எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
வள்ளுவம் பொய்த்ததா ?
அன்ன நீரார்க்கே உள "என்கிறது வள்ளுவம் இதன் பொருள் காகமானது தனக்கு கிடைத்த இரையை மறைக்காமல் தன இனத்தாரை அழைத்து இந்ததோடு உண்ணும் அதுபோல தனக்கு கிடைத்த செல்வதை மறைக்காமல் மற்றவர்களுக்கும் அளித்து வாழ்பவர்களுக்கே ஆக்கம் செல்வம் நிறைந்திருக்கும்
ஆனால் இன்றைய நிகழ்வென்ன என்று பார்த்தால் நிறைந்த செல்வம் உள்ளவர்களில் பெரும்பாலோர் இந்த கொடுத்து உதவும் பண்பு இல்லாதவரே தன்னிடம் உள்ள செல்வத்தை மறைத்து அடுத்தவர்களின் செல்வத்தை சுரண்டி பிழைப்பவர்களே. அடுத்தவர்களை கெடுத்து வாழ்பவர்களும் மற்றவர்களை சுரண்டி வாழ்பவர்களும் செல்வர்களாக வாழ்வதும் , கொடுத்து உதவி வாழ்பவர்கள் அடுத்தவர்கள் நலன் பேணி தன் செல்வதை செலவிடுபவர்களும் வறியவர்களாக இருப்பதும் என்ன விந்தை என்று தெரியவில்லை
கள்வர்கள், கயவர்கள் , பொய்யர்கள் , கை யூட்டு பெறுபவர்கள் மற்ற மனிதர்களை சமூகத்தை சுரண்டி வாழ்பவர்கள் எத்தர்கள் என மிக மோசமான நடத்தை உள்ளவர்கள் செல்வர்களாக வாழ்வதும் நல்லவர்கள் அறச்சிந்தனை உடையவர்கள் , தன் செல்வதை செலவிட்டு பிறர் நலன் பேணுபவர்கள் பிறர் நலனுக்காகவே வாழ்பவர்கள் இவர்கள் எல்லாம் நெளிந்தும் வறுமையின் பிடியில் அகப்பட்டும் அடுத்த வேளை உணவுக்கும் மாற்று துணிக்கும் அல்லல் படுவதை பார்க்கும் போது வள்ளுவ பெருந்தகை கூறிய குறள் மொழி பொய்த்ததோ ? என ஐயுற தோன்றுகிறதுயாரேனும் இதற்க்கு சரியான காரணமும் தீர்வும் கூறிட இயலுமெனில் தெளிவுறுத்தவும்
நம் இளைஞர்களின் தை புரட்சி என்று யார் சொன்னது அதை தோற்கடிக்க சூழ்ச்சி செய்தவர்கள் தான் தோற்றார்கள் அவர்களின் சூது தான் தோற்றது இன்று நம் இளைஞர்களோ உலக அரங்கில் பேசப்படுகிறார்கள்
தமிழக வாக்காளர் விழிப்புணர்வுப் பேரவைஇது ஒரு தன்னார்வ அமைப்பு இதில் எல்லா வாக்காளர்களும் பங்கு பெறலாம் . இதில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் யாவும் வாக்காளர்கள் யாவரும் நலம் பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த அமைப்பு
செயல்படும் இதில் யாருடைய கருத்துக்கள் வேண்டுமானாலும் விவாதிக்கப்படலாம் இதன் நோக்கம் வாக்காளர்களின் நலன் ஒன்றேஇதில் விவாதிக்கப்படும் கருத்துக்கள்
1] வேட்பாளர்கள் என்பவர் யார் ? 2]வேட்பாளர்களின் கடமைகள் [3] வேட்பாளர்களின் பொறுப்புகள்
[4] வேட்பாளர்களின் இயல்புகள் M L A , M P ஆகும் முன் ,ஆன பின் இவர்கள் வாக்காளர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் [5] இவர்கள் சார்ந்த அரசியல் கட்சிக்கு எந்த அளவுக்கு கடமை பட்டவர்கள் ? [6] தொகுதி வாக்காளர்களுக்கு எந்த அளவுக்கு கடமை பட்டவர்கள் போன்ற விபரங்கள் இந்த பகுதியில் விவாதிக்கப்படும்இந்த பகுதியின் முக்கிய நோக்கமே வாக்களர்களின் விழிப்புணர்வு மட்டுமே
வங்கிகளின் வேலை நிறுத்தம் நியாயமா ?
இந்திய கிரிகெட் அணியை தோற்கடித்த மாபெரும் வீரர்கள்
இந்திய கிரிகெட் அணியை ஆஸ்திரேலியா தோற்கடிக்க வில்லை இந்திய அணியின் பின்வரிசை வீரர்களே all rounder என்ற பெரிய பெயருடன் விளையாடும் வீரர்களும் மோசமான பந்து வீச்சை வெளிபடுத்திய பந்து வீச்சாளர்களுமே தோற்கடித்தனர் . ரவீந்திர ஜடேஜா எப்படிப்பட்ட ஆல் ரௌண்டெர் வெற்றி வாய்ப்பை மட்டை போட்டு மட்டை போட்டு வெற்றியாய் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தாரை வார்த்த மிக சிறந்த ஆல் ரௌண்டெர் வெற்றி தோல்வி சகஜம் தான் ஆனால் தொடர் முழுவதும் தோல்வி என்பது தான் ஏற்க்கமுடியாததாக உள்ளது மகேந்திர சிங் டோனி அணியின் தலைவர் என்ற முறையில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டிய நேரத்தில் பொறுப்பற்ற முறையில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து ஆட்டத்தின் போக்கை எதிரணி வீரர்களுக்கு சாதகமாக்கினார் என்றால் மிகை இல்லை . புதிய வீரர்களுக்கு வாய்ப்பு தரவேண்டியது தான் ஆனால் எங்கே என்ற விவஸ்தை இல்லாமல் முக்கியமான ஆட்டங்களிலா உள்ளே நுழைப்பது இதனால் இந்திய அணி ஈட்டி வைத்திருந்த நற்பெயர் தானே பலியானது இளம் வீரர்கள் மிக மோசமாக விளையாடி இந்திய அணியின் படு தோல்விக்கு காரணமாகினர்
நான்கு வீரர்கள் தலையில் தான் இந்திய அணியின் சுமை முழுவதும் இறக்கப்பட்டுள்ளது அவர்கள் ரோஹித் சர்மா , சிகார் தவான் . விராத் கோலி மற்றும் அஜின்க்யா ரஹானே இவர்கள் தவிர யாருமே இந்த தொடரில் சரியான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை எஞ்சிய மோசமாக விளையாடும் வீரர்களை ஒரு தின சர்வதேச போட்டிகளில் இருந்து சிறிது காலம் நீக்கி இவர்களுக்கு இந்தியாவிற்குள் ஆடும் ஆட்டங்களான ரஞ்சி கோப்பை புச்சி பாபு போன்ற ஆட்டங்களில் இடம் பெற செய்து பயிற்சி அளித்து இவர்கள் திறனை பரிசோதனை செய்த பின் இவர்களுக்கு ஒரு தின சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு அளிக்கலாம் தேர்வு குழு அணி வீரர்களை தேர்வு செய்யும் போது மாவட்டங்களில் மாநிலங்களில் ர இருந்து இளம் வீரர்களை ஓபன் செலக்ஷன் மூலம் மாவட்ட மாநில அசொசியேஷன் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம் இந்திய அணி குறைந்த பட்சம் மூன்று அணிகளையாவது கை வசம் வைத்து கொண்டு களத்தில் இறங்க வேண்டும் தேசிய அணி குறைந்த பட்சம் மூன்று அணிகலாவது இருக்க வேண்டும் ஒரு அணி மிக மோசமாக விளையாடும் போது அடுத்த அணியை இறக்க தயங்கவே கூடாது இவர்கள் இந்திய அணி என்ற பெயரில் ஆடுவதால் தான் இந்த வேகமும் கோபமும் இந்த கோபமும் வேகமும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இன்றைய மோசமான ஆட்டத்தை பார்க்கும் போது ஏற்பட்ட ஒன்று இந்திய அணியின் வீரகளை தேர்வு செய்வதை இந்திய அரசு பொறுப்பேற்று கொள்ளவேண்டும் BCCI யின் செயல் பாடுகளை இந்திய அரசு கட்டு படுத்தவேண்டும் இந்திய விளையாட்டுத்துறையின் மேற்பார்வையில் செயல் படுத்த வேண்டும் பொறுப்பற்ற முறையில் விளையாடும் வீரர்களை பாரபட்சம் பார்க்காமல் அணியை நீக்க வேண்டும் அப்போதுதான் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க முடியும் இல்லையேல் இப்படியே ஒவ்வொரு தோல்விக்கும் அணி தலைவர் கூறும் சமாதானங்களை கேட்டு உச் தான் கொட்டமுடியும்