இரா சுந்தரராஜன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இரா சுந்தரராஜன் |
இடம் | : வீரசிகாமணி, சங்கரன்கோவில |
பிறந்த தேதி | : 16-Jan-1965 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 3007 |
புள்ளி | : 293 |
வாழ்வெனும் ஓவியம்rnவரையக் கற்றுக்கொண்டவன்rnஆனாலும் இதுவரைrnவரைந்த ஓவியம்rnசில இடங்களில் மிகையாகவும்rnசில இடங்களில் குறைவாகவும்rnஇருப்பதை தெரிந்து கொண்டவன்rnrnஇதுவரை நான் வாழ்ந்த rnவாழ்க்கை எனும்rnவெற்றி தோல்வி புத்தகத்தில்rnநான் எடுக்கும்rnஅழகிய குறிப்புகள் rnஇனி வாழும் வாழ்விற்கு rnவழி காட்டட்டும்...rnவெற்றி இருப்பது rnசேரும் இடத்திலல்லrnவாழும் விதத்தில்...rn rn
சபாபதி ஆற்றும் பேராசிரியர்
தொழில் மிக அபாரமானது..
சபாவிடம் கற்பது
மிக அதிர்ஷ்ட வசமானது..
சபா கற்றுத் தரும்
ஐஸோமெட்ரிக் வியூ(கம்)
வெனிலா ஐஸ்கிரீம்...
பெர்ஸ்பெக்டிவ் வியூ(கம்)
பட்டர்ஸ்காட்ச் ரகம்...
தங்கத்தில் வேலை செய்யத்
தெரிந்த சபாவிற்கு வேலையைத்
தங்கமாய்ச் செய்யத் தெரியும்..
சபாவை சபைகள் பாராட்டும்...
இவன் கற்றுத் தந்த பாடங்கள்
நிலநடுக்கோடு முதல்
துருவங்கள் நோக்கிய திசையில்
பூகோளம் பார்த்திருக்கும்...
உலகப் பொருளாதாரம்
இவனாலும் உயர்ந்திருக்கும்...
வார்த்தைகளில் தேன்
கலக்கத் தெரிந்த சபா
செய்யும் சம்பாஷனைகளில்
மண் சுவர்கள் யாவும்
பொன் சுவர்கள் ஆகும்...
பூவின்
வெங்கடாச்சலம்...
இவனது மூளை எப்போதும்
கனன்று கொண்டிருக்கும்
அதில் சிந்தனைச் சமையல்
நடந்து கொண்டிருக்கும்...
பசியாறப் பரிமாறுவதில்
மாற்று சுவை உள்ளோரும்
ருசி காண்பர்.. பசி தீர்வர்...
படைத்த இறைவனைத்
தேடாமல் அவன்
படைப்புகளைத் தேடும்
தேடல் இவனை இயக்கும்..
எதனை எண்ணி மனிதனைப்
படைத்தானோ இறைவன்
அதனை நோக்கி இவனது
பயணம் இருக்கும்...
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
அது இவனது முதல் பாகம்..
ஆகாயத்தின் மறுபக்கமும்
பார்க்க முயல்வது
இவனது இரண்டாம் பாகம்..
வானம் என்பது வசப்பட
என்பது புரிந்து தெரிந்து
வாழும் வெங்கட் உனக்கு என்
வசந்த வாழ்த்துகள்.. இனி
பதினேழு வயதில்
கல்லூரிக்குச் சென்று வருகிறேன்
என்று வீட்டில் கூறினார்..
வயது ஐம்பத்தேழு தாண்டியும்
கல்லூரிக்குச் சென்று வருகிறேன்
என்றே இன்றும் வீட்டில் கூறுவார்..
அவர் பேராசிரியர் மீனா..
மாணவர்களுக்கு என்றே
உழைக்கும் அவரது பேனா..
மீனா கொடுத்து வைத்தவர்..
அவரது மாணவர்களோ
இன்னும் கொடுத்து வைத்தவர்கள்..
சூரிய கிரகமும் செவ்வாய் கிரகமும்
சந்திரனும் கல்லெறி தூரம் ஆகிறது
மீனா போன்ற ஆசிரியர்களால்..
அறிவென்பது வளர்ந்து கொண்டே
இருக்கும்.. மதிப்பெண் தாள்களில்
மதிப்பெண்கள் மட்டும் வளராது
என்பதை எண்ணி மதிப்பெண்கள்
சற்று அதிகமாகவே கொடுப்பார்..
மாணவனை சாதிக்க வைப்பார்..
ஒரு கவிதையை
பெயராகக் கொண்டவர்
தோழி கோப் பெரும் தேவி...
மேலாண்மை செய்வதில்
வலுவூட்டப்பட்ட கான்கிரீட் என
கோப்ஸ் வல்லினம்.. இவர்
நட்பு பாராட்டி மகிழ்வதில்
மலரென இருக்கும் மெல்லினம்..
மரபுக்கவிதை புதுக்கவிதை
புனைவதில் இடையினம்..
அளந்து பேசுவார்.. சபை
அறிந்து பேசுவார்
குற்றியலுகரம் குற்றியலிகரம்
போன்று குறைந்து பேசுவார்..
விரைந்து செயலாற்றும் வேகம்
இன்னிசை அளபெடை
இசை நிறை அளபெடை..
நினைவிற்கு வந்து போகும்...
தமிழில் நல்ல பாடல்கள் தருவது
யாப்பிலக்கணம்... வையகத்தில்
நல்ல வீடுகள் தருவது
இந்த கோப்பிலக்கணம்..
கட்டிய வீட்டிற்குள்ளேயே பெண்கள்
இருந்து வந்தது அந்தக் கா
சங்கமேஸ்வரி...
கடற்கரை நகரம்
வீரத்தின் விளைநிலம்
முத்து நகரில் தொடக்கம்
அவரது நல்ல காலம்...
குன்னூர் மலைப் பிரதேசம்..
மக்கள் அவ்வப்போது
சென்று வரும் சுற்றுலா ஸ்தலம்
வருஷம் முழுமையும்
அங்கு வசந்த காலம்...
எப்போதும் அங்கேயே குடியிருந்து
குதூகலித்து விளையாடிய
பொன் மாலைப் பொழுதுகள்
வசீகர காலம்...
அது சங்கரியின் இனிமைக் காலம்
காடுகள் மலைகள்
மேடுகள் பள்ளங்கள்
செடிகள் கொடிகள் மரங்கள்
தேயிலைத் தோட்டங்கள்...
தலைமை தாங்கிய பச்சை நிறம்
மலர்களின் கண்கவர் நிறம்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உத்வேக காலம்..
வாழ்ந்திருந்த இல்லம்
பூக்களின் வாசம்..
படித்த
தமிழ் பேசும் நல்லுலகம்
வையகத்தின் வசந்த தேசம்.. அது
அர்த்தங்களின் அனாயாசம்...
ஆனந்த சுவாரசியம்...
முழு உலகத்தின் கூறுகளைத்
தனக்குள் கொண்ட
இனிப்புப் பிரதேசம்...
இனிதாய் வாழ இன்பமாய் வாழ
வழிகள் சொல்லி வரங்களை
அள்ளித் தருவதால்...
தமிழைத் தாய்மொழியாய்க்
கொண்டு பிறக்கும் குழந்தைகள்
யாவும் இங்கு செல்வந்தர்களே..
ஒட்டு மொத்த உலகம்
தமிழ் உலகைப் பார்க்கிறது.. அதன்
நேர்த்தி கண்டு வியக்கிறது...
மொழியால் சிந்தனையும்
சிந்தனையால் மொழியும்
வளரும் அதிசயம்
இங்குதானே நிகழ்கிறது...
அறுபது வயதிற்குள்
முதன் முதலாய்...
அறுபதைத் தாண்டியவர்க்கு
இரண்டாம் முறையாய்...
வந்துதித்த பிலவ வருடத்தில்
மகிழ்ச்சி.. என்றும்
உங்களது அனைத்து
குறுஞ்செய்திகளுக்கும்
எனது பதில்
ஒற்றை ரோஜா....
உங்களது அனைத்து
குற்றச்சாட்டுகளுக்கும்
எனது மறுப்பு
ஒற்றை ரோஜா
உங்களது அனைத்து
கோபங்களுக்கும்
எனது சமாளிப்பு
ஒற்றை ரோஜா
உங்களது அனைத்து
சோகங்களுக்கும்
எனது ஆறுதல்
ஒற்றை ரோஜா
உங்கள் பார்வைக்கேற்ப
உங்கள் நேரத்திற்கேற்ப
நேசத்திற்கேற்ப
தேவைக்கேற்ப வழியும்
வண்ணங்களை
பூசிக்கொள்ளும்
எந்தன் ஒற்றை ரோஜா வின்
நிறம் என்றென்றும்
கறுப்பு வெள்ளை தான்!
- மதிஒளி சரவணன்
இமைக்கும்
இடைவெளியை
குறைத்துக் கொள்
இதயத்துடிப்பு
அதிகமாகிறது
காதலில்
கரைந்தவர்
பல கோடி
இமைக்கும்
இமைகளால் சிலர்
இழுக்கும்
பார்வையால் சிலர்
மயக்கும் மாய
புன்னகையால் சிலர்
இசையோசை குரலால் சிலர்
திங்கள்
முக ஒளியால் சிலர்
கார் நிற கூந்தலால் சிலர்
மலர் பாதம்
பதிந்த
சுவடுகளால் சிலர்
பருவ வனப்பால் சிலர்
ஆனால்
இவை அனைத்தும் இருந்தும்
கரைந்து போனேன்
கபடம் அற்ற
ஒருதுளி கண்ணீரால்
டாக்டர் லதா கிறிஸ்டி...
அற்புத பதிவை பதிவிட்டமைக்கு
தங்களுக்கு நன்றி...
தமிழிலும் தங்களின் பேச்சு
சிறப்பாக இருக்கிறது...
மதிப்புள்ள பதிவு
இரண்டு காரணிகளில் மேலும்
மதிப்புக் கூட்டல் பெறுகிறது...
ஒன்று... சாதனை விஞ்ஞானி
சாமானியர்களின் வேதனைகளை
அலசி ஆராய்வது...
இன்னொன்று.. பெண்கள் பலரின்
துயரங்கள் சொல்லி
தீர்வுகளும் சொல்லியிருப்பது...
கொஞ்சும் தமிழ் கவர்கிறது...
பெண்களின் மாண்பு சொல்ல
பாரதி வந்து போகிறார்...
சமநீதி தந்து போகிறார்...
பெண்கள் சுதந்திரத்தை
வேர்கள் முதல் விழுதுகள் வரை
விசாரிக்கும் உங்கள் உரை
பெண் சுதந்திரம் மறுக்கும்
தடைகளை உடைக்கும்
அதே வேளையில் எல்லைகளை
வரையறுக்கவும் தவறவில
ஊருவிட்டு ஊர் மட்டுமல்ல..
நாடுவிட்டு நாடு மட்டுமல்ல..
கண்டம்விட்டு கண்டம்...
ஒன்றல்ல இரண்டல்ல
இருபத்தைந்து ஆண்டுகள்..
சென்று... அங்கு வென்றது
நண்பன் ராஜ்குமாரின்
திறமைக்குச் சான்று..
அது மிக்க நன்று...
திறமை இருந்தும் இல்லாமலும்
வாழ்ந்துதான் ஆகவேண்டும்
தாய்த் திருநாட்டில்...
திறமை இருந்தால் மட்டுமே
வாழமுடியும் அயல்நாட்டில்...
அமெரிக்கா... அது
ராஜ்குமாரின் திறமையில்
விசா சல்லடை இனி உனக்கு
வேண்டாம் என்றது...
கிரீன் கார்டு தந்து தன்னோடு
தக்க வைத்துக் கொண்டது...
சூரியன் இவனுக்கு
இருபத்துநான்கு மணி நேரமும்
சொந்தமாகிப் போனது... அதனால்
பந்தங்கள் கூடிப்போனது...
இந்திய
நட்பு
நேசித்தது !!
நட்புக்கும் மூன்று எழுத்து
காதலுக்கும் மூன்று எழுத்து
என்பது நம் இருவரும்
ஆனால்
நம் உறவினை காதலா நட்பாக
என் ஆராய்ந்த போது
நாம் நேசிப்பது நம்மை இல்ல
நம் நட்பை தான் ......!!!
இவன்
இரா பாக்கியராஜ் ...