும்

நன்றி ஐயா 05-Sep-2022 1:06 pm
அழகிய வார்த்தைகள் காட்சி அமைக்கும் தோட்டம் இக்கவி 30-Nov-2015 10:13 am
சு.அய்யப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2019 5:58 pm

வேகாமா தாவா விணைமெய் யரலளழ
வாகாக கையிருக்கும் வண்ணமாம்;- ஆகமத்தான்
பேராம் பணிந்திடுவோம் பீடுபுகழ் சேர்ந்திட
சீராக வாழ்வோம் சிறந்து

செய்யுளில் முதல் இரு சீரின் ஒவ்வொரு எழுத்தும் முறையே யரலளழ மெய்யெழுத்தாகக் கொண்டு இணைத்துப் பின் வருமாறு பொருள்கொள்க

கையிருக்கும் வேய்- புல்லங்குழல்
வண்ணம் -கார்
ஆகமத்தான் பேராம்- மால்
பணிந்திடுவோம்- தாள்
பீடுபுகழ் சேர்ந்திட- வாழ்

மேலும்

சு.அய்யப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2019 5:53 pm

மறைகாக்க மீனம் மலைதாங்க வாமை
பொறைகாக்க வேனநர சிம்மம் ;- குறளோன்
அறங்காக்கக் கோடரியன் கண்ணனண்ணன் ராமன்
நெறிகாக்கும் கல்கி நினை

மறை காக்க வேதத்தைக் காக்க மீனம்
மலையைத்தாங்க ஆமை
பொறை என்பது இங்கு பூமி எனக்கொள்க
பொறைகாக்க வேனநர சிம்மம் ;- குறளோன்

ஏனம் வராகம்
குறளோன் வாமனன்

கண்ணன் அண்ணன் இது கண்ணனையும் கண்ணனின் அண்ணன் பல ராமனையும் குறிக்கும்
ஒரே யுகத்தில் இரு அவதாரம் ஒரேசொல்லில் இரு அவதாரமும்
கோடரியன் பரசு ராமன்

மேலும்

சு.அய்யப்பன் - சு.அய்யப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2017 5:46 pm

தமிழ்பிறந்ததால் இசைபிறந்ததா(ம்)?!
இசைபிறந்ததால் தமிழ்பிறந்ததா(ம்)?!
ஒலிபிறந்ததால் மொழிபிறந்ததா(ம்)?!
மொழிபிறந்ததால் ஒலிபிறந்ததா(ம்)?! (தமிழ்)
அடியளந்துதான் கவிபிறந்ததா(ம்)?!
கவிபிறந்துதான் அடியளந்ததா(ம்)?!
எழுத்துவந்துதான் பொழுதளந்ததா(ம்)?!
பொழுதளந்துதான் எழுத்துவந்ததா(ம்)?! (தமிழ்)
ஆசைவந்ததால் ஓசைவந்ததாம்!
ஓசைவந்ததால் வாசிஎன்றதாம்
வாசிஎன்றதால் வாசிக்கின்றதாம்
வாசிக்கின்றதால் சுவாசிஎன்றதாம் (தமிழ்)
உயிர்மெய் இணைந்ததால் உயிர்மெய் வந்ததாம்!?
உயிர்மெய்வந்ததால் உயிர்ப்புவந்ததாம்
இயலெழுந்ததால் இசைபிறந்ததா(ம்)?!
இசைபிறந்ததால் இயலெழுந்ததா(ம்)?! (தமிழ்)
எழுத்துவந்ததால் வார்த்தைவந்ததாம்

மேலும்

சு.அய்யப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2018 6:29 pm

நெஞ்சம் பாடலகளால் நிறையும் பாடு
பிஞ்சுப் பாதங்களால் நிறையும் வீடு
புள்ளிக் கோலங்களால் நிறையும் வாசல்
பிள்ளைப் பாதங்களால் நிறையும் வீடு

நேர காலங்களால் நிறையும் நாள்கள்
வார மாதங்களால் நிறையும் ஆண்டு
வீரர் தியாகங்களால் நிறையும் நாடு
பேரப் பிள்ளைகளால் நிறையும் வீடு

கெஞ்சும் ஊடல்களால் நிறையும் கூடல்
கொஞ்சும் கூடல்களால் நிறையும் காதல்
வெல்லும் எழுத்துக்களால் நிறையும் வார்த்தை
சொல்லும் வார்த்தைகளால் நிறையும் பாடல்
செய்யும் வாதங்களால் நிறையும் ஞாயம்
வைய ஞாயங்களால் நிறையும் நீதி
பாச பந்தங்களால் நிறையும் சொந்தம்
ஓசை சந்தங்களால் நிறையும் சிந்தும்

மேலும்

சு.அய்யப்பன் - சு.அய்யப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2015 10:15 am

நெல்லையில் கோயிலில் நீவிடும் மூச்செண்ணி
கல்லை துளையிட்டார் கண்டீரோ - தில்லையின்
அம்பலமே லோடுகளும் அந்தக் கணக்கென்றால்
அம்பல மாமே அறி(வு)
................................................................................................


நாம் நிமிடத்திற்கு 15 சுவாசம் விடுகின்றோம்
மணிக்கு=60x 15=900
நாளொன்றிகு 900x 24 = 21600

ஆக இந்த கணக்கில் நெல்லையப்பர் கோயிலில் சுவரில் 21600 துளைகள் உள்ளன அதே போன்றே சிதம்பரத்திலும் அதன் மேற்கூரை ஓடுகள் உள்ளன.
விஞ்ஞானத்தை அன்றே நம் மெய்ஞானம் காட்டிற்று அல்லவா.
அம்பலம் என்பது கோயிலையும், அம்பலமானதையும் சிலேடையாக அமைத்துள்ளேன்.

மேலும்

நன்று நன்றி 20-Jul-2015 12:40 pm
நம்முடலில் காணும் நவத்துவா ரத்தையே செம்மைமிகு வாயிலாய்ச் செய்தனர் - அம்மையப்பன் பஞ்சாட் சரத்தின் பயனே படிகளென நெஞ்சார்த்து நின்றதில் லை இருபத்தி எட்டில் இருக்குமாக மங்கள் திருத்தேவன் அம்பலத் தின்தூண் - பொருத்திய சட்டம் அறுபத்தி நான்கும் கலைகளும் கட்டிய எண்ணிக்கை காண் 18-May-2015 8:55 pm
நன்றி அய்யா 18-May-2015 4:51 pm
இரசித்தேன் வியந்தேன் மகிழ்ந்தேன் இனிதாய் இருக்கும் கவிதை நயம் 17-May-2015 7:53 pm
சு.அய்யப்பன் - agan அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1. 2 சொற்கள் 30 வரிகள்
2. 12.7.2014 இரவு 12.00.00 மணிமுதல் 13.7.2014 இரவு 11.59.59 மணி வரை மட்டுமே படைப்புகள் தளத்தில் இப்பகுதியில் மட்டும் பதியலாம் பதிவிடும் படைப்புகள் கருத்துக்கள் அனைத்தும் இந்திய நேரப்படியே இங்கு பதிவாகின்றது...!! எனவே வெளிநாடு வாழ் நம் தோழர்கள் அனைவரும் அவரவர் நாட்டின் நேர அளவு வித்தியாசங்களுக்கு தக்கவாறு இந்திய நேரப்படி தங்கள் படைப்புகளை பதிவேற்றலாம்.தனி விடுகையில் அளிப்பவை ஏற்க இயலாது
3 ஒருவர் ஒரு படைப்பு மட்டுமே அளிக்கலாம்
4. பிறமொழி கலப்பு மற்றும் பிழைகள் மதிப்பெண்களை இழக்க வைக்கும்
5. மரபுக் கவிதை எனில் பா வகைமையைக் குறித்தல் வேண்டும்
6.படைப்புகள் மீதான கர

மேலும்

நன்றி அய்யா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் 30-Jul-2014 7:00 pm
நன்றி அய்யா தங்களின் வாழ்த்திற்கு 30-Jul-2014 6:57 pm
நன்றி அய்யா ! 29-Jul-2014 8:43 pm
நன்றி 29-Jul-2014 8:37 pm
agan அளித்த போட்டியை (public) மலர்91 மற்றும் 9 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

1.தலைப்பு - கவிதை
"மீண்டும் வானம்பாடி "
2.வரிகள் 16 --வரி ஒவ்வொன்றிலும் நான்கு தமிழ்ச் சொற்கள்
3..மரபு மற்றும் புதுக்கவிதை தனி பரிசுகள்
4. பிழைகளுக்கு இடம் இல்லை
5.பங்கேற்பு: தளத்தின் இன்றைய உறுப்பினராக உள்ளவர்கள் மட்டும்
6.ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்

7.நடுவர்கள் : தமிழகத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகள்

மேலும்

என் சிந்தையில் படவில்லை . நன்றி தோழரே. மனதில் இருத்திக் கொண்டேன் . 18-Jul-2014 11:06 am
இனி இம்மாதிரியான ஐயங்களுக்கு தனி விடுகை பயன்படுத்தவும் தோழரே.. 18-Jul-2014 9:22 am
தெளிவு படுத்தியதற்கு நன்றி தோழரே . நான் சரியாக பார்க்கவில்லை போலும் . மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொள்வேன் . நன்றிகள் . 18-Jul-2014 8:38 am
எண்ணம் பகுதியிலும் கவிதை பகுதியிலும் 15.7.14 இரவு 10.10க்கு பதிவிடப்பட்டுள்ளது..பலரும் வாசித்து கருத்துரைத்துள்ளனரே...! எனினும் இங்கும் காண்க... மீண்டும் வானம்பாடி-கவிதைப் போட்டி தோழமை நெஞ்சங்களே மீண்டும் வானம்பாடி கவிதைப்போட்டிக்கு தாங்கள் அளித்த ஆதரவு வாழ்த்துக்குரியது...நன்றிகள்.. இப்போது முடிவுகள்.... ஆண்கள் முதல் பரிசு : தோழர்..பொள்ளாச்சி அபி 2ம் பரிசு :தோழர். நாதன்மாறா 3ம் பரிசு :தோழர்.சிவநாதன் பெண்கள் முதல் பரிசு :தோழர். புலமி அம்பிகா 2ம் பரிசு : தோழர் சியாமளா ராஜசேகரன் 3ம் பரிசு : தோழர்.விஜயலட்சுமி -கவிபாரதி மரபு முதல் பரிசு :தோழர்.ஆதிநாடா 2ம் பரிசு :தோழர் விவேக்பாரதி 3ம் பரிசு :தோழர் ஜோசப் ஜூலியஸ் திருநங்கை பின்னர் அறிவிக்கப்படும் நடுவர் குழாம் எனது நன்றிக்கும் அன்புக்கும் கைம்மாற்றுக்கும் உரியது. தொடர் தெரிவில் குழாம் இருப்பதால் அவர்களை அடையாளப்படுத்திட இயலா சூழலை தோழர்கள் புரிந்துக் கொள்வர் என நம்பு கிறேன். இனி பரிசு பெற்றுள்ள படைப்புகளை ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வுகளும் தளத்தில் பதியலாம்... பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளோடும் அகன் 18-Jul-2014 7:14 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (71)

மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (71)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (71)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே