கோனேஸ்வரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கோனேஸ்வரன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Apr-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2015
பார்த்தவர்கள்:  356
புள்ளி:  311

என் படைப்புகள்
கோனேஸ்வரன் செய்திகள்
கோனேஸ்வரன் - எண்ணம் (public)
25-Dec-2018 3:31 pm

எழுத்து டாட் காம் நண்பர்களே ,நான் எழுதிய எண்ணங்களின் துளிகள் என்ற கவிதை தொகுப்பை கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் முன்னுரை எழுத கவிஞர் கபிலன் வைரமுத்து அவர்கள் அணிந்துரை தர  வனிதா பதிப்பகம் பதிப்பு மேற்கொள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நூலை வெளியிட்டார் . இந்த நூலை எழுதுவதற்க்கு மிக முக்கிய காரணமாக இருந்த எழுத்து டாட் காம் நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


                                                                                                                                                      நேசங்களுடன்
                                                                                                                                                                     கோணேஸ்வரன்

மேலும்

கோனேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2018 1:08 pm

இனிமை காலமிது

இளமை காலமது

அனுமதி அவசியமில்லை

வெகுமதி தேவையில்லை

இரத்த கொதிப்பு

மருந்தும் தேவையில்லை

இன்பத்தின் தேடல்

துன்பமும் தெரியவில்லை

புத்திமதி தேவையில்லை

சக்தியது குறைவுமில்லை

பக்தியது தேவையில்லை

முக்தியது அறியவில்லை

பார்த்ததெல்லாம் அழகுகலை

படைத்தவனை அறியவில்லை

சொந்தமது தேவையில்லை

சுற்றமது தெரியவில்லை

பசித்தவுடன் பாவமில்லை

செரித்தநேரம் தெரியவிலை

பசுங்கிளிகள் பறந்துவரும்

உன்கிளையில் அமர்ந்துவிடும்

இனியமொழி கேட்டிடுவாய்

இன்பங்களை துய்த்திடுவாய்

கனிகளது தீர்ந்தவுடன்

பறந்திடுமே பசுங்கிளிகள்

காலமது வந்துவிடும்

இரத்தமது

மேலும்

இளமை தான் காயங்கள் தாங்கவும் நினைவுகளை சுமக்கவும் சிறந்த பருவம் என்பார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Feb-2018 8:18 pm
கோனேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2018 12:46 pm

பசித்தவனுக்கு பசி ஓர்போர்க்களம்

காதலிப்பவனுக்கு காதல் ஒர்போர்க்களம்

சம்சாரிக்கு குடும்பம் ஓர்போர்க்களம்

ரோகிக்கு வாழ்க்கை ஓர்போர்க்களம்

ஆசைக்கு அனுபவம் ஓர்போர்க்களம்

உண்மைக்கு பொய்மை ஓர்போர்க்களம்

நன்மைக்கு தீமை ஓர்போர்க்களம்

உறவுக்கு பிரிவு ஓர்போர்க்களம்

பக்தனுக்கு இறைவன் ஓர்போர்க்களம்

அமைதிக்கு மனம் ஓர்போர்க்களம்

உடலுக்கு உயிர் ஓர்போர்க்களம்

கணவனுக்கு மனைவி ஓர்போர்க்களம்

மனைவிக்கு கணவன் ஓர்போர்க்களம்

இருவருக்கும் பிள்ளைகள் ஓர்போர்க்களம்

இருமையின்நெருக்கத்தில் போர்க்களத்தின் விடியல்

மேலும்

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் ஏதோ ஒரு வகையில் போர்க்களம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Feb-2018 8:14 pm
கோனேஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2018 11:03 am

வெடித்த பஞ்சு விடுதலையாகி

மீண்டும் சிறைபடுகிறது தலையனையில்

உழன்ற தலையினில் அமைதியில்லை

உறக்கம் தருகிறது ஓரணையாய்

பிறரின் சுகத்திற்கு நசுக்கப்படுவதால்

அதுவும் ஒரு பாட்டாளி

ஜனனத்தின் சாட்சியாய் நிற்கிறது

மரணத்தின் சாட்சியாய் நிற்கிறது

காதலுக்கும் சாட்சியாய் நிற்கிறது

காமகொடுரத்திற்கும் சாட்சியாய் நிற்கிறது

இதன் மந்திரத்தால் மாமியார்கள்

திக்குமுக்காடிப் போகிறார்கள் தெரியுமா

அவர்களும் மாமியார்களாய் இருந்தபோது

அதைத்தான் செய்தது பாரபட்சமின்றி

மானுட ஜென்மத்தின் மொத்த

கவலைகளை எல்லாம் சுமக்கிறது

கெட்ட எண்ணங்களையும் சுமக்கிறது

வக்கீல்கள் வாதாடுவது போல

மேலும்

ஒவ்வொரு மனிதனையும் அனுபவப்பூர்வமாக சிந்திக்க வைக்கிறது இக்கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Feb-2018 8:03 pm
மனித வாழ்க்கைக்கும் தலையணைக்கும் இவ்வளவு தொடர்பா! அருமை அழகான வரிகள்... 06-Feb-2018 11:15 am
கோனேஸ்வரன் - கோனேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2016 7:36 pm

பத்துமாசம் சுமந்து என்னை

பாசத்தோடு பெத்தவளே

உதிரத்தை உருமாற்றி

உணவாக கொடுத்தவளே

உணவல்ல அதுதாயி

உசிருன்னு தெரியாதா

பிஞ்சு காலுக்குதான்

வெள்ளி கொலுசு ஒன்னு

வேணுமின்னு ஆசைப்பட்டு

தங்கத் தாலியைத்தான்

அடகு வச்சவளே

மஞ்ச கிழங்காலே

மறைச்சுகிட்டு தவிச்சியே

ஆத்தா தவிச்சாலே

புள்ள அழுவான்னு தெரியாதா

பச்சரிசி சுடுசோறு செஞ்சு

பக்குவமா பருப்பை போட்டு

நெய்யையும் கலந்துவிட்டு

நிலாகாட்டி ஊட்டிடுவ

பழைய கஞ்சி குடிச்சிகிட்டு

பாதி வயிற்றில் நீ கிடப்ப

சுடுசோறை நீ மட்டும்

திருவிழாவில் தானே சாப்பிடுவ

உனக்காக ஓர் செருப்பை

நீ வாங்கி போட்டதில்லை

மேலும்

நன்றிகள் கோடி. 08-Nov-2016 3:54 pm
கருத்திற்க்கு நன்றி 08-Nov-2016 3:54 pm
அன்னையின் காலடியில் உயிரை விடுவதும் தவமே! 20-Jul-2016 7:07 am
அன்னையின் தியாகத்தை அழகிய கவியாய் வடித்த வரிகள் அருமை! வாழ்த்துக்கள் தோழமையே! 19-Jul-2016 9:37 pm
கோனேஸ்வரன் - கோனேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2016 10:17 pm

இந்த கதை நான் குமுதம் பத்திரிக்கைக்காக எழுதியது. இந்த கதை சிறுகதை போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்று இந்த வார குமுதத்தில் (25/05/2016)பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த இரண்டு வாரங்களாக அந்த செய்தி என் ரத்தத்தை கொதிப்படைய செய்திருந்தது. எப்படி மாறினாள்? என்ற கேள்விகள் என்னை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தன. காதலின் வலியை நம்பிக்கை துரோகம் செய்கிற ஒருத்தியால் எப்படி உணர முடியும்.படுபாவி.. பாதகி....எப்படித்தான் இப்படி செய்ய அவளுக்கு மனம் வந்தது.எந்த அளவிற்கு அவளை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன் என்பது அவளுக்கே நன்றாய் தெரியும்.நம்ப ம

மேலும்

உங்கள் கருத்திற்க்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே. 05-Nov-2016 10:25 pm
காதலில் தோல்வி ஏற்படும் போது மனதில் ஏற்படும் மாற்றங்கள் சில மோசமான தவறுகளை செய்ய தூண்டிவிடுகிறது . அப்படி நடந்து விடக் கூடாது என்பது தான் என் எண்ணமும் .உங்கள் கருத்திற்க்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே. 05-Nov-2016 10:23 pm
பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் அவளிடம் பேசாதவன் அவளை காதலித்த பிறகு மட்டும் ஏன் இப்படி செய்ய நினைக்கின்றான் ஆனாலும் கதையின் முடிவு அருமை நிறைய எழுத வாழ்த்துக்கள் 27-Sep-2016 12:55 pm
காதல் தோல்வியில் காதலித்தவர்களை பழிவாங்குவது என்பது உண்மை நேசம் ஆகாது அதேபோன்று தாட்கொளயு. தீர்வு ஆகாது அட்புதமான கதை வாழ்த்துக்கள் இன்னும் இதுபோன்ற சிறந்த கதைகள் எழுதுங்கள் . 13-Aug-2016 12:04 pm
கோனேஸ்வரன் - நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2015 5:33 pm

மௌன ராகம்
------------------------
உன்
மௌனம்,
சம்மதமெனில்
நான் முத்தத்தை
முன்மொழியவா.?
முழுங்கிவிடவா.?

ஆடைக்கேற்ற
அணிகலன்களில்
உன் மௌனம்
மட்டும்தான்
மாறுபடுகிறது.!

கண்ணாடி பார்த்து
அணிவாய் யாவும்.
மௌனம் மட்டும்தான்
நீயென் கண்களைப்பார்த்ததும்
அணிவது.!

நீரூற்றியும்
பூக்காத ஒரு ஒற்றைச்செடி
நிகராகிவிடுகிறது
உன் மௌனத்திற்கு.!

என் சொல்லின்
ஆற்றலைவிட
உன் மௌனத்தின்
பேராற்றல்
உதட்டுச்சாயம்
பூசிக்கொண்டு உறங்குகிறது.!

கவிதைக்கான
எந்த சொல்லும்
என்னிடம்
இல்லாதபோது
உன் மௌனத்திடம்தான்
நான் கையேந்தி
நிற்கின்றேன்.

எழுத்துவடிவமில்லா
எத்தனையோ
மொழிகளின்

மேலும்

செம அண்ணா 06-Jan-2016 6:47 am
ஒரு நல்ல மனிதரிடமிருந்து என் கவிதைக்கு கிடைத்த இந்த பாராட்டில் நான் உள்ளம் மகிழ்கிறேன் நண்பரே. தங்களைத் தொடர்ந்து வரவேற்கிறேன். 30-Dec-2015 8:06 pm
மிக்க நன்றி சர்பான் என் கவிதைகள் உங்களின் கருத்து இல்லாமல் முழுமை அடைவதில்லை 30-Dec-2015 8:02 pm
நீங்கள் ரசித்த ஒவ்வொரு வரியும் நானும் ரசித்தேன் நண்பா ரசனையான கருத்துக்கு நன்றி நண்பரே 30-Dec-2015 7:59 pm
கோனேஸ்வரன் - கோனேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2015 8:55 pm

முன்னொருப் பிறவியில்

உயரமான

மலை உச்சியிலிருந்து

வானில்

நான் வரைந்த

என் காதலியின்

ஓவியம் தான்

இன்று நிலவாக

ஒளி வீசிக் கொண்டிருக்கிறது !

மேலும்

கோனேஸ்வரன் - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2015 9:36 pm

ஊமை வாசக உச்சரிப்பு
~~~~~~~~~~~~~~~~~~~

வான்நோக்கிப் பாயும் ஒளிமூலத்தில்
ஒற்றையாய் ஒழுகிய ஒரு கற்றையை
பூமி புழுதிக்குள் வீழாமல் பிடித்து
இருண்ட வீதிக்கு ஒருபாதிக் கொடுக்க
வீதியெங்கும் ஒளிர்கிறது உன்முகம் ..

உன் கால் நகம் கீறிய
என் தேசத்து வாசலில் ..சுரக்கும்
வாசனை ஊற்றுகளில்
வீறிட்டுப் பிறக்கும்
ஒவ்வொரு நீர்த்துளியும்
மூலைக்கு மூலை ..உன் பெயராய்
முளைத்து விழுகிறது ....சாரலாகவும் .

வருடத்தில் ஒருமுறை நிகழும்
உன் வருகைக்கு முன்னதாய்...
என்னுள் மிதக்கும் சன்னலுக்கு
வலதுப்பக்கத்தில் மெதுவாய் உதிரும்
மஞ்சள் நிறப் பூக்களும்
நரைத்துப் போன என் நினைவுகளால

மேலும்

வரவில் மிக மகிழ்ச்சி அண்ணா 26-Apr-2015 10:57 am
இது வெகு வித்தியாசமான பார்வை , மொழி நடை அழகு தொடருங்கள் தம்பி , வாழ்த்துக்கள் 31-Mar-2015 11:39 pm
இம்மாதிரியான ஊக்கங்கள் இன்னும் உழைக்க சொல்கின்றன ... உங்களை போன்ற நல்ல எழுத்தாளரிடம் இருந்து தான் நிறைய கற்கிறோம் .. வரவில் மிக மகிழ்ச்சி அக்கா .. 30-Mar-2015 9:42 pm
கடந்து போக மனமில்லாமல் படிச்சுட்டே இருக்கேன் திரும்ப திரும்ப,..... 30-Mar-2015 9:24 pm
கோனேஸ்வரன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2015 9:56 pm

பாவையவளின் பார்வையழகை
பாவலன் அவன் கண்டநொடியில்
பாந்தளின் நெடுந்தலை வழுவி
நெஞ்சுக்குழியில் உருண்டோடியதாய்
ஒரு மாயையில் வீழ்ந்தானாம்


-----------------------------


நீயென்ன அங்கதன் மகளோ?
உன் விழியென்ன வயிரத்தண்டோ?
சடுதியில் விடும் உன் விழிநோக்கில்
ஆயிரம் காதல் தீப்பொறிப் பறக்கிறதே..?
-----------------------------



பாவையின் விழிகளிலிருந்து பறந்த
இருமுனை சூலப் பார்வை
அவன் மார்பில்தைத்த ரணந்தானோ
அசூரக் காதல் காயமோ ?

-----------------------------

என் வாலிப வயிற்றில்
பலத்த ரசனை பசி..!
அன்பே.. !
கொஞ்சம் பரிமாறுவாயா
உன் விழிகளால்
நிறைய காதல் ஆகாரங்களை.!

--------

மேலும்

மிக்க நன்றி தோழா . மகிழ்ச்சி.. நன்றி நன்றி 26-Mar-2015 10:36 pm
மிக்க நன்றி தோழா.. மகிழ்ச்சி 26-Mar-2015 10:35 pm
நன்றி தங்கையே 26-Mar-2015 10:35 pm
அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள் அண்ணா 26-Mar-2015 8:53 pm
கோனேஸ்வரன் - யாழ்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2015 6:53 pm

ஆணுறையோ பெண்ணுறையோ
அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள்
தேவை முடிந்தபின்பு - நடுத்
தெருவில் போடாதீர்கள்
அரும்புகளும் அதைக்கண்டு
அர்த்தம் தேடித் தவிக்கிறது...

மாதவிடாய் என்பது - பெண்
மகத்துவத்தில் ஒன்றாகும்
வீதியில் போட்டு நீங்களும் - அதனை
விளம்பரம் செய்யாதீர்
நெகிழிப்பையில் முடித்து
குப்பையலிட மறவாதீர்....

இரவுகென்றுப் பல உடைகள்
விருப்பம்போல் அணியுங்கள்
ஆனால் அறிவின்றி அதனோடே
சந்தைவரை செல்லாதீர்
ஆடவரைத் தூண்டாதீர்....

பொதுக் கழிப்பிடங்கள்
போதுமானவரை உண்டு - இனியும்
மூச்சடைக்க வைக்காதீர்
விளங்கினம்போல் வீதியிலே கழிக்காதீர்...

சின்னஞ்சிறு குழந்தைகள

மேலும்

சகிக்க முடியா காட்சிகள் ! பஸ்ஸில் அமர்ந்து கொண்டு...எச்சில், இன்னும் பிற__ வெளியில் உமிழ்வது..., தும்மும் போதோ, இருமும் போதோ....கை வைத்து மறைக்காமல்... அருகில் இருப்பவர் மேல் அந்த___படுமாறு செய்வது...இன்னும் பிற நிறைய அருவெறுப்பு தரக்கூடிய செயல்கள்...படித்தவர்/ படிக்காதவர் என்ற வேறுபாடின்றி நம் நாட்டில் சொல்ல முடியாமல் தவிக்க வைக்கும் நிகழ்வுகளாகும். 13-Sep-2015 8:29 pm
அருமை அழகான அறிவுரை 09-Apr-2015 2:59 pm
நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள். 25-Mar-2015 7:45 am
கண்கள் திறந்தும் தூங்கும் முட்டாள்கள் இனியாவது விழிக்கட்டும் 19-Mar-2015 4:35 pm
கோனேஸ்வரன் - vishnukaruppaiah அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2015 5:01 pm

உன் அழகு .....
என் கவிதையின் ......
முதல் வரி .

கவிதை எழுத கற்பனை தேவையில்லை ..
உன் இரு விழிகள் ...
என் விழி அருகில் இருந்தால்!

மேலும்

நன்று. 24-Mar-2015 5:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (17)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (17)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே