கே என் ராம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கே என் ராம்
இடம்:  டல்லாஸ்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2014
பார்த்தவர்கள்:  513
புள்ளி:  319

என்னைப் பற்றி...

அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.

என் படைப்புகள்
கே என் ராம் செய்திகள்
கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2024 8:59 am

பணம் பாசம் பந்தம்
எனக்கு வயது தொன்னூறு தாண்டி விட்டது.வீட்டில் ஒரு மூலையில் ஒடுங்கிப் போயிருந்த என்னை
இப்போது சீண்டு வாரில்லை. மனதெல்லாம் ரணகளமாகி வலித்தது. யாரிடம் போய் என்னத்தைச்
சொல்ல ? யாராவது நான் சொல்லுவதைக் காது கொடுத்துக் கேட்டால் தானே. அவங்க அவங்க
வேலை அவங்களுக்கு. ஆயிரத்தெட்டுக் கவலைகளோட அலைந்து திரியறவங்களுக்கு என்னோட
கஷ்டத்தைக் கேட்கத்தான் எங்கு நேரமுள்ளது அவர்களால் அது முடியுமா அதுக்குப் பரிகாரம்
தேடத்தான் வாய்ப்பு யுண்டா ? எனக்கு மனசு நொறுங்கி
வலித்தது. இதயமே இல்லாமல் போனது போலிருந்தது. எப்படியெல்லாம் இருந்தேன். என் மனம் பல
ஆண்டுகளுக்குப் பின்னோக்கி ஓடியது .இளமையில் எப்ப

மேலும்

கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2024 8:57 am

லாட்டரி சீட்டு

வாங்கும் பொழுது மனம் படபடக்கும்
வாங்கிய பின்னால் மனம் மிதக்கும்
வரவை எண்ணி மனம் குதிக்கும்
செலவை எண்ணி மனம் திளைக்கும்
வாழ்வின் வசந்தங்களை மனம் நினைக்கும்
வரும் நாட்களை எண்ணி மனம் களிக்கும்
முயற்சிகளை மனம் வெறுக்கும்
கனவினில் மனம் மயங்கும்
கடமைகளை மனம் மறக்கும்
காற்றினில் மனம் பறக்கும்
காசுகளை எண்ணி மனம் வியக்கும்
காலை கதிரினில் மனம் விழிக்கும்
தினசரி கண்டதும் மனம் கொதிக்கும்
மாயவனை திட்டி மனம் அடங்கும்
மறுநாளை எண்ணி மனம் நடக்கும்

மேலும்

கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2024 3:40 pm

சாக்லேட் சாக்லேட்
எனக்கு இப்பொழுது வயது நாற்பது.ஒரு தனியார் அலுவலகத்தில் தலைமை அதிகாரி. காலை
சென்றால் மாலை வீடு வருவது அந்திம நேரம் அல்லது இருட்டிய பின்பு தான்.என் மனைவிக்கு
இந்த வாழ்க்கை பழகி விட்டதால் ஒன்றும் பேசாமல் எப்பொழுது நான் வந்தாலும்
இன்முகத்துடன் என்னை வரவேற்ப்பாள்.திருமணமாகி எட்டு வருடங்களுக்கு பின் ஒரு பெண்
குழந்தை எங்களுக்கு பிறந்தது.அந்த மாணிக்கத்தை நாங்கள் அனபையே ஊட்டி வளர்த்தோம்
என்றால் அது மிகையாகாது. அந்த நேசிப்பில் என்னுடையது ஒரு கண்மூடித்தனமானது குழந்தை
என்ன கேட்டாலும் நான் அதை வாங்கி வருவேன் அவள் கண்கலங்குவதை காண சகிக்க
முடியாது.என் மனைவி நேசிப்பாள் அத்துடன் கண்டி

மேலும்

கே என் ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2024 3:38 pm

வஞ்சனை உள்ளத்தை அறியவேண்டும்

அன்புள்ளவன் போல உடன் இருந்து உறவு காட்டி
ஆசையுடன் நம்மை கட்டி அணைத்து ஒட்டி உறவாடி
இன்முகம் கொண்டு இனிமையாக பேசி கை பிடித்து
ஈன்றபொழுது இருந்த உள்ளமோ என நம்ப வைத்து
உள்ளத்தில் உள்ள பொருமலை மறைக்க சிரிக்கும்
ஊழ்வினைபோல் நம்மை பின்னிருந்து தாக்கும்
எல்லோரும் உறவு போல் இனிமையாக நடித்து
ஏமாற்றிடும் வஞ்சகம் நிறைந்த மனித இனம் இதை
ஒன்றும் முடியாமல் வேதனையோடு ஏற்கும் மானிடர்கள்
ஓசையின்றி உள்மனதில் அவர் நிறம் அறிந்து விலக
வஞ்சனை கொண்ட நெஞ்சத்தை உடன் அறிந்து கொள்ள
வழி அருள்வாய் என லோகநாயகனை வேண்டி வணங்குவோம்.

வஞ்சனையுள்ள நெஞ்சத்தை உடனறிய
ஏற்றம் கண்டு பொரும

மேலும்

கே என் ராம் - செநா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2017 12:25 pm

உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,

மேலும்

மிக்க நன்றி தோழரே..... 06-Dec-2017 10:26 pm
ஒருதலைக் காதலில், ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போது, ஒரு வித உணர்ச்சியை,வலியை உள்ளுக்குள் தந்து கொண்டே இருக்கும். அருமையான வரிகள்... தோழா 06-Dec-2017 9:50 am
கருத்தாலும்,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே........ 22-Nov-2017 2:58 pm
ஆம் முதல் காதலை மறத்தல் அரிது ... அருமையான கவிதை 22-Nov-2017 2:51 pm
கே என் ராம் - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2015 1:49 pm

அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...

அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...

பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.

மேலும்

மீண்டும் படிக்க தூண்டும் ஒரு நல்ல நடை வாழ்க கற்பனைகள் மீண்டும் ஒரு கதை வரும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துக்கள் 20-Oct-2015 6:05 pm
மிக்க நன்றி சார், தட்டச்சுப்பிழை திருத்த உதவியதற்கு கூடுதல் நன்றி! 28-Sep-2015 4:42 pm
இந்த கதைப் பின்னல் தங்கட்கு கை வந்த கலை ஆகி விட்டது . நானும் "சைன்ஸ் பிக்சன்" எழுதலாம் என இருந்தபோது தங்கள் கதையைப் பார்த்து அடக்கி கொண்டென் . ஆராய்ச்சி எனும் இடங்களில் அராய்ச்சி என உள்ளது தட்டச்சு பிழை திருத்தலாம். வாழ்த்துக்கள் . . 28-Sep-2015 3:57 pm
மிக்க நன்றி திரு தர்மன்... தங்கள் வருகைக்கும், வாசிப்புக்கும், இனிய கருத்துக்கும்..... 28-Sep-2015 7:47 am
கே என் ராம் - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2015 1:33 pm

6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"

கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..

அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome

மேலும்

நன்றி அய்யா! (எங்க மழை....? எங்க மழை....? எங்கே மழை...?) 27-Oct-2015 12:06 pm
ம்ம்ம் ! நன்றாக நனைந்தேன் 27-Oct-2015 11:57 am
மிகவும் அருமை . கிராமத்தை கண் முன் நிறுத்திய பெருமை உமக்கு வாழ்க நின் தொண்டு தொடர்க .. கே என் ராமசந்திரன் 18-Oct-2015 9:02 pm
மிக்க நன்றி....! ஸ்ஸ்ஸ் ..... அந்த எழுத்துப் பிழைகள்.... என் பார்வையில் இருந்து எப்படித் தப்புகின்றன......! நன்றி.... 07-Sep-2015 7:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ரமணி

ரமணி

chennai
மேலே