விக்னேஷ் ச - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ் ச
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  29-Sep-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jan-2017
பார்த்தவர்கள்:  178
புள்ளி:  18

என்னைப் பற்றி...

பற்று என்பதற்கு யான் கண்ட பொருள் 'எம் தமிழ்'

என் படைப்புகள்
விக்னேஷ் ச செய்திகள்
விக்னேஷ் ச - விக்னேஷ் ச அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2017 2:46 pm

தூரல் போடும் சாலை- அது
அந்தி சாயும் வேளை...
கீரல்பட்ட மனமாய் என்னைக்
கண்டுகொண்ட மாலை!!

பார்வை பட்ட கனமே,
பறந்து போனதென் மனமே...
பாவை கரங்கள் சேர-பல
தவங்கள் புரியுமென் இனமே!!

வாழும் நாட்கள் ஒருகனமானது
உன்னைப் பார்த்ததுமே!
காடும் மலையும் கடுகளவானது-நீ
என்னுள் நுழைந்ததுமே!!

பேச்சும் மூச்சும் ஓய்வறை சென்றன
உன் குரல் கேட்டதுமே!
இதயம் துடிக்கும் இருமடங்காக
உன் நிழல் பார்த்ததுமே!!!

இமைகளின் துணையால்
என்னை வதைப்பது தகுமோ??
கண்களின் மொழியால்
என்னை சிதைப்பது முறையோ??

உன் நெற்றிப் படுக்கை மீதிலே
என் இதழ்கள் உறங்க முடியுமோ??
உன் கண்ணம் சிவக்கும் பொழுதிலே,
நான் வருடிக்கொடு

மேலும்

செம்ம பாராட்டுக்கு தேங்ஸ்! :) 14-Jan-2020 4:38 pm
செம்ம.. 14-Jan-2020 4:26 pm
விக்னேஷ் ச - விக்னேஷ் ச அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2017 3:33 pm

கண்வழியே அம்பெய்தாய்,
காற்றெனவே பறக்கவைத்தாய்.
முன்பின் நான் பார்த்ததில்லை,
அழகிலக்கண பதுமைச்சிலை!

உன் பெயரெழுத முற்பட்டேன்,
எழுதுகோல் வெட்கியது.
இருநொடி இமை மூடி நின்றேன்,
கண்கள் எனைத் திட்டியது!

நிலமாக நீ,
மழையாக நான்.
உன்மீதென் பாடல் படரும், என்றும்
உனக்கான என் தேடல் தொடரும்!!

மேலும்

மிக்க நன்றி :) 14-Jan-2020 4:17 pm
அழகுக் கவி. 14-Jan-2020 4:10 pm
விக்னேஷ் ச - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2020 3:52 pm

நூறாண்டு எழுதிய ஓவியமோ!
கோடியுகம் மீகண்ட இயற்கைப் பொழிலோ!
புரளியாய் சொல்லக்கூட, எனக்குக்
கற்பனை வருமோ!

சிற்பியோ? கவிஞனோ?
உனைப் படைத்தவன்,
கற்பனைக் கடவுளோ?

கண் கொடுக்க நினைத்தவன்
கருங்குழியில் அச்செடுத்தான்!
தேகம் இழைக்கவோ - மயில்பீலி
முக்கோடி கடன் பெற்றான்!

உன் இதழ் சிவக்க, ஓர்
திரவியம் படைத்தான்! அதில்,
மிஞ்சியன கொண்டு,
விண்மீன்களை வடித்தான்!

உன் புருவம் வரைய,
இருள் யாவும் குழைத்தான்!
உன் கையொப்ப வாசனைக்கோ,
கோடி மலர் சோதித்தான்!

கூந்தலைத் திரிக்க,
கருமேகங்கள் படைத்தான்!
அதில் வகிடொன்று திணிக்க,
மின்னலைப் பிடித்தான்!

உன் பாத சுவடுகளில் உள்ளடக்கா
கவிதைகள் உண்

மேலும்

விக்னேஷ் ச - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2019 12:42 am

கம்பனுக்கு பிரம்மனிடம்
கவிதை கற்க ஆசை
எனக் கேள்வி! - என்றோ
நீ புன்னகைக்கக் கண்டானாம்!!

மேலும்

விக்னேஷ் ச - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2017 3:33 pm

கண்வழியே அம்பெய்தாய்,
காற்றெனவே பறக்கவைத்தாய்.
முன்பின் நான் பார்த்ததில்லை,
அழகிலக்கண பதுமைச்சிலை!

உன் பெயரெழுத முற்பட்டேன்,
எழுதுகோல் வெட்கியது.
இருநொடி இமை மூடி நின்றேன்,
கண்கள் எனைத் திட்டியது!

நிலமாக நீ,
மழையாக நான்.
உன்மீதென் பாடல் படரும், என்றும்
உனக்கான என் தேடல் தொடரும்!!

மேலும்

மிக்க நன்றி :) 14-Jan-2020 4:17 pm
அழகுக் கவி. 14-Jan-2020 4:10 pm
விக்னேஷ் ச - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2017 12:16 pm

உயிரோடுதான் இருக்கிறேன்.
பிணமாகவே நலமாகவே,
உயிரோடுதான் இருக்கிறேன்!

தனிமையின் சத்தம், செவிகளில்
வந்து, உரக்கவே குரல் எழுப்புதே!
இனிமைகள், தேடும் இதயமோ
பண்பலையாய், காற்றில் திரியுதே!

இனிய உளவாக இன்னாத கூறும்,
கனியும் நாட்களைக் கண்ணோடு சேர்க்கும்,
நட்பை எண்ணி ஏங்கி - தனியே
பறக்கும் பறவையானேன்!

மீசையும் தாடியும், முதிர்ந்த தோற்றமும்,
தாயின் அனலை எண்ணி, நாடி ஏங்கும் நொடி,
என் குழந்தைத்தனத்திடம் தோற்குதே!
மொத்தப் புரதம் கரைந்தொழுகி ஓடுதே!

என் சதையை மொய்க்க வேண்டாம்,
கை நகங்கள் பிய்க்க வேண்டாம்.
என் உறவுகள் வடித்ததும், கனவுகள் பறித்ததும்,
என்னுள் நானே சிறையடைந்தேனே.
வலியை

மேலும்

விக்னேஷ் ச அளித்த படைப்பில் (public) vanikumar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Jan-2017 2:04 pm

கண்கள் தானே?
கணைகள் அல்லவே?
தொட்டாலே தொலைவேன்.
தொடுத்தால் என்செய்வேன்?
ஒரு தேக்கரண்டி இரக்கம்??

உன் பொலிவின் விளிம்பில்,
களித்து நின்றேன்!
உன் செவியின் வரும்பில்,
வதைந்து போனேன்!
மீட்பாயா??

உன் இதழின் சுழிப்பில்,
சுழன்று சென்றேன்!
உனை ரசிப்பதிலேயே
பிழைபல செய்தேன்!
மன்னிப்பாயா??

வருணிக்க மொழியில்லை,
இசைக்க ஒரு சுவரமில்லை,
கற்பனை செய்தேன்-
அதிலும் அதிர்ஷ்டம் இல்லை!
நீயே (என்) பிரபஞ்சமோ??

மேலும்

மிக்க நன்றி 23-Jan-2020 7:36 pm
நன்றி 23-Jan-2020 7:36 pm
அருமையான வருடல்கள் வாழ்த்துக்கள் 23-Jan-2020 7:32 pm
அழகிய வரிகள் 14-Jan-2020 4:28 pm
விக்னேஷ் ச அளித்த படைப்பில் (public) vanikumar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Jan-2017 11:15 am

அதிகாலை வேளையில்,
பனிபொழியும் சாலையில்-உன்
முகத்தைப் பார்க்கவே - நடை
பயணம் செய்கிறேன்...!

உன் மூச்சுக்காற்றினை - என்
காதல் சுமந்திடும்..
நீ நடக்கும் பாதையில்
என் இதயம் படர்ந்திடும்...!

வெகுநேரம் மூச்சிரைத்தேன்,
வேகமாய் நடக்காதே!!
தாகமாய்த் தவிக்கிறேன்,
நீர் அருந்த மறந்தாயோ??

நீ அங்கு சிரித்திருந்தால்
என் கன்னம் சிவந்துவிடும்!!
அழக்கூட நினைக்காதே,
என் இதயம் நொறுங்கிவிடும்...!

எங்கு நீ சிரிக்கிறாய்?
எங்கு நீ நடக்கிறாய்? - உன்
பாதம் வருடவே
கைரேகை துடிக்குதே...!

நோயாளி ஆகிவிட்டேன்,
மருந்தாக நீ வரவே!!
சூரியனாய் மாறிவிட்டேன் - காதல்
பனிப்பூவாய் நீ உருக!!!

மேலும்

அருமை அருமையான படைப்பு 23-Jan-2020 7:26 pm
மனமார்ந்த நன்றிகள்... 14-Jan-2020 4:35 pm
தேடல் தொடரட்டும்.. அழகிய தேடல் 14-Jan-2020 4:31 pm
மிக்க நன்றி :-) 31-Jan-2017 12:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

வாணிகுமார்

வாணிகுமார்

உடுமலைப்பேட்டை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே