மயில்வாகனன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மயில்வாகனன்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  22-Feb-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Dec-2013
பார்த்தவர்கள்:  565
புள்ளி:  127

என்னைப் பற்றி...

இன்னும் எது நானென்று தெரியவில்லை... தெரிந்ததும் சொல்கிறேன்.

என் படைப்புகள்
மயில்வாகனன் செய்திகள்
மயில்வாகனன் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2017 10:43 am

திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்கள்தான் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது?

மேலும்

பெண்களும் ரௌத்திரம் பழகுவதை வணங்குவதா? இல்லை அவர்களை ரௌத்திரம் பழக்கச் செய்த எடப்பாடி மக்களுக்கு சேலையை அனுப்புவதா??? யாம் அறியேன் பராபரமே..... 27-Jul-2017 10:06 pm
**அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை.. இதோ.. **கூவத்தூர் விடுதியில் அவர்களே வந்து தங்கியிருக்கிறார்கள்.! **நாங்கள் குதிரை பேரம் பேசவில்லை.! **இடைதேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுக்கவில்லை.! **ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரவாதிகள் புகுந்தனர்.! **ஆட்டோ மற்றும் வாகனங்ளுக்கு போலீஸ் தீ வைக்கவில்லை.! அதைவிட .. **அதிமுக வில் எந்த பிளவுமில்லை....! ஹாஹ்ஹா..ஹ்..ஹா.. சொன்னார்கள்.. இன்னும் சொல்வார்கள்.. சொரணையற்ற மக்கள் வாழும்வரை..! நட்புடன் குமரி 17-Jul-2017 4:22 pm
இரண்டு பேர் சண்டை போட்டால், இவன் அவனையும் அவன் இவனையும் சொல்வது தெரிந்ததுதானே? பெண்கள்தான் முதலில் அடித்தனர் என்று போலீஸ் அறிக்கை கொடுத்திருக்கும். போலீஸ் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரும் அதையே சொல்கிறார்! போராட்டக் களத்தில் பெண்கள் அடிக்கவும் வாய்ப்புண்டு! 14-Jul-2017 2:14 pm
திருப்பூரில் சமளாபுரம் என்று ஒரு பகுதியே கிடையாது என்று அவர் சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை ஏனா அவன் அரசியல்வாதி 11-Jul-2017 5:43 pm
மயில்வாகனன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
27-Jul-2017 9:48 pm

"மாவட்ட ஆட்சியாளர்" என்று நம் தமிழில் அர்த்தம் சொன்னாலும், கலெக்டர் என்றால் சேகரிப்பாளர் என்றே அர்த்தம். குறைகளை சேகரித்து அதை களையெடுப்பது, வரிகளை சேகரித்து அதனை கஜானாவில் சேர்ப்பது, களைகளை சேகரித்து அதை கருவருப்பது. இனிமேல் "மாவட்ட சேகரிப்பாளர்" என்று அவரை ஏன் அழைக்கக் கூடாது ???? ஜனநாயகத்தில் மக்கள் தான் ஆட்சியாளர்கள் என்றால் ??????

மேலும்

அறிஞரின் பதில் தெளிவான பதிவு. 04-Aug-2017 12:15 pm
ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரி மாவட்ட ஆட்சியர் என்றழைக்கப்படுகிறார். அவருக்கு சகல அதிகாரங்களும் உண்டு. வெள்ளையர் காலத்தில் நிலவரி வசூலுக்கும் கலேக்டர்தான் பெரிய அதிகாரி. இந்தச் சொல்லை மாற்றவேண்டும்.வட மாநிலங்களில் District Magistrate என்றுதான் சொல்கிறார். நாமும் பின்பற்றி பெயர் மாற்றம் செய்வது நல்லது. கவிஞர் கவின் சாரலன் அவர்கள் கூறும் 'மாவட்ட நிர்வாகி'யும் ஏற்புடையாதாகத் தெரிகிறது. 30-Jul-2017 1:44 am
அரசு அரசி ஆட்சி என்பதெல்லாம் முடி மன்னர்கள் காலத்து சொற்கள் IAS ---INDIAN ADMINISTATIVE SERVICE படித்து அதிகாரத்திற்கு வருவோரை மாவட்ட நிர்வாகி எனலாம் REPUBLIC ---ஏன் குடியரசு குறைகளை சேகரித்து அதை களையெடுப்பது---இது என்னது ? தேன் சேகரிக்கும் தேனீ -----ஹனி கலெக்டர் அல்லது தேனாட்சியர் 28-Jul-2017 3:59 pm
மயில்வாகனன் - கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2017 8:50 pm

"அன்று பெய்த மழை"க்குப் பிறகு
இன்னொரு படப்பிடிப்புக்கு
அவள் வந்திருந்தாள்
நீல மலைக்கு...

குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில்
பழைய தொலைப்பேசி அலுவகத்திற்கு
ஐந்தாறு நாள்
அவள் தொடர் வருகை..

ஐதராபாத்துக்கு இரவுகளில்
அலையாடும் குரலில்
என்ன துயரமோ...
அவள் பேசுவதைப்
பார்த்ததுண்டு ..
ஐந்தாறு நாளும்
அவளோடு
பேசியதும் உண்டு

ஆங்கொரு அலுவலக அறையில்
தங்கிப் பணிபுரிந்த
இளம் பொறியாளன் நான்..
அது..
ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூறு .

கவர்ச்சி காட்டுபவர்களின்
கலையுலகில்
அவளிடம் மட்டுமே
கவர்ச்சி பூத்திருந்தது

'அடுக்கு மல்லிகையின் ' அழகு மல்லிகை
'நேத்து ராத்திரியின்'

மேலும்

உங்கள் கை தட்டச்சை விடுத்து உங்களுக்கு உண்மையில் உதவி செய்தால், "நாங்கள் நலம்" :) 26-Jul-2017 9:37 pm
மிக்க நன்றி தோழரே 09-Jul-2017 1:45 pm
நினைவு அருமை 08-Jul-2017 10:46 pm
மயில்வாகனன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Jul-2017 12:26 am

"தந்தையர் நாடென்று" என்று தாய் நாட்டை என் பாடினார் பாரதி ????

மேலும்

தாய்நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. தகப்பன் பிள்ளைக்குத் தானே!, தந்தையர் நாடு செயர்களுக்கல்லவா! பாரதி என்றுமே எவர் உரிமையையும் விட்டுககொடுப்பவன் அல்ல! நீண்ட கோபக்காரன். ஆனால் நியாயவாதி. 26-Sep-2017 6:22 pm
இங்க அவர் தந்தையர் நாடெனும் போதினிலே...என்று சொல்வது...நம் நாட்டின் மீது நமக்கு உள்ள உரிமையை பற்றியது..தாய் நாட்டின் மீதும் உரிமை உண்டு ஆனால்..தலை ப்ரவசவதில் பிறந்த பிள்ளை..தாயின் ஊரில் தான் பிறக்கும்...ஆனால் அந்த ஊரின் மீது அவனுக்கு முழு உரிமை கிடையாது.. தந்தையின் ஊர் தான் அவன் சொந்த ஊர்... சொந்த ஊரின் மீது தன உங்கள் உண்மையான உரிமையை காட்ட முடியும்.. இங்கே என் தந்தை நாட்டின் மீது எனக்கு மட்டும் தான் உரிமை உண்டு...அந்த உரிமையை நினைக்கும் பொது புது சக்தி எனக்குள் பிறக்கிறது என்று அர்த்தத்தில் சொல்ல பட்டது.. இன்னும் விஞ்ஞான முறையிலும் இதை சொல்லாம்... 24-Sep-2017 9:25 pm
தனி தமிழ் நாடு கேட்டு போராட்டம் நடத்தினார பாரதி..?????? நாடு என்று இந்தியா வை தன சொன்னார்... 24-Sep-2017 9:02 pm
அது புதுவையின் தாக்கம். பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவையில் வாழ்ந்த பாரதிக்குப் பிரஞ்சு மொழிப் பயிற்சியும் உண்டு. பிரஞ்சுத் தேசிய கீதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். பிரஞ்சு மொழியில் தந்தை நாடு என்றுதான் சொல்வார்கள். சொல்லும் போது மூச்சில் சக்தி பிறக்கத்தான் தந்தை நாடு என்று பாடினார்! சக்தி பிறக்கிறதா? 21-Sep-2017 6:23 am
மயில்வாகனன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Jul-2017 12:01 am

படிப்பில் உயர்வான் என்பர், படித்தபின்! படிப்பால் வரும் பணத்தால் உயர்வான் என்பர், பணமுமானவனாய் அவன் ஆன பின்! பாதியாய் ஒருத்தி வந்தால் இவன் உயர்வான் என்பர், பாதியின் பார்வையில் பதியானபின்! பாதியும் பாதியும் இணைந்து உருவாக்கிய ஜோதி வந்தால் இவன் உயர்வான் என்பர், ஜோதியாகிய வாரிசு வந்தவுடன், இவனே "என்பராகி" இவன் வாரிசை "படிப்பால் உயர்வான்" என்று தொடங்கி தொடர்வான்... life cycle 🤔 "யாக்கையில் யானே யாரென்று தெரியா பதரை, ஐயோ இவன் மனிதனென்பர்" 😂😂

பார்த்த திரைப்படத்தை மற்றொரு முறை பார்க்க பிடிக்காத இந்த மனிதன், வாழ்ந்த வாழ்க்கையை மறுமுறை வாழ நினைக்கும் மனிதன்?????? ஏன்???

மேலும்

மயில்வாகனன் - மயில்வாகனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2016 9:26 am

நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 17 லட்சத்தி 54 ஆயிரம் கோடி. இதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மட்டும் 14 லட்சத்தி 95 ஆயிரம் கோடி, மீதம் 2 லட்சத்தி 59 ஆயிரம் கோடி 5, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள்/காசுகள்.

சராசரியாக நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 2000 ருபாய் செலவு செய்தாலும், 125 கோடி பேர்களுக்கும் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தி 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தேவை. வருமைக்கோட்டின் மேல் உள்ள 30 சதவீத பேர்களும் சராசரியாக 25 ஆயிரம் ரூபாய்களை (பணமாக) வைத்திருப்பதாக பார்த்தால் கூட 7 லட்சத்தி 50 ஆயிரம் அவரவர் வீடுகளில் அவசர செலவுக்காக வைத்திருப்பதாய் எண்ணிக்கொள்ளலாம்

மேலும்

ஆம் நிஜமே, இன்னும் சொல்லப்போனால் 100 ரூபாய் நோட்டும் அதற்கு கீழ் உள்ள நோட்டும் / சில்லரையும் போதுமானது, மேலும் பெரும் தொகை பரிவர்த்தனைக்கு காசோலை மற்றும் online சேவையை பயன் படுத்த வேண்டும் - மு.ரா. 27-Nov-2016 10:55 am
மயில்வாகனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2016 9:26 am

நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 17 லட்சத்தி 54 ஆயிரம் கோடி. இதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மட்டும் 14 லட்சத்தி 95 ஆயிரம் கோடி, மீதம் 2 லட்சத்தி 59 ஆயிரம் கோடி 5, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள்/காசுகள்.

சராசரியாக நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 2000 ருபாய் செலவு செய்தாலும், 125 கோடி பேர்களுக்கும் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தி 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தேவை. வருமைக்கோட்டின் மேல் உள்ள 30 சதவீத பேர்களும் சராசரியாக 25 ஆயிரம் ரூபாய்களை (பணமாக) வைத்திருப்பதாக பார்த்தால் கூட 7 லட்சத்தி 50 ஆயிரம் அவரவர் வீடுகளில் அவசர செலவுக்காக வைத்திருப்பதாய் எண்ணிக்கொள்ளலாம்

மேலும்

ஆம் நிஜமே, இன்னும் சொல்லப்போனால் 100 ரூபாய் நோட்டும் அதற்கு கீழ் உள்ள நோட்டும் / சில்லரையும் போதுமானது, மேலும் பெரும் தொகை பரிவர்த்தனைக்கு காசோலை மற்றும் online சேவையை பயன் படுத்த வேண்டும் - மு.ரா. 27-Nov-2016 10:55 am
மயில்வாகனன் - மயில்வாகனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2014 11:15 am

மாற்றி யோசித்து
மறுக்கப்பட்ட சிந்தனை...
மாற்றி யோசிக்காததாலேயே
மறக்கப்பட்ட சிந்தனை

மலைகளையும் மரங்களையும்
மாற்றியமைத்து மார்தட்டிக்கொள்ளும் காலம்
மாற்றம் தேவை என்பதை மறந்து
தேவையே மாற்றம் என்றாகிவிட்ட கோலம்

மாறியது மனிதன் என்றால்
மண்ணாவது மிஞ்சும்
மாறுவது மனிதம் என்றால்
எங்குள்ளது தஞ்சம்

அளவு கடந்த ஆசையின் எல்லை
மாறிக்கொண்டே இருக்கும் மனதின் தொல்லை
பாவம்தான் இந்த மாறிவிட்ட மனிதன்
பம்பரமாகிவிட்டதையும் மறந்து,
சாட்டையைதானே மாற்றுகிறான்

மேலும்

மயில்வாகனன் - மயில்வாகனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2014 10:48 am

ஏறினால் ஏற்றுவதும்
வாரினால் தூற்றுவதும்
அந்த நாலு பேரின் நியாயம்....

ஏற்றினாலும் தூற்றினாலும்
ஏறிவா என்பதே
ஏறிவிட்டவர்களின் வாதம்...

ஏற்றத்தில் ஏமாற்றமும்
இறக்கத்தில் தடுமாற்றமும்
இணைந்தேதான் இருக்கிறது...

ஏறியவன் பாதையும் வேண்டாம்,
இறங்கியவன் போதையும் வேண்டாம்...
அப்படியே விட்டுவிடுங்களேன்,
சமநிலை சமத்துவத்தில்,
மனிதம் மலரட்டும்

மேலும்

அருமை ..அருமை ... 07-Dec-2014 11:58 am
அருமை! 07-Dec-2014 11:29 am
அருமை தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Dec-2014 11:13 am
மயில்வாகனன் - மயில்வாகனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2014 9:24 am

கதாபாத்திரம்: இராணுவ வீரனாக நானிருந்து விடைபெற்றால்....

இரயில் மறையும்வரை
தூவானத்திற்க்கு மத்தியில் தூரிகையாய்
தெரிந்த உனது உருவம்...

வான் துளி கிளப்பிய
மண்வாசனையுடன் கலந்த
உன் விழித்துளி கிளப்பிய உன் வாசணை...

சொல்ல முடியாத சோகங்களை
உள்ளடக்கி, சிரிக்க முயன்று தோற்றுப்போய்
சுழிந்த உன் உதடுகள்...

கண்மணியே, உன் கையசைவின்
வேகத்தில் கிழிந்த காற்று,
என் முன் இருக்கும் தடைகளை
தகற்த்தெறிந்திறுக்கும்...

கட்டாயம் வருவேன், உன் கரம் பிடிக்க
காத்திரு கண்ணே, காலம் நம் காதல் கோலத்தில்
வண்ணமிடும்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி
விஜயலட்சுமி

விஜயலட்சுமி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (22)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முகில்

முகில்

திருச்சிராப்பள்ளி

இவரை பின்தொடர்பவர்கள் (22)

மேலே