pranavan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  pranavan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Mar-2012
பார்த்தவர்கள்:  250
புள்ளி:  260

என் படைப்புகள்
pranavan செய்திகள்
நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Sep-2015 3:27 pm

தேன் சிந்தும் பூக்களை
பார்த்திருப்பீர்கள்.
நீர் சிந்தும் பூக்களை
பார்த்ததுண்டா.?
அது வாசல் தெளிக்கும்
எந்தமிழ் பெண்கள்தான்.!

கோலமிடும் பெண்களால்
வாசல் அழகாகி..
வீதி அழகாகி..
ஊரே அழகாகும்.!

வாசலுக்கும்
வாலிபத்திற்கும்
ஓரு சேர வண்ணம் பூசும்
வண்ணத்துப்பூச்சி
அவர்கள்.!

ஆணுக்குத்தெரியும்
கோலமயில் இருக்கும் வீடு
கோலங்களால் ஆனதென.!

வானம் பார்த்துக்கிடந்த
வண்ணக்கோலங்களால்
வானவில்
வளைந்துபோன காலமது.!

ஒரு முறைக்கு
ஒன்பது வெண்முத்துக்கள் சிந்தும்
மாயச்சிப்பி அவர்களது கைகள்.!

புள்ளியைச்சுற்றிய கோடுகள்
கோலங்களாகி நிற்க
கோலத்தைச்சுற்றியப்புள்ளிகள்
காதலாகி நின்றார்கள்

மேலும்

அருமை 19-Oct-2015 9:15 am
அருமை. 08-Oct-2015 5:06 pm
மன்னிக்கவும் நண்பா.தோழி என தவறுதலாக ..... 30-Sep-2015 9:06 pm
தொடர் வருகையில் உள்ளம் மகிழ்கிறேன் தோழி மிக்க..நன்றி 30-Sep-2015 9:03 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Aug-2015 3:19 pm

எல்லாம் போனது என்னை விட்டு,
கையில் இருந்தது உன் இசை மட்டும்தான்.!
அது நம்பிக்கை கொடுத்து - எனை
நடக்க செய்தது எட்டுத்திசைமட்டும்தான்.!
*******************
உன் பாட்டு வருடும் அளவுக்கு..
பாவிமக விரல் எதுவும் வருடவில்லையே.!
இசைக்கு ஈடா..
இதயத்தை யாரும் திருடவில்லையே..!
********************
நேசத்த நினைச்சு..உந்தன்
இசைய பருகுறேன்..!
நெருப்புல விழுந்த..
நெய்யா உருகுறேன்..!
********************
தாய் செத்த விழிநீர இறக்கிவைக்க..
தாங்காத சோகத்த பரப்பி வைக்க..
உன்இசைதான் எனக்கு மடிதந்தது.!
வாழ்கையின் மீது ஒரு பிடிதந்தது.!

மேலும்

சார் எல்லாம் வேண்டாம், நண்பா என்று அழையுங்கள் கண்ணா , மகிழ்வேன். 27-Sep-2015 7:23 pm
மிக்க நன்றி சார். தங்களின் கவிதையும் பட்டியல்ல இருக்க என்ன வாழ்த்துறீங்களே சார் உங்களின் நல்ல உள்ளத்துக்கு மீண்டும் நன்றிகள் சார்.கவிதைகளுக்கு வெற்றி தோல்வி கிடையாது சார் அது எப்பவும் கவிதையாகவே இருந்துவிடுகிறது.நாமும் கவிதைகளா வாழனும்சார். உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார் 27-Sep-2015 7:20 pm
ராஜாவின் இசை மனதிற்கு என்றும் ரம்யமே, வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:00 pm
மிக்க நன்றி ரத்னா 23-Sep-2015 4:25 pm
கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) kaviyamudhan மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jul-2015 1:12 pm

பூக்கள் மணமெழுத
****புல்லாங்குழல் இசையெழுத
ஈக்கள் எதுகையிட
****இலைகள் மோனையிட
கீற்று தவிப்பெழுத
****கிளிகள் பேச்செழுத
ஊற்று சிலிர்ப்பெழுத
****உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

சேற்றுக் கூழருந்தி
****செங்கதிர்கள் அசைந்தெழுத
ஆற்றின் கால்களில்
****சலங்கைகள் குதித்தெழுத
சோற்றுக் கனவுகளில்
****சிறகுகள் சோர்ந்தெழுத
நேற்றில் எஞ்சிய
****நம்பிக்கை உயிர்த்தெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

நைந்த நினைவுகளும்
****நிலத்தின் பெருமூச்சும்
நாளைய கேள்விகளும்
****நீங்காத ஆசைகளும்
காலப் பெருவெளியின்
****கவலைகளும் கண்ணீரும்
கரைப

மேலும்

காற்றின் பக்கங்களில் ****கவிதைகள்..கவிதைகள்..! நிறைவான கவிதை...... நீண்ட இடைவெளிக்குப்பின் தளத்திற்கு வந்ததும் ஓர் நிறைவான கவிதை படிக்க வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி... 31-Aug-2015 6:20 pm
அன்புள்ள கவித்தா சபாபதி, தங்கள் கவிதை 'காற்றின் கவிதைகள்' 3 பத்திகளில் அமைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு பத்தியிலும் அளவடிகள் (4 சீர்கள் கொண்டது) ஐந்து உள்ளன. ஐந்தாவது அடி 3 பாட்டிலும் தனித்து பொதுவாக வருகிறது. எனவே ஒவ்வொரு பாடலையும் முதல் 4 அளவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் கலிவிருத்தம் என்று வருகிறது. பூக்கள் மணமெழுத புல்லாங்குழல் இசையெழுத ஈக்கள் எதுகையிட இலைகள் மோனையிட கீற்று தவிப்பெழுத கிளிகள் பேச்செழுத ஊற்று சிலிர்ப்பெழுத உயிர்கள் மூச்செழுதும் காற்றின் பக்கங்களில் கவிதைகள் கவிதைகள்! ஐந்தாவது அடியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு ஒரு உதாரணம் தருகிறேன். நான் இத்தளத்தில் நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம் என்ற தலைப்பில் 10 பாடல்கள் பதிவு செய்திருக்கிறேன். உதாரணத்திற்கு ஒன்று முதல் பாடல்: அனைத்து பாடல்களும் கழிநெடிலடியாக ஆறு சீர்களில் அமைந்த 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' ஆகும். 4 சீர்கள் - அளவடி; 5 சீர்கள் - நெடிலடி 6 சிர்களும் அதற்கு மேலும் - கழிநெடிலடி ஐந்தாவது அடியும் ஆறுசீர்கள் - தனியாக 'அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை' என .பொதுவாக ஒவ்வொரு பாடலிலும் அமைந்திருக்கும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. பாடல் 1 அன்புடன், வ.க.கன்னியப்பன் 29-Aug-2015 9:43 pm
இயற்கை யாவும் இசைந்து இசைக்கிறது உங்கள் கவி தனில் சந்தங்களினால்... கவிதை கண் முன்னே யாவையும் உணரச் செய்கிறது... அருமையான படைப்பு... வெற்றி நிச்சயம்... வாழ்த்துக்கள்... மேலும் மேலும் வளரட்டும் உங்கள் கவிதை படைப்புகள்.. 29-Aug-2015 5:48 pm
தாங்கள் இக்கவிதைப் பற்றிய ஆய்வை பகிர்ந்தால் மகிழ்ச்சியுடன், ஆவலுடன் கண்டு பயனுறுவேன் ஐயா 29-Aug-2015 11:45 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) Dharman மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Jun-2015 3:22 am

எங்கோ ஒரு திசையிலிருந்து
சந்தோஷ கூக்குரலிடும்
சந்தம் கேட்டது - அது
ஏதோ ஒரு குழந்தை பிறந்து விட்டது
என்பதை உறுதி செய்தது...

எங்கோ ஒரு திசையிலிருந்து
அழுகையின் பேரிரைச்சல்
ஒப்பாரியின் உருவத்தில் கேட்டது - அது
ஏதோ ஒருவர் இறந்து விட்டார்
என்பதை உறுதி செய்தது...

இப்படியாக
எதிர் நோக்கிச் செல்லச் செல்ல
மனிதர்களின் பிறப்பு இறப்பு அடையாளங்களை
பார்க்க வேண்டி இருந்தது - ஆனால்
கடைசி வரை பார்க்கவே இல்லை
மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை...

மேலும்

நச் 04-Sep-2015 8:36 pm
மிக அழகான புரிதலில் மிக்க மகிழ்ச்சி நண்பரே... மிக்க நன்றி வருகைக்கும் வழங்கிய கருத்திற்கும்.... 04-Aug-2015 11:05 pm
நம்மை சுற்றி உள்ளவர்களிடமே நம்மால் தொடர்ந்து மனிதனாய் இருக்க இயலாதபோது எவ்வாறு காண இயலும் மனிதனாய் . வாழ்வில் தொடரட்டும் தேடல். சிறந்தவரிகள் வாழ்த்துக்கள் . 04-Aug-2015 2:39 pm
கண்டிப்பாக தோழரே... மிக்க நன்றி தோழரே.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.. 15-Jul-2015 3:04 am
pranavan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2015 11:52 pm

உன்னிடம்
பலவீனமாக இருப்பதே
எனது பலமாக இருக்கலாம்

உன்னை இழந்துவிடும்
பயம் இருக்குவரை
நான் தைரியசாலியாகவே
இருப்பேன்

மேலும்

பாராட்டுக்கு நன்றி வேந்தன் 24-Jun-2015 10:48 pm
காதலை இப்படியும் சொல்லலாமா? அருமை. 23-Jun-2015 7:25 pm
மிக்க நன்றி நண்பரே 21-Jun-2015 11:35 pm
அதுதான் காதலின் பலம்... நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Jun-2015 2:56 am
pranavan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2015 12:33 am

நீ ஒரு தொட்டிலில்
நான் ஒரு தூளியில்
யாருக்காய் யார் பிறந்தோம்

நீ ஒரு மடியில்
நான் ஒரு மடியில்
யார் பசிக்காய் யார் அழுதோம்

நீ ஒரு சுற்றமும்
நான் ஒரு சூழலும்
யாருக்காய் யார் வளர்ந்தோம்

உன் முதல் பார்வையும்
நம் முதல் வார்த்தையும்
யார் உறவை யார் வளர்த்தோம்

உன்மடி சாய நானும்
என் உயிர் சேரநீயும்
முதல்காதல் யார் மொழிந்தோம்

என்வானில் உயர நீயும்
உன்நினைவில் விரிய நானும்
யார் சிறகால் யார் பறந்தோம்

நீ அந்த மஞ்சம் தூங்க
உன் நினைவால் நெஞ்சம் ஏங்க
யார் கனவில் யார் மிதந்தோம்

ஊடலும் வாடலும்
முடிந்தபின் கூடலும்
யாருக்காய் யார் வளைந்தோம்

நீ ஒரு சாதியில்
நான் ஒரு சாதியி

மேலும்

மிக்க நன்றி வேந்தன் 16-Jun-2015 10:51 pm
உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அமுது .. 16-Jun-2015 10:51 pm
நல்ல படைப்பு தோழரே! 15-Jun-2015 2:36 pm
அற்புதம். 09-Jun-2015 8:35 pm
pranavan - pranavan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 10:21 pm

நித்தம் வலிதாங்கும்
நிலை வேண்டாம் எஜமானே
முழுதாய் இன்றென்னை
இரையெனக் கொண்டுவிடு

என் தேகத்தைக் கூறுபோடு

உன்னிடம் கூனிக் கையேந்தி
ஒருவேளை பசியாறும்
என்
இரைப்பை தேங்கிய
செரிமான மிச்சத்தை
கஞ்சி என
கலயத்தில் சேர்த்துக்கொள்

அடிமைத்தனம் கொண்டு
வெகுண்டெழுந்து நிமிராதஎன்
நெஞ்சைப்பிளந்து
நிறைந்தொழுகும் குருதியை
குழம்பெனப் பிசைந்துகொள்

உன் அடக்குமுறை கண்டு
ஆயுதம் ஏந்தாத
விரல்களைத் துண்டித்து
மிளகாய்ப் பிஞ்சுபோல்
நறுக்கென கடித்துக்கொள்

உரிமைக்குக் குரல் எழுப்பத்
தெரியாத குரல்வளையை
கடித்துச் சுவைத்து
கரும்பெனத் தின்றுவிடு

எதிர்த்தொரு வார்த்தை
எழுப்பாத என் நாவை
வெ

மேலும்

நான் கிண்டலாக எந்தக் கவிதைக்கும் கருத்துக் கூறுவதில்லை. நல்ல கவிதைகள் கவனத்தைப் பெறுவதில்லை என்பதால் இப்படிச் சொல்ல நேர்ந்தது. நான் சொல்வதெல்லாம் உண்மை. உங்கள் வேண்டுகோளைப் பற்றி ஆழமாக யோசிக்கிறேன். 02-Jun-2015 4:35 pm
மதிப்பிற்கு நன்றி..நண்பரே..ஆனால் என்னால் இந்த அளவுக்கு எல்லாம் சிந்திக்கக் கூட முடியாது என்பதே உண்மை..தங்கள் அபிமானத்திற்கு நன்றி.வாழ்த்துக்காள் ..தொடர்ந்து முன்னேறி உச்சங்கள் தொட வாழ்த்துக்கள்! 02-Jun-2015 8:25 am
சும்மா கிண்டல் பண்ணாதீர்கள் வேந்தன். நீங்களெல்லாம் எழுதும் தளத்தில் நான் எழுதுவதை கவிதை என்று கூட எந்த இடத்திலும் குறிப்பிட்டுக்கொள்வதில்லை.நீங்கள் போய் இப்படியெல்லாம் எழுதலாமா ....நீங்கள்,ராம்வசந்த் ,மற்றும் முகம் பார்க்காமலே அன்னியோன்யம் ஆகிவிட்ட சிலர் பார்த்துவிட்டாலே ஆத்ம திருப்தி அடைந்துவிடுபவன் நான் . இப்போது ராம் வசந்த் இல்லாதது பெரிய மனக்குறை .. மற்ற தளங்களில் நீங்கள் எழுதி இருக்கும் எல்லா கவிதைகளையும் இங்கே போஸ்ட் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் . 02-Jun-2015 12:10 am
உங்களை போன்றவர்கள் ஒரு பார்வை பார்த்துச்செல்வதே பாக்கியம் அய்யா 01-Jun-2015 11:53 pm
pranavan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2015 10:21 pm

நித்தம் வலிதாங்கும்
நிலை வேண்டாம் எஜமானே
முழுதாய் இன்றென்னை
இரையெனக் கொண்டுவிடு

என் தேகத்தைக் கூறுபோடு

உன்னிடம் கூனிக் கையேந்தி
ஒருவேளை பசியாறும்
என்
இரைப்பை தேங்கிய
செரிமான மிச்சத்தை
கஞ்சி என
கலயத்தில் சேர்த்துக்கொள்

அடிமைத்தனம் கொண்டு
வெகுண்டெழுந்து நிமிராதஎன்
நெஞ்சைப்பிளந்து
நிறைந்தொழுகும் குருதியை
குழம்பெனப் பிசைந்துகொள்

உன் அடக்குமுறை கண்டு
ஆயுதம் ஏந்தாத
விரல்களைத் துண்டித்து
மிளகாய்ப் பிஞ்சுபோல்
நறுக்கென கடித்துக்கொள்

உரிமைக்குக் குரல் எழுப்பத்
தெரியாத குரல்வளையை
கடித்துச் சுவைத்து
கரும்பெனத் தின்றுவிடு

எதிர்த்தொரு வார்த்தை
எழுப்பாத என் நாவை
வெ

மேலும்

நான் கிண்டலாக எந்தக் கவிதைக்கும் கருத்துக் கூறுவதில்லை. நல்ல கவிதைகள் கவனத்தைப் பெறுவதில்லை என்பதால் இப்படிச் சொல்ல நேர்ந்தது. நான் சொல்வதெல்லாம் உண்மை. உங்கள் வேண்டுகோளைப் பற்றி ஆழமாக யோசிக்கிறேன். 02-Jun-2015 4:35 pm
மதிப்பிற்கு நன்றி..நண்பரே..ஆனால் என்னால் இந்த அளவுக்கு எல்லாம் சிந்திக்கக் கூட முடியாது என்பதே உண்மை..தங்கள் அபிமானத்திற்கு நன்றி.வாழ்த்துக்காள் ..தொடர்ந்து முன்னேறி உச்சங்கள் தொட வாழ்த்துக்கள்! 02-Jun-2015 8:25 am
சும்மா கிண்டல் பண்ணாதீர்கள் வேந்தன். நீங்களெல்லாம் எழுதும் தளத்தில் நான் எழுதுவதை கவிதை என்று கூட எந்த இடத்திலும் குறிப்பிட்டுக்கொள்வதில்லை.நீங்கள் போய் இப்படியெல்லாம் எழுதலாமா ....நீங்கள்,ராம்வசந்த் ,மற்றும் முகம் பார்க்காமலே அன்னியோன்யம் ஆகிவிட்ட சிலர் பார்த்துவிட்டாலே ஆத்ம திருப்தி அடைந்துவிடுபவன் நான் . இப்போது ராம் வசந்த் இல்லாதது பெரிய மனக்குறை .. மற்ற தளங்களில் நீங்கள் எழுதி இருக்கும் எல்லா கவிதைகளையும் இங்கே போஸ்ட் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் . 02-Jun-2015 12:10 am
உங்களை போன்றவர்கள் ஒரு பார்வை பார்த்துச்செல்வதே பாக்கியம் அய்யா 01-Jun-2015 11:53 pm
pranavan - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2015 9:41 pm

அவன் அவனாகவே இருக்கிறான்
காதலின் உரசல்களில்
அதிக அதிர்வெண்களை
அவன் எப்போதும் பதிந்ததில்லை
காதலின் சிக்கலான விதிமுறைகள்
அவனுக்குப் புரிந்ததே இல்லை
அவன் அவனாகவே இருக்கிறான்

அவன் உடல்மிகும் வெப்பம் என்னை
அணுப்பொழுதும் சூழ்ந்தே இருந்தாலும்
காதலிக்கிறானா தெரியவில்லை
காதல் மொழிகள் சொன்னதும் இல்லை
அவன் அவனாகவே இருக்கிறான்

என் முத்தங்களில் எப்போதும்
கண்மூடிக் கிறங்கியதில்லை
மற்றுமொரு முத்தம்
பதிலாக கிடைத்ததும் இல்லை
அவன் அவனாகவே இருக்கிறான்

திரை அரங்குகளின்
இருட்டு மூலைகளில்
என்னைத் தழுவிச்சுகம் கண்டதில்லை
என் சரிந்த முந்தானைகளில்
எப்பொழுதும்
சமநிலை தவறியதில்லை
அவன் அவனாக

மேலும்

இப்போதைக்கு உங்களின் ஊக்கத்துக்காக மட்டுமே எழுத வேண்டும். நன்றி நண்பரே! 08-Jun-2015 12:41 pm
வருகைக்கு மிக்க நன்றி சகோதரி 07-Jun-2015 9:22 pm
அழகான கவிதை !!!! 07-Jun-2015 2:34 pm
என்ன நண்பரே இப்படி சொல்லிவிட்டீர்கள் .உங்களின் எழுத்துக் குளத்தில் குதித்த தவளை படித்தபின் நானல்லவா உங்களிடம் அப்படி சொல்லி இருக்கவெண்டும் .குளத்தில் குதித்து இருப்பது தவளை அல்ல ..யானை என்று பயந்து போய் கிடக்கிறேன் .என்னிடம் போய் 07-Jun-2015 12:24 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
agan

agan

Puthucherry
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (30)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)

இவரை பின்தொடர்பவர்கள் (30)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே