எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
மார்ச் -தாமரை இதழில்.....
தாஸ்தயெவ்ஸ்கியின் ;குற்றமும் தண்டனையும்'.... படிக்கிறேன்... அது திறந்து கொண்டே போகும் கதவுகளுக்குள்... நான் இருண்மையின் நிழல் தேடி... சிறகடிக்கிறேன்..... ஒரு நேசம் பிடித்த வௌவாளாய்......
வாழ்க்கையை எழுத்தாக பார்க்க தொடங்கிய பிறகு... அது ஒரு கவிதையைப் போலவோ அல்லது ஒரு சிறுகதையை போலவோ..சில மணித் துளிகளில் முடிந்து விடாத... வண்ணக் கனவுகளை வானமாக்கி பொழியத் தொடங்கியது....காகிதமும்.... எழுதுகோலும்...இங்கே நினைவுகளாகிறது..... கதாபாத்திரங்களும், சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் இருத்தலைப் போலதான்... இந்த வாழ்க்கை அடுத்த நொடி விரியும் அற்புத பூந்தோட்டம்...அது நிஜங்களையும் நிழல்களையும் மாற்றி மாற்றியே வெளிப்படுத்துகிறது......அது ஒவ்வொருவருக்கும் ஒரு வெளியை வானமாக்குகிறது...வண்ணதாசனின் மழைக்குள் மாயாவுடன் நனையும் மாயம், இந்த வாழ்வின் ஆதாரம்... தேவைகளின் நுட்பத்தில் இந்த மானுடம் நீண்டு கொண்டே இருக்கும்.... அது.. தாஸ்தாவ்ஸ்கியின் தீரா நதி.......கிப்ரானின் பின்னிரவு கதவுகளால் நிறைந்து வழிகிறது வாழ்வின் சூட்சுமம்..புது புது புத்தக போல.. அங்கே குடைகளற்ற மழையை ஜன்னல் செய்யும் அற்புதம்.... எந்தக் கடவுளாலும் செய்ய முடியாதது.. அதை நிகழ்த்த ஒரு எழுதுபவனால் மட்டுமே முடியும்.. ஆம்.. நான் எழுதுபவன் ... ஆச்சரியங்களாலே இந்த பிறப்பு நிகழ்கிறது....கோணங்கியின் கனவைப் போல... அது ஒரு சுழல்... வந்து போகும் வாழ்க்கையில்.. பிறக்க கிடைத்த வாய்ப்பை... அதே ஆச்சரியத்தோடு... கடக்க வேண்டும் என்பதை உங்கள் விதியாக எழுதுங்கள்.... நான் என் விதியை எழுதிக் கொண்டிருக்கிறேன்... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.... தோழர்களே.... வாழ்க்கை வாழ்வதற்கே....வாழ்வது எழுதுவதற்கே....
தேவதைகள் தூங்குகிறார்கள்
இனியாவது நாம யோசிக்கணும்.... இனி ஓட்டுக்கு காசு வேண்டாம்..தண்ணீ தேங்காம இருக்க வழி பண்ணுங்கனு சொல்வோம்...இலவசமா ஏதும் வேண்டாம்...ஏரிகளை தூர் வாருங்கனு சொல்வோம்.....ஆள பிடிச்சு லஞ்சம் குடுத்து கவர் மெண்டு வேலை வாங்கறது இருக்கட்டும்...ஆத்துல மணல் அல்ல கூடாதுன்னு சொல்லுவோம்...அடுக்குமாடி வீடு கனவா இருக்கலாம்.. அதுக்காக ஏரி இருந்த இடத்துல எவனோ ஒரு வியாபாரி டை கட்டிக்கிட்டு சொல்றாங்கறதுக்காக மிச்சம் இருக்கற 50 வருசத்துக்கு லோன போட்டு வாங்கி சொந்த ஊர்க்காரங்ககிட்ட பீத்திக்காம இருப்போம்....மேல்தட்டும்.. நடுத்தரமும் பண்ற தப்பு... அடிமட்டத்துல இருக்கவறன் வீட்டைத்தான் முதல்ல புடுங்குது.... விதி... இங்கே விதிங்கறது செஞ்ச பிழையோட எதிர்வினை....அட இவ்ளோ நடக்குதே.. இந்த கடவுளர்கள் எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க... வந்து ஏதாவது பண்ணுங்கப்பா.... உடனே... அவுங்க இருக்கவும் தான் இந்தளவுக்காவது இருக்குதுன்னு யாரும் சொல்லிடாதிங்க...லூசு மாதிரி.....
தேவதைகள் தூங்குகிறார்கள்
எழுத்து நிர்வாகி தோழர்... ராஜேஷ்குமார் அவர்களுக்கு பட்டயமும் சான்றிதழும் கொடுக்கும் போது...
எழுத்து தளம் நிர்வாகி தோழர் ராஜேஷ்குமார் அவர்களுக்கு புத்தகம் கொடுக்கும்ம் போது ....
நேற்று நல் திறனாய்வாளர் தோழர் கோவை ஞானி அவர்களின் வெள்ளக்கிணர் இல்லத்தில் அவருக்கு காணிக்கையாக்கப்பட்ட தொலைந்து போன வானவில் நூல் அளித்து அவர் வாழ்த்து பெற்றோம்( அகன் , பொள்ளாச்சி அபி , கவிஜி, சேகுவாரா கோபி , ராஜ்குமார்)