எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
துர்காதேவியினை
நான்கு சிறுவர்கள்
வலம் வந்துகொண்டிருந்தனர்...
சரியாக
இடப்புறம் அமர்ந்திருந்த
காலபைரவன் ரத்தத்தின்
சுவை
இனிப்பென்றிருந்தார்.....
ஆகமவிதிகளின் படி
எல்லாமே
சரியாக
அமைக்கப்பட்டிருந்தது....!!
மதிப்பெண் வேண்டாம்......
நண்பர்களுக்கு
வணக்கம். எழுத்தில் மீண்டும் பரவலாக படைப்புகள் இடத் துவங்கியிருக்கிறேன்.
நண்பர்கள் படைப்புகளை பார்வையிடுவதும் கருத்துக்கள் சொல்வதும் என்னை சீர்படுத்திக்
கொள்ள பெரிதும் உறுதுணையாய் இருக்கிறது. தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும்
நண்பர்களுக்கு நன்றி.
அதே நேரத்தில்.
என்னுடைய படைப்புக்கு கருத்தோ விமர்சனமோ சொல்லும் முழு உரிமையும் உங்களுக்கு
இருக்கிறது. ஒரு கதையோ கவிதையோ கட்டுரையோ எழுதி முடித்த பிறகு அது எழுதியவனுக்குச்
சொந்தமில்லை. அது வாசிப்பவர்களுக்கே சொந்தம்...... என்றாலும் எனது படைப்புகளுக்கு
மதிப்பெண் யாரும் வழங்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காரணம்...
நாம பேசிப்பேசி அலுத்துப் போன ஒன்றுதான். கருத்துக்களில் ஆஹா.. ஓஹோ... அருமை..
அற்புதம்.. என்று புகழ்ந்து தள்ளி 1ம்... 2மாக நீங்கள் கொடுக்கும் மதிப்பெண்களைப்
பார்த்தால் உங்கள் மனநிலையை எப்படிப் புகழ்வது எனத் தெரியவில்லை. நீங்கள் எதற்காக
வாசிக்கிறீர்கள்.. அந்தப் படைப்பில் என்ன புரிந்து கொண்டீர்கள்... உணர்ந்து
கொண்டீர்கள் என்பதை விடுத்து... பிரதிகளின் மூலம் அனைவருக்கும் கருத்துச் சொல்வது
எதற்காக? உங்கள படைப்புகளை விற்கத்தானே? அது இங்கு அழகாகவே நடக்கும்.
ழ ள ல க்களுக்கு
வித்தியாசம் தெரியாதவர்களும் சந்திப்பிழைகளை எழுத்து நடையாக வைத்திருப்போரும் உங்கள் சொந்த
விளம்பரங்களுக்காக வெறுமனே ஒரு கருத்தை நகலெடுத்து எல்லாப் படைப்புகளுக்கும்
இட்டு... எதை சாதிக்கப் போகிறீர்கள்..? நீங்கள் உங்கள் சாதனையாகப் பார்க்கும்...உங்களுக்கு
மிக மிக முக்கியமான மதிப்பெண்... எனக்கு ஒரு பொருட்டே அல்ல.
யாரையும் புண்படுத்தும்
எண்ணம் இல்லை...அர்த்தப் படுத்தலோடே சொல்கிறேன். நீங்கள் படிக்காவிட்டாலும்
பரவாயில்லை. தயவு செய்து எனது படைப்புகளுக்கு மதிப்பெண் கொடுக்காதீர்கள். எனக்குப்
பரிசு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.
புரிதலுக்கு நன்றி.
எல்லாருக்கும் வணக்கம்...
நம்மளால எல்லாம் எழுத முடியுமா நாம எழுதுறது
எல்லாம் எழுத்தா அப்படிங்கற ஒரு கலவையான மனநெலைல இருக்கப்பதா எழுத்து எனக்கு
அறிமுகமாச்சி.. இங்க வந்து.. எழுத ஆரம்பிச்ச காலம்தொட்டு எழுத்து மட்டும் இல்லாம இன்னும் நெறைய விஷயங்கள
இந்தத் தளம் நமக்கு கத்துக் குடுக்க ஆரம்பிச்சது. இன்னும் கத்துக்கிட்டுக்கூட
இருக்கேன்னு சொல்லலாம்... அந்த மாதிரி கத்துக்கிட்டதன் விளைவாத்தான் கொஞ்சம்
எல்லாராலும் படிக்கிற மாதிரியும் பேசப்படற மாதிரியும் கொஞ்சம் எழுதிட்டு
இருக்கேங்கற ஒரு பெரிய நம்பிக்கை இருக்கு எனக்குள்ள... அந்த வகையில.. தளத்தின்
மூலமா வந்த புத்தகங்கள்.. போட்டிகள்.. கொஞ்சம் பிரபலமான தொடர்கள் எல்லாத்திலையும்
என்னோட பங்களிப்பும் கொஞ்சமாச்சும் இருந்திருக்கு அப்படின்னு யோசிக்கும் போது
கொஞ்சம் திருப்தியாவும் இருக்கு..
அந்த வகையில்..முதுகெலும்பி அப்படிங்கற ஒரு
வாழ்வியல் தொடர் என்னை பலபேருக்கு அடையாளம் காமிச்சிக் கொடுத்தது. அதை எழுதக்
காரணமா இருந்த காரண மூலவர்களுக்கு என்னோட நன்றி... அடுத்து என்ன அப்படின்னு
யோசிச்சிட்டு இருக்கப்ப ஒண்ணுமே பிடிபடாம இருந்த நிலையில்தான் நேத்து நான் முகநூல்ல
போட்ட ஒரு பதிவு என்னை இப்படி எழுதத் தூண்டிச்சி... நாம இன்னைக்குப்
படிச்சதாலையோ... அல்லது அனுபவத்துனாலையோ வாழ்க்கையில ஒரு நிலையில இருக்கோம்...
அதுக்குக் காரணமா இருந்த ஆசிரியர்களை நம்மள்ல பலபேர் ஆசிரியர் தினத்தோட மறந்து போய்டுவோம். அவர்களுக்கும்
நமக்குமான பந்தத்த மீட்டெடுக்குற ஒரு முயற்சியா “நட வண்டி”ன்னு ஒரு தொடர் ஆரம்பிச்சிருக்கேன்.
இது நமக்கும் நம்ம ஆசிரியர்களுக்குமான வாழ்வியலை... நெகிழ்ந்த தருணங்களை...
பெருமைக்குரிய காலங்களை மையமா வச்சிப் பேசப்போகுது... அதை... வழக்கம்போல என் மொழில
சொல்றது எனக்கு மகிழ்ச்சி... படிச்சிப்பாருங்க... நிறை குறைகள நேரடியாவே
சொல்லுங்க.. நன்றி...
இந்த எண்ணைத்தை நான் இங்க பதிவு செய்யறதையும்
இங்க நான் கத்துக்கிட்ட ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு வாய்ப்பாகவே
எடுத்துக்கறேன். நன்றி.........
http://eluthu.com/kavithai/272805.html
இங்கு நண்பர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்தவைகளை பதிவிட்டும் பகிர்ந்தும் பாராட்டியும் விமர்சித்தும் இப்படியாக கவிதைகளும் கவிதைகள் எனச் சொல்லப்படுபவைகளும் இயல்பாகவே கடந்தும் கவனிக்கப் பெற்றும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. தனிவிடுகை அமைப்பு என்பது ஒருவர் கவிதைகள் படைப்புகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் அவரிடம் நல்ல நட்பு வளர்க்கப் பெறுவதற்காகவே. அது வேறு பல மாதிரியான நிகழ்வுகளுக்குப் பயன் படுத்தப்படுவது வேறு கதை. அதைப் பற்றியல்ல இந்த எண்ணம். இந்த மாதிரியாக நல்ல புரிதலில் செய்திகள் பரிமாறிக் கொள்வதற்காக தளத்தார் அமைப்பில் இருப்பது தனி விடுகை. அதனை தங்கள் படைப்புகளுக்காக ஒரு விளம்பர யுக்திகளுக்காக ஒரு துண்டுச் சீட்டு விநியோகிப்பது போல கவிதைக்குக் கருத்துக் கேட்கவும் மதிப்பெண் போடச் சொல்லியும் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். மற்றவர்கள் நிலைப்பாடு எப்படி எனத் தெரியவில்லை. என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் குறிப்பாக எனக்கு புதியதாக இணைபவர்கள் இந்த மாதிரியாக செய்யும் பொழுது என்னுடைய நட்பு வட்டத்தில் இருந்து நீக்கப் படுவீர்கள் என வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். இந்த மாதிரியான எடுப்பதும் கொடுப்பதும் நிலைப்பாடுகளில்தான் (எனக்கு நீ.... உனக்கு நான் ) பல நல்ல படைப்புகள் காணாமலும் கவனிக்கப் பெறாமலும் போகின்றன. இதை ஒரு பொது எண்ணமாகவே இங்கு பதிவு செய்கிறேன் . யாரையும் குறிப்பிட்டு அல்ல. தங்கள் படைப்பு நன்றாக இருப்பின் அது கண்டிப்பாக பலரால் கவனிக்கப் பெறும். அதனைப் போல கவனம் பெற்று இந்தத் தளத்திலிருந்து நல்ல கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதெப்படி....? ஒரு படைப்பாளியாக உங்களுக்குப் பொறுப்பே இல்லையா..? ஊக்கப் படுத்த வேண்டாமா என்று இந்தப் பதிவில் பின்னூட்டம் பொங்க நினைப்பவர்களுக்கு ..... நான் என்னுடைய நேரப் போக்கிற்கு மட்டுமே எழுதுகிறேன் ... நான் ஒரு படைப்பாளியே அல்ல.... என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..!! தயவு செய்து தங்கள் படைப்புகளை வாசிக்கச் சொல்லி எனக்கு யாரும் மின்னஞ்சல் அனுப்பாதீர்கள். நன்றி...!!
2013... இந்தத் தளம் எனக்கோ... அல்லது இப்பெருந் தளத்திற்கோ நானோ அறிமுகம்.. இங்கு கற்றதும் பெற்றதும் நிறைய..... எழுதக் கற்றுக்கொண்டோமோ இல்லையோ இந்தத் தளம் ஒரே அலைவரிசையில் பயணிக்கும் நல்ல நண்பர்களை பெற்றுத் தந்துள்ளது. நான் இணைந்த சிறிது காலத்திற்குள்ளேயே என்னிடம் நல்ல நட்பாகி இன்று வரை அதே நட்பு துளிகூட மாறாமல் எழுத்தில் எங்கு சென்றாலும் எதனை நிறுவினாலும் என்னையும் கூடவே இணைத்துக் கொண்டு (அவர் அறிவை ஒப்பிடும் பொழுது இழுத்துக் கொண்டு ) பயணிக்கும் ஒரு ஆக்கப் பூர்வமான படைப்பாளி. திரு. கவிஜி அவர்கள்.. அவர் பிறந்த நாளில் இதனைச் சொல்லி வாழ்த்துக் கூறுவது சாலப் பொருத்தமாக இருக்கும் என்பதை என்னைப் போல பலரும் இங்கு அறிவர்.. நிறைய படைப்பாளிகளை எழுதத் தூண்டி அவர்களை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வைத்த நிறைய தொடர்களின் நதிமூலம் அவர். அவர் பிறந்தநாளில் இத்தகைய நிகழ்வுகளை நினைவில் கொணர்ந்து இன்று போல எந்நாளும் மகிழ்ச்சியும் உடல் நலமோடும் வாழ்ந்திருக்க வாழ்த்துகிறேன் ஜி.... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....!!