yathvika komu - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  yathvika komu
இடம்:  nilakottai
பிறந்த தேதி :  25-May-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Dec-2011
பார்த்தவர்கள்:  2248
புள்ளி:  420

என்னைப் பற்றி...

கவி பயில வந்தவள் .கவிதையோடு மட்டுமே வாழ்பவள் .கவி வரம் பெற கணினியால் தவம் கிடப்பவள் .உங்கள் மனம் கவர்ந்த தோழி நான். உங்கள் கவி தேடி ,என்னை தொலைக்க வந்த விட்டில் பூச்சி நான்,

என் படைப்புகள்
yathvika komu செய்திகள்
yathvika komu - yathvika komu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2012 2:01 pm

அம்மா !
ஆயிரம் ஆயிரம்
விட்டில் பூச்சியாலும்
அணைக்க முடியாத
அன்பின் மெழுகுவர்த்தி நீ !

காலை காப்பியில்
தொடங்கி
இரவு போர்வை போர்த்துவது வரை
எத்தனை எத்தனை
பணிவிடைகள்
செய்வாய் நீ !

நான் காலையில்
கிளம்பும் போது
உன் பரபரப்பு
பம்பரத்தை போட்டிக்கு அழைக்கும் !

வேண்ணும்மா...............
சொன்னால் போதும் ,
எனக்காய்
பாற்கடலை கூட
பரந்தாமனிடம் கடனாய் கேட்பாய்!

பசிகிதுமா ......,
சொல்லி முடிப்பதற்குள்
பல வகைகளை
பத்து நிமிஷத்தில்
பரிமறுவாய்!

காய்சல் வந்து
நான் படுத்தால்..............!
கஞ்சி கூட உப்பு கரிக்கும்
உன் கண்ணீர் பட்டு !

அம்மா ...,

மேலும்

இணையில்லா அன்பு…… வரிக்கு வரி தாயன்பு…..அதை மிஞ்சிட தரணியில் வேறேதும் உண்டோ….?????? மிக அருமையான வரவு….. இன்னும் வர வாழ்த்துகிறேன்…..!! 10-Oct-2021 2:31 am
தாய்க்கு ஈடிணை யாருமில்லை! என் கண்கண்ட தெய்வம் அம்மாதான். அவளை மிஞ்சிய கடவுள் ஒன்று உண்டென்றால் அவை பொய்தான். 09-Jul-2016 4:36 pm
ஆஹா அருமை தாய் என்றால் முத்திரையுடன் வருகிறது கவிதை . வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன் உங்கள் கவிதையை . நற் கவிஞர்கள் பார்வை சொடுக்கு பற்றி கவலைப்படக் கூடாது. முத்திரைக் கவிதைகள் எந்தக் கதிரிலும் எந்த நிலவிலும் எந்த இரவிலும் பிரகாசிக்கும் .அவை சுயம் பிரகாசிகள் .இது முத்திரைக் கவிதை என் கருத்துக் கணையாழி உங்களுக்கு உரித்தாகுக . வாழ்த்துக்கள் யாத்விகா கோமு அன்புடன்,கவின் சாரலன் 10-May-2015 7:01 pm
"அம்மா" கவிதை அருமை,! 04-Jun-2013 4:03 pm
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) மங்காத்தா மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Feb-2014 2:27 pm

நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..!

கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது.

பக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.

கடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும் சேர்த்து, கொண்டாடும் வகையில், ஷாலுக் குட

மேலும்

மிகவும் அற்புதமான கதையோட்டம்..வாழ்க்கையில் உயிர்களின் படைப்பில் இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரம் சிந்தனை தான்..ஆனால் சிலர் சிந்தனை செய்கிறார்கள் பலர் சிந்தையே இன்றி வாழ்க்கையை கழிக்கிறார்கள்..என்பதை ஒரு குழந்தையின் செயல் மூலம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் மனதில் விதையாக பதியம் போட்டுச் செல்கிறது கதைவோட்டம் 10-Sep-2016 6:16 am
இப்போது தற்செயலாக இந்த கதை கண்ணில் கிட்டியது . என்ன சொல்வது ? கதையின் நடை , கரு , எளிமை ஒன்றோடொன்று கூட்டாக நடர்ந்து . உயர்ந்த படைப்பாகிறது .படிக்கிறவர்களையும் உயர்த்தும் . 07-Dec-2014 10:19 pm
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா..! 30-Apr-2014 5:14 pm
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..! 24-Apr-2014 3:33 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Feb-2014 6:56 pm

எழுத்து இண்ணையதளத்தில் எனது சக படைப்பாளியும் இனிய தோழியுமான யாத்வீகா கார்த்திக் தினமலர்- மதுரை பதிப்பகத்திற்கு கொடுத்த இயல்பான பேட்டி.
படித்து பாருங்கள் இல்லத்தரசிகளே.!! . உங்களாலும் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார் இந்த கவிதாயினி !



-------------------இரா.சந்தோஷ் குமார்

மேலும்

mikka nandri thola.padithamaikum,pariyamaikkum, 24-Feb-2014 2:08 am
தமிழே ..! உயிரே ..! மருந் தேனே ..! செயளினை..! மூச்சினை..உனக்களித்தேனே .... என்னும் பாரதிதாசனின் வரிகள் உங்களால் உயிர் பெறுகிறது ......! வாழ்த்துக்கள் ..... 17-Feb-2014 6:21 am
தமிழாய் வாழும் சகோதரி , யாத்விகா கார்த்திக்கு என் அன்பு வாழ்த்துக்கள் . 16-Feb-2014 9:04 pm
தமிழாய் வாழ்வேன் எனும் கவிதாயினி யாத்விகா கார்த்திக்கு வாழ்த்துக்கள் ..... 16-Feb-2014 8:19 pm
agan அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Jan-2014 7:42 am

தோழமை நெஞ்சத்தீர் வணக்கம்

தளத்தின் கவிதைக்கென்று யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் எனும் ஒரு தொகுப்பு முதலில் வெளிவந்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.

இரண்டாவது தொகுப்பு வெளியிட தயாராக உள்ளது.

மூன்றாவது தொகுப்பு முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்தொகுப்புக்கென தோழர்கள் ஷியாமளா, உமா மகேஷ்வரி, புனிதா, கவியாழினி, நாகினி, ஆவாரம்பூ, தாரகை, புலமி, சாந்தி ,சுதா ,கோமு என பெண்மணிகள் படைப்புகளை அளித்துள்ளனர். பாராட்டுகிறோம்.


தோழமை நெஞ்சங்களுக்கு ஓர் வேண்டுகோள் கீழே அளிக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் மூன்றினை முதல் இரண்டு மூன்று என தெரிவு செய்து தங்கள் கருத்து

மேலும்

எனக்கு பிடித்தவை எனில் 1-முடிவிலி நீட்டங்கள் 2-புத்தெழுச்சியாய் மீட்பாய் விடை 3-சுமையில்லா வாழ்வில் சுகமில்லை .அதில் முதல் இரண்டும் மனதை தொட்ட தலைப்புகள் ஐயா. 28-Jan-2014 12:26 am
செவ்வாய் கிரகம் பாவந்தான் ஒரு மன்னிப்பாவது கேளேன் புத்தெழுச்சியாய் மீட்பாய் விடை .... அருமையான செய்தி....!!! தோழிகளின் சகோதரிகளின் எண்ண அரங்கேற்ற குவியல்களுக்காய் காத்திருக்கிறேன்...!!! 27-Jan-2014 3:27 pm
2.கண்ணீர் எழுதும் மறு ஜென்ம சாசனம் 7.சுமையில்லா வாழ்வில் சுகமில்லை 8.முப்பொழுதும் உன் கற்பனையில் 26-Jan-2014 6:04 pm
பொது வாசகி, ரசிகை, தள உறுப்பினர் எனும் முறையில் சில கருத்துகள் சொல்லும் உரிமையில் சிலேடையின்றி இங்கே முன் நிறுத்த அனுமதி கோருகிறேன். அனுமதி எழுத்தில் பதிவாக வந்த பிறகே எனது கருத்துகளை பதிய விழைகிறேன் 26-Jan-2014 12:49 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) sahanadhas மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Jan-2014 12:12 am

கங்கையின் பிரவாகமாய்
மங்கையெனுள் ஊற்றெடுத்த
சங்கத்தமிழ் சொல்லெடுத்துப்
பொங்கிவரும் கற்பனையால்
தங்கமென வார்த்தெடுத்துப்
பங்கமின்றி கவிவடித்து
இங்கிதமாய் இசையமைத்து
சங்கதிகள் அதில்கூட்டி
மங்கியதோர் நிலவொளியில்
வங்கக்கரை மணல்வெளியில்
திங்களும் வாழ்த்துரைக்க
சிங்காரமாய் பாடுகையில்
பொங்குகடல் அருகில்வந்து
சங்கீதம் ரசித்தவழகை
வங்கணத்தி என்சொல்வேன் ......???

(வங்கணத்தி - உற்ற தோழி )

மேலும்

வருகை+கருத்து =மகிழ்ச்சி ! நன்றி ! 19-Feb-2014 8:24 am
சிறுகப் பேசி பெருக யோசி நல்ல சிந்தனை!நல்ல சொல்லாடல்! அழகு+இனிமை =கவிதை! நன்று! 18-Feb-2014 11:31 am
மிக்க நன்றி தாமரை !! 13-Feb-2014 1:30 pm
பகலவனை தூங்க வைத்து பால்நிலாத்தோழியுடன் பாட்டிசைத்து நீர் தந்த தேவகானத்தில் தென்றலும் மயங்கியதோ!! அதனால்தான் பார்கடலும் குளிர்ந்ததோ!!! அருமை! அருமை! 13-Feb-2014 8:06 am
yathvika komu - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2014 8:48 pm

மரம் -மனிதன்
(ஒரு நேர்காணல் )


மனிதன் -------------மரமே,!
பரிணாம் வளர்ச்சியின் முதல் அறிவே!
நலம் தானே?


மரம்------
சில சமயம் நலம்.



மனிதன் -------------- அது எப்படி உன்னால் மட்டும்
எது நடந்தாலும்
பொறுத்துக்கொள்ள முடிகிறது?


மரம்---------------------------- நாங்கள் பூமிதேவியின் கருவில் இருந்து
ஜெனிப்பவர்கள்…….
தாய் குணம் தானே எங்களுக்கும்
இருக்கும்!


மனிதன் -------------- சரி சரிதான்,

மேலும்

வைரமுத்துவின் மரம் கவிதை படித்திருப்பீர்கள். அதைப்போல் மிகவும் ரசித்தேன். அருமையான படைப்பு.!!! தூய காற்று குடுவையில் அடைத்து விற்று வருவதும் நடந்துவிட்டது வேறு நாட்டில். படித்திருப்பீர்கள் செய்தியை!!! ///இறுதியாக ஒரு கேள்வி! உங்கள் இனம் இல்லாவிட்டால் என்ன வாகும்? மரம்--------------------குறைந்த பட்சம்,உங்கள் இனம் அழியும்! /// ///// அருமை //// படைப்பின் முடிவோ சிறப்பு... 13-Mar-2016 2:12 pm
மிக நன்று ...அருமை அக்கா.... 02-Jul-2015 3:19 pm
அருமையான படைப்பு நல்ல சிந்தனை 16-Feb-2014 8:50 pm
நல்ல கற்பனை 14-Feb-2014 6:08 pm
yathvika komu - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2013 2:23 pm

காவியா,
அம்மா…….காவியா?

எங்கடா இருக்க?

வினாவினை தொடுத்த வாரே சதாசிவம் உள்ளே நுழைந்தார்.

என்னப்பா?

பயங்கர சந்தோஷமா இருக்கீங்க போல……….
ஆமாம் டா !,.நல்ல விஷயம் தான், .இப்பதான் தரகர் போன் பண்ணார்.உனக்கு ஏத்த நல்ல வரன் பாத்துட்ட தாகவும் ,இப்பவே ஃஅந்த பையனின் போட்டோ வோட வருவதாகவும் சொன்னார்.அதான்.


என்னடா…….
ஒன்னும் பதிலே பேச மாட்டீங்கிற?
இல்லப் பா, இவ்வளவு சீக்கிறமா உங்கள விட்டு போகனுமா?நானும் போயிட்டா யாருப்பா உங்கள பாத்துக்குவா?
என்னால உங்கள விட்டு போக முடியாது.கண்களில் கண்ணீர் மெல்ல எட்டி பார்க்கும் நிலையில் காவியா தழுதழுத்த குரலில் சொன்னாள்.
என்னடா!
அப்பா உயிரோட இருப்பதே

மேலும்

ஒரு குறும்படம் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்பட்டது . காவ்யா என்ற கதாபாத்திரம் கண்ணில் இன்னும் நின்று கொண்டே உள்ளது. பழகிய பார்த்த ரசித்த ஒரு திரைப்பட கட்சியைப் போல இருந்தாலும் படிக்கும்போது ஒரு விறுவிறுப்பு இருந்தது. கதிரைப் போல உள்ளவர்கள் எல்லாம் கல்யாணம் செய்து காலம் முழுதும் ஒரு கண்ணகியை , மாதவியாக எண்ணி கொடுமை படுத்துவதை விட காவ்யா மாதிரி எடுத்த முடிவே சரியான தீர்ப்பு , நன்று 02-Jan-2014 6:04 pm
அனைத்துக் கோணங்களில் இருந்தும் அபாரம். நடை விறுவிறுப்பு, கரு நகரும் விதம், எதிர்பார்ப்பைக் கூட்டும் ஆர்வம் நிகழ்வு, தொய்வில்லா பின்புலம், திடீர் திருப்பம், சிறந்த முடிவு, நல்ல செய்தி எல்லா விதத்திலும் அபாரம். எழுத்தாளர் உருவாகிறார். நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது 02-Jan-2014 5:51 pm
அழகிய செய்தி 17-Dec-2013 1:37 pm
அழகான கதை சில ஆண்களின் முகத்திரையை கிழித்து எரிந்து விட்டீர்கள் அருமை தோழி 17-Dec-2013 1:20 pm
yathvika komu - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 12:28 am

முண்டாசு பாகைக்குள்
முரண்பாடாய்
இருப்பவனே !
முறுக்கு மீசையின்
முதல் அத்தியாயமே ..............


எல்லோருக்கும்
முத்தமிழ் தெரியும் !
உனக்கோ
நான்காவது தமிழ் தெரியும்
அது
கோபத்தமிழ்!


ஆத்திரக்கரனுக்கு
புத்தி மட்டு என்பதை
பொய்ப்பித்தவன் நீ !
ஆத்திரம் கொண்டு
அனலாய் மாறினால்
அடங்கி போகும் அட்டுழியம்
என்பதை
மெயப்பித்தவன் நீ !


பாரதியே
மீண்டும் வா .........!

இன்னும் மாறவில்லை
சமுதாயம்
செத்துக்கொண்டு இருக்கிறது
சமதர்மம் !

வா
உன் கவி நாவால் சுடு !
சில நயவஞ்சகர்கள்
நாசமாய் போகட்டும் !

பூரித்து போகதே !
நான் கண்ட
பெண் சுதந்திரம்
கிடைத்து விட்

மேலும்

அதே எழுச்சியுடன் வீறு கொண்ட வரிகள். கட்டபொம்மன் என்றாலே ஜக்கம்மா என்று நினைவுக்கு வருவது போலவே பாரதி என்றாலே எழுச்சி வரிகள்தன் என்ற அடையாளம் மாறாமல் படைப்பு தந்த பாச மலரே, நிகழ்கால பாரதியாக சாயல் தொடரட்டுமே.... இது போன்ற படைப்புகள்... 02-Jan-2014 5:54 pm
தேர்ந்தெடுத்த வரிகள் பக்குவமான நடை கபக் கனல் வீசும் உக்கிரமான பார்வைகள் பாரதியை மீண்டும் வரவழைக்கும் ருத்திர தாண்டவம் அருமை 31-Dec-2013 1:08 am
நன்று 29-Dec-2013 8:08 pm
ரௌத்திரம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பாரதியாக வேண்டும் ரௌத்திரம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் ஆதி பராஷக்தியாக மாற வேண்டும்,,, இருக்கும் பொழுது பேசப்பாடாத அவன் சரித்திரம் இல்லாமல் போனப்பொழுது எப்படி வருகிறது பாருங்கள் இதுதான் நிலை,,, இருக்கும் பொழுது புகழ் பொருள் தேடிக்கொள்ளுகிறவர்கள்,,, அவர்கள் மரணத்தை சந்திப்பதற்கு முன்னேயே சுயனலங்களிலும் ஆணவங்களிலும் விழுந்து பார்த்த பின்பே மடிவார்கள் ,,, இப்படிப் பட்டவர்கள்,, இப்பொழுதே பேசப்படுபவர்கள்,,,புகழாரம் சூட்டப் படுவார்கள் ,,,, இது நிலையில்லாத ஒன்று ,,,, கடமைகளைச் செய்வோம் :) 29-Dec-2013 8:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (280)

velmurugan tamil

velmurugan tamil

மாதிராப்பட்டி.விராலிமலை
சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்
user photo

svshanmu

சென்னை
மனோ விஜயன்

மனோ விஜயன்

கும்பகோணம்

இவர் பின்தொடர்பவர்கள் (280)

karthikjeeva

karthikjeeva

chennai
krishnan hari

krishnan hari

chennai
user photo

prakash.j

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (283)

தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.
tamilnadu108

tamilnadu108

இந்தியா
மேலே