selvaravi87 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  selvaravi87
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Oct-2014
பார்த்தவர்கள்:  473
புள்ளி:  14

என் படைப்புகள்
selvaravi87 செய்திகள்
selvaravi87 - எண்ணம் (public)
27-Sep-2016 6:03 pm

  *பெண் என்பவள் வெறும் சதையா..???*



🔸பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் பர்தா போட்டாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
 _பெண்ணின் உடையிலும் பிரச்சனை இல்லை.....!_


🔹பெண் ஏழு வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் பதினேழு வயதிலும் கற்ப்பழிக்கபடுகிறாள்,
🔹அவள் எழுபது வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்.
 _பெண்ணின் வயதிலும் பிரச்சனை இல்லை.....!_


🔸பெண் இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் முஸ்லீமாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் கிறிஸ்தவராக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
 _பெண்ணின் மதத்திலும் பிரச்சனை இல்லை.....!_


🔹பெண் தாயாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் மனைவியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் சகோதரியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
 _பெண்ணின் உறவிலும் பிரச்சனை இல்லை.....!_


🔸பெண் தமிழச்சியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் வடமொழி பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் ஆங்கிலம் பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
 _பெண்ணின் மொழியிலும் பிரச்சனை இல்லை.....!_


🔹பெண் கருப்பாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் வெள்ளை மயிலாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் கொள்ளை அழகாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
 _பெண்ணின் நிறத்திலும் பிரச்சனை இல்லை.....!_



*அப்போ எங்கு தான் பிரச்சனை..???*


சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் இல்லையேல் நாம் திருந்த வேண்டும்.....!

சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏன் பழிப்போட வேண்டும்..???

ஆண்களுக்கு பெண்களை விட வலிமையை தந்து இருப்பது அவளை காக்கவே தவிர பறிக்க அல்ல.....!

பெண்களை தாயாக சகோதரியாக பார்க்காவிட்டாலும் அவர்களை காமமாக பார்க்காதீர்கள்.....!


இந்த எழுத்துக்கள் கண்ணீர் சிந்தும் என் கண்மணிகளான சகோதரிகளுக்கு சமர்பணம்..!!!_

*சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...*  

மேலும்

selvaravi87 - எண்ணம் (public)
02-Apr-2016 5:54 pm

  ஒரு ஊரில் கடினமாய் உழைக்கும் ஓர் கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான்.ஒரு நாள் அவன் ஒரு பெரிய வியாபாரியின் வீட்டின் முன் சென்று கொண்டிருந்தான். 

வீட்டின் உள்ளே பார்த்தவன் அங்கு அந்த வியாபாரியின் வசதிகளைக் கண்டு பிரமித்தான். நானும் இவனைப்போல் ஒரு வியாபாரியாய் இருந்தால் எத்தனை பெரியவனாய் இருப்பேன் என்று நினைத்தான். 

உடனே அவனும் ஒரு பெரிய வியாபாரியாய் மாறி விட்டான். 

இன்னொரு நாள் ஒரு அரசாங்க அதிகாரியைக் கண்டான். அதிகாரிக்கு பணக்காரர்கள் முதல் எல்லாரும் பயப்படுவதைக் கண்டதும், நானும் அதிகாரம் கொண்ட ஒரு அரச அதிகாரியாய் இருந்தால் அதுதான் பெரிது என்று நினைத்தான். 

உடனே அரசாங்க அதிகாரியாக மாறிவிட்டான். 

வெளியில் அதிகாரி நடந்து கொண்டிருக்கும் போது, சூரியனின் தகிப்பு தாங்க முடியவில்லை. ஆகவே சூரியன்தான் மிகவும் சக்தி வாய்ந்தது. நான் சூரியனாய் இருக்கக்கூடாதா என்று நினைத்தான். 

சூரியனாகவே மாறிவிட்டான். 

சூரியன் பூமி மேல் பிரகாசிக்க முடியாதவாறு கருமேகங்கள் சூழ்ந்ததைக் கண்டான். உடனே மேகத்தால் சூரியனை வெல்ல முடிகிறதே. நான் மேகமாக மாற வேண்டும் என்று நினைத்தான். 

உடனே மேகமாய் மாறிவிட்டான். 

அந்த மேகத்தை வழிநடத்தும் காற்றைக் கண்டதும், காற்றுத்தானே பலம் வாய்ந்தது. நான் காற்றாக மாற வேண்டும் என்று நினைத்தான். 

காற்றாக மாறினான். 

காற்று பயணிக்கும்போது எதிர்ப்படும் மலையை காற்றால் அசைக்க முடியவில்லை. மலைதான் மிகவும் பலம் வாய்ந்தது எனவே மலையாக மாற வேண்டும் என்று நினைத்தான். 

அதன்படியே மலையாகவும் மாறிவிட்டான். 

ஒரு நாள் கீழ்ப்பகுதியில் கொஞ்சம் உடைந்து கீழே விழுந்தது. குனிந்து என்னவென்று பார்த்தான் அங்கு ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி கல்லை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான்.அதைக் கண்டதும், மலையை விடப் பலசாலி கல்லுடைக்கும் தொழிலாளிதான். 

எனவே நான் அவனாக மாற வேண்டும் என்று நினைத்தான். 

பழையபடி கல்லுடைக்கும் 

தொழிலாளியாகவே மாறிவிட்டான்.. 

ஆம்,நண்பர்களே, 

இந்தக்கதை நமக்கு தரும் செய்தி என்னவென்றால், 

என்னதான் நம்முடைய மனதை சந்தோசமாக வைத்துகொள்ள நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய மனித அங்கமாகும். 

அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று கூறினார்கள்.   

மேலும்

selvaravi87 - எண்ணம் (public)
02-Apr-2016 5:49 pm

 

ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒரு, 
வீடு...! 
வீட்டின் நடுவே, 
அலங்கரித்து வைக்கப்பட்ட, 
உயிரற்ற உடல்...!! 



இறந்தவனுக்கு சொந்தமோ... 
ஒரு வீடு...! 
ஒரு ஏக்கர் நிலம்...!! 




அதை, 
பிரிக்க வந்தவர்களோ... 
பத்து பேர்...! 



இந்த சண்டை... 
ஒருபுறம் இருக்க, 
உடல் சுடுகாட்டை நோக்கி... 
பிரயாணித்தது...! 




இறந்தவனின்... 
தந்தை ஒரு சாதி...! 
தாய் ஒரு சாதி...!! 



தந்தை வழியில், 
எரிக்கவேண்டுமாம்...! 
தாய் வழியில், 
புதைக்கவேண்டுமாம்...!! 



இந்த பிரச்சினை, 
முடிவுக்கு வர...! 





எந்த சாதி சுடுகாட்டில், 
எரிக்கவேண்டும் என்று... 
ஒரு பிரச்சினை...!! 




ஒரு வழியாக, 
அனைத்து சடங்குகளும்... 
முடிய...!! 




பிணம் எரிப்பவனுக்கு, 
பணம் யார் தருவார் என்று... 
ஒரு பிரச்சினை...!!! 

இத்தனை பிரச்சினைகளுக்கு, 
நடுவே உறங்கும் ஆத்மாவிற்கு.... 
நாம், 
வைத்த பெயர் 


"பிணம்" 



பிரச்சினைக்கும், 
காரணமானவர்களுக்கு 
நாம், 
வைத்த பெயர் "மனிதன்" 








இதில் யார் பிணம்...??   

மேலும்

selvaravi87 - தங்கதுரை அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2016 5:48 pm

காதல் என்றால் என்ன ? தெளிவுபடுத்தவும் ?

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நட்பே ! 17-Apr-2016 9:50 am
ஒருவர் மீது கொண்ட அதீத அன்பின் வெளிப்பாடு தான் காதல் . அந்த அன்பினால் அவர்கள் மேல் கொண்ட நம்பிக்கை தான் காதல் எந்த உறவாகினும் காதல் கொள்ளும் காதலுக்கு அளவுகோல் இல்லை காதலுக்கு எல்லை இல்லை அதேபோல் காதலுக்கு பரிமாணமும் இல்லை பருவ வயதானாலும் பட்சிளங்குழந்தையாய் சீராட்டும் பெற்றோர்களின் அன்பும் காதல் தான் உடன்பிறப்புகள் நடத்தும் அடிதடி சண்டையும் காதல் தான் நண்பனின் பாதை தவறு என அதட்டி கூறுவதும் துன்பத்தில் திளைக்கும் போது தோள் கொடுத்து ஆறுதல் தருவதும் காதல் தான் அன்புடையவர்களின் எண்ணங்களை பகிர்தலும் அவர்களின் உணர்வுகளை புரிதலும் காதல் தான் எனக்கு விருப்பமான ஒருவர் என்னுடன் இல்லாவிடினும் மகிழ்வுடன் வாழட்டும் என எண்ணுவதும் காதல் தான் இமை போல் காப்பேன் என்ற உணர்வுடன் அதிரடியாய் அரவணைக்கும் அன்பும் காதல் தான் என்றேனும் என் அன்பை புரிந்துகொள்வார்கள் என காத்திருப்பதும் காதல் தான் நம்முடன் இருப்பவர்களின் விருப்பங்களுக்காக விட்டுகொடுப்பதும் காதல் தான் காதல் கொள்ளும் மனம் வேறாகினும் வயது வேறாகினும் காதலின் வெளிப்பாடு வேறாகினும் அதை உணரும் வழி ஒன்று தான் காதல் 16-Apr-2016 7:40 pm
உலகில் அம்மாவின் அன்புக்கு ஈடு இணை வேற ஏதும் இல்லை,,, ,அந்த அம்மாவின் அன்பு வேறு ஒருவரிடத்தில் கிடைப்பது தான் காதல்,,,,,,,,,, 22-Mar-2016 6:27 pm
எனக்கும் புரியல அய்யா ! கண்டதும் காதல் னு எப்படி சொல்றாங்கனு தெரியல ! 15-Mar-2016 2:56 pm
selvaravi87 - எண்ணம் (public)
10-Oct-2015 11:23 pm

இதை என்ன வென்று சொல்லுவது ????????

மேலும்

selvaravi87 - selvaravi87 அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2015 11:42 pm

அப்பான்னு நினைச்சேன்
அசிங்கமாய் தொட்டான்....!

சகோதரன்னு பழகினேன்
சங்கட படுத்தினான்......!

மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்......!

உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!

பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்.....!
ஆசிரியனும்
அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையும் என்றான்.....!

நட்பு கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்....!

மரத்த மனம்
மருண்டு சுருண்டு
தூங்கையில் கைபேசியில்
படமெடுத்தான்
அவனும் ஆண்தானே .....!

கதறி அழுது கடவுளிடம்
சென்றேன்
ஆறுதலாய்
தொட்டு தடவி
ஆண்டவன்
துணையென்றான்
பூசாரியான்..!

அலறி ஓடுகிறேன்..
எங்க போவேன்...

மேலும்

நன்றிகள் தோழா 08-Oct-2015 10:57 pm
உலகமே ஒரு மாயம் நம் வாழ்க்கைப் பயணம் ஒரு சவால்தான். பாலியல் கல்வி மூலம் விழிப்பு உணர்வு அனைவருக்கும் தேவை. ஆவன செய்ய நாம் பாடுபடுவோம் படைப்புக்கு பாராட்டுக்கள் பணி தொடரட்டும் நன்றி 08-Oct-2015 8:05 am
selvaravi87 - க முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2015 12:44 am

அந்தக் கிழவி
""""""""""""""""""""""
மாத இறுதி...
கையில்,
இருப்போ நூறு ரூபாய்...

அரசு மருத்துவமனை வாசல்...
சுருக்கங்கள் நிறைந்த ஒரு,
கை... என் கையை பிடிக்க...
பக்கென்றானது...

ஏய்... கிழவி...
என்ன வேணும்...?
காசுலாம் இல்ல போ...!
என்று சொல்லிவிடலாம் போல்,
இருந்தது...
உண்மையும் அதுதான்...

என்வாயில் வார்த்தை வருவதற்குள்...
அவள் முந்திக்கொண்டாள்...

தம்பி...
என்னால நடக்க முடியல...
என்ன கைதாங்கலா...
இந்த ஆஸ்பத்திரிக்குள்ள,
கூட்டி போறியா...
சரியென்று அவள் கையை...
நான் பிடிக்க...
நத்தை போல்,
எங்கள் பயணம் தொடர்ந்தது...

ஏங்கிழவி...
இங்க,
கூட யாரும் இல்லையா...?

மேலும்

மன வலி அதிகமாகிறது... 02-Oct-2015 4:13 am
நன்றி தோழரே 30-Sep-2015 11:21 pm
அடுத்ததை யூகிக்க முடிந்தாலும்...அருமைதான் 30-Sep-2015 5:57 pm
நன்றி 30-Sep-2015 9:14 am
selvaravi87 - selvaravi87 அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2015 7:51 am

தமிழா_தமிழா‬....
இவரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நமக்கு தெரிந்ததெல்லாம் பணம் கொழிக்க விளையாடும் கிரிக்கெட் மட்டும்தானே...!!?
திருச்சி செங்காட்டுபட்டி குக்கிராமம், 
500 ரூபாய் வாடகையில் சிறிய குடிசை வீடு. 
ஒருவேளை சாப்பாட்டுக்கே பஞ்சம்.
தந்தை இல்லை. தாய் கல் உடைக்கும் தினக்கூலி, வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள்
இச்சூழலிலும்கூட ராஜேஷ் என்ற இந்த இளைஞர் சத்தமே இல்லாமல் சாதித்து நம் நாட்டிற்கு பெருமை தேடி தந்திருக்கிறார்.
ஆம் கத்தாரில் நடைபெற்ற 'டெக்காத்லான்' தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார்...

மேலும்

நன்றிகள் தோழி 29-Sep-2015 8:07 am
பதக்கம் வென்ற ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 28-Sep-2015 11:42 am
ஜின்னா அளித்த படைப்பை (public) உமை மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
30-Aug-2015 12:44 am

தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.

கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.

ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.

எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.

என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.

மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது

மேலும்

அண்ணா...ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு... 12-Aug-2018 10:13 pm
வாழ்வே மாயம் வாழ்க்கைத் தத்துவம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 09-Mar-2018 10:31 pm
உண்மை உயர்ந்திருக்கிறது உங்கள் கடைசி மூன்று வரிகளில்! அருமை ஜின்னா அண்ணா ! 06-Jan-2018 6:24 pm
காலத்திற்கு ஏற்ற பொன்மொழிகள்....! அருமை ..... 18-Oct-2017 1:58 pm
selvaravi87 - விக்னேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2015 5:23 pm

ஒரு தலை காதல் கொண்டேன் மானம் இழந்தேன்

இரு தலை காதல் கொண்டேன்
உறவுகள் இழந்தேன்

தோழியிடம் நல்ல நட்பு கொண்டேன் மனைவியையே இழந்தேன்

மேலும்

எழுத்தாற்றல் இருக்கிறது. அதில் வலியும் தெரிகிறது, வழியும் தெரிகிறது 06-Sep-2015 12:11 am
நன்றி கவின் மற்றும் அன்பு தோழர்களே 05-Sep-2015 6:24 pm
உணர்தல் இல்லா உறவுகளின் பிரதிபலிப்பு .. வாழ்த்துகள் 05-Sep-2015 5:04 pm
கொண்டேன் இழந்தேனுக்கு வரிகள் இருக்கிறது மூனு சுழி கொன்றேனுக்கு எதுவும் எழுதாது ஒரு குறைபாடு. இந்த பொம்பளைங்க பழக்கமே இப்படித்தான் .ரெண்டு கண்ண வச்சுக்கிட்டு பார்க்க மாட்டாளுக .காதல ஒரு தலை ஆக்கிட்டு சா ஃ ப் ட் வேற கட்டிக்கிட்டு ஏர்ல பறந்திடும் சரி பார்த்து காதலிச்சு கட்டிக்கிடுச்சு வச்சுக்குங்க அவளையே காதலிக்கனும் ன்னு சொல்லும் .சரி ஏத்துக்குவோம்.ஒரு தோழிகிட்ட தமாஷா பேசிப்புட்டோம்னா தொலைஞ்சுது .அவ்வளவுதான் பிரைவேட் டிடக்டிவ் வச்சு துப்பறிவாளுங்க.படா பேஜாரு இந்த பொண்ணுங்க தும்மினா யார் நெனெச்சு தும்மி னீங்க ன்னு கேப்பாங்க . அதனாலே தனிக்கட்டையா இருக்கறதுதான் நல்லது .அப்படின்னா காதல கொன்னுபுடனுமா .ஆமாம் ஆமாம் நீங்க சொல்லாதத நான் சொல்லிட்டேன் காதல் கொண்டேன் இழந்தேன் காதலைக் கொன்றேன் ! பாரதியாரும் இதைத்தானே சொல்லியிருக்காரு மோகத்தைக் கொன்று விடு இல்லை என்றால் மூச்ச்சினை நிறுத்திவிடு ! ---கருத்து ரசித்துதா விக்னேஷ் ? உங்கள் விருப்பபடி பகிர்கிரவும் செய்கிறேன் .பட் நோ சொடுக்கு . அன்புடன்,கவின் சாரலன் 05-Sep-2015 3:35 pm
எழுத்து அளித்த எண்ணத்தை (public) உமை மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Aug-2015 12:35 pm

நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;
நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.

உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....

சுதந்திர தின வாழ்த்து அட்டைகள் அனுப்ப இங்கே சொடுக்கவும்.

மேலும் சுதந்திர வாழ்த்து அட்டைகள் அனுப்பி மகிழ இங்கே சொடுக்கவும்.

மேலும்

நம் நாடு உலகில் உயர்ந்தது என நம்புவோம் அழகிய வரிகள் ரசித்தேன் , வாழ்த்துக்கள் குமரேசன் கிருஷ்ணன் 15-Aug-2015 12:35 pm
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். 15-Aug-2015 8:31 am
எழுத்து கவி நண்பர்கள் அனைவருக்கும் எமது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் 15-Aug-2015 7:51 am
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. நாடும் வீடும் நல்லறத்துடன் செழிக்கட்டும் ..! 14-Aug-2015 6:59 pm
selvaravi87 - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2015 7:27 am

இன்று... ஆகத்து 13

பொதுவுடைமைப் புரட்சியாளர், கியூபாவின் முன்னாள் அதிபர், பிடல் காஸ்ட்ரோ ( #FidelCastro ) பிறந்த தினம்..

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்..
--பிடல் காஸ்ட்ரோ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (40)

பாரதி பறவை

பாரதி பறவை

சென்னை
பூந்தளிர்

பூந்தளிர்

சிதம்பரம்
பகவதி லட்சுமி

பகவதி லட்சுமி

தமிழ்நாடு
தங்கதுரை

தங்கதுரை

பாசார் , ரிஷிவந்தியம்

இவர் பின்தொடர்பவர்கள் (42)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
nisha meharin

nisha meharin

trichy

இவரை பின்தொடர்பவர்கள் (42)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
அருண்

அருண்

மயிலாடுதுறை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே