எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நண்பர்களுக்கு வணக்கம்..!
நண்பர்கள் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். இந்த முழுநாள் நிகழ்வுக்கு நண்பர்கள் அனைவரையும் வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது. வரும் ஞாயிறன்று சந்திக்கலாம். நன்றி. மகிழ்ச்சி..!
ஈரோடு மாவட்ட மைய நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து வழங்கும் "இலக்கிய சந்திப்பு " மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகள் - நான்காம் நிகழ்வுக்கான அழைப்பிதழ் இதோ உங்கள் முன்னால்..! .
இம்முறை நாம் பெண்கள்.. பெண் சார்ந்த அரசியல்..உடை.. குடும்பம்.. காதல்.. கலை என பலவாறு பெண் நிலைகளை அதன் நோக்கினை சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தி எழுதிய தமிழ் இலக்கியத்தின் சிறந்த பெண் படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர் அம்பையின் மூன்று சிறுகதைகளை இந்த மாத நிகழ்வுக்கென தேர்வு செய்யப்பட்டன.
மூன்று சிறுகதைகளை குறித்து மூன்று வாசகர்கள் தங்கள் வாசிப்பு அனுபவத்தை நம்மோடு உரையாற்ற இருக்கிறார்கள். மேலும் அவர்களோடு நாமும் கதைகள் குறித்து விவாதிக்கலாம்.
கதைகளை வாசிக்க... கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
”வீட்டின் மூலையில் ஒரு சமையலறை”
https://bit.ly/2L8VbRs
“காட்டில் ஒரு மான்”
https://bit.ly/2L0Ji3b
”வயது”
https://bit.ly/2ztpVLH
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, வரும் ஞாயிறு மாலை 5:30 க்கு ஈரோடு மாவட்ட மைய நூலகத்தில் நடைப்பெறும் வாசகசாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
வாசிப்போம்.. உரையாடுவோம்..! நன்றி..!
வணக்கம் நண்பர்களே..!திருப்பூரில் #வாசகசாலை வழங்கும் ‘ இலக்கிய சந்திப்பு’ மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகள். நிகழ்வு 6-க்கான அழைப்பிதழ்.
வாசகசாலை இலக்கிய சந்திப்பு - திருப்பூர் மாநகரில்-
எளிமையான, ஆனால் ஆழமான எழுத்துக்கள் கொண்டு தன் அரசியலைப் பேசும் கலைஞர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா.
இவ்வாறான வீரியமிக்க இலக்கிய உலகில் மிக முக்கிய எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பை குறித்து கலந்துரையாடல் நிகழ்வாக திருப்பூரில் முன்னெடுக்கிறது வாசகசாலை.
வரும் ஞாயிறு மாலை 5:30 மணிக்கு swaad Restaraunt ல் வாசகசாலை “ இலக்கிய சந்திப்பு “ கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் சிறுகதைத் தொகுப்பு குறித்த கலந்துரையாடல். அனைவரும் வருக..!
திருப்பூர்.., ஈரோடு.. கோவை மாநகரங்களில் #வாசகசாலை வழங்கும் “ இலக்கிய சந்திப்பு” நிகழ்வுகளின் விபரங்கள்.
வாசகசாலை -திருப்பூர் “ இலக்கிய சந்திப்பு”
திருப்பூர் பின்னலாடை தொழில் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வுச்சூழலோடு பயணிக்கும் நாவலான எழுத்தாளர் எம்.கோபால கிருஷ்ணன் எழுதிய “ மணல் கடிகை” குறித்த கலந்துரையாடல் நிகழ்வு.
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சார்ந்த நண்பர்கள்.. வாசகர்கள்.. இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் வாய்ப்பு இருந்தால் தவறாமல் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள அன்புடன் அழைக்கிறது வாசகசாலை. 🧡🧡🧡
இடம் : நலம் ஹால் (நளன் உணவகம்- 2ம் தளம்)
கரூர் வைஸ்யா பேங்க் எதிரில் ; ஷார்ப் எலக்ட்ரானிக்ஸ் அருகில். குமரன் சாலை. திருப்பூர் -1
வாசிப்பு..!
“ நான் ஏன் இலக்கியத்தை.. இலக்கிய புத்தகங்களை வாசிக்க வேண்டும். அதனால் என்ன பயன்?.” வாசிப்பு பழக்கம் இல்லாத ..அல்லது வாசிக்க நேரம் பெறாதவர்கள் மனதில் எழும் கேள்வி இது.நீங்கள்..நான் உட்பட யாவரும் பள்ளி..கல்லூரி படிப்புகளுக்கு பிறகு இயந்திரத்தனமான ஓட்டத்தில் .. பணம்.. சொத்து.. குடும்பம்.. குழந்தைகள் என ஒரு தொடர் இயக்கத்தில் நமக்கான தேடல்களில்.. நமக்கான செளகரியங்களுக்கான ஆர்வத்தில் புத்தகங்களை வாசிப்பத்தை விட்டுவிடுகிறோம். பிறகு புத்தகங்களையே வெறுத்துவிடுகிறோம். ஆனால் நமது வாழ்வு இயக்க கூறுகள் எதுவும் நம்மை சுற்றியுள்ள சமூகத்தின் தொடர்பு இல்லாமல் இயங்க முடியாது. இந்த தொடர்பை நாம் வலுக்கட்டாயமாக துண்டிப்பதாலே பல நடைமுறைச் சிக்கல்கள் அந்த சிக்கல்களிலிருந்து மீள தெரியாமல் பிரச்சினைகளை கையாள தெரியாமல்.. சமூக குற்றங்கள் நிகழ்கின்றன. சமீபத்தில் சென்னை கல்லூரி மாணவி அஷ்வினி வெட்டுப்பட்டதும்.. திருச்சி கர்ப்பிணி பெண் உஷா கொல்லப்பட்டதுமாக்கான ஒரு தீவிர மனம் சார்ந்த உளவியலை ஆராய்ந்தால்.. சமூகத்தை.. சமூக காரணிகளை.. மனிதர்களை புரியாத இந்த இடைவெளிதான். இந்த இடைவெளியை நிரப்பி.. குறுகிய நமது உலகத்தை தாண்டி பார்க்க ஊக்குவிப்பதும்.. சிந்திக்க வைக்க உதவுவதுதான் வாசிப்புப் பழக்கம். வாசிப்புப் பழக்கமும் ஒன்று என புரிக
வாசிப்பை ஊக்குவிக்க.. வாசிப்பை தூண்டிவிட.. வாசிப்பிற்கு தேவையான ஒரு உந்துதல் நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த உலகம்.. பிரபஞ்சம்.. நம் உடல்.. நம் இயக்கம்.. நம் சமூகம்.. நம் சக மனிதர்கள்.. மனிதர்களுக்குள் நிலவும் வேற்றுமை..கொடுமை...பிரச்சினை தீர்வு என நாம் யோசிக்காத களத்தில் பிரமிப்பூட்டும் சம்பவங்கள் நம்மை சுற்றி இயங்குவதை படைப்புகளாக படைப்பாளிகள் படைத்திருப்பார்கள். அந்த படைப்புகளில் நாம் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்பு கொண்டிருப்போம். அவ்வித படைப்புகளை வாசிக்க தூண்டுவதும்.அவ்விதமாக வாசித்து.. வாசிப்பின் மூலமாகவே மானுடத்தை புரிந்து. நலம் பெற வைப்பதுமாக என.. . வாசிப்பை ஓர் இயக்கமாக முன்னெடுக்கும் #வாசகசாலை எடுக்கும் ஒரு முயற்சி.. உழைப்பு.வாசகசாலை... நண்பர்களால் ஒன்றிணைந்து செயல்படும் ஓர் இலக்கிய அமைப்பு.
“ உப்புக்கடலைக் குடிக்கும் பூனை “ சிறுகதைத் தொகுப்பு. குறித்த கலந்துரையாடல் வருகிற மார்ச் 18 ம் தேதி ஞாயிற்றுகிழமை திருப்பூர் குமரன் சாலையிலுள்ள நலம் ஹாலில் மாலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. சிறப்புரையாக.. எழுத்தாளர் இளஞ்சேரல் ராமமூர்த்தி அவர்கள்.. இந்த சிறுகதை தொகுப்பை பற்றி விரிவாக உரையாற்ற உள்ளார், மேலும் வாசகர்களாக அருண் சுந்தர். மற்றும் சரண்யா ஆகியோர் வாசக பார்வையாக தங்களின் வாசிப்பு அனுபவத்தை முன் வைக்கிறார்கள். வாருங்கள் ஒரு ஞாயிறு அந்தி மாலை ஒரு இலக்கிய சந்திப்பில் வாசிப்பு அனுபவம் எவ்வாறு இருக்குமென அறியலாம்....!-#வாசகசாலை- திருப்பூர்.