எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
எவ்வளவு அழைத்தும்
வரவில்லை ..காக்கை
அமாவாசை ..
எனக்கோ பசி ..!
நான் மூன்று பருவத்தினனாகவும்
மாறி மாறி பேசிப் பார்க்கிறேன் ..
அவள் புன்னகையில்
சந்தேகம்!
பனிமலையில் அவளோடு
கைகோர்த்தபடி நடக்கிறேன்..
இளஞ்சூடு !
ஒவ்வொரு வார்த்தையையும்
மனனம் செய்து கொள்கிறேன் ..
உதவும்..!
ரசிப்பதை
மறைத்துக் கொள்கிறேன்
உலக விஷயங்கள்
பேசிக்கொண்டே !
ஏதோ ஒரு பறவையின்
அந்தி நேர கூவல்
அவளது வளையோசை
பிடிக்கிறது !
மேலே ஒரு பறவை
நிழலின் வழிதான்
பயணம் !
எங்களோடு கூடவே
நகர்கின்றது ..மனமின்றி
தொடாமல் !
மழை வரும் போலிருக்கிறது
என்கிறேன் ..
குடை வேண்டாம்..
வரட்டும் என்கிறாள் !....கருணா....
வளைந்து ஏறி இறங்கி குறுகி பெருகி ஓடும் இந்த ஆஸ்திரேலிய மலைப்பாதையில் கீழே கடல் கூடவே வருவதை ரசித்தபடி பயணம் ..இடையிடையே மழையும் இளம் வெயிலும் மாறி மாறி ..பச்சைப் பசேல் ..மழைக் காடுகள் வலது புறம் மலைச்சாரலில் ..கீழே மகா சமுத்திரம் நீலம்..நீலம் ..மார்பில் வந்து மோதும் சில்லென்ற ஊசிக்காற்று..வேடிக்கை பார்க்க வந்து அச்சத்திலோ வெட்கத்திலோ எகிறித் தாவி ஓடி மறையும் கங்காருகள் ..அழகின் உச்சம் !நீளும்..பாதை
குளிரும் நிலம், காற்று
வானின் கொடை..குடை!
சந்தோஷம்..மரத்தின் இலைகளை தீண்டும் காற்றுக்கா ..குளிர் தீண்டலில் இன்பம் கண்ட இலைகளுக்கா..? சோர்வு ..கரை தொட்டு திரும்பும் அலைகளுக்கா ..தன்னோடு இருந்துவிட விதியில்லை இந்த அலைக்கு என்று மருகும் கரைக்கா? உனக்கு பதில் தெரியும் ..சொல்லேன்..
காற்றின் தொடுதலில் இலைகள்
அத்தனையும் எனக்குள் நீயாக !
அருவியின்
தியானத்தையொத்த
இடைவிடாத
விழுதலாய்
பாறைகள் மீது
மோதுகின்ற
புதுப்புனலாய்
அரிதாய்
அழகாய்
வெண்பஞ்சு நுரையோடு
விஸ்வ ரூபமெடுத்து
நதியாய்
நடந்தாய்
வாழ்வே
அனு தினமும்
வடிவம் மாற்றி
மனதினில் ஊற்றெடுத்து
விரிந்தாய்
வெவ்வேறாய்த்
தெரியும்
வாழ்வே ..
பருகுகின்றேன்
உன்னை
துளித்துளியாய்
என்னை நீ
தொட்டு பரவிடும்
கணத்தில் எல்லாம்
வாழ்க்கை
ஒவ்வொரு கணத்தினில்
வாழ்வதில்..
தானே என்கிறாய் !
ஒரு வாகனத்தை
ஓவர்டேக் செய்து
கடந்து விடுவது ..
நினைத்த இடத்தில்
நெடுஞ்சாலையின் ஓரத்தில்
வாகனம் நிறுத்திக்கொண்டு
இளநீர் குடிப்பது..
பிடிக்காத திரைப்படத்தின்
இடைவேளையில்
எழுந்து வந்து விடுவது ..
பழக் கூடையில் ..
கலந்து வந்து விட்ட
அழுகிய ஒரு பழத்தை
தூக்கி எறிந்து விடுவது..
எரிச்சலூட்டும் ஒரு நடிகனின்
போட்டோவை பார்க்காமல்
அடுத்த செய்திக்கு
தாவிவிடுவது..
என்பன போல ..
அவ்வளவு எளிதானதல்ல ..
எல்லோருக்கும் ..
ஓட்டுக்கு
பணம் கொடுக்க
வருபவரை
விரட்டுவது ..என்பது !
துளி விஷம் தான்
என்றாலும் கூட
இனிப்பாக சுவைக்கிறது
இந்நாட்டு
மன்னர்களுக்கு!
அறிய விரும்பியவை..
அறிய இருப்பவை..
அத்தனையும் இரவல்!
சுயத்தின் அணையாத ஜோதியில்
இரவல்கள் எரிந்துபோக
சுயமே ஜெயிக்கிறது ..!
சுயத்தை தேட
இரவல்களை எரிப்பதைத் தவிர
வேறு வழி இருப்பதாகத்
தெரியவில்லை!
மனத்தின் மரணித்தலில்
தொலைந்து போகும் இரவல்கள் !
புறவழிச்சாலை ..
" நீங்கள் மட்டும் எனக்கு கணவனாக இருந்திருந்தால், உங்களுடைய தேநீரில் விஷத்தைக் கலக்கி விடுவேன்" என்றார்.
சமயோசிதமாக பதில் சொல்லுவதில் திறமை மிகுந்த சர்ச்சில் உடனே..
" மேடம், நீங்கள் மட்டும் என் மனைவியாக இருந்தால், அதை வாங்கி குடித்து விடுவேன்" என்றார்.
(The extremely witty and much-loved British Prime Minister Winston Churchill tops the list with his verbal spat with Lady Astor. The conservative dame forever admonished Churchill for his cigars and alcohol habits, and Churchill was not one to take the insults lying down. Of their famous squabbles, the most memorable is when Astor commented, “If you were my husband, I’d poison your tea.” Churchill’s riposte? “Madame, if you were my wife, I’d drink it.”)
Very significant milestone. Greetings