எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பிரபல இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் அலைபேசி எண், ஆனந்த விகடனின் புண்ணியத்தால் ஒரு முறை எனக்குக் கிடைத்தது. அப்போது நான் என் தோட்டத்தில் சில காய்கறிகளைப் பயிரிட்டிருந்தேன். ''இந்த தக்காளிப் பொண்ணு பூவெல்லாம் உதிர்த்துடறா.. அந்த வெண்டைக்காய்ப் பையன் நல்லா வளரந்தவன் சோம்பி நின்னுட்டான்'' என்று அவரிடம் கூறி என்ன செய்வதென்று விளக்கம் கேட்டேன். இதில் பையன் பெண் என்பதெல்லாம் உரையாடலில் அப்படியே வந்து விட்டது.. பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை. அவற்றின் போட்டோக்களை அனுப்பச் சொல்லி பொறுமையாக பதிலளித்த அவர் கடைசியாக என்னிடம் கேட்டார். ''ஆமாம், ஏன் தக்காளிய பொண்ணுன்னு சொன்னீங்க'' என்றார்.&nbs (...)
ஆடி வெள்ளிக் கிழமையன்று ஒலிப்பெருக்கியில் அழகிய மயிலே அபிராமி..பாட்டு போட்டிருந்தார்கள்..
நான் மருத்துவ மாணவியாக இருந்தபோது இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கதை கவிதைகள் எழுதுவேன். அப்போது அந்த சங்கத்து உறுப்பினர்களால் மிகவும் ரசித்து பாராட்டப்பட்ட கதையிது..! அப்போது அதாவது 1980 களில் இந்த சிந்தனையும் சில சொல்லாடல்களும் புதுமையாகவும் துணிச்சலாகவும் இருந்ததாக பாராட்டப்பட்டேன்..
.............................................................................................................................................................................................................
பத்தி வித்த தர்மம் - வட்டாரத் தமிழ் கிண்டல் குட்டிக் கதை.
கிடுகு கதவைத் தள்ளிக்கிட்டு வெளியே வந்தா ராக்காயி. “தண்ணி வண்டிய வரக் காணோமே? ”
அவ பாத்த நேரமே தண்ணீ லாரி வந்து தெரு முக்கு சின்டெக்ஸ் டாங்க்கைரொப்பத் தொடங்குச்சு...
“அம்மாடிஆத்தாடி... இன்னும் கொஞ்ச நேரத்துல சனம் கூடிடுமே? ”அவசர அவசரமாக தண்ணீ வேலைங்களை முடிச்சு பாத்திரங்களை காலி பண்ணஆரம்பிச்சா ராக்காயி..
சின்டெக்ஸ் ரொம்பவும், தண்ணீ லாரி திரும்பிடுச்சு....
ராக்காயி சில பிளாஸ்டிக் குடங்களைத் தூக்கினா. அதுல அந்த மஞ்சக்குடம் ஓட்டை விழுந்து ஓரடி நீளத்துக்கு தண்ணீயப் பீய்ச்சியடிக்கும்.. சின்ன ஓட்டைக்காகஅம்மாம் பெரிய குடத்தை குப்பையில தூக்கிப் போடுற அளவுக்கு ராக்காயி ஒண்ணும் கோடீஸ்வரிஇல்ல..? ? ! !
ராக்காயி சோப்படைச்சு பாத்தா.. புளியடைச்சுப் பாத்தா.. ஓட்டைஎதுக்கும் மசியல. குடத்து தண்ணிய அண்டாவுல ஊத்திட்டு குடத்தை கவுத்தா, அவ மகனுக்குஅதுதான் சேர்..!
நெஜத்துக்கு அந்த பிளாஸ்டிக் குடம் ரொம்ப உதவியாத்தான் இருக்கு...! .கை சேறானால் அப்படியே கழுவிக்கலாம்.. மூனாப்பு குடிசை மலர்விழியக்கா பொறம் பேசும்போதுபிடிக்கிற மட்டும் கேட்டுட்டு பேச்சை முடிக்கணும்னா பிளாஸ்டிக் கொடத்து ஓட்டைய அவ பக்கம்திருப்புனா போதும்.. சல்லுன்னு நோஞ்சான் கைப்புள்ள அடிக்கிற மாதிரி தண்ணி அவ இடுப்புலபட்டுடும்.. அப்புறமென்ன? “ சரி, சரி,எனக்கு இன்னாத்துக்கு மத்தவங்க வெவகாரம்..! தலைக்கு மேல சோலி கெடக்குது, வாரன்..! ” ன்னு அக்கா ஓடிப் போயிடும்..!
ஆனா, தண்ணி நிக்க மாட்டேங்கு..
“இன்னாமே,ஒரு புது கொடம் வாங்கியாந்து தரக் கூடாதா? ” ன்னுஅன்னிக்கு “புருசன்பயல் ” நல்ல மூடில் இருக்கச்சொல்ல, ராக்காயி கேட்டா. “ஓட்டைவிழுந்துடுச்சின்றேன்..
“நீ பத்திவித்த தர்மப்படி நடக்கிறவொ-ன்னா ஓட்டை தன்னால அடையும்மே.. ”
புருசன்காரன் சொல்லிட்டு தூங்கப் போயிட்டான்....
அத்த தான் ராக்காயியை குழப்பிச்சு....
”அப்பால அந்த சேரிக்கு ஒரு சாமியார் வந்தாரு.. சக்தி வாய்ந்த சாமியார்..! நெறைய யானம்..!
நடமாடும் நதிகளின் தாக்கம்
“கனவே கலைந்து போ ” என்ற எனது தொடர்கதையின் நான்காம் பாகம் இரவு இரண்டு மணிக்கு நடக்கும். அந்த நேரத்தின் சூழ்நிலையை உள் வாங்க இரவு இரண்டு மணிக்கு தனியாக உட்கார்ந்து தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். eகலப்பை போட்டு டைப் செய்து கொண்டிருந்தபோது “ஆ” எழுத்து ரிலீஸ் ஆகாமல் நின்று விட்டது. அவ்வளவுதான். இரண்டு பக்கத்துக்கு ஒரே ஆ... ஆ.. ஆவாக நிற்காமல் மானிட்டரில் ஓட ஆரம்பித்து விட்டது....! பிறகு ஆ”வின் தலையில் இரண்டு போட்டு நிறுத்தினாலும், சே..! நன்றாக பயந்து போனேன்.....!
மருத்துவத்துறை சீரியஸானஒரு துறை என்றாலும் ஈடுபடுபவர்களைப் பொறுத்து நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது.ஒரு இளம்பெண் காதல் தோல்வியில்பேகான் பெய்ட் குடித்து அட்மிட் ஆனாள். அவளை வென்டிலேட்டரில் போட்டு செயற்கை சுவாசமளித்துசெமத்தியாக மெனக்கெட்டோம். ஒரு வழியாக அவள் நார்மலானதும் வார்டுக்கு மாற்றினோம். பொதுவாகஇம்மாதிரி ஆட்களுக்கு மனநல வைத்தியரைக் கொண்டு ஒரு கவுன்சிலிங் கொடுத்து அனுப்புவோம்.மனநல வைத்தியரிடம் ஒரு பாய்சன் கேஸ் என்று மட்டும் சொல்லியிருந்தோம். என்ன பாய்சன் என்று சொல்லவில்லை. சைக்கியாட்ரிஸ்ட் அதிகாலை ஆறரை மணிக்கே வந்து விட்டார். அந்த இளம்பெண் அந்த நேரத்தில் எங்கள் மருத்துவமனை காண்டீன் காபியை மட்டும் சாப்பிட்டிருந்தாள். ஆச்சா..
கஸல் கவிதைகளில் பெரும்பாலும் காதலையும் மரணத்தையும் கோத்து எழுதுவது சுவை சேர்ப்பதற்காக என்று நமக்குத் தெரியும்.. காதல் வயப்பட்ட ரெண்டும் கெட்டான்கள் இதை எந்தளவு உணர்ந்திருப்பார்கள் என்று தெரியவில்லையே? மூட்டை பூச்சி மருந்து, கரப்பான் கொல்லி எல்லாம் மிகச் சுலபமாக கடைகளில் கிடைக்கிறது..! ராத்திரி இரண்டு மணிக்கு அவசரப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் மருந்து குடிச்ச இளவட்ட கேஸ்கள் சார்பில் ஒரு வேண்டுதல்...! காதலையும் வாழ்க்கையையும் இணைத்துக் கொஞ்சம் எழுதுங்களேன்..!
டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம்
எப்படியெல்லாம் தாறுமாறாக பரவியிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்...
டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன்
தனது ஏழு வயது மகளை என்னிடம் அழைத்து வந்த நண்பரொருவர் கையோடு
ஒரு டப்பியை எடுத்து வந்து நீட்டினார்..
அதில் நான்கைந்து கொசுக்கள் செத்துக் கிடந்தன..!
அருணை ஜெயசீலி..
நண்பர் சந்தோஷ் குமார் சென்னைத் தமிழ் அகராதியை
வெளியிட்டார். இது என் குழந்தைகளின் பிரத்யேக மழலை அகராதி..
பாட்டா- பேண்ட்
கலர் வா வா - பௌர்ணமி நிலவு
முண்டு ஃபிரி – மிளகு
பான்ஃபிரி – எருக்கு இலை
கொட்டம் பட்ட நுண்டு – கட்டம் போட்ட துண்டு.
மாயா, காஞ்ச்சு - பேய், பூச்சாண்டி
சின்ன பிரஷ் மவம் – பனை மரம்
பெய்ய பிரஷ் மவம் – தென்னை மரம்
ஹேர் டைல் மவம் – ஆலமரம்
ஜூமேசர்- பென்சிலை அழிக்கும் ரப்பர்
மிஸ்கி – மிக்ஸி
படவர் - பவுடர்
செப்பட்டர்- செப்டம்பர்
எளனி மக்கு – கொட்டாங்குச்சி
கம்பர் – கம்யூட்டர்
அப்ப பப்ப பப பபபை – அப் அபௌ த வேல்ட் சோ ஹை...
(ரைம்ஸ்)
சட்ட தீம்பி பாக்குது – சட்டை உள் பக்கம் போட வேண்டியது
வெளிப்பக்கமாக இருக்கிறது..
வீடு தேஞ்சிடுச்சா? – வீட்டுக்கு வர்ற வழி தெரிஞ்சிடுச்சா?
அச்சவழாய நம - அருணாச்சலேஸ்வராய நமஹ.
சுப்பிக் கொடு – குழம்புக்காயை வாயிலிட்டு உறிஞ்சி,
காரமில்லாமல் கொடு
குப்பை – குட் பாய்