சரவண பிரகாஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சரவண பிரகாஷ்
இடம்:  TIRUPUR
பிறந்த தேதி :  29-Dec-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2016
பார்த்தவர்கள்:  523
புள்ளி:  47

என்னைப் பற்றி...

மனிதர்களால் தர முடியாத ஆறுதலை எனக்கு எழுத்து தருகிறது..அதனால் எழுதுகிறேன்.

என் படைப்புகள்
சரவண பிரகாஷ் செய்திகள்
சரவண பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2020 10:12 pm

பழைய டைரி குறிப்புகள்
**********************

(ஒரு ஊர்,ஒரு வீடு, ஒரு மனிதன்...அவனது பழைய பஞ்சாங்கத்தை படிக்க வகையில்லது எழுதுகிறான்.காலத்தினுள் மறந்துபோன மனிதர்களையும் அவர்களால் ஏற்பட்ட நினைவுகளையும் கடிதமாய் எழுதுகிறான்.இது அந்த மனிதனின் கண்டுகொள்ளப்படாத தூசு படிந்த பழைய டைரி குறிப்புகள் எனலாம்.....)



அன்புள்ள மூர்த்தி,

நலம்.அவ்வண்ணமே நீயும் இருப்பாய் என எண்ணுகிறேன்.14 வருட இடைவெளிக்கு பிறகு உனக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது. வீட்டில் அம்மா எப்படி இருக்கிறார்?புதிய வேலையும், வெளிநாடு பயணமும் வசதியாக இருக்கிறதா?அம்முக்குட்டியை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாயிற்றா?மூர்த்தி ஏனோ உன்னோடு

மேலும்

சரவண பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2019 6:52 am

தொலைந்து போன இரவுகள்!
**********************

(உங்ககளுக்குள் மறைந்து போன ஒருவரை உங்களுக்கே அறிமுகம் செய்யும் கதை)



"சே,ஏன் தா இந்த மேனேஜர்ஸ் இப்டி இருக்காங்களோ, இவ்ளோ கஷ்டப்படட்டு வேலை செய்ஞ்சாலும் தப்பு சொல்றது...." என்று கடிந்து கொண்டே மேனஜர் அறையில் இருந்து வந்த மீராவை நிறுத்தினாள் சுஜா.
"ஹே என்னாச்சு,இன்னைக்கும் சார் கிட்ட நல்ல வாங்குனயா.." என்று அவளை வெறுப்பேற்றினாள். சுஜாவை முறைத்துவிட்டு தன் இடத்தில் அமர்ந்தவள் "இதுக்குதான் அம்மா சொன்ன மாறி இந்த software வேலைக்கு வராமலேயே இருந்திருக்கலாம்" என்று முனங்கினாள்.ஆனால் இந்த முனகல் ஒன்றும் முதல்தடவை அல்ல.
"சரிடி விடு,அநத ஆள் அப்படித

மேலும்

சரவண பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2019 7:37 pm

(நினைவுகளில் முங்கி எழும் போது கிடைக்கும் பொக்கிஷங்களுள் காதலும் அடங்கிவிடுகிறது.யாருக்கும் தெரியாமல்,ஒருவருக்கும் புரியாமல்.12 ஆண்டுகள் கழித்து  ஒரு மழை  காலத்தில் தன்  பழைய காதலியை  சந்திக்கிறான் ஒருவன் எதர்ச்சையாக அவனது உணர்வுகளை முடிந்தளவு  வார்த்தைகளால் வகுடெடுத்திருக்கிறேன்]





                                                                                     பழைய கண்ணீர் துளிகள்!

                                                                         
அது ஒரு மழைக் காலம் ...

கருத்த மேகம் 

பயமுறுத்தும் இரவு 

மேனி தொடும் குளிர்காற்று 

யாருமில்லா பேருந்து நிறுத்த

மேலும்

அருமை👌 12-Feb-2019 11:11 pm
கதையை கவிதையாய் . சிறப்பு 12-Feb-2019 9:07 pm
சரவண பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2018 11:27 pm

அன்புள்ளவருக்கு,

இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்,காரணம் உங்களுக்கும் அதன் அர்த்தம் புரியாமல் போயிருக்கலாம் அல்லது பிடிக்காமல் போயிருக்கலாம்.இந்த கடிதம் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருப்பதற்காக நான் பிரபஞ்சத்துக்கு நன்றி சொல்கிறேன்.உங்களை எனக்கு தெரியாமல் இருக்கலாம்,இந்த பூமி பந்தின் ஒரு ஓரத்தில் நீங்கள் யாரோ ஒருவராக இருக்கலாம்,ஆனாலும் காலத்தாலும்,உலகத்தாலும் கைவிடப்பட்ட மனிதனின் உணர்வுகளையும்,காயங்களையும் இந்த கடிதத்தின் வாயிலாக உங்கள் கண்களாவது படிக்கிறதே அதற்காக நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு,எத்

மேலும்

சரவண பிரகாஷ் - சரவண பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2017 12:51 pm

அவனுக்கு மொத்தம் மூன்று கைகள்.வாழ்வின் துக்கங்களை அதிகம் சந்தித்துப் பழகிய அவனை நம்பியவர்கள் கைவிட்டாலும் அவன் ஒருபோதும் நம்பிக்கையை விட்டதில்லை.இந்தியாவில் படித்து விட்டு வேளையெல்லாம் வேலை தேடும் 30 சதவீத இளைஞர்களும் அவனும் ஒருவன்.

"டேய் நேரம் ஆச்சு சீக்கரம் கிளம்பு,இந்த வேலைலயாவது சேரப் பாரு,நீதி நியாயம்னு பேசி இந்த வாட்டியும் கோட்ட விற்றதா" என்ற அம்மாவின் அர்ச்சனைகள் கேட்டவுடன் சட்டை பொத்தானை சரி செய்து கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தான் அருண்.

"அதெல்லாம் என் திறமைக்கு ஏத்த வேலையாய் கிடைக்கும் மா" என்றான்.அருணின் சொற்களில் நம்பிக்கை கலந்திருந்தது.அவன் அம்மாவின் முக சுழிப்பில்

மேலும்

நன்றிகள்... 06-Dec-2017 7:33 pm
சரவணா.... நன் அருண் . நான் நிறைய சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளை படித்துள்ளேன். உங்களின் எழுத்துநடை அவர்களின் நடையை ஒத்து இருக்கின்றது. நல்ல கதை.. வாழ்த்துக்கள் 06-Dec-2017 7:29 pm
தமிழ் ப்ரியா அளித்த படைப்பில் (public) Shagira Banu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Apr-2017 2:28 pm

இதயத்தில் இடம் தந்தும்
உன் அருகே எனக்கோர் இடமில்லை,

உயிரில் உனைச் சுமந்தும்
உன் வாழ்வில் கலந்திட வழியில்லை,

இரவெல்லாம் உன் கனவுகள்
அதில் ஏனோ நீயும் வரவில்லை,

வழியெங்கும் உன் பயணம்
வழித்துணையாய் எனை ஏன் சேரவில்லை,

மனதில் ஆயிரம் ஆசைகள்
அதை எனக்காய் தந்திட மனமில்லை,

பிரிவில் பெரும் துயரம்
என் முகவரி அறிந்தும் வரவில்லை,

நிதமும் படுத்தும் நினைவுகள்
சொல்லிட நா ஏனோ எழவில்லை,

வேதனை தாளாத இரவுகள்
நமக்கான நாட்கள் ஏன் உதிக்கவில்லை,

சொல்லிட காத்திருக்கும் வார்த்தைகள்
உன் முன் மட்டும் பேச முடியவில்லை,

வீதியெங்கும் உன் முகம்
உன் வாசல் காண இயலவில்லை,

மேலும்

பிரிவின் வலி உணர முடிகிறது....வாழ்க..வளர்க.... 18-Jul-2017 1:03 pm
தங்களது ரசனைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா... 24-Apr-2017 5:13 pm
மகிழ்ந்தேன் தோழி... 24-Apr-2017 5:12 pm
காதலால் கலங்கும் நெஞ்சம் இதயத்தை உருக்கும் அவன் எண்ணம். வாழ்த்துக்கள். உங்கள் திறமை பெருகட்டும் தமிழ் வாழட்டும் 24-Apr-2017 4:54 pm
சரவண பிரகாஷ் - சரவண பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2017 9:46 pm

(காயங்களால் சூழப்பட்ட இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கத்தில் என் பேனா சிந்திய முத்துகளை உங்கள் முன் தொடுக்கிறேன்)


ஆராரோ பாட யாருமில்லாது, பொழுதெல்லாம்
கதறி அழுகின்ற ஊமை உள்ளத்திற்கு என்
தங்க வரிகளால் தாலாலோ பாடுகிறேன்
மனமே நீ கண்ணுறங்கு....!

பயப்படாதே!காயங்கள் மட்டுமே அறிந்த உன்
இதயத்தை பிழிந்தெடுத்து குருதிகுடிக்கும்
பொய்யுருவில் வருகின்ற சில
அகோரிகளின் எச்சம் நானல்ல...!

சில நூறு அறுவை சிகிச்சை
செய்த இதயத்திற்கு வார்த்தைகளால்
தையலிட முற்படுகிறேன்...!


நீ உலகத்தின் விசித்திரம் -நீ
உண்டாக்கிய கண்ணீர் வெள்ளத்தில்
நீயே அடித்துச் செல்லப்படுகிறாய்....!


உன

மேலும்

நன்றி நட்பே...! 18-Jul-2017 12:59 pm
மிக அருமையான முத்துச்சரம் தொடுத்துள்ளீர், வரிகளில் இதம் நிறைத்து வடித்துள்ளீர்... நன்றி... 17-Jul-2017 10:41 pm
சரவண பிரகாஷ் - சரவண பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2017 9:46 pm

(காயங்களால் சூழப்பட்ட இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கத்தில் என் பேனா சிந்திய முத்துகளை உங்கள் முன் தொடுக்கிறேன்)


ஆராரோ பாட யாருமில்லாது, பொழுதெல்லாம்
கதறி அழுகின்ற ஊமை உள்ளத்திற்கு என்
தங்க வரிகளால் தாலாலோ பாடுகிறேன்
மனமே நீ கண்ணுறங்கு....!

பயப்படாதே!காயங்கள் மட்டுமே அறிந்த உன்
இதயத்தை பிழிந்தெடுத்து குருதிகுடிக்கும்
பொய்யுருவில் வருகின்ற சில
அகோரிகளின் எச்சம் நானல்ல...!

சில நூறு அறுவை சிகிச்சை
செய்த இதயத்திற்கு வார்த்தைகளால்
தையலிட முற்படுகிறேன்...!


நீ உலகத்தின் விசித்திரம் -நீ
உண்டாக்கிய கண்ணீர் வெள்ளத்தில்
நீயே அடித்துச் செல்லப்படுகிறாய்....!


உன

மேலும்

நன்றி நட்பே...! 18-Jul-2017 12:59 pm
மிக அருமையான முத்துச்சரம் தொடுத்துள்ளீர், வரிகளில் இதம் நிறைத்து வடித்துள்ளீர்... நன்றி... 17-Jul-2017 10:41 pm
சரவண பிரகாஷ் - கவி ரசிகை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2017 11:09 am

என் கள்ளம்கபடம் இல்லா காதலுக்கு
கண்கள் மட்டும் இல்லை...
அதை புரிந்துகொள்ள
என் அவனுக்கு
மனதும் இல்லை...
இருந்தபோதும்
என் அவன் தந்த
இந்த வலி
எனக்கு மட்டுமே சொந்தம்.......

மேலும்

அன்பும் வழிகள் தரும் அதை உணராதவர்களிடம் காட்டும் போது........ 15-Jul-2017 2:11 pm
சரவண பிரகாஷ் - சரவண பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2017 4:37 pm

இப்போதாவது ஓய்வு கிடைத்ததே
என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டன
இரண்டு கைபேசிகள்
இரு வேறு திசைகளில்....

ஒரு காதல் கவிஞன் ஒளிந்தான்
என்று முகநூலும்
ஒரு காதல் கிறுக்கி ஒழிந்தாள்
என்று டிவீட்டரும்
சந்தோஷித்தன.....

இனி சுகமாக தூங்கலாம்
யாரும் நம்மை சீக்கரம் எழுப்பமாட்டார்கள்
இது அந்த தேநீர் கடையின்
ஏழாம் எண் மேஜையின்
கூக்குரல்.....

அடடா!இனி நம்மை யார்
எழுப்பிவிடுவார்கள்?
இது சூரிய சந்திரரின்
கவலை....

அவர்கள் இனி வரமாட்டார்களோ?
என ஏக்கப்பட்டது பூங்கா.....

இரவு நேர தூது
இனி இல்லை என
சுகமாய் இருந்தது
பூங்காற்று....

நாங்கள் அப்போவே சொன்னோமே
என்று அங்கலாய்த

மேலும்

நன்றிகள் பல.நேரம் இருந்தால் என் கட்டுரைகளை படிக்கவும்.. 28-Apr-2017 4:34 pm
மிக மிக அருமை ,,, வாசிப்பில் கரைகிறது உள்ளம் ,,,, 28-Apr-2017 4:31 pm
நன்றி 28-Apr-2017 12:03 pm
அருமை நண்பா 28-Apr-2017 11:56 am
சரவண பிரகாஷ் - சரவண பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2017 8:13 pm

என்றாவது கொலை செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி,ரத்தமின்றி ஒரு கொலை செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன்.

தினம் தினம் கண்ணனுக்கு தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம்.உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்கு தெரியாத ஒருவனை நீங்கள் கொலை செய்ய வேண்டும்.

அதிசயம் என்னவென்றால் இந்த செயலுக்கு சட்ட அத்தியாயங்களில் தண்டனைகள் குறிப்பிடவில்லை,மாறாக உலகம் உங்களுக்கு பூமாலை சூடலாம்.அந்த "ஒருவனை" அறிந்துகொள்ள வேண்டுமெனில் என் கடைசி வரிகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்.

மனிதா!நீ எச்சில் செய்த தே

மேலும்

சரவண பிரகாஷ் - சரவண பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2017 11:56 am

// பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என ! //


[வாழ்க்கையின் மையப்பகுதியில் இருக்கும் வாலிபன் ஒருவன் தன எதிர்கால வாழ்க்கைத்துணைக்கு எழுதும் ஓர் கற்பனை கடிதம்]

வருத்தங்களையும்,மகிழ்ச்சிகளையும் சமஅளவில் சுமந்து கொண்டு இந்த கடிதம் உன்னை வந்தடையலாம்.எல்லோரும் நிகழ்கால புள்ளியில் இருந்து இறந்தகாலத்தை திரும்பி பார்ப்பார்கள்.நான் இருக்கும் காலத்தை எட்டி பார்க்கிறேன்!

என்னவளே!எங்கிருக்கிறாய்?எப்படி இருக்கிறாய்?மரத்தில் இருந்து தினம் உதிரும் பூக்கள் மாதிரி அன்பே உன்னை பற்றி நான் கொண்ட நம்பிக்கையும் தினம் தினம் உதிர்கிறது..!

வறுமை,வெறுமை,தனிமை இவற்றால் நான் சூழப்பட்டிரு

மேலும்

போற்றுதற்குரிய காதல் வாழ்வியல் மேலாண்மைக் கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் காதல் கற்பனைக்கு கடிதங்கள் காதல்:-- மலரும் நினைவுகள் --வாழ்த்துக்கள் 27-Apr-2017 7:02 pm
நன்றி தோழமையே... 27-Apr-2017 2:52 pm
வாழ்க்கையின் இணைவுக்காய் காதலெனும் போர்க்களத்தில் விழிகளின் தலைமையில் உள்ளங்கள் சண்டையிடுகிறது ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம் என்ற ஒன்றை இறைவன் கொடுத்தது அன்பினை மாசற்றதாக பரிமாறிக் கொள்ளத்தான் ..ஆனால் பலர் இதனை தவற விட்டு விடுகின்றனர் ஆனாலும் சிலர் அதனை புனிதமாக கையாள்கின்றனர் அழகான காதலின் நினைவுகளை சேகரித்து படைப்பினை எழுதி உள்ளீர் வாழ்த்துக்கள் 27-Apr-2017 12:13 pm
மிக்க நன்றி..... 27-Apr-2017 11:55 am
மேலும்...
கருத்துகள்

மேலே