கவிக்கண்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிக்கண்ணன்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  30-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2014
பார்த்தவர்கள்:  355
புள்ளி:  54

என் படைப்புகள்
கவிக்கண்ணன் செய்திகள்
கவிக்கண்ணன் - கங்கைமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2018 3:43 pm

பெரும் பேறு பெற்றதனால்
பெண்ணாக பிறந்தீரே !
கற்காலம் முதற் தோன்றி
கலிகாலம் கண்டீரே !.

உடன்கட்டை காலத்தில்
உடல்கருகி துடித்தீரே !
சதைப்பிண்டம் போல்வாழ்ந்து
சிதையுற்று செத்தீரே !

முலைக்கச்சை சட்டத்தில்
மானத்தை இழந்தீரே!
காமத்தின் சாபத்தில்
கலங்கித்தான் வாழ்ந்தீரே !.

படிப்பறிவை தடுத்ததனால்
பகுத்தறிவை தொலைத்தீரே !
அடுப்படியில் அன்றாடம்
அனல்சுட்டு வெந்தீரே !

பெண்ணடிமை காலத்தில்
பிழையாக கிடந்தீரே !
ஆண்டவனே ! ஆணென்று
அடங்கித்தான் போனீரே !.

பின்னாளில்.....

பொங்கித்தான் எழுந்தீரே
போர்களமும் புகுந்தீரே.
பேராற்றல்போல் பெண்டிர்
யுக யுகமாய் வளர்ந்தீரே!.

கலை

மேலும்

தங்களின் வரவாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன்.மிக்க நன்றி நண்பா !. 17-Mar-2018 3:51 pm
நெற்றி நண்பா !....இறைவன் நம்மை தொடர்ந்து இயக்கட்டும் .நன்றி 17-Mar-2018 3:32 pm
தங்கள் கூறுவது முற்றிலும் உண்மை !. இனக்கவர்ச்சி என்ற ஒன்றை தவிர்த்து பெண்களை பார்த்தால் அவர்களின் தியாகம் புரியும்,அவர்களின் அன்பு தெரியும் ,அவர்களும் ஒரு மனுஷி என்பது அப்பொழுதுதான் தெரியவரும் .உலகம் மாறவேண்டும் பெண்களின் மீதான பார்வையும் மாறவேண்டும்.சகலத்தையும் படைப்பவளும் ,சகலத்தையும் அழிப்பவளும் பெண்ணே ! அப்பெண்மையை கொண்டாடவேண்டும் என்பதே கடவுளின் கட்டளை செய்தால் ஆண் சமுதாயம் பிழைக்கும் இல்லையேல் இயற்கையும் நம்மை எதிர்க்கும்.புரிந்துகொள்வோம் பெண்மையை போற்றுவோம் !!!. நன்றி தங்கள் கருத்து மிக அருமை என் மனமார்ந்த நன்றிகள் !. 17-Mar-2018 3:31 pm
காலத்திற்கேற்ற படைப்பு , பெண்மைக்கு சிறப்பு ! படைப்பு அருமை வாழ்த்துக்கள் 10-Mar-2018 6:09 pm
கவிக்கண்ணன் - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2016 5:17 pm

கண்ணே அமுதே !
கனிச்சுவையே தேனே .
கதியெனவே நின்றுனைக்
காதலிப்பேன் நானே !
பெண்ணே அழகே !
பெருமைமிகு சீரே .
பெருந்தெய்வம் பேசாதோ
பேரெழிலே நீயே !
விண்ணே மதியே !
வியன்பொருளே மானே !
விடிவெள்ளி நீயன்றோ
விந்தைகள் செய்வாய் .
பண்ணே தமிழே !
பசுமைகீதம் பாடு
பரவசமாய் நேசிப்பேன்
பார்த்துனை யன்றோ ?

மேலும்

தூண்டில் மீன்களை போல் காலத்தின் சதியில் மாட்டிக் கொள்கிறது காதலும் 15-Dec-2016 10:34 am
அருமை!!!! 14-Dec-2016 5:37 pm
வெங்கடேஸ்வரி அளித்த ஓவியத்தில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Aug-2016 5:43 pm

Drawn in MS Paint .....

மேலும்

அழகான ஓவியம்...... கைவண்ணம் அழகு!!!!! 14-Dec-2016 5:18 pm
நன்றி தோழரே.... 27-Sep-2016 2:27 pm
Tom or ஜெர்ரி அருமை 16-Aug-2016 7:46 am
நன்றி தோழரே... 11-Aug-2016 2:27 pm
கவிக்கண்ணன் அளித்த படைப்பில் (public) seyonyazhvaendhan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Jan-2015 3:18 pm

வண்ணமலர் மகரந்தம் களவாடி;

இராட்டைச் சுரங்கத்தில் சேமிக்கும்.

ஈக்களின் எச்சில். - தேன்!!!

மேலும்

அருமையான சிந்தனை .வாழ்த்துக்கள் ! 21-Jul-2016 4:56 am
நன்று தோழரே... 13-May-2015 9:53 pm
அழகு. தொடருங்கள், உங்கள் கவிதைத் தேன் துளிகளை! 12-May-2015 9:17 pm
நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jan-2015 3:49 pm
கவிக்கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 9:47 pm

என் மனமெனும் வானத்தில்
மதி உன்னை
மறைத்து வைத்தேன்.
மனமில்லையா உனக்கு?
வானம் கிழித்த
மின்னல் போல- என்
மனம் கிழித்தது ஏனோ?
மணப்பதற்கு மறைத்த உன்னை,
மதியில்லாமல் - என்
விதி முடித்தாய்
மாண்டு போன என்னுயிர்
மறுபடியும் முளைக்குமா?
மறு பிறப்பெடுத்தேனும் உன்னை
மணக்க போய்வருகிறேன் காதலியே!!!

மேலும்

வரவில் மகிழ்ச்சி தோழரே!!! 30-Apr-2015 10:09 pm
வானம் கிழித்த மின்னல், தலைப்பு புதுமை. 28-Apr-2015 4:45 pm
நன்றி ஐயா...... 09-Feb-2015 11:21 am
நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Feb-2015 12:58 am
கவிக்கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 9:45 pm

அகம் புறம் ஓய்வெடுக்கும்
அகிலம் சுழல்வது அறியாது;
அண்டையர் எவரும் தெரியாது
அமைதி நிலையின் முன்னோடியாம்.
சுவாச சிரைகள் மட்டும்
சுருங்கி விரிந்து விளையாடும்
சுவாரஸ்யம் நிறைந்த இறப்பு!!!

மேலும்

நன்றி தோழியே!!!!!! 08-Feb-2015 11:34 pm
அருமை ..... 08-Feb-2015 10:33 pm
நன்றி தோழரே..... 08-Feb-2015 10:15 pm
கவிக்கண்ணன் - எண்ணம் (public)
08-Feb-2015 9:43 pm

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமை என்னும் பித்து...!?!?!?!

படித்ததில் பிடித்தது

சென்ற வாரம் நான் என்
சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன்.
அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின்
அவர்கள் நீண்ட நாட்களாக
ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக்
கூறி வந்ததை நினைவுபடுத்தினேன்.
எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில்
ஒரு வீட்டுமனை இருப்பதாகவும்
விலையும் சற்று சகாயமாகவுள்ளதாக
வும் கூறினார்.
அதைப் போய்
இன்று பார்த்துவிட்டு வரலாம்
என்று கூறினேன்.
உடனே என் சகோதரி இன்று வேண்டாம்
அண்ணே என்றாள (...)

மேலும்

கவிக்கண்ணன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
08-Feb-2015 9:55 am

மனிதர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது?

மேலும்

ஓகே நண்பரே 18-Feb-2015 1:56 pm
உண்மைதான்... நன்றி தோழரே!!!!! 15-Feb-2015 9:51 pm
கொட்டிய வார்த்தையை அல்ல முடியாது கருவறை வாடகையை அடைக்க முடியாது இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது மரணத்தை யாரும் வெல்ல முடியாது ........ 15-Feb-2015 3:19 pm
உண்மைதான்... நன்றி தோழரே!!!!! 12-Feb-2015 10:07 am
கவிக்கண்ணன் - சுமுத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2015 10:35 am

மருத்துவம் பார்ப்பேன்னு
மனசார நா சொன்னேன்
மனசையும், மண்குடிசையும் பார்த்து
தெகச்சு நின்ன என் ஆத்தா

உனக்காக சேர்ப்பேன்னு
வயலுக்கு நீ போன
முழு வைராக்கியதோட பாதி செருப்போட
கால்காசோட திரும்பி வந்த என் ஆத்தா

கால்காசும் காணலியே
சேத்தகாசும் நிலைக்கலியே
காசோட அப்பன் போன தெசபார்த்து
கலங்கி நின்ன என் ஆத்தா

தடம்மாறி போன அப்பன்
தடுமாறி வீடு வந்தான்
தட்டிவிட்டான் ஓட்ட பாத்திரத்த
மிஞ்சியத நீ திங்கையில என் ஆத்தா

ஓட்ட பாத்திரமும் ஒழுகுற குடிசையும்
வெச்சும் கணக்கு காணல
காணாதத கழுத்துல கண்டாங் கடங்காரன்
குறுகி நின்ன என் ஆத்தா

கஷ்டத்த நீ மாத்துன்னு
கெஞ்சி பாத்த கடவ

மேலும்

மிக உருக்கமான படைப்பு..... 05-Feb-2015 11:49 am
என் மனம் கனக்கிறது ................... 05-Feb-2015 11:01 am
என் கண்கள் கலங்குகின்றன....சொல்ல வார்த்தைகள் இல்லை 05-Feb-2015 10:57 am
கவிக்கண்ணன் - ஜெபீ ஜாக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jan-2015 10:03 am

அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த எனதருமை நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் கடந்த வருடத்தில் நிகழ்ந்த ஒரு அற்புத நிகழ்வை உங்களிடத்தில் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது இடம் மற்றும் திருமண கச்சேரிகளில் பிரபல இசைகலைஞர்களுடன் பாடியும் தொகுத்தும் வழங்கியுள்ள நான் முதன்முதலாக கடந்த டிசம்பர் 2-ம் (02/12/2014) தேதி சென்னை, வடபழனி கமலா தியேட்டர்-ல் நடைபெற்ற “பெருமா கோவில் உண்டச் சோறு” இசைத்தட்டு வெளியீட்டுவிழாவில் விழாத் தொகுப்பாளராக கலந்துகொண்டேன். கடவுள் அருளிய பாக்கியம் எனக்கு கிடைத்ததுபோல் விழாவானது திரு. கல்யாணசுந்தரம் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மற்றும் பிரபல இயக்குனர்

மேலும்

அற்புதம், உண்மையில் சிந்திக்க வேண்டிய விடயம்தான்!!! 03-Jan-2015 10:17 am
கார்த்திகா அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
26-Nov-2014 7:41 am

என் விழிப் பறித்துப்
புன்னகைக்கும் இளமொட்டுகள்
எந்தப் புகைவண்டியில்
தொற்றிக்கொண்டு
புவிக்கு வந்தனவோ
இந்த அதிகாலையில்
அழகழகாய்
இதழாடை உடுத்தியபடி !

இதழோடு இதழ் நெருங்கி
என்ன பேசும் இந்த மலர்ச்செடிகள்
அட!
பனித் துளிகளின்
பாதுகாப்பிற்கு
சூரியனிரண்டு கேட்கப்
போவதாய் பூக்களுக்குள்
புது மாநாடு !

வெள்ளை ரோஜாக்களை
விட்டுவிடலாம் ..
அமைதி வேண்டி
நிறம் வெளுத்த
அப்பாவிகள் அவை !

பீரங்கிச் சிறையில்
காஷ்மீரத்துச்
சிவப்பு ரோஜாக்களாம்!

ஒற்றை நிமிட
கவனக் குறைவினால்
தலை ஒடிந்த கதறல்
சின்னப் பூக்களிடமிருந்து !

கோரிக்கை முன்வைக்க
நேரமின்றி கொத்தாய்

மேலும்

சிறப்பு 23-Dec-2014 2:17 pm
ம்ம்.. ஏதோ சொல்ல வரீகன்னு மட்டும் புரியுது ... ஆனா அது என்னான்னுத்தாங் யோசிச்சிட்டு இருக்கெங்.... இருங்க புரிஞ்சவுக கிட்டே கேட்டுப்புட்டு வாரேங்... ஆனா நீங்க சொல்லியிருக்குறது மட்டும் நல்லா இருக்குது...இல்லை...இல்லை... ரொம்பவே நல்லா இருக்குத்துன்னு மட்டும் தெரியுது... ஆனா புர்ஞ்சிக்க ..புரிஞ்சவுக கிட்டுப்புட்டு வந்துதாங் வோட்டுப் போடுவேங்.. ஆமாங்.... 19-Dec-2014 4:26 pm
அருமையான படைப்பு 16-Dec-2014 11:09 pm
அழகிய பூக்கள் இதமான பனித்துளி வளமான கற்பனை வளம் பெற வாழ்த்துகள் 03-Dec-2014 10:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (166)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தமிழரண்

தமிழரண்

நெடுவாசல் புதுக்கோட்டை
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு

இவர் பின்தொடர்பவர்கள் (167)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மட்டுநகர் கமல்தாஸ்

மட்டுநகர் கமல்தாஸ்

மட்டக்களப்பு

இவரை பின்தொடர்பவர்கள் (167)

மேலே