சேயோன் யாழ்வேந்தன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சேயோன் யாழ்வேந்தன்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Apr-2015
பார்த்தவர்கள்:  770
புள்ளி:  500

என் படைப்புகள்
சேயோன் யாழ்வேந்தன் செய்திகள்
சேயோன் யாழ்வேந்தன் - சேயோன் யாழ்வேந்தன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2016 5:28 pm

  தோழர்களே, இந்தவார ஆனந்தவிகடனில்  "லட்டு மாதிரி இருப்பது...", "உயிர்த் தீ" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன.ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!   


லட்டு மாதிரி இருப்பது ....

காலையில் வேலைக்குக் கிளம்புகையில்  
இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி  
‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள்.  
‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று  
சொல்லிவிட்டு வரும் வழியில்,  
பருத்த உடலா,  
மஞ்சள் சட்டையா  
என் கொஞ்சல் பேச்சா  
லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி,  
லட்டுகள் உருளும் சாலையில் ஓடி  
லட்டைக் குடித்து  
லட்டை உண்டு,  
லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில்   
 வீடு திரும்பும் வரை,   
 சின்ன லட்டு சொன்னதுதான் மனதில் ஓடியது.   
 லட்டு மாதிரி இருக்கிற பெண்ணால்   
 யாரையும் லட்டாக்கிவிட முடிகிறது.       

 உயிர்த் தீ   

 தொலைக்காட்சியின் குழப்பமான காட்சிகளை   
 பார்க்கப் பிடிக்காமல் சட்டென்று ரிமோட்டால்   
 அணைத்த அந்தக் கணத்தில்தான்   
 அவளுக்கு அந்த எண்ணம்   
 முதன்முதலாக வந்தது....   
 உந்திச் சுடர் பற்றி எரியும்   
 அந்தத் தீபத்தை   
 ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால்   
 எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.       

-சேயோன் யாழ்வேந்தன்

மேலும்

அருமை நண்பனே. 02-Feb-2018 5:14 pm
நன்றி தோழரே! 27-Apr-2016 4:09 pm
அருமையான வரிகள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 11-Apr-2016 5:56 pm
சேயோன் யாழ்வேந்தன் அளித்த எண்ணத்தை (public) செ செல்வமணி செந்தில் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Apr-2016 5:28 pm

  தோழர்களே, இந்தவார ஆனந்தவிகடனில்  "லட்டு மாதிரி இருப்பது...", "உயிர்த் தீ" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன.ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!   


லட்டு மாதிரி இருப்பது ....

காலையில் வேலைக்குக் கிளம்புகையில்  
இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி  
‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள்.  
‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று  
சொல்லிவிட்டு வரும் வழியில்,  
பருத்த உடலா,  
மஞ்சள் சட்டையா  
என் கொஞ்சல் பேச்சா  
லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி,  
லட்டுகள் உருளும் சாலையில் ஓடி  
லட்டைக் குடித்து  
லட்டை உண்டு,  
லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில்   
 வீடு திரும்பும் வரை,   
 சின்ன லட்டு சொன்னதுதான் மனதில் ஓடியது.   
 லட்டு மாதிரி இருக்கிற பெண்ணால்   
 யாரையும் லட்டாக்கிவிட முடிகிறது.       

 உயிர்த் தீ   

 தொலைக்காட்சியின் குழப்பமான காட்சிகளை   
 பார்க்கப் பிடிக்காமல் சட்டென்று ரிமோட்டால்   
 அணைத்த அந்தக் கணத்தில்தான்   
 அவளுக்கு அந்த எண்ணம்   
 முதன்முதலாக வந்தது....   
 உந்திச் சுடர் பற்றி எரியும்   
 அந்தத் தீபத்தை   
 ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால்   
 எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.       

-சேயோன் யாழ்வேந்தன்

மேலும்

அருமை நண்பனே. 02-Feb-2018 5:14 pm
நன்றி தோழரே! 27-Apr-2016 4:09 pm
அருமையான வரிகள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 11-Apr-2016 5:56 pm

  தோழர்களே, இந்தவார ஆனந்தவிகடனில்  "லட்டு மாதிரி இருப்பது...", "உயிர்த் தீ" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன.ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!   


லட்டு மாதிரி இருப்பது ....

காலையில் வேலைக்குக் கிளம்புகையில்  
இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி  
‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள்.  
‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று  
சொல்லிவிட்டு வரும் வழியில்,  
பருத்த உடலா,  
மஞ்சள் சட்டையா  
என் கொஞ்சல் பேச்சா  
லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி,  
லட்டுகள் உருளும் சாலையில் ஓடி  
லட்டைக் குடித்து  
லட்டை உண்டு,  
லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில்   
 வீடு திரும்பும் வரை,   
 சின்ன லட்டு சொன்னதுதான் மனதில் ஓடியது.   
 லட்டு மாதிரி இருக்கிற பெண்ணால்   
 யாரையும் லட்டாக்கிவிட முடிகிறது.       

 உயிர்த் தீ   

 தொலைக்காட்சியின் குழப்பமான காட்சிகளை   
 பார்க்கப் பிடிக்காமல் சட்டென்று ரிமோட்டால்   
 அணைத்த அந்தக் கணத்தில்தான்   
 அவளுக்கு அந்த எண்ணம்   
 முதன்முதலாக வந்தது....   
 உந்திச் சுடர் பற்றி எரியும்   
 அந்தத் தீபத்தை   
 ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால்   
 எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.       

-சேயோன் யாழ்வேந்தன்

மேலும்

அருமை நண்பனே. 02-Feb-2018 5:14 pm
நன்றி தோழரே! 27-Apr-2016 4:09 pm
அருமையான வரிகள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 11-Apr-2016 5:56 pm
கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தில் (public) Mohamed Sarfan மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2016 7:01 pm



நண்பர்களே ...

என்னுடைய கவிதை இந்த வார குங்குமம் புத்தகத்தில் வெளி வந்துள்ளது நண்பர்களே .. 


மேலும்

அப்பப்பா எல்லையில்லாத தொடரும் வாழ்த்துக்களுக்கு வாழ்த்துக்கள் - மு.ரா. 27-Feb-2016 5:18 pm
வாழ்த்துக்கள்...! 26-Feb-2016 10:50 pm
வாழ்த்துக்கள் கிருத்திகா..! 25-Feb-2016 9:54 pm
திருமூர்த்தி அளித்த எண்ணத்தில் (public) G RAJAN மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Feb-2016 8:28 pm

27.1.2016 மாவட்ட அளவிலான கவிதை ,கட்டுரை,பேச்சுப்போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.ஈரோடு மாவட்ட அளவில் கவிதைப்போட்டியில் முதற்பரிசு பெற்றேன்.அடுத்தகட்டமாக,சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி 4.2.16 அன்று காயிதே மில்லத் மகளிர் கலைக்கல்லூரிக்குச் சென்றேன்...பரிசேதும் பெறவில்லை ..வருத்தமும் இல்லை ...பங்கேற்புச் சான்றிதழ் தரப்பட்டது...சென்னையில் எனக்கு தங்குவதற்கு விடுதி ஏற்பாடு செய்து தந்த ஜின்னா அண்ணாவிற்கு மிக்க நன்றி ... தமிழுக்காகவும், படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எந்த அரசாங்கத்தையும் நாம் பாராட்டுவதில் தவறில்லை..இந்த கணத்தில் நான் தமிழக கல்வித்துறையைப் பாராட்டுகிறேன்...அதே சமயத்தில்,கவிஞனாக நான் சொல்வது என்னவெனில்,அவ்வைக்கு பரிசில்தந்த எந்த அரசரும் பரிசுப்பொருட்களில் அந்த அரசரின்  உருவப்படம் பொறித்து சான்றிதழோ,பரிசுப்பொருளோ தரவில்லை என்று நினைக்கிறேன் ...அதுபோல,இனிவரும் அரசு தந்தால் எல்லோருக்கும் முகச்சுழிவில்லாத மகிழ்ச்சி ஏற்படும் என நம்புகிறேன்..


நன்றி 
ப(து)ணிவுடன்,
 திருமூர்த்தி

மேலும்

மனமார்ந்த வாழ்த்துக்கள்... மேலும் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்... 09-Feb-2016 1:22 pm
ஆம் நட்பே.....மிக்க நன்றி நட்பே.... 09-Feb-2016 9:18 am
வாழ்த்துக்கள் திருமூர்த்தி.. 08-Feb-2016 6:02 pm
வாழ்த்துகள்! 08-Feb-2016 5:35 pm
முரளி அளித்த எண்ணத்தில் (public) karunanidhy மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Jan-2016 9:19 am

நண்பர் ஆண்டன் பெனியின் கவிதை 3.2.16 தேதியிட்ட ஆனந்த விகடனில் ...


வாழ்த்துக்கள் நண்பரே...!!

அன்புடன் 
முரளி  

மேலும்

பகிர்வுக்கு நன்றி முரளி சார்! 05-Feb-2016 12:45 pm
விகடனில் உங்களைப் போன்றவர்களின் இந்த மாதிரியான நல்ல கவிதைகளும் வருகின்றன..குறிப்பாக நமது தளத்தின் நண்பர்களும் நீங்களும் தருகின்ற கவிதைகள்! 05-Feb-2016 12:45 pm
விகடனில் உங்களைப் போன்றவர்களின் இந்த மாதிரியான நல்ல கவிதைகளும் வருகின்றன..குறிப்பாக நமது தளத்தின் நண்பர்களும் நீங்களும் தருகின்ற கவிதைகள்! 05-Feb-2016 12:44 pm
அய்யோ, ஆளை தேடவேண்டாம் சொல்லுங்கள் அன்பால் நான் அடிக்கிறேன் - மு.ரா. 05-Feb-2016 11:30 am

தோழர்களே, இந்தவார ஆனந்தவிகடனில் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி”என்ற எனதுகவிதை வெளியாகியுள்ளது.ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் மிக்க நன்றி! என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! 

மேலும்

ஒரே பதிப்பு என்று தான் நினைத்தேன் அண்ணா .. கோவைக்கு தனி பதிப்பு என்பது இப்போது தான் அறிந்து கொண்டேன்.. ஏற்கனவே தோழி கிருத்திகா வின் கவிதை வந்து இருந்தபோதும் இந்த குழம்பம் தோன்றியது எனக்கு .. தெளிவுபடுத்திமைக்கு நன்றி அண்ணா.. இத்தோடு இன்று அண்ணனின் கவிதையும் கண்டத்தில் நீண்ட நாள் காத்திருந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானது அண்ணா.. இன்னும் சிலரின் கவிதைகளும் இடம் பெற வேண்டும் என எதிர்பார்கிறேன் .. நன்றி அண்ணா 21-Jan-2016 2:08 pm
நன்றி தோழர்! 21-Jan-2016 11:41 am
நன்றி தோழர்! 21-Jan-2016 11:41 am
கவிதைக்கும் தோழருக்கும் என் வாழ்த்துகள் 21-Jan-2016 10:18 am

கணையாழி ஜனவரி 2016 இதழில் வெளிவந்தஎனது “கறுப்பு வெள்ளி” என்ற கவிதையை, எழுத்துத் தள தோழர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.கணையாழி ஆசிரியர் குழுவுக்கும்,எழுத்துத் தோழர்களுக்கும் நன்றி! 


கறுப்பு வெள்ளி 

அந்தப் புதன்கிழமை என் நண்பனின்
யாதுமாகிய காதலிக்குத் திருமணம்.
முகூர்த்த நேரத்தில் மலைக்கோட்டை மீதேறி
அந்தத் திருமண மண்டபத்தை
வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளுடன் பேசிய அலைபேசியை
ஒரு பாறையில் மோதிச் சிதறிடச் செய்தான்.
இறங்கி வருகையில் ஒவ்வொரு படியிலும் நின்று
சங்கல்பம் எடுப்பதுபோல் எதையோ முணுமுணுத்தான்.
திரும்பி வருகையில் திருச்சி சாரதாஸில்
 அம்மாவுக்கு நூல்புடவை வாங்கினான்.
என்னிடம் பைக்கைப் பிடுங்கி
ஜோடியாக நடப்பவர்கள் மீது
மோதுவதுபோல்  நெருங்கி கிறீச்சிட்டு நிறுத்தினான்.
‘பிளஃபி’ என்று அவள் பெயர்வைத்த
அவனுடைய செல்ல நாய்க்குட்டியை
அது திரும்பி வரக்கூடாதென்று 
நாற்பது மைல் தள்ளி, விட்டு வந்தான்.
என்னதான் காதலிக்குத் திருமணம் என்றாலும்
இப்படியெல்லாமா செய்வார்கள்?
அந்தக் கறுப்பு வெள்ளிக்கிழமையில்
எதுவும் செய்யாமல் நான் என்னவோ
அமைதியாகத்தான் இருந்தேன்.
(நன்றி: கணையாழி)

மேலும்

நன்றி தம்பி! 11-Jan-2016 4:28 pm
நன்றி தோழர்! 11-Jan-2016 4:27 pm
நன்றி தோழர்! 11-Jan-2016 4:27 pm
நன்றி தோழர்! 11-Jan-2016 4:26 pm

ஆனந்தவிகடனில் (30.12.15) "திருடன் விளையாட்டு" “நிலாக்கனவு” என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன, தோழர்களே!

மேலும்

நன்றி தோழர்! 28-Dec-2015 9:10 pm
நன்றி தோழர்! 28-Dec-2015 9:09 pm
நன்றி தோழர்! 28-Dec-2015 9:09 pm
நன்றி தோழர்! 28-Dec-2015 9:09 pm
agan அளித்த எண்ணத்தை (public) திருமூர்த்தி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Dec-2015 8:23 pm

நினைவிருக்கிறதா..?
1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!

போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி.

போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல்
கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு
வெளியே வந்தார்.
அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல்
அறைக்கு ஓடினார். 

எப்படியாவது லக்னோ டு
மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது
நோக்கம். 

ஆனால், அந்த ரயில்
ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை
ரயில் வந்தது. 

அதில் இருந்து இறங்கிய
பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள்.
ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம்
இறந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் போபால் ரயில்
நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக்
காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. 

பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக்
கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை
ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும்
போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று
தகவல் அனுப்பத் தொடங்கினார்.

அதையும் மீறி வரும் ரயில்கள் ஜன்னலை மூடிக் கொண்டு போபால் ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாகப் போய் விடுமாறு
அறிவுறுத்தினார்.

மூக்கிலும் வாயிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, இரவு முழுவதும்
விழித்திருந்து வேலை பார்த்தார். அந்த இரவு விடிந்தது. 

அடுத்த நாள் சிக்னல் அறையைத்
திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் துருவே வாயில்
ரத்தம் வழிந்த நிலையில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி செத்துக் கிடந்தார்.

துருவே மட்டும் இல்லை எனில், போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும்
சில ஆயிரங்கள் கூடியிருக்கும். 

ஆனால்,
போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த அந்த இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங்,
நகரில் இருந்து 14 கி.மீ ஓடோடிச் சென்று தப்பித்தார்.

’துருவே’ போன்ற தேச வீரர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப் படுவதும் இல்லை.

மக்களுக்கு ஞாபகம் இருப்பதும் இல்லை.

பகிரவாவது செய்வோம்.

படித்ததில்  பிடித்தது பகிர்கிறேன்😔நன்றி: முகநூல்

மேலும்

நல்ல பகிர்வு! 04-Dec-2015 5:57 pm
கன்னுல்லாம சேத்துக் கிடகக்ற அன்த குலந்தை இண்ணும் கன்னு முன்நாள நீகுது தல. வலிக்குது. 04-Dec-2015 6:31 am
இந்த செய்தியை இப்பொழுது தான் அறிகிறேன் பகிர்ந்தமைக்கு நன்றி 03-Dec-2015 9:33 pm
agan அளித்த எண்ணத்தை (public) ஆசை அஜீத் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
12-Nov-2015 9:56 am

இப்படியும் ஒரு IAS அதிகாரி ...!!!

இந்தியனே மோடியின் நர பலி முகத்தை மறந்துவிடாதே

மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் - பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன - ஹர்ஷ் மந்தேர் IAS

*******************­*******************

ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.

குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீச­ும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டார். டை ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம். பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன்.

வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும­் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்…

இப்படியொரு துக்கத்தைநான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும்உடைமை­. அச்சம் படர்ந்த தணிந்த குரலில்சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால்,­ காயம் பட்டவர்களுக்கு மருந்து… என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள்மற்றவ­ர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத்தெறிக்கின்றன. அந்தக் கோரங்களைஎழுதவே என் பேனா தடுமாறுகிறது…

.. இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.­ இதற்கென்ன சொல்கிறீர்கள்?

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார ்கள். என்ன சொல்கிறீர்கள்? தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன்.

அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.­ மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.3 மாதக் கைக்குழந்தையுடனிருந்­த மகளால் ஓட முடியவில்லை.”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கேதயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.

பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்பஉறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்­கள். கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்;­ சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்;­ ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார ்கள்.அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.­ அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான்.

”குஜராத்தில் நடந்ததுகலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறத­ு. வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலி­ல் ஒரு லாரி வரும்.பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்க­ள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன….

கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்… இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன….

இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.பிறகு­ லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்….

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு…

அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில்ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதியசாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.கொலை,­ கொள்ளை, கற்பழிப்புக்குத்தான்­ அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள­். யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியா­னார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான். இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.

அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.­ சுயேச்சையாகவும், நடுநிலையாகவும்,அச்சம­ின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது….

அகமதாபாத்தில்ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்… இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்த உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது. கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்!

கொலைக்கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?இந்த நாட்டின் குடிமக்கள் என்றமுறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ… இன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம்இசுலா­மிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.

“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், 
துரோகம்,அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சகமுசுலீம்கள்தான்கவலைப­்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை”என்று­ சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை…

குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென் ிட்டது. அவற்றில்ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:சாரே ஜஹா ஸே அச்சா இந்துஸ்தான் ஹமாராஇந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் முடிந்துவிட்டன.கோத்ர­ா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டு ள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும

். இந்த இனப்படுகொலையின்நாயகன­ான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார

அனைவரும் இவர் எழுதிய "பயம் மற்றும் பாவ மன்னிப்பு - குஜராத் இன அழிப்பிற்கு பிறகு " என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள் .

மேலும்

இதுபோன்ற பல தகவல்களைப் படித்திருந்தாலும், இது மிக அவசியமான பதிவாக இருக்கிறது, நன்றி! 13-Nov-2015 5:06 pm
குஜராத் கலவரம் பற்றி இந்த அளவு கேள்விப்பட்டு, படித்ததில்லை. சென்னை திரும்பியவுடன் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கிறேன். மோடி, அமித்ஷாவின் மற்றொரு முகத்தையும் பார்க்கிறேன். என்ன அரசியல் இது? 12-Nov-2015 4:48 pm
சேயோன் யாழ்வேந்தன் அளித்த எண்ணத்தை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
27-Oct-2015 5:12 pm

28.10.15 ஆனந்தவிகடனில் ராம்வசந்த் மற்றும் எனது கவிதை ஒரே பக்கத்தில். 

பூம்பாவாய்




பூம்பூம் மாடு வாசலில் நிற்கிறது.



அதன் அலங்கார உடை கண்டு



அறியாதார் அதிசயிப்பர்.



கொம்புகளின் கூர்மை



குத்திக் கிழிக்குமோ என்று



குழந்தைகள் அஞ்சும்.



பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால்



செய்கிற வேலையை விட்டுவிட்டு



ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள்.



நான் அந்த மாட்டுக்கு



இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன்



அவளிடம் கேட்டுக்கொண்டு!



நன்றி: ஆனந்த விகடன்

மேலும்

நன்றி தோழர்! 28-Oct-2015 2:45 pm
நன்றி தோழர்! 28-Oct-2015 2:45 pm
நன்றி தோழர்! 28-Oct-2015 2:45 pm
நன்றி தோழர்! 28-Oct-2015 2:44 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (85)

இவரை பின்தொடர்பவர்கள் (86)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே