எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
"பூங்காற்றே நீ வீசும் திசையில் மத்தாப்பு; பூக்களே! நீ வாசம் சிந்தும் தித்திப்பு; மடந்தை நெற்றியில் சிகப்பு நிலா; குழந்தை சிரிப்பில் பிறந்த உலா; தாரகை போல மின்னும்விளக்கு; இடியும் மின்னலும் போல் வெடிக்குது பட்டாசு; மனதோடு மனிதம் பேசும்; கண்ணீரில் அன்பு விளையும்; பிரிவுகளும் இணைவில் சேரும்; காதோடு கண்மணி பேச மனதோடு இன்பம் போங்க; சுமந்த நிழலில் ஆசிர்வாதம் வாங்கி; மதியோடு சிறு தூக்கம் கண்டு, கடந்து போன மழலையை சிறு நொடிகள் மீட்கும் இனிய நொடிகள் பொழுதோடு கரைந்து மனதோடு கதை பேச ஆயத்தமாகிறது"
அணைவருக்கும் மரபின் முதற்கண் வணக்கம்
"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 20"
"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 19"பள்ளி பருவ காலத்தில் மனதில் பறந்த பட்டாம் பூச்சியை பலர் காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.சிலர் காமத்தின் பால் கவர் அழைப்பிதழ் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.அந்த வயதில் அவரவர் நிலையை பொறுத்து அவைகள் நியாயமானதாக தென்பட்டாலும் உண்மையில் இரண்டுமே குற்றம் தான்.ஆனாலும் பள்ளி பருவத்தில் வளர்ந்த காதலின் நினைவுகள் கல்லூரி கடந்த பின்னும் அன்று போல் இன்றும் இளமையாக இனிமையாக மனதில் பதிந்த காதலின் உயிரோட்டமான உள்ளங்களின் கதை தான் இது
"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 18"மார்கழி மழை இடைவிடாது மண்ணை தொட்டு ஓய்ந்தது..மரங்கள்,செடிகள்,கொடிகள்,எல்லாம் தூசுக்களை அகற்றி தூய்மையாக தங்களை ஆக்கிச் சென்ற மேகங்களுக்கு நன்றியை சொல்லிக் கொண்டிருக்கின்றன.குளிர்மை நிறைந்த வானிலை ஊரெங்கும் பாதை போடுகிறது..அதில் ஓர் அழியாத காதல் சரித்திரம் பயணம் அமைக்கிறது..நாளும் பல ரயில்கள் ஒடி ஓய்ந்த தண்டபாலத்தின் மீது ஓயாமல் இரு காதலர்கள் தோள் சாய்ந்து மெளனமாக நடந்து உலகையும் காதலால் ரசிக்கின்றார்கள்..மாலையும் மங்கிப் போன பொழுதில் ஒரு வண்ணக்
சில உண்மைகளை என் மனதின் எண்ணங்களோடு ஒப்பிட்டு பேச விழைகிறேன்.கவிதைகள், கதைகள், கட்டுரைகள்,நகைச்சுவைகள்,புதினங்கள்....என்ற பாதையில் ஆயிரம் இலக்கிய வடிவங்கள் மொழிகளின் கருவறைக்குள் இருந்து தொன்று தொட்டு வளர்ந்து வருகிறது.நடந்து கொண்டிருக்கும்இருபத்தியோராம் நூற்றாண்டில் தமிழ் மொழியை காக்கும் வீதம் குறைந்து போனாலும் தமிழை கொண்டு இலக்கிய வடிவங்களை காக்கின்றனவர்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்து இருக்கிறது.அது மட்டுமின்றி பலரால் இலக்கியங்கள் தரங்கள் நாளுக்கு நாள் இழிவு படுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கிறது..சிலரால் யாரும் அறியாத மூளை முடுக்குகளில் பேணி காக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.
"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 17" மனதில் காதல் விளைவது மனிதனுக்கு இறைவன் கொடுத்த உயரிய வரம்..பலரின் காதல் உண்மையில் இவ்வுலகில் தோற்றுத்தான் போகிறது..ஆனாலும் நினைவுகள் நெஞ்சை விட்டு அகன்று போவதில்லை..ஆனால் இங்கே பெண் தனது காதலன் வருவான் வருவான் என்ற நம்பிக்கையில் வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன் என்ற போராட்டத்தில் அவனுக்காக காத்திருக்கிறாள்..பல விடியல்கள் கடந்தும் அவன் வரவில்லை.அவளது தாயும் தந்தையும் அவளை வார்த்தையால் செயலால் என்று காயப்படுத்தி தினமும் கொல்கின்றனர்..
"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 16"வாழ்க்கை என்பது யாராலும் அறியப்படாத ஓர் அழகான ரகசியம்.சிலருக்கு எல்லாம் கிடைத்து விடும் பலருக்கு கிடைக்க வேண்டியதும் இல்லாமல் போய் விடுகிறது.இந்த எண்ணத்தில் இருவரின் வாழ்க்கையின் நிலைமை வெளிப்படுத்தப்படும் வெறும் என் கற்பனையாக ஆனால் இந்த வாழ்க்கையையும் பலர் வாழ்ந்து இருப்பார்கள் வாழ்ந்து கொண்டும் இருப்பார்கள்.
சிறு வயதில் தாயை இழந்த சிறுமி..தந்தை அவள் தாயின் தேகத்தை மட்டும் நேசித்திருப்பான் என்று நினைக்கிறேன்..பத்து நாட்கள் கழியும் முன் இன்னுமோர் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி இல்லறம் கொள்ள முனைந்து கொள்கிறார்.சித்தி என்ற கோணத்தில் அவள் இவள் மேல் பாசம் என்பதை ஒரு நாள் கூட காட்டியதில்லை..நாட்கள் நகர இவளின் இருப்பு அவள் தந்தைக்கும் சுமையாகி விட்டது காரணம் சித்தி வழியில் இன்னுமோர் சேய் உறுதியான சேதி..இவள் மேல் வீணாக கள்ளப்பட்டம் சுமத்தி சாணியை ஊரால் எரிய வைத்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்க்கிறார்கள்...,குற்றம் செய்யவில்லை ஆனாலும் பறவைகள் போல் இவளின் வாழ்க்கையும் கழிந்து போகிறது...,
கல்வியில் சிறந்த மாணவன்..ஆனால் இவன் சேர்க்கை மிகவும் மோசமானது.இன்பம் என்ற பாதையில் தீமையை தேடி தன்னை அழித்ததும் மட்டுமின்றி தன்னை சுமந்த தாயையும் தந்தையையும் தூக்கு கயிருக்கு பலி கொடுத்தவன்.மது,பெண் இன்பம் என்ற ரீதியில் இவன் குற்றம் செய்த போதிலும் கொலை என்ற எல்லைக் கோட்டில் நுழையாதவன்.காலம் யாரைத் தான் விட்டு வைத்தது இவன் சகாக்கள் செய்த கொலையில் பாவம் இவனே முழு குற்றவாளியாக சட்டத்தில் முன் நிறுத்தப்படுகின்றான்.தணடனை வழங்கும் பருவத்தில் இவன் இல்லாத காரணத்தால் இவனும் சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் இணைந்து கொள்கிறான்.குற்றம் செய்தும் செய்யாத குற்றம் சிலுவை..,
விதி எழுதும் இறைவன் செய்யாத குற்றம் என்ற கோணத்தில் இவர்களை சேர்த்து வைக்கும் மதியின் நகர்வில் காலத்தை எழுத நினைக்கிறான்.இவளை பார்க்கும் நேரம் அவன் தன்னை சுமந்து நிரந்தரமாக பிரிந்து சென்ற தாயை நினைக்கிறான்..கண்ணீர் கண்ணில் கடலானது..இதைக் கண்ட இவளும் அன்பாக அவன் கைகளை பிடித்து ஆறுதல் சொல்கிறாள்.இருவரும் மறைக்க வேண்டிய கடந்த வாழ்க்கையின் புத்தகத்தை வாய் மொழியில் பரிமாற்றிக் கொள்கிறார்கள்..தண்டனை காலம் இருவருக்கும் நல்ல செயலின் காரணமாக ஒரே நாளாக குறிக்கப்படுகிறது.தெய்வீகமான தூய்மையான இவர்கள் உள்ளத்தில் விதையாக விழுந்து விருட்சமாக வளர்ந்து கிளைகள் செழித்து விடுதலையின் பின் பூக்கள் பூக்க காத்திருக்கிறது..அவன் பாவம் நான் காமத்தை தேடிய பாவியம்மா என்னை நீ எப்படி....???என்று முடியாத பல கேள்விகளை தொடுப்பான்..அவளும் நான் பெண்மை தான் ஆனால் நீ என்னை அம்மா என்று தானே அழைக்கிறாய்.காதலி என்ற கோணத்தில் நான் இருந்தாலும் நானும் உன் தாய் தான்..தாயை எந்த பிள்ளை....??என்று அவள் வார்த்தைகள் நீண்டு கொண்டு போக அவள் வாயில் கை வைத்து வேண்டாம் என்று தலையின் அசைவில் வார்த்தை எழுதுவான்.
சிறையிலிருந்து அவர்களை காலம் மீட்டது.புதிய கதிரவன் வாழ்க்கையில் உதயமாக தொடங்கினான்..அங்கு செய்த தொண்டுக்காய் சில பணங்கள் வாழ்க்கையை நகர்த்த கிடைத்தது..அவளின் இருப்பையும் அவளின் இருப்பையும் திரும்பி போய் பார்க்க விரும்பாத உள்ளங்கள் புதிய பாதை தேடி பயணம் செய்யும் நேரத்தில் அந்த காப்பக வாசலில் இன்னுமோர் சிறுமியும் சிறுவனும் கைதியாக கொண்டு வரப்படுகிறார்கள்..அவர்களின் பார்வைகள் இவர்களின் கண்களில் கண்ணீரை கொடுத்து நினைகளாவது உண்மையை புரிந்து கொள்ளுங்கள்..நாங்கள் குற்றவாளி இல்லை என்று தொலைத்த கனவை தொலையாத வாழ்க்கையில் கழிக்க எண்ணுகிறது
சுமையான நிகழ்வை உள்ளங்கள் கண்ணீர் சிந்தி தாங்கும்..கலைஞர்கள் உள்ளம் உண்மையில் களி தான் எதை படிக்கும் நேரத்திலும் அதனுள் வாழ்ந்து விட்டு தான் வெளியில் வருவார்கள்..என் எண்ணம் உங்கள் மனதில் தாக்கத்தை விளைத்திருந்தால் அதனை கவியாக செதுக்கி கருத்திடுங்கள்.