எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2018
உண்மைக்கும் நேர்மைக்கும்உருவங்கள் கொடுப்போம்பொய்மைதனை சிதைத்து - தர்மசிலையொன்றை வடிப்போம்..!சில்லறை புத்தியில்செல்லரிக்கும் நாடு - அதைஅழிக்கும் மருந்தினைதெளிக்க படு பாடு..!ஊருக்கு நேராதபாரொன்றை அமைப்போம்ஒற்றுமை கை கொண்டுவெற்றிகள் சமைப்போம்..!
புத்தாண்டு பிறந்ததுநன்மைகள் வளர்க்கபுன்னகை பூ மலர்ந்து
வாழ்க்கையும் மணக்க..!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
ஹயாக்ஸ் நிறுவனத்திற்கு
என் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் ...!
எழுத்து குழுமத்தார் அனைவருக்கும்
என் இனிய
வாழ்த்துக்கள்..!
வாழ்க... வளர்க...!அன்புடன்,-சொ. சாந்தி-
வெளிச்சம் தேடும் உண்மைகள்..!
கனிம வளம் பெருகிக் கிடக்கிறதாம்கண் உறுதியவர்களுக்குகடவுளாய் தமிழ்நாடு..!கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்பதவிக்கு மானம் விற்கும்கையூட்டுக்காரர்களுக்கும்கடவுளுக்கும் மேலாய் தமிழ்நாடு..!கத்தி முனை அதிகாரங்களில்சத்தமின்றி விவசாய நில அபகரிப்பில்பூட்டி தாழிடப்பட்டுவிட்டது பல உண்மைகள்..!பத்து ரூபாய்க்கு மூலிகை பெட்ரோல்கண்டுபிடித்தஇராமன் பிள்ளைக்கு கல்தா..!படுத்துவிடக்கூடுமாம் ஆயில் நிறுவனங்கள்கூடிப்பேசி குற்றமாக்கிசிறைபிடிக்கப்பட்டதுஏழைகளுக்கானஎரிபொருள் உண்மை..!அடிமைகள் என்றும்ஆட்டுவித்தபடி ஆடுவோம் என்றும்பதவிப்பிரமாணங்களின் போதுசாசனம் எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கலாம்சீர்கெடும் தமிழ்நாட்டின்பின் உண்மைகள் கைதாகியிருக்கக்கூடும்எந்த சட்டத்தின் கீழ் என்றுஎவரும் கேட்டு விடாதீர்கள்உண்மை புதைபடுவது போல்நீங்களும் புதையக்கூடும்..!காய்ந்து கண்மறைவாகிவிட்டசரஸ்வதி நதியை தேடுகிறார்களாம்150 கோடி செலவில்...தமிழ்நாடு தேடி வரும் நதிகளைமுடக்கம் செய்யும் அணைகளைஉடைக்க வக்கற்றவர்கள்..சரஸ்வதி கிடைக்காவிட்டாலும்ஒருவருக்கும் கவலை இருக்கப்போவதில்லைஇலட்சுமி நதி தாராளமாய் பாயக்கூடும்அவரவர் இல்லங்களில்நதி தேடும் திட்டங்களில்..!காதல் சின்னமாம் தாஜ்மகால்கட்டுக்கதையும் காதில் பூச்சுற்றலும்நேர்த்தியாக்கப்பட்டதில்பொய் ஒன்று புகழ் பாடித்திரிகிறது..!ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கின்ஆட்சியில் விளைந்தபிரம்மாண்ட சிவாலயத்தில்பிணங்கள் படுத்திருக்கிறதுஉலக அதிசயமாய்..!தேஜோ மகால் தாஜ்மகால்ஆன வரலாறு ஆராய்ந்துஆவணப்படுத்தப்படுத்தியபேராசிரியர் பி.என். ஓக் குற்றவாளியாம்..சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதைகள்"தாலியம்" விடத்திற்குஅவர் பலியான சரிதம் கூடதாஜ்மகால் இரகசியங்களோடுஇருளில் இன்னமும்உறவாடிக்கொண்டுதான் இருக்கிறது..!தனிநாடு வேண்டிஇலங்கையில் சிறைப்பட்ட தமிழர்கள்விடுதலைக்கு பின் விடுதலைஅடைகிறதாம் போராளிகளின் உயிரும்..!சிகிச்சை என்கிற பேரில்இரசாயண ஊசிகள்தின சாப்பாட்டில்உயிர்கொல்லி பொருட்கள்...போராளிகளின்மரண பின்னணியில்மனித போர்வை போர்த்திகாய் நகர்த்தும் கொடுமைகள்திரை மறைவினில் பல உண்மைகள்இன்னமும் உறைபனியாகவே.!சுபாஷ் சந்திரபோஸ் முதல் ஜெ ஜெ வரைவிடுவிக்கப்படாத மர்மங்கள்மர்ம நாவல்களையும்தோற்கடித்துவிடக்கூடும்..!இருட்டடிப்பு செய்யப்படநியாயங்களும் உண்மைகளும்இன்னமும் புழுக்கத்தில்குமுறிக் கொண்டுதானிருக்கிறது..!சிறைபிடிக்கப்பட்ட உண்மைகளுக்குவிடுதலைதான் எப்பொழுது..?வெளிச்சம் தேடும் உண்மைகளுக்குவிடியல்தான் எப்போது..?உண்மைகளைவெளிச்சத்திற்கு கொண்டுவருகிறேன் என்றுகூக்குரல் எழுப்பிவிடாதீர்குரல் வளைகள் நெரிக்கப்பட்டுஇருளுக்குள் மூழ்கடிக்கப்படுவீர்கள்..மரணித்த உண்மைகளை தேடி செல்லாதீர்மரணம் உங்களைத் தேடிவரும்..!இருட்டினில்எண்ணிலடங்கா உண்மைகள்வெளிச்சத்திற்கான ஏக்கத்தில்..!உயிரின் மீது ஆசையில்லாதோரும்வீரன் என்று தோள் தட்டுவோரும்திரண்டு வாருங்கள் புதைந்தபல உண்மைகளைதோண்டி எடுப்பதற்குசில உண்மைகளாவதுவெளிச்சம் காணட்டும்..!
தந்தை....
========
கண்கண்ட கடவுளாம் நம் பிரம்மன் தந்தை
நித்தமே வணங்கட்டும் அக்கடவுளை நம் சிந்தை
உயிரோட்டம் கொண்டுள்ள நகலிதான் அவரும்
உயிருடன் அவர் வடித்த பிரதிகள்தான் நாமும்..!
வாழ்க்கைப் பயணத்தின் திசை காட்டி தந்தை
அவர்வழி நம்வழிஎனில் உயர்வதும் உண்மை
வித்திட்டு வளர்த்தாரவர் வியர்வையில் நம்மை
அவரையிறுதிவரை காப்பதே என்றும் நம் கடமை..!!
நன்மையும் தீமையும் அறியாத பருவம்
எல்லாமும்தெளி வாக்கிய தந்தைதான் குருவும்
பள்ளியில் புகட்டாத பாடங்கள் யாவும் - தந்தை
அறிவுரையில் கண்டிட வந்திடும் உயர்வும் !
தாயவள் சுமப்பதோ ஈரைந்து மாதம்
தாயு மானவன்சுமத்தலோ தீராது நாளும்
நிழல்தந்து விருட்சமாய் நின்றவன் பார்வை - நம்மை
விருட்சமாய் காண்கையில் உள்ளதவன் பெருமை..!
பிறையுமாய் நரையுமாய் தந்தையவர் அருகில்
அமைச்சராய் கொண்டவரின் வாழ்க்கையது மெருகில்
தந்தைக்கு நாம் செய்யும் பணிவிடை யாவும்
நம் பிள்ளை கற்றிட அநாதை இல்லங்கள் சாகும்..!!
துன்பங்கள் யாவையும் தன்னோடு வைப்பான் - தந்தை
இன்பங்கள் நமக்களித்து ஓடாகித் தேய்வான்
தெய்வங்கள் தேடித்தெரு கோவில் செல்லல் வீணே
இல்லத்து கடவுளாம் தந்தை வணங்கினால் வாழ்வே..!
==============================================================
12-06-2016 அன்று :இலக்கிய சோலை: பத்திரிக்கை தந்தையர் தின
சிறப்பிதழை வெளியிட்டது. அதில் வெளியான எனது கவிதை.
தலைப்பினை அளித்து எழுத பணித்த திரு சோலைத் தமிழினியன்
அவர்களுக்கு எனது நன்றிகள். கவி அரங்கில் கவிதையை வாசிக்க
இயலாது போனாலும் பிரசுரமானதில் மகிழ்ச்சி..
===========================================================
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களுடன்,
-சொ.சாந்தி-
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!
மதமும் இனமும் துறந்தேகைகோர்ப்போம் பயணம் இனிதேஒற்றுமையின் தன்மை உணர்ந்தேபற்று வைப்போம் பகையும் மறந்தே!!
நல்ல நினைவில் நாளும்வாழ்ந்தால் இல்லை தாழ்வேஇல்லை என்ற சொல்லே - இனிஇல்லாது சிறக்கும் வாழ்வே!!நினைத்தவை யாவும் நடக்கும்கேட்பவை யாவும் கிடைக்கும் - நாளும்துவக்கி வைக்கும் துன்முகி வருடம்நலமே தந்து வாழ்க்கையும் புலரும்!!துன்முகி வருட வரவேதருமே எவர்க்கும் நல்வரமேவெளிச்சம் வாழ்வில் உதயம் - இனிமகிழ்ச்சியிலே துள்ளும் இதயம்!!வாழ்த்துக்களுடன்,
சொ. சாந்தி.
மகளிர் மட்டும்..
அதிகாலை விடியலிலே இன்முகம் காட்டிதேநீர் அளிப்பதிலே ஆரம்ப சேவைவகை வகையாய் உணவுடனே அன்பும் ஊட்டிஎதிர்பாராமல் வாழ்வதெல்லாம் மகளிர் மட்டும்.!
அஞ்சனத்தை பூசி தினம் மங்களம் சேர்த்துஅஞ்சுகின்ற நடையினிலே மெட்டியிசைத்துசிதறிவிழும் சில்லறையின் நகைப்பின் ஒலியில்இல்லம் அழகூட்டி பார்ப்பதெல்லாம் மகளிர் மட்டும்..!
கருவினிலே சுமந்திடுவாள் வாரிசதனைமகப் பேற்றில் கண்டிடுவாள் மரண வலியும்ஆடவரால் இயலாத அற்புதம் எல்லாம்அகிலத்தில் நடத்துகின்றார் மகளிர் மட்டும்..!
கணவனென்றும் பிள்ளையென்றும் உறவுகளென்றும்உள்ளத்தினை உள்வாங்கும் உயிர் எந்திரம்கள்ளத்தனம் புகும் நெஞ்சம் கண்டால் அவரைநல்லவராய் அமைப்பதெல்லாம் மகளிர் மட்டும்..!இல்லத்தின் சுமைதாங்கி என்றென்றுமாகிஎத்தனைதான் துயர் வரினும் அமைச்சருமாகிஆலோசனை வழங்கிடுவாள் இடரும் ஓடஇல்லம் ஒளிர வைப்பதெல்லாம் மகளிர் மட்டும்..!
தாயாகி தாரமாகி தங்கையுமாகி - பெண்தியாகியாகி தான் தேய்வாள் நித்தம் வாழ்வில்உணர்ந்திடுங்கள் உத்தமரே ஆடவர் நீங்கள்உங்களன்பு கூட்டலில் பெண் வாழ்வு மிளிரட்டும்..!!
=================================================27-02-2016 அன்று இலக்கிய சோலை மாத இதழ்நடத்திய கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.தலைப்பினை அளித்து வாசிக்க பணித்த பத்திரிக்கைஆசிரியர் திரு சோலைத் தமிழினியன் அவர்களுக்குஎன் நன்றிகள்.=================================================
மகளிர் தின வாழ்த்துக்களுடன்,சொ. சாந்தி
தோழமை நெஞ்சங்களுக்கு என் வணக்கம்.
நட்புகளின் அன்பான கவனத்திற்கு..!
நட்புடன்..சொ. சாந்தி
"எழுத்து" தளத்திற்கு என் நன்றிகள்..!!
வின் ஞான கவி எழுதி"வின்" ஆன செய்தியதைவெண் கோப்பை கல்வெட்டில்என் எழுத்தை எழுதி வைத்துவாகைதனை உரைத்திட்டதள எழுத்துக் கென்நன்றி..!தேநீர் அருந்துதற்குகோப்பைகள் பல கண்டோம்கவிதை உறிஞ்சும் கோப்பைகண்டீரா கண்டிடுங்கள்என்கவிதையை கோப்பைக்குஅளித்திட்ட "எழுத்துக்" கென் நன்றி..!!
கடந்த நவம்பர் மாதம் "எழுத்து" தளம்நடத்திய கவிதைப் போட்டியில்"வின் ஞானம்" என்கிற தலைப்பில் நான்எழுதிய கவிதைக்கு சிறப்புப் பரிசினைவழங்கிய எழுத்துத் தளத்தினருக்குஎன் மனமார்ந்த நன்றிகள்.. என்னைஎழுத்து தளத்தில் ஊக்குவித்துக் கொண்டிருக்கும்அனைத்து தோழமை நெஞ்சங்களுக்கும்என் உளமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்..!!இக்கவிதையுடன் நான் எழுதிய மற்றகவிதைகளான "அரும்புகள்", "விஞ்ஞானம்"மற்றும் "உரிமைகள் பரிக்கப்படும் " ஆகியகவிதைகளில் ஒன்றிற்கு இந்த பரிசுகிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்.விளையாட்டாக எழுதிய கவிதைக்கு பரிசுகிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.எழுத்து தளத்திற்கு மீண்டும் என் நன்றிகள்..!!
நன்றியுடன்,- சொ. சாந்தி -
பொங் 'கல்' (பொங்கல் ஜோக்)
மாமியார் :
என்ன பொண்ணு வளத்திருக்கீங்க சம்பந்தி. ஒழுங்கா ஒரு பொங்கல் கூட பொங்க தெரியல. சர்க்கரை பொங்கல் செய்ய சொன்னா உங்க பொண்ணு கல்லு பொங்கல் செஞ்சிருக்கா. பொங்கல் சாப்பிட்டு பல்லு ஒன்னு விழுந்திடுச்சி. அம்மா... வலி....!
பொங்கலுக்கு வரிசைல வைரக் கல்லு கம்மல், வைரக் கல்லு மூக்குத்தின்னு கேட்டாஇப்படித்தான் பொங்கல் வைக்க வேண்டி வரும். கோவிச்சுக்காதீங்க சம்பந்தி.வைரக்கல்லு புடிக்கும்போது இந்தக் கல்லும் புடிச்சித்தான் ஆவணும்..கொஞ்சம் பொறுத்துக்கங்க...
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...!!
தைப் பொங்கல் - கும்மி பாட்டுகொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடிபொங்குமின்பம் இனி தங்குமென்றுதைமகள் வந்திடும் வேளையிதுதாளமிட்டு கும்மி கொட்டுங்கடி...!!சின்னஞ் சிறு மொட்டு சிறு பறை கொட்டிசுற்றி வீதி வலம் வந்திடுவார்போகி நல்ல இந்த போகி திருநாளில்போட்டெரிப்பார் பழம் வீட்டுப் பொருள்.!!தீய எண்ணந்தனைபோகி தீயிலிட்டுத்தீக்கிரையாக்கிட வேண்டுமடிதூய உள்ளமுடன் நாளும் வாழ்வோமென்றுசொல்லி சொல்லி கும்மி கொட்டுங்கடி..!!பீடுடை திங்கள் மார்கழியில் தெருவீதியெங்கும் வண்ண கோலங்களாம்கோல மெழில் அது கூடி மிளிர்ந்திடபூவொடு விளக்கலங் காரங்களாம்..!!திம்மித் தக்கத் திமி திம்மி.. திம்மியெனதாளமிசைத்திட நாட்டியங்கள்ஆடியே தைமகள் இல்லத்தின் வாயிலில்வந்திடுவாள் தோரணங் கட்டுங்கடி..!!மஞ்சள் வெயில் அதிகாலையிலேமங்கலமாய் வந்தனள் தைமகளாம்வாழ்வின் வறுமைகள் நீக்க வந்தாள்போற்றி.. போற்றி.. நீயும் கும்மியடி..!!மஞ்சளிட்ட புதுப் பானையிலேபொங்கி வழியுது பொங்கலடிபொங்கலோ... பொங்கல்... பொங்கலென்றுசொல்லி சொல்லி நீயும் கும்மியடி.. !!வாழும் வழி செய்யும் ஆதவனைவணங்கி நன்றியும் கூறுங்கடிநல்ல காலம்.. இனி நல்ல காலம் என்றுநாவினிக்கப் பாடி கும்மி கும்மியடி .!!