கார்த்திக் நித்தியானந்தம் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  கார்த்திக் நித்தியானந்தம்
இடம்:  கத்தார்
பிறந்த தேதி :  12-Jul-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jun-2011
பார்த்தவர்கள்:  1656
புள்ளி:  238

என்னைப் பற்றி...

சந்தனமும், சவ்வாதும் கமழ்ந்து வரும்வேளையிலே;
காட்சி தந்து அருளுகிறான் ஆறுபடை வீட்டினிலே!!!

திக்கற்றுத் திரிவோரை தித்திக்கச் செய்திடுவான் திருக்குமரன்!!!
கருணை குணம் கொண்டோரைக் கரம் நீட்டிப் பிடித்திடுவான் கருணாகரன்!!!

பன்னீரின் மணம் கொண்டு கண்ணீரும் மணக்குதடா!!!
துரத்தி வரும் துன்பமெல்லாம் துடி துடித்துப் பறக்குதடா!!!

பாவமென்ற நோய், நொடிகள் படையெடுத்து வருகையிலே;
பற்றிக் கொண்டு எரியுதடி அவன் திருவடியைப் பணிகையிலே!!!

விளைவித்த வினைகளுக்கு விடைத் தருவான் வடிவேலன்!!!
காலம் கொஞ்சம் காத்திருந்தால் காட்சி தருவான் கதிர்வேலன்!!!

ஓம் என்ற ஒரு வார்த்தை உலகெங்கும் ஒலிக்குதடி!!!
ஓம் என்று ஒலிக்கையிலே கனவெல்லாம் பளிக்குதடி!!!

**********************************************************************************************************************************************************************************
என் இனிய சகோதர, சகோதரிகளே!!! உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்...
**********************************************************************************************************************************************************************************

# தானம், தர்மம் செய்பவனும், அதை பெறுபவனும் மட்டுமே இறைவன் இருப்பதை உணர்கின்றனர்!

# உயர்வான குணங்கள்தான் ஒரு மனிதனை முழுமையடையச் செய்கிறது!

# காதல் அவசியம் தேவைதான் ஆனால் அது வாலிபத்திற்கு அல்ல... வாழ்க்கைக்கு!

# காதலியை/காதலனை தேடுவதைவிட தனக்கு சொந்தமாகும் துணையை நேசிப்பதே வாழ்க்கைக்கு உத்தமம்!

# மனம் போல் மாங்கல்யம்!

என்றும் நட்புடன்,
கார்த்திக் நித்தியானந்தம்...

என் படைப்புகள்
கார்த்திக் நித்தியானந்தம் செய்திகள்

மண்ணோடு விதை சேர்ந்து;
மரமாக உருமாறும் செடிபோலே!
மனதோடு மனம் சேர்ந்து;
மலராகி கனியாகும் மணநாளில்!
மகத்தான வாழ்வுக்கு மாலையிட்டு;
மங்கல திலகமிடும் வேளையிலே!
மங்காத உரமென்னும் அன்போடு;
மழையாக வளம்சேர்க்க வாரீரோ...
விதையாக உருமாறும் கனிகளுக்கு!

மேலும்

அப்பாவி மக்கள் அடிமைகளாக வாழும் அவலநிலை இன்றும் மாறவில்லை!
விடுதலை யாருக்கு கிடைத்தது?
மனிதனுக்கா! இல்லை... மண்ணுக்கா!
ஆங்கிலேயர் ஆட்சியில் கூட பாரதமாதா கண்ணீர் வடித்திருக்கமாட்டாள் அன்று;
ஆனால் இங்கு நடக்கும் அக்கிரமங்களை அவள் காணும்பொழுது இன்று!
அதனால்தான் சுதந்திரதினத்தன்று இனிப்பு வழங்குகிறார்களோ!
சமாதானப்படுத்த!!!!!!!!!!!
விடுதலை யாருக்கு கிடைத்தது?
ஏழைக்கா! இல்லை... ஏகாதிபதிக்கா!
இதை அறிந்தும்... அறியாத குடிமகனாய் கூட்டத்தில் நானும் நிற்கின்றேன் மிட்டாய் வாங்க!

மேலும்

கார்த்திக் நித்தியானந்தம் அளித்த படைப்பில் (public) Dr.V.K.Kanniappan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Apr-2015 3:36 pm

இளமையில் மருத நிலத்தில் வாழ்ந்து மீண்டும் ஒருமுறை அந்த சொர்கத்தை திரும்பிப் பார்க்க துடிப்பவர்களுக்கும், மருத நிலத்தைக் காண விரும்புவர்களுக்கும் இக்கதையை பணிவன்புடன் சமர்ப்பணம் செய்கிறேன்.

*******************************************************************************************************************************************************

ஒவ்வொருவருக்கும் காதல் ஒரு வித்தியாசமான அனுபவம். அது ஒரு சிலருக்கு வெற்றியில் முடிந்திருக்கும், ஒரு சிலருக்கு தோல்வியில் முடிந்திருக்கும், இன்னுமொரு சிலருக்கு பெட்டகத்தில் பூட்டிவைத்த அனுப்பப்படாத காதல் கடிதங்களைப் போல் மனதில் நிரந்தர பொக்கிசங்களாக நிறை

மேலும்

அன்புள்ள ஐயா திரு.வ.க.கன்னியப்பன் அவர்களுக்கு வணக்கம், தங்களுடைய நிறைகள் இக்கதைக்கு கிடைத்த பரிசு. தாங்கள் சுட்டிக் காட்டிய குறைகள் எனது அடுத்த படைப்பின் விதை. தாங்கள் கூறியது போல் இக்கதையில் உள்ள குறைகளையும் நிறைகளாக மாற்றிவிட்டேன். அவர்கள் காத்திருக்கும் 13 ஆண்டுகளை தவிர. ஏன் என்றால்; அவர்கள் கொண்ட காதலின் ஆழத்தையும், "காதல் என்பது வாலிபத்திற்கு அல்ல வாழ்க்கைக்கு" என்ற தத்துவத்தை இக்காலத்திற்கு எடுத்துக்காட்டவும் ஆண்டுகளை குறைக்காமல் வைத்துள்ளேன் மன்னிக்கவும். ஐயாவின் பாராட்டை பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி. குறைகளை எடுத்துக் கூறி என்னை மீண்டும் புத்துணர்வு பெற செய்துவிட்டீர்கள். என்றென்றும் தங்களுடைய கருத்தை எதிர்பார்த்து எனது ஒவ்வொரு படைப்பும் காத்திருக்கும். மிக்க நன்றி ஐயா. இவண், கார்த்திக் நித்தியானந்தம். 12-Jul-2015 6:37 pm
அன்புள்ள கார்த்திக், 'மருத நிலத்தில் ஒரு காதல் கதை' வாசித்தேன். அருமையான நடையும், கருத்துக்களும் என்னை மிகவும் ஈர்த்தன. எழுத்துப் பிழைகளே இல்லாத, வடமொழிக் கலப்பும் இல்லாத ஒரு தமிழ் நடை, (ஒரு சில இடங்களில் ஒற்றுக்கள் இல்லாததும் இருப்பதும் தவிர - மேனிக் கொண்டவளே - மேனி கொண்டவளே, செடிக்கொடிகளும் - செடி கொடிகளும்). மருதநிலக் காட்சிகளும், வாழ்க்கை முறையும் எழுதப்பட்டது கிட்டத்தட்ட பிரபல திரு.கல்கி எழுதியதைப் போல பிரமிக்க வைக்கிறது. 'சிவன் கோயிலில் மணி ஒலிக்கும் சப்தம் டிங்…டாங்…டிங்... டிங்…டாங்…டிங்... என்று பறவைகள் பாடும் கானத்திற்கு பின்னிசையாக பிணைந்து குளிர்ந்த இளம் தென்றலோடு கும்.... என்று வீசியது. (கும்.... என்று வீசியது என்பதற்குப் பதிலாக 'கணீரென்று எதிரொலித்தது என்றிருக்கலாம்) வயலில் நடவு நடும் பெண்கள் பாடும் தெம்மாங்குதான் அது. அதற்க்கு பின்னிசையாக உழவர்கள் நெல் மணிகளை பிரிக்க நெற்கதிர்களை கயிற்றில் கட்டி கல்லில் அடிக்கும் சப்தம் டிச்...டிச்… என்று கேட்டது. (நடவு நடும் பெண்கள் என்பதற்குப் பதிலாக அறுவடை செய்யும் பெண்கள் என்றிருக்கலாம்) தோழி நீலவேணியை பள்ளிப் பருவத்திலேயே கொண்டு வந்திருக்கலாம். பொழிலிடை ஆடிடும் மயில் மேனிக் கொண்டவளே; உன் மேனி நான் தீண்ட என்ன தவம் செய்தேனோ! மையிட்டக் கரிய உன் கடைக்கண் பார்வையிலே; மடிந்து நான் போனாலும் மலர்ந்துவர மாட்டேனோ!! - ஒரு அருமையான பாடல். இதில் கீழேயுள்ளபடி இணைத்தால் கலிவிருத்தம் என்ற அமைப்பில் வரும். பொழிலிடை ஆடிடும் மயில்மேனி கொண்டவளே; உன்மேனி நான்தீண்ட என்னதவம் செய்தேனோ! மையிட்ட கரியஉன் கடைக்கண் பார்வையிலே; மடிந்துநான் போனாலும் மலர்ந்துவர மாட்டேனோ!! கதையில் வருவது போல, '13 ஆண்டுகள் கடந்தன' என்றால் முதிர்கன்னியாகவும் 30 வயதைத் தாண்டியவர்களாகவும் இருக்குமே! எனவே, ஒன்றிரண்டு வருடங்கள் காத்திருப்பிற்குப் பின் 23 வயதிற்குள் திருமணத்தை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தை முடித்திருக்கலாம். மிகுந்த பாராட்டுக்கள். உன்னுள் மிகுந்த திறமையும், தமிழ் மொழி வளர்ச்சியும் பொதிந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். உன் பெற்றோர்க்கும், தமிழ் ஆசிரியர்க்கும் என் வணக்கங்கள். அன்புடன், வ.க.கன்னியப்பன் 12-Jul-2015 9:12 am
தாங்கள் இக்கதையை படித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி திரு.ஜின்னா அவர்களே. 12-Jul-2015 3:57 am
ஒவ்வொருவருடைய மனதிலும் புதைந்து கிடக்கும் பழமையான பொக்கிஷங்களை மீண்டும் ஒருமுறை மனத்திரையில் படமாக காட்ட இக்கதையை படைத்தேன் தோழா. தங்களுடைய கருத்து என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது. தாங்கள் பதிவேற்றிய கருத்திலிருந்து தெரிகிறது மருத நிலத்தில் கலந்துவிட்டீரென்று. மிக்க நன்றி திரு.முகம்மது சர்பான் அவர்களே. 12-Jul-2015 3:50 am
கார்த்திக் நித்தியானந்தம் - வாசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 10:49 pm

விடியும் வரை தெரியாது கண்டது கனவு என்று ...

ஜெயிக்கும் வரை தெரியாது கிடைப்பது வெற்றி என்று

என் உயிர் பிரியும் வரை தெரியாது ,பிரிந்தது நாம் தானா என்று... !!!!

மேலும்

தங்கள் வருகைக்கு நன்றி .... 08-Jul-2015 11:43 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Jul-2015 11:30 pm
வாசு அளித்த படைப்பில் (public) priyajose மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Jul-2015 10:59 pm

ஒரு நிமிடத்தில் 82 முறை நினைக்கிறேன் உன்னை , ஆம்
என் இதயம் துடிப்பை விட உன் நினைவு துடிப்பு அதிகம் ..

அனால் 82 மணி நேரத்தில் ஒரு முறை யாவது நீ என்னை பற்றி
சிந்திக்கிறாயா என்று தான் யோசிக்கிறேன் ....

மேலும்

சிந்தனை அழகு. தொடருங்கள். 10-Jul-2015 1:47 pm
உண்மைதான் ..ந ன்றி உங்கள் வருகைக்கும் தோழி 10-Jul-2015 9:49 am
அன்பை பொறுத்துதது தோழரே வாழ்த்துக்கள் தொடருங்கள் 09-Jul-2015 12:41 pm
பிரிந்த ஒரு நட்பின் வலி... நன்றி தோழரே... 09-Jul-2015 8:09 am
கார்த்திக் நித்தியானந்தம் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jul-2015 4:46 am

உன்னை சிரிக்கச் செய்யும் தந்திரம் நான் அறியேன் என்றாலும்;
கலங்கும் உன் விழி துடைக்கும் மந்திரம் நான் அறிவேன்.
தோழனாக...!
மகனாக...!
சகோதரனாக...!
கணவனாக...!
தந்தையாக...!

மேலும்

தங்களுடைய கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி மதிப்பிற்குரிய திரு.ஜின்னா அவர்களே. 11-Jul-2015 2:32 am
பாசத்தின் அனைத்து கதவுகளையும் கவிதை திரந்து வைத்துள்ளது.. சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Jul-2015 2:14 am
மிக்க நன்றி பார்கவி அவர்களே :) 10-Jul-2015 8:31 pm
யாதுமாகி நின்றாய். கவிதை நன்று நட்பே 10-Jul-2015 8:16 pm

உன்னை சிரிக்கச் செய்யும் தந்திரம் நான் அறியேன் என்றாலும்;
கலங்கும் உன் விழி துடைக்கும் மந்திரம் நான் அறிவேன்.
தோழனாக...!
மகனாக...!
சகோதரனாக...!
கணவனாக...!
தந்தையாக...!

மேலும்

தங்களுடைய கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி மதிப்பிற்குரிய திரு.ஜின்னா அவர்களே. 11-Jul-2015 2:32 am
பாசத்தின் அனைத்து கதவுகளையும் கவிதை திரந்து வைத்துள்ளது.. சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Jul-2015 2:14 am
மிக்க நன்றி பார்கவி அவர்களே :) 10-Jul-2015 8:31 pm
யாதுமாகி நின்றாய். கவிதை நன்று நட்பே 10-Jul-2015 8:16 pm

உன்னை சிரிக்கச் செய்யும் தந்திரம் நான் அறியேன் என்றாலும்;
கலங்கும் உன் விழி துடைக்கும் மந்திரம் நான் அறிவேன்.
தோழனாக...!
மகனாக...!
சகோதரனாக...!
கணவனாக...!
தந்தையாக...!

மேலும்

தங்களுடைய கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி மதிப்பிற்குரிய திரு.ஜின்னா அவர்களே. 11-Jul-2015 2:32 am
பாசத்தின் அனைத்து கதவுகளையும் கவிதை திரந்து வைத்துள்ளது.. சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Jul-2015 2:14 am
மிக்க நன்றி பார்கவி அவர்களே :) 10-Jul-2015 8:31 pm
யாதுமாகி நின்றாய். கவிதை நன்று நட்பே 10-Jul-2015 8:16 pm
கார்த்திக் நித்தியானந்தம் அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Apr-2015 3:36 pm

இளமையில் மருத நிலத்தில் வாழ்ந்து மீண்டும் ஒருமுறை அந்த சொர்கத்தை திரும்பிப் பார்க்க துடிப்பவர்களுக்கும், மருத நிலத்தைக் காண விரும்புவர்களுக்கும் இக்கதையை பணிவன்புடன் சமர்ப்பணம் செய்கிறேன்.

*******************************************************************************************************************************************************

ஒவ்வொருவருக்கும் காதல் ஒரு வித்தியாசமான அனுபவம். அது ஒரு சிலருக்கு வெற்றியில் முடிந்திருக்கும், ஒரு சிலருக்கு தோல்வியில் முடிந்திருக்கும், இன்னுமொரு சிலருக்கு பெட்டகத்தில் பூட்டிவைத்த அனுப்பப்படாத காதல் கடிதங்களைப் போல் மனதில் நிரந்தர பொக்கிசங்களாக நிறை

மேலும்

அன்புள்ள ஐயா திரு.வ.க.கன்னியப்பன் அவர்களுக்கு வணக்கம், தங்களுடைய நிறைகள் இக்கதைக்கு கிடைத்த பரிசு. தாங்கள் சுட்டிக் காட்டிய குறைகள் எனது அடுத்த படைப்பின் விதை. தாங்கள் கூறியது போல் இக்கதையில் உள்ள குறைகளையும் நிறைகளாக மாற்றிவிட்டேன். அவர்கள் காத்திருக்கும் 13 ஆண்டுகளை தவிர. ஏன் என்றால்; அவர்கள் கொண்ட காதலின் ஆழத்தையும், "காதல் என்பது வாலிபத்திற்கு அல்ல வாழ்க்கைக்கு" என்ற தத்துவத்தை இக்காலத்திற்கு எடுத்துக்காட்டவும் ஆண்டுகளை குறைக்காமல் வைத்துள்ளேன் மன்னிக்கவும். ஐயாவின் பாராட்டை பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி. குறைகளை எடுத்துக் கூறி என்னை மீண்டும் புத்துணர்வு பெற செய்துவிட்டீர்கள். என்றென்றும் தங்களுடைய கருத்தை எதிர்பார்த்து எனது ஒவ்வொரு படைப்பும் காத்திருக்கும். மிக்க நன்றி ஐயா. இவண், கார்த்திக் நித்தியானந்தம். 12-Jul-2015 6:37 pm
அன்புள்ள கார்த்திக், 'மருத நிலத்தில் ஒரு காதல் கதை' வாசித்தேன். அருமையான நடையும், கருத்துக்களும் என்னை மிகவும் ஈர்த்தன. எழுத்துப் பிழைகளே இல்லாத, வடமொழிக் கலப்பும் இல்லாத ஒரு தமிழ் நடை, (ஒரு சில இடங்களில் ஒற்றுக்கள் இல்லாததும் இருப்பதும் தவிர - மேனிக் கொண்டவளே - மேனி கொண்டவளே, செடிக்கொடிகளும் - செடி கொடிகளும்). மருதநிலக் காட்சிகளும், வாழ்க்கை முறையும் எழுதப்பட்டது கிட்டத்தட்ட பிரபல திரு.கல்கி எழுதியதைப் போல பிரமிக்க வைக்கிறது. 'சிவன் கோயிலில் மணி ஒலிக்கும் சப்தம் டிங்…டாங்…டிங்... டிங்…டாங்…டிங்... என்று பறவைகள் பாடும் கானத்திற்கு பின்னிசையாக பிணைந்து குளிர்ந்த இளம் தென்றலோடு கும்.... என்று வீசியது. (கும்.... என்று வீசியது என்பதற்குப் பதிலாக 'கணீரென்று எதிரொலித்தது என்றிருக்கலாம்) வயலில் நடவு நடும் பெண்கள் பாடும் தெம்மாங்குதான் அது. அதற்க்கு பின்னிசையாக உழவர்கள் நெல் மணிகளை பிரிக்க நெற்கதிர்களை கயிற்றில் கட்டி கல்லில் அடிக்கும் சப்தம் டிச்...டிச்… என்று கேட்டது. (நடவு நடும் பெண்கள் என்பதற்குப் பதிலாக அறுவடை செய்யும் பெண்கள் என்றிருக்கலாம்) தோழி நீலவேணியை பள்ளிப் பருவத்திலேயே கொண்டு வந்திருக்கலாம். பொழிலிடை ஆடிடும் மயில் மேனிக் கொண்டவளே; உன் மேனி நான் தீண்ட என்ன தவம் செய்தேனோ! மையிட்டக் கரிய உன் கடைக்கண் பார்வையிலே; மடிந்து நான் போனாலும் மலர்ந்துவர மாட்டேனோ!! - ஒரு அருமையான பாடல். இதில் கீழேயுள்ளபடி இணைத்தால் கலிவிருத்தம் என்ற அமைப்பில் வரும். பொழிலிடை ஆடிடும் மயில்மேனி கொண்டவளே; உன்மேனி நான்தீண்ட என்னதவம் செய்தேனோ! மையிட்ட கரியஉன் கடைக்கண் பார்வையிலே; மடிந்துநான் போனாலும் மலர்ந்துவர மாட்டேனோ!! கதையில் வருவது போல, '13 ஆண்டுகள் கடந்தன' என்றால் முதிர்கன்னியாகவும் 30 வயதைத் தாண்டியவர்களாகவும் இருக்குமே! எனவே, ஒன்றிரண்டு வருடங்கள் காத்திருப்பிற்குப் பின் 23 வயதிற்குள் திருமணத்தை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தை முடித்திருக்கலாம். மிகுந்த பாராட்டுக்கள். உன்னுள் மிகுந்த திறமையும், தமிழ் மொழி வளர்ச்சியும் பொதிந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். உன் பெற்றோர்க்கும், தமிழ் ஆசிரியர்க்கும் என் வணக்கங்கள். அன்புடன், வ.க.கன்னியப்பன் 12-Jul-2015 9:12 am
தாங்கள் இக்கதையை படித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி திரு.ஜின்னா அவர்களே. 12-Jul-2015 3:57 am
ஒவ்வொருவருடைய மனதிலும் புதைந்து கிடக்கும் பழமையான பொக்கிஷங்களை மீண்டும் ஒருமுறை மனத்திரையில் படமாக காட்ட இக்கதையை படைத்தேன் தோழா. தங்களுடைய கருத்து என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது. தாங்கள் பதிவேற்றிய கருத்திலிருந்து தெரிகிறது மருத நிலத்தில் கலந்துவிட்டீரென்று. மிக்க நன்றி திரு.முகம்மது சர்பான் அவர்களே. 12-Jul-2015 3:50 am

ஒரு வாலிபன் அயல்நாட்டில் பணிபுரிந்துகொண்டிருகின்றான் ஒருநாள் அவனுடன் பணிபுரியும் சக ஊழியரில் ஒருவர் அவனிடம் வந்து "ஏன் சோகமாக இருக்கின்றாய்?" என்று கேட்கின்றார். அதற்க்கு அந்த வாலிபன் அவன் துறையில் உள்ள ஒரு உயரதிகாரியை காட்டி "அவரை போல் என்னால் ஆக முடியவில்லையே" என்று கூறுகின்றான். அதற்க்கு அந்த ஊழியர் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் பணிபுரியும் பல ஊழியர்களை காட்டி "உனக்கு கீழே இவர்கள் பணிபுரிகின்றார்கள்" என்று கூறுகிறார். மறுநொடி அவனது சோகம் சுகமாக மலர்கிறது!

அந்த வாலிபன் என்னுடைய மனம்!
அந்த சக ஊழியர் என்னுடைய மதி!

இவண்,
-கார்த்திக் நித்தியானந்தம்.

மேலும்

ஒரு வாலிபன் அயல்நாட்டில் பணிபுரிந்துகொண்டிருகின்றான் ஒருநாள் அவனுடன் பணிபுரியும் சக ஊழியரில் ஒருவர் அவனிடம் வந்து "ஏன் சோகமாக இருக்கின்றாய்?" என்று கேட்கின்றார். அதற்க்கு அந்த வாலிபன் அவன் துறையில் உள்ள ஒரு உயரதிகாரியை காட்டி "அவரை போல் என்னால் ஆக முடியவில்லையே" என்று கூறுகின்றான். அதற்க்கு அந்த ஊழியர் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் பணிபுரியும் பல ஊழியர்களை காட்டி "உனக்கு கீழே இவர்கள் பணிபுரிகின்றார்கள்" என்று கூறுகிறார். மறுநொடி அவனது சோகம் சுகமாக மலர்கிறது!

அந்த வாலிபன் என்னுடைய மனம்!
அந்த சக ஊழியர் என்னுடைய மதி!

இவண்,
-கார்த்திக் நித்தியானந்தம்.

மேலும்

கார்முகில் போலொருச் செந்தமிழ் மங்கை
வைகறைத் துயிலெழுந்து மஞ்சள் பூசி
நீராடி மேனியெங்கும் சவ்வாது மணக்க
மங்கள உடையணிந்து கூத்தாடும் கூந்தலை
அழகாய் நெய்து மதிமயக்கும் மல்லிகைச் சூடி
நெற்றியிலே செந்தூரத் திலகமிட்டு
வெள்ளி கொலுசு சலசலக்க கண்ணாடி
வளையல் கலகலக்க முத்து மாலை பலபலக்க
கல் பதித்த மூக்குத்தி, காதணி அணிந்து
விழியோரம் நாணத்தை பட்டும் படாமல் தீட்டி
செவ்விதழ் விரித்தொரு புன்னகைப் பூக்க
அடிமேல் அடிவைத்து அன்னமவள் நடந்து வந்தால்!

அடடா... இவள் ஆடவன் கொடுத்தக் கொடையோ!
இல்லை... பிரம்மன் வடித்தச் சிலையோ! இறைவா…
இத்தங்கப் பதுமையைக் காண இமைக்கின்ற
இருவிழிகள் போதாதே; என்னுடல

மேலும்

மிக்க நன்றி சகோதரர் திரு. ஆசை அஜீத் அவர்களே... :) 11-Nov-2014 9:22 am
மிக்க நன்றி சகோதரர் திரு. ஜின்னா அவர்களே... :) 11-Nov-2014 9:21 am
அருமை தோழரே... தொடருங்கள்... 11-Nov-2014 8:39 am
நல்லா இருக்கு !! தொடர்ந்து எழுதவும் !! 11-Nov-2014 7:12 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (109)

முகம்மது யாசீன்

முகம்மது யாசீன்

வடகரை, செங்கோட்டை தாலுகா,
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (110)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
senthu

senthu

madurai
Jegan

Jegan

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (112)

PETER.G

PETER.G

போளூர் 606803
yazar arafath

yazar arafath

tenkasi
மேலே