எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
என் எழுத்துக்களில் பிரதிபலிப்பவை உண்மையான காதல் அல்ல..
ஆனால், கவிதை உண்மையானது. யாரைப் பற்றி கவிதை எழுதுவது என்பதறியாமல்தான் யாரைப் பற்றியோ கவிதை எழுதுகிறேன்.
கண்டிப்பாக காதலில் நானில்லை.
ஆனால், என் மீது காதலிருக்கலாம்..
நான் யாரைப் பற்றி கவிதை எழுதுகிறேன் என்று தெரியவில்லை...
ஆனால்,
என்னை காதலிப்பவளைப் பற்றிதான் கவிதை எழுதுகிறேன்..
உன்னையெல்லாம் காதலிக்க யார் இருக்கிறார் என்று கேட்டால்???
என்னை காதலிப்பவள் தேவதையாகத்தான் இருக்க முடியும்..
ஏனென்றால், இத்தனை வர்ணணனையும் ஒரு தேவதைக்குத்தான் பொருந்தும்..
- தேவதையின் காதலன்