குழலி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  குழலி
இடம்:  விருதுநகர்
பிறந்த தேதி :  28-Oct-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Apr-2017
பார்த்தவர்கள்:  207
புள்ளி:  29

என்னைப் பற்றி...

ஒரு இளம் படைப்பாளி

என் படைப்புகள்
குழலி செய்திகள்
குழலி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-May-2017 7:35 pm

மனது,
கிளை நீங்கும் இலை
போல மென்மையானது ......
உளி தாங்கும் சிலை
போல வன்மையானது ......

மனது,
பாசம் பழகும்;
நேசம் நிறைக்கும்....

வலிகள் ஏற்கும்;
வேதனைகள் கற்கும்............

யுகங்களில் கலங்கிடும்!
நொடிகளில் மகிழ்ந்திடும்!

காயங்களில் கரைந்திடும்!
சிரிப்புகளில் சிலிர்த்திடும்!

கண்ணீர் கண்டு
செந்நீர் சிந்தும் !
கண்ணீர் துடைக்க
கரங்கள் நீட்டும்!

அழகிய மலரின்
மெல்லிய இதழினால்
மெல்லத் தீண்டல் பெற்றாலும்
உருகி அது உடைந்திடும்....

ஆயிரம் கணைகள்
அள்ளித் தொடுத்து
உயிரின் மூலத்தைத்
துளைத்தலும்
புன்னகையோடு
விளையாடும் ........

இதயம் நிறைக்கும்
இன்பம்

மேலும்

மிகவும் நன்றி தோழா........ 23-May-2017 1:31 pm
தோழியே! மனம் திறந்து ஓர் உண்மை சொல்கிறேன் இரு கவிதை தான் வாசித்தேன் ஆதலால் உங்கள் ரசிகனாகி விட்டேன் 15-May-2017 5:06 pm
படிப்பவர் மனம் சொல்லி விடும் , அழகிய புரிந்துணர்வு வரிகள் ,,,, அருமை தோழி ,,,, வாழ்த்துக்கள் ,,,! 12-May-2017 6:19 pm
எல்லாமே இருந்தாலும் இல்லாத ஒன்றினை நினைத்தபடி ஏங்கிடும்........ உண்மையான வரிகள் தோழி. நன்று.. 09-May-2017 8:57 pm
குழலி - தங்கதுரை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2017 1:58 pm

செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
பாய்ந்தது ஒரு காலத்தில் ,,,,

இன்று

தமிழகத்தின்
ச(த)ரித்திர சாதனை
காவல் துணையுடன்
மதுபான நிலையம் ,,,,!

***********************************
புதியதோர் உலகை படைக்க
தமிழகத்தின் வினோத முயற்சி
'தெர்மாகோல் ஆராய்ச்சி ',,,,!

*************************************
தமிழர்களின்
தலையெழுத்து
'இலவசங்கள் ',,,,!

***********************************
அரசியல்வாதியின்
பகுதிநேர ஓய்வறை
சிறைச்சாலை ,,,!

************************************
ஊழல்களின்

மேலும்

உண்மைதான் நட்பே ,, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி ,,,! 12-May-2017 6:10 pm
உண்மை தான் தோழரே. எதிர்க்கலாம்.ஆனால் இடம் தெரியாமல் செய்திடுவர்.அது தான் தமிழகம். என் செய்வது?இன்று இளைஞர்களின் கரங்கள் கண்களுக்கு தெரியாத ஏதோ ஒரு கயிறினால் கட்டுண்டு கிடக்கிறது.... 11-May-2017 2:29 pm
குழலி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2017 1:46 pm

பட்டப் பகலிலே
வெட்ட வெளியிலே
பெற்றோர் பிறந்தோர்
கண்ணெதிரே
நீட் என்ற பெயரில்
நீலப் படம் எடுத்த
நயவஞ்சகர்களுக்கு முன்னே
நஞ்சுண்டதை போல்
நலிந்து திரும்பிய
எம் மாணவிகளுக்கு
தமிழகம்
தரப்போகும்
பதில் என்ன?

மூன்று மணிநேரத்திற்காக
மூன்று முடுச்சுகளை
அகற்றச் சொல்லும்
முட்டாள் தனம் தான்
தமது தேர்வு முறையா?

மருத்துவத்திற்காக
எம் பெண்கள்
மாங்கல்யத்தை
தியாகிக்க வேண்டுமா?
மனதற்ற மடத்தனம்.......

பொறுத்திருப்பதால்
நாங்கள் பேடிகள் அல்ல.
அமைதி காப்பதால்
யாம் உம் அடிமைகள் அல்ல....

நெஞ்சம் குமுறுகிறது;
குருதி கொதிக்கிறது;

அல்லி மலர் தொடுத்து
அலங்கர

மேலும்

கொம்பும் தேனும் கொதிக்கும் கொக்கோரோக்கோ கோழி கொக்கரிக்கும் ஆதவன் தோன்ற விழுந்த என் காலை குழலி கோபம்கோண்டு உறையுமோ என் கண்ணீர் மாலை _ உம் கோவம் அருமை தோழி 30-Jun-2017 5:41 pm
மூன்று மணிநேரத்திற்காக மூன்று முடுச்சுகளை அகற்றச் சொல்லும் முட்டாள் தனம் தான் தமது தேர்வு முறையா? ----சரியான கேள்விக் கணைகள் . நம்மைச் சுற்றி நிகழும் அநீதிகளை தட்டிக் கேட்கும் சவுக்காக எழுந்து நிற்க வேண்டும் கவிதை வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 16-May-2017 9:43 am
தோழியே! உலகம் பெண்ணை இன்று நோக்கும் பார்வை மிகவும் கொட்டியது அதிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு பெண்ணும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை மண்ணில் தோன்றி விட்டது 15-May-2017 5:04 pm
குழலி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-May-2017 6:27 pm

காதலனைக் கண்ட
கடைக்கண் பார்வையில்
வெட்கத்தில் முகம் மறைத்து
விழி மூடி இதழ் விரிக்கும்
அழகுப் பெண் போல
யாரைக் கண்ட வெட்கத்தில்
ஒளிந்து சிரித்து ஒளிர்கிறாய்?
கறை படியா பிறை நிலவே.......

நுனி விரல்த் தீண்டலின்
மறு கணத்தில் விலகிக் கொள்ளும்
காதலனின் காதலி போல்
யார் தீண்டிய கூச்சத்தில்
விலகிச் செல்கிறாய்?
கதிரவனின் கதிரொலியே...........

காணாத காதலனின்
கண் பார்த்த மறு நிமிடம்
காதலியின்
இமையோரம் மிளிரும்
சிறு துளி விழிநீர் போல்
யாரைக் கண்ட மகிழ்ச்சியில்
மின்னி மிளிர்கிறாய்?
வைர ஒளி விண்மீனே..............

மேலும்

வானத்தின் மேல் நிலவின் வருகை பூமிக்கு வரம் தான் அந்த வரத்தின் அழகை நயம் பட பாடியுள்ளீர் 15-May-2017 5:09 pm
காதலனைக் கண்ட கடைக்கண் பார்வையில் வெட்கத்தில் முகம் மறைத்து விழி மூடி இதழ் விரிக்கும் அழகுப் பெண் போல யாரைக் கண்ட வெட்கத்தில் ஒளிந்து சிரித்து ஒளிர்கிறாய்? கறை படியா பிறை நிலவே,,,,, தங்கள் வர்ணனை பார்த்து தோன்றிய வரிகள் மறைந்துவிட்ட காதலியின் நினைவுகளை போர்த்தி உறங்குகிறேன் நீயும் என்போல் பெருங்கடல் மேல் கொண்ட காதலினால் அதனை போர்த்தி உறங்க செல்கிறாயோ அந்திமாலை நேர சூரியனே ,,,,! அழகு ரசனை ,,,, வாழ்த்துக்கள் தோழி ,,,,! 12-May-2017 6:41 pm
வருணனைகளில் வாழ்வது தானே கவிதை? தோழமையே............... 10-May-2017 3:57 pm
நிலவினை பெண்ணென்றீர்கள், இப்போது கதிரவனின் கதிரொளியையும் பெண்ணாக்கி விட்டீர்களோ.. அழகு... 10-May-2017 10:37 am
குழலி - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2017 4:47 pm

1. வெளி ஆடைகளை கிழித்தும் உள்ளாடைகளை அகற்ற செய்தும் ஒரு அழுக்கான தேர்வை "நீட்" என்ற பெயரால் நடத்தியது சரியா.?

2. இந்த கெடுபிடி தமிழ்நாடு, கேரளா மாநிலத்தில் மட்டும் ஏன் கடைபிடித்தார்கள்.?

3. உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் இந்த தேர்வு தேவையா?

மேலும்

அய்யய்யோ... நான் சொல்வது வேறு நீங்க நினைப்பது வேறு..! உங்களுக்கு விளக்கமாக சொல்கிறேன். நான் நீட் தேர்வுக்காக செல்கிறேன். உள்ளே சென்றதும் தேர்வுக்கா அனுமதிசீட்டு, ஐடி எல்லாம் பரிசோதனை முடித்து உள்ளே நுழைவுவாயிலில் பேண்டை பரிசோதிக்கும் மெட்டல் டிடெக்டர் சோதனையில் பீப் சத்தம் வருகிறது. உடனே உள்ளே என்ன என்று கேட்கும் போது ஜட்டி என்று சொல்கிறேன். அனுமதிக்க முடியாது பக்கத்து அறையில் சென்று கழற்றி விட்டு வா என்று சொல்கிறார். நான் பக்கத்து அறைசென்று கழற்றி எறிந்துவிட்டு வருகிறேன். அதன்பின் அனுமதி பெற்று தேர்வை எழுதஅமரும் எனக்கு மனநிலை எரிச்சலாகவே இருக்கும்.! இந்த மனநிலையில் தேர்வு எழுதினால் விளங்காது.. அதுமத்திய ஆளும் வர்க்கத்துக்கு தெரியும்.! காரணம் அடுத்த கேள்வி பதிலில் தனியாக பதிவு செய்கிறேன். (ஆராய்ச்சி முடியவில்லை) இதைவிட விளக்கம் கூற முடியாது தோழமையே..! 11-May-2017 11:15 pm
மானம் பெரிதென நினைக்கும் தாழினம் நாம். கனவா மானமா என்ற நிலை வந்தால் நாம் அனைவரும் மானமே என முடிவு எடுப்போம். நீங்கள் சொல்வதுபோல் தேர்வரைக்குள் நுழைந்த பின் சோதனை செய்தல் மாணவர்களால் மட்டுமே தடுக்க முடியும். ஒரு பெண்ணுக்கு தனது புலன் உணர்த்திவிடும் தவறான தொடுகையை. நீங்கள் சொல்வதுபோல் தேர்விற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். 11-May-2017 10:47 pm
எல்லோராலும் தன் மகளின் கனவை தள்ளிவிட முடிவதில்லை.! 11-May-2017 10:27 pm
தேர்வு எழுதசெல்லும் முன்பே தெரிந்தால்தான் மாற்றுமுறைகளை யோசிப்போம். தேர்வுக்கு தயாராகி அங்கு உள்ளே நுழைந்தபின் பரிசோதனை என்ற பெயரில் அதைஎதிர்க்கும் மனநிலையைவிட தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும். கேரளாவில் நடைபெற்ற சம்பத்திற்காக மத்திய CBSC மையம் மன்னிப்பு கேட்க மாநில மையத்துக்கு ஆணையிட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்தி மொழியில் கேள்விதாளுக்கும், தமிழ் , ஆங்கில (கடினம்) கேள்வித்தாளுக்கும் வித்தியாசம் ஏன்.? மறைமுகமாக தமிழனை அழித்துவிட தொலைநோக்கு திட்டத்தின் ஆரம்பமே இது..! நிகழ்கால மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆராய்ந்தால் புரியும்.! 11-May-2017 10:24 pm
குழலி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 7:35 pm

மனது,
கிளை நீங்கும் இலை
போல மென்மையானது ......
உளி தாங்கும் சிலை
போல வன்மையானது ......

மனது,
பாசம் பழகும்;
நேசம் நிறைக்கும்....

வலிகள் ஏற்கும்;
வேதனைகள் கற்கும்............

யுகங்களில் கலங்கிடும்!
நொடிகளில் மகிழ்ந்திடும்!

காயங்களில் கரைந்திடும்!
சிரிப்புகளில் சிலிர்த்திடும்!

கண்ணீர் கண்டு
செந்நீர் சிந்தும் !
கண்ணீர் துடைக்க
கரங்கள் நீட்டும்!

அழகிய மலரின்
மெல்லிய இதழினால்
மெல்லத் தீண்டல் பெற்றாலும்
உருகி அது உடைந்திடும்....

ஆயிரம் கணைகள்
அள்ளித் தொடுத்து
உயிரின் மூலத்தைத்
துளைத்தலும்
புன்னகையோடு
விளையாடும் ........

இதயம் நிறைக்கும்
இன்பம்

மேலும்

மிகவும் நன்றி தோழா........ 23-May-2017 1:31 pm
தோழியே! மனம் திறந்து ஓர் உண்மை சொல்கிறேன் இரு கவிதை தான் வாசித்தேன் ஆதலால் உங்கள் ரசிகனாகி விட்டேன் 15-May-2017 5:06 pm
படிப்பவர் மனம் சொல்லி விடும் , அழகிய புரிந்துணர்வு வரிகள் ,,,, அருமை தோழி ,,,, வாழ்த்துக்கள் ,,,! 12-May-2017 6:19 pm
எல்லாமே இருந்தாலும் இல்லாத ஒன்றினை நினைத்தபடி ஏங்கிடும்........ உண்மையான வரிகள் தோழி. நன்று.. 09-May-2017 8:57 pm
குழலி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 6:27 pm

காதலனைக் கண்ட
கடைக்கண் பார்வையில்
வெட்கத்தில் முகம் மறைத்து
விழி மூடி இதழ் விரிக்கும்
அழகுப் பெண் போல
யாரைக் கண்ட வெட்கத்தில்
ஒளிந்து சிரித்து ஒளிர்கிறாய்?
கறை படியா பிறை நிலவே.......

நுனி விரல்த் தீண்டலின்
மறு கணத்தில் விலகிக் கொள்ளும்
காதலனின் காதலி போல்
யார் தீண்டிய கூச்சத்தில்
விலகிச் செல்கிறாய்?
கதிரவனின் கதிரொலியே...........

காணாத காதலனின்
கண் பார்த்த மறு நிமிடம்
காதலியின்
இமையோரம் மிளிரும்
சிறு துளி விழிநீர் போல்
யாரைக் கண்ட மகிழ்ச்சியில்
மின்னி மிளிர்கிறாய்?
வைர ஒளி விண்மீனே..............

மேலும்

வானத்தின் மேல் நிலவின் வருகை பூமிக்கு வரம் தான் அந்த வரத்தின் அழகை நயம் பட பாடியுள்ளீர் 15-May-2017 5:09 pm
காதலனைக் கண்ட கடைக்கண் பார்வையில் வெட்கத்தில் முகம் மறைத்து விழி மூடி இதழ் விரிக்கும் அழகுப் பெண் போல யாரைக் கண்ட வெட்கத்தில் ஒளிந்து சிரித்து ஒளிர்கிறாய்? கறை படியா பிறை நிலவே,,,,, தங்கள் வர்ணனை பார்த்து தோன்றிய வரிகள் மறைந்துவிட்ட காதலியின் நினைவுகளை போர்த்தி உறங்குகிறேன் நீயும் என்போல் பெருங்கடல் மேல் கொண்ட காதலினால் அதனை போர்த்தி உறங்க செல்கிறாயோ அந்திமாலை நேர சூரியனே ,,,,! அழகு ரசனை ,,,, வாழ்த்துக்கள் தோழி ,,,,! 12-May-2017 6:41 pm
வருணனைகளில் வாழ்வது தானே கவிதை? தோழமையே............... 10-May-2017 3:57 pm
நிலவினை பெண்ணென்றீர்கள், இப்போது கதிரவனின் கதிரொளியையும் பெண்ணாக்கி விட்டீர்களோ.. அழகு... 10-May-2017 10:37 am
குழலி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 5:58 pm

காலம்
முழுவதும்
நான் கண்ணீர்
சிந்த நேர்ந்தாலும்
அதன் காரணம்
நீயாக வேண்டும்............

மேலும்

ஆழமான அன்பில் இதயத்தின் உருகுதல்கள் 15-May-2017 5:13 pm
Nice 15-May-2017 1:34 am
குழலி - குழலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2017 8:15 pm

நினைப்பது கிடைப்பதில்லை ;
கிடைப்பது பிடிப்பதில்லை;
சிலர்,
நினைவுகளை மறந்து ,
கிடைத்ததை பிடித்து கொண்டு ,
பொய்யான புன்னகையில்
வாழ்வை கழிக்கின்றனர்;
அவர்கள் வாழ தெரிந்தவர்களாம்............
சிலர்,
நினைவுகளை நிறுத்தாமல்,
நீங்காத துயரத்தோடு,
காயமான இதயத்தோடு,
காலத்தை கழிக்கின்றனர்;
அவர்கள் முட்டாள்களாம்.................
கிடைக்காத காதலை
மறவாமல் மனதில்
வைத்து வாழ்பவர்கள்
முட்டாள்கள் என்றால்,
நான் முட்டாளாகவே விரும்புகிறேன்..............

மேலும்

வலிகளில் வாழ்வதும் மறந்திடாத காதலின் தனி சுகம். அருமை... வாழ்த்துக்கள் 02-May-2017 4:32 pm
போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 01-May-2017 4:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

சஹ்ரன் கவி

சஹ்ரன் கவி

புத்தளம், ஸ்ரீ லங்கா.
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (14)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
மேலே